எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி: மசோதாக்களுக்கு அனுமதி வழங்காமல் கிடப்பில் போடப்பட்ட உள்ளிட்ட விவகாரங்களில் அரசியல் சாசனப்படி 24 மணிநேரத்தில் தமிழக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்க வேண்டும் என்று தமிழக கவர்னருக்கு சுப்ரீம்கோர்ட் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் நிறுத்தி வைத்திருக்கிறார் என்றும், இத்தகைய மசோதாக்களை நிலுவையில் வைக்காமல் திருப்பி அனுப்பவும் இல்லை என்றும், அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவுக்கு இது எதிரானது என்றும் குறிப்பிட்டு சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு முதலில் ஒரு ரிட் மனுவை தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த சுப்ரீம்கோர்ட் இந்த இவிவகாரம் தீவிர கவலைக்குரியது என தெரிவித்திருந்தது. இந்த சூழலில் தமிழ்நாடு அரசு மற்றொரு ரிட் மனுவையும் சுப்ரீம்கோர்டில் தாக்கல் செய்தது. அதில், தமிழக பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் நியமனங்களில் யுஜிசி தலைவரையும் சேர்க்க கவர்னர் வலியுறுத்துகிறார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணையில், இந்த விவகாரத்துக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் அல்லது தீர்த்து வைக்கப்படும் என்று சுப்ரீம்கோர்ட் நீதிபதி பார்திவாலா பெஞ்ச் தெரிவித்திருந்தது. இதனையடுத்து கடந்த வாரம் இந்த வழக்கில் விசாரணை நடைபெற்றது. அப்போது இவ்வழக்கு நேற்று விசாரிக்கப்படும் என ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்த சூழலில் நேற்று காலையில் தமிழக அரசு தரப்பில் இந்த மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என சுப்ரீம்கோர்ட்டில் வலியுறுத்தப்பட்டது. இதனை ஏற்று நேற்று பிற்பகல் 3 மணிக்கு கவர்னருக்கு எதிரான வழக்கின் இறுதி விசாரணை நடைபெறும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதன்படி தற்போது நடந்த விசாரணையின் போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, "கவர்னர் என்பவர் அரசியல் சாசனத்துக்கு கட்டுப்பட்டவர். ஒரு பக்கம் கவர்னர் பதவியே தேவை இல்லை என்கிற விவாதம் எல்லாம் நடைபெற்று வருகிறது என்பதையும் சுப்ரீம்கோர்ட் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு மாநில அரசு 2-வது முறையாக ஒரு மசோதாவை அனுப்பி வைத்தால் அதற்கு கவர்னர் ஒப்புதல் தந்தாக வேண்டும். கவர்னரின் செயல்பாடுகளால் தமிழக பல்கலைக் கழகங்களில் பல்வேறு பணிகள் பாதிக்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.
அதற்கு சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் கூறுகையில், கவர்னர் - மாநில அரசு இடையேயான மோதலால் மக்களுக்குதான் பாதிப்பு ஏற்படுகிறது. தமிழ்நாடு கவர்னர், அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது, அரசியல் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது. மசோதாக்களை ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பி வைத்துவிட்ட பின்னர் என்ன நிவாரணத்தை நாங்கள் தர முடியும்? எந்தெந்த மசோதாக்களை ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்ப முடியும்? கவர்னர்கள் ஏன் மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கிறார்கள்?" என்று அவர்கள் கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து நடந்த விவாதத்தின்போது தமிழ்நாடு அரசு சார்பில் வாதிடுகையில், மசோதா மீது கவர்னர் முடிவெடுக்காமல் கிடப்பில் போட முடியாது. எனவே சட்டப்பிரிவு 200ன் படி செயல்பட கோர்ட்டு உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், ஒருவேளை மசோதா சரியாக இல்லை என கவர்னர் கருதினால் என்ன செய்வது ? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு தமிழ்நாடு அரசு தரப்பில், அவருக்கு வேறு எந்த வழியும் இல்லை. மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துதான் ஆக வேண்டும். ஆண்டுக்கணக்கில் கவர்னர் மசோதாவுக்கு அனுமதி அளிக்காமல் உள்ளார். முடிந்த அளவுக்கு விரைவில் முடிவு எடுக்க வேண்டும் என்பதுதான் விதிமுறை.
மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதில் அரசியல் சாசன விதிகளின் கீழ், கவர்னருக்கு கூடுதல் வாய்ப்பு என்பது இல்லை. அவருக்கு விருப்பமான வழியில், அரசியல் சாசன விதிகளை புரிந்து செயல்பட்டு வருகிறார். இதன்மூலம் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக மாற்றியுள்ளார். மசோதாவுக்கான ஒப்புதலை நிறுத்தி வைப்பதாக சட்டப்பேரவைக்கு கூறுகிறார். இதன் பொருள், மீண்டும் சட்டம் இயற்றும் அதிகாரம் சட்ட மன்றத்திற்கு போய்விட்டது என்பதுதான். இது அரசியலமைப்பின் மீதான தாக்குதல்.
எந்தக் காரணத்தையும் கூறாமல், மசோதாவை கிடப்பில் போட்டு வைப்பது சட்ட விரோதம். மேலும், கேசரி ஹந்த் வழக்கின் தீர்ப்பின்படி, சட்டமன்றத்தில் மறுபடியும் மசோதா இயற்றப்பட்டால் அதற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும், அதனை கிடப்பில் போடக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசுத் தரப்பின் வாதத்தை நேற்று முடிக்க நீதிபதிகள் அறிவுறுத்திய நிலையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கவர்னர் எந்த அடிப்படையில் முடிவுகளை எடுக்கிறார் என நாளை தெரிவிக்க மத்திய அரசின் தலைமை வழக்கறிஞருக்கு சுப்ரீம்கோர்ட் அறிவுறுத்தி உள்ளது. இன்னும் 24 மணிநேரம் இருப்பதால், கவர்னர் அரசியல் சாசனப்படி தமிழ்நாடு அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்க வேண்டும். வேண்டுமானால் தேநீர் விருந்துக்கு அழைத்துப் பேசுங்கள் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கில் பரந்த நோக்கத்திலான அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை நாளை ஒத்திவைத்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்4 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்4 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.5 months 1 week ago |
-
திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: அவரச வழக்காக விசாரிக்க ஐகோர்ட் கிளை மறுப்பு
03 Feb 2025மதுரை : திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி அமைப்பினர் இன்று போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்து இருந்தனர்.
-
மேகாலயா, அருணாச்சலில் மிதமான நிலநடுக்கம்
03 Feb 2025ஷில்லாங் : மேகாலயா மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இந்து முன்னணி போராட்டம்: மதுரையில் இன்றும் 144 தடை
03 Feb 2025மதுரை : திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி அமைப்பினர் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்து இருந்தனர்.
-
தி.மு.க. மாணவர் அணி சார்பில் டெல்லியில் 6-ம் தேதி ஆர்ப்பாட்டம்
03 Feb 2025சென்னை : வருகிற 6-ம் தேதி தி.மு.க. மாணவர் அணி சார்பில் டெல்லியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
-
ஏ.டி.ஜி.பி.யின் உயிருக்கு ஆபத்தா? - தமிழ்நாடு டி.ஜி.பி. ஜிவால் மறுப்பு
03 Feb 2025சென்னை : ஏ.டி.ஜி.பி. கல்பனா நாயக் அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் எவ்வித சதி திட்டமும் இல்லை என்றும், அவரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எந்தவித சதி திட்டமும் இல்லை
-
சர்வதேச மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: டை பிரேக்கர் முறையில் குகேஷை வீழ்த்தி பிரக்ஞானந்தா சாம்பியன்
03 Feb 2025விஜ்க் ஆன் ஜீ : நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில், சக நாட்டு வீரர் குகேஷை வீழ்த்தி பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
-
அண்ணாவின் புகழ் ஓங்கட்டும்: துணை முதல்வர் உதயநிதி பதிவு
03 Feb 2025சென்னை : வாலாஜா சாலையில் இருந்து பேரணியாக சென்று அண்ணா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தியதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
-
இனி இதுதான் எங்களது ஸ்டைல்: இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ்
03 Feb 2025மும்பை : டி20 போட்டிகளை பொருத்தவரை இனி பேட்ஸ்மேன்களும் பந்து வீசுவார்கள்.
-
உ.பி. மகா கும்பமேளாவில் வசந்த பஞ்சமியில் புனித நீராடிய 62 லட்சத்துக்கும் அதிகமானோர்
03 Feb 2025பிரயாக்ராஜ் : கும்பமேளாவில் சிறப்புக்குரிய வசந்த பஞ்சமியை முன்னிட்டு நேற்று காலை நிலவரப்படி 62.25 லட்ச பக்தர்கள் புனித நீராடினர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
டெல்லி சட்டசபை தேர்தல்: பா.ஜ.க. மீது கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு
03 Feb 2025புதுடெல்லி : தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்த நிலையில், பா.ஜ.க. மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள வீடியோ, அரசியல் கள
-
பிரக்ஞானந்தாவுக்கு துணை முதல்வர் வாழ்த்து
03 Feb 2025சென்னை : மாஸ்டர்ஸ் செஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்ற பிரக்ஞானந்தாவுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
ஒருநாள் தொடரை கைப்பற்ற இந்தியா-இங்கிலாந்து தீவிரம்
03 Feb 2025மும்பை : சாம்பியன்ஸ் டிராபிக்கு தயாராகும் பொருட்டு நடைபெறும் ஒருநாள் தொடரை கைப்பற்ற இந்தியா - இங்கிலாந்து அணிகள் தீவிர முனைப்புடன் களமிறங்க உள்ளன.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-02-2025.
04 Feb 2025 -
தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 குறைவு
03 Feb 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 குறைந்து ரூ.61,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
அபிஷேக் புதிய மைல்கல்
03 Feb 2025இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பையில் நடைபெற்றது.
-
தமிழ்நாடு மீனவர்கள் கைதை தடுக்க தூதரக மூலம் நடவடிக்கை எடுங்கள் : மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
03 Feb 2025சென்னை : தமிழக மீனவர்கள் கைதை தடுக்க தூதரக மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
-
அதிக ரிஸ்க் எடுக்க விரும்புகிறோம்: தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர்
03 Feb 2025மும்பை : டி20 போட்டிகளில் இந்திய அணி அதிக ரிஸ்க் எடுத்து விளையாட விரும்புவதாக தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
-
தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் காயம்: வங்கதேச தொடரில் இடம்பெறுவாரா?
03 Feb 2025மும்பை : இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
04 Feb 2025சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.840 உயர்ந்து விற்பனையானது.
-
காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசியவரை சுட்டு பிடித்த போலீசார்
03 Feb 2025ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசியவரை போலீசார் சுட்டு பிடித்தனர்.
-
ராகுல் காந்தியின் பொய்கள் : வெளிநாட்டில் இந்தியாவின் மரியாதையை குலைக்கும் - ஜெய்சங்கர் கடும் விமர்சனம்
03 Feb 2025புதுடெல்லி : ராகுல் காந்தியின் பொய்கள் அரசியல் நோக்கத்திற்காக இருக்கலாம்.
-
தமிழ்நாட்டில் ஒரு வாரம் வெப்பநிலை அதிகரிக்கும் வானிலை மையம் தகவல்
04 Feb 2025சென்னை: தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
ஜகபர் அலி கொலை வழக்கு; கைதானவர்களுக்கு 3 நாள் போலீஸ் காவல்: புதுக்கோட்டை நீதிமன்றம்
03 Feb 2025புதுக்கோட்டை : ஜகபர் கொலை வழக்கில் கைதான 5 பேரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. க்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ்நாடு மீனவர்கள் கைதை தடுக்க தூதரக மூலம் நடவடிக்கை எடுங்கள் : மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
03 Feb 2025சென்னை : தமிழக மீனவர்கள் கைதை தடுக்க தூதரக மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
-
சோனியா மீது உரிமை மீறல் நடவடிக்கை: பா.ஜ.க, எம்.பி.க்கள் வலியுறுத்தல்
03 Feb 2025புதுடில்லி : ஜனாதிபதியை அவதூறாக பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க துணை ஜனாதிபதியிடம் பா.ஜ., எம்.பி.க்கள் மனு அளித்துள்ளனர்.