எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி: மசோதா விவகாரத்தில் தமிழக கவர்னர் முட்டுக்கட்டையாக இருக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், ஜனாதிபதி மசோதா மீது முடிவெடுக்காமல் நிறுத்தி வைத்தால் அடுத்து என்ன? முடிவெடுக்காத நிலையில் அது அப்படியே கிடப்பில் உள்ளதா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தமிழக அரசுக்கும், கவர்னர் ஆர்.என்.ரவிக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்து வருகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமனம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து துணைவேந்தர் நியமனம் உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்க உத்தரவிடக்கோரி தமிழ்நாடு அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.
இந்த வழக்குகளை நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு நடந்த விசாரணையின்போது, கவர்னருக்கு சுப்ரீம் கோர்ட் சில அறிவுறுத்தல்களை கூறியிருந்தது. இதற்கிடையே நேற்று முன்தினம் மீண்டும் விசாரணை நடைபெற்றது.
அப்போது தமிழக பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதுதொடர்பான மசோதாக் களுக்கு 3 ஆண்டுகளாக பதில் அளிக்காதது ஏன்? என்று தமிழக கவர்னருக்கு, சுப்ரீம் கோர்ட் சரமாரியாக கேள்வி எழுப்பியது. மேலும் விசாரணை நேற்றும் (வெள்ளிக்கிழமை) தொடரும் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது.
அதன்படி, இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கவர்னர் எதுவும் விளக்கமளிக்காமல் மசோதாவை திரும்ப அனுப்பினால், அவர் மனதில் என்ன இருக்கிறது என்பது எப்படி தெரியும்?. சம்மந்தப்பட்ட மசோதாவில் என்ன மாற்றம் செய்ய வேண்டும் என்பதை அவர் தெரிவிக்கவில்லை என்றால் அரசுக்கு எப்படி தெரியும்?. சம்மந்தப்பட்ட மசோதா மீது தான் ஒப்புதல் கொடுக்க முடியாது என்பதை எப்படி கவர்னர் உணர்ந்தார்?. இந்த கேள்விகளுக்கு விளக்கம் அளியுங்கள் என கவர்னர் தரப்புக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
அதற்கு கவர்னர் தரப்பில் ஆஜரான வக்கீல், துணைவேந்தர் நியமனத்தில் தமிழ்நாடு அரசு கொண்டு வந்த நடைமுறை மத்திய சட்ட விதிமுறைகளுக்கு எதிராக உள்ளது. அவற்றுக்கு கவர்னர் எவ்வாறு ஒப்புதல் அளிப்பார்?. அப்போது நீதிபதிகள், பல்கலை. மசோதா மத்திய சட்டத்துக்கு எதிராக இருந்தால் அடுத்த நடவடிக்கை என்ன? மாநில அரசு எப்படி செயல்படும் என்று நினைக்கிறீர்கள்?. கவர்னர் அரசுக்கு முட்டுக்கட்டையாக உள்ளார். மசோதா விவகாரத்தில் கவர்னர் முட்டுக்கட்டையாக இருக்க முடியாது என கூறினர்.
கவர்னர் தரப்பு: பல்கலை. செயல்பாடு குறித்து ஆளுநர் தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற இருந்தது. அதில் கலந்து கொள்ள வேண்டாம் என்று சில துணைவேந்தர்களை அரசு அணுகியது. யு.ஜி.சி விதிகளின் கீழ் கட்டுப்பட்டு உள்ள துணைவேந்தர்கள் பொறுப்பை ஆக்கிரமிக்க மாநில அரசு முயற்சித்தது. அரசியல் காரணங்களுக்காகவே துணைவேந்தர் மசோதாவை மாநில அரசு கொண்டு வந்தது.
கவர்னர் சில முரணான காரணங்களுக்காக ஒப்புதல் வழங்காமல் இருப்பார் என்றால், அரசு மற்றும் கவர்னர் என இரு தரப்பும் இணைந்து முடிவெடுக்க ஜனாதிபதிக்கு அனுப்பலாம். குறிப்பாக, இதன் மீது முடிவெடுக்க ஜனாதிபதிக்கு அனுப்புங்கள் என்று மாநில அரசே கவர்னரை கேட்க வைக்கலாம். எனவே இதில் எதுவும் மாநில உரிமையை பறிப்பதாக கருத முடியாது. கவர்னர் அரசியலமைப்பு பிரிவு 200ல் விதி 1ன் கீழ் முடிவெடுத்தே ஆகவேண்டும் என்று கூறுவது, பிரிவு 200ஐ முரணாக திரித்து கூறுவதாக ஆகும் என்று வாதிடப்பட்டது.
அப்போது குறுக்கீட்ட நீதிபதிகள், கடந்த 2023-ம் ஆண்டு மசோதாக்கள் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட பின்னர், தற்போது வரை என்ன நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டுள்ளார்?. 2 ஆண்டுகளாக மசோதாக்கள் அவரிடம் உள்ளதா? மாநில அரசுக்கும் அவருக்கும் இடையே தகவல் பரிமாற்றம் இருந்ததா?.
அட்டர்னி ஜெனரல்: இல்லை, மசோதாக்கள் அனுப்பப்பட்ட 2 மாதங்களில் தனது முடிவை தெரிவித்து விட்டார். அதில் 7 மசோதாக்கள் மீதான ஒப்புதலை நிறுத்தி வைப்பதாக தெரிவித்துள்ளார்.
நீதிபதிகள்: ஜனாதிபதியும் ஒப்புதலை நிறுத்தி வைக்கிறாரா?.
நீதிபதிகள்: ஜனாதிபதி மசோதா மீது முடிவெடுக்காமல் நிறுத்தி வைத்தால் அடுத்து என்ன? முடிவெடுக்காத நிலையில் அது அப்படியே கிடப்பில் உள்ளதா?
கவர்னர் தரப்பு: ஒப்புதல் இல்லாமல் ஜனாதிபதியிடம் உள்ளதென்றால், அவர் அதற்கு மேல் எவரிடமும் கேட்க வேண்டியது இல்லை
நீதிபதிகள்: அப்படியெனில் அந்த மசோதா கிடப்பிலேயே இருக்குமா? என்று கேள்வி எழுப்பினர்.
கவர்னர் தரப்பு: கவர்னரின் பணிகள் என்பது அரசியலமைப்பின் அடிப்படையான கூட்டாட்சி தத்துவத்தின் ஒரு அங்கம் ஆகும். மேலும் கவர்னருக்கு அனுப்பிய அனைத்து மசோதாக்களும் புதிய சட்டங்கள் அல்ல, மாறாக அவை சட்ட திருத்தங்கள். அதனை ஜனாதிபதி முடிவுக்காக கவர்னர் நிறுத்தி வைக்கிறார்.
நீதிபதிகள்: பல்கலை.களின் தரம், துணைவேந்தர்கள் தேர்வு குறித்து கவலை கொண்டு அந்த மசோதாக்களை நிறுத்தி வைத்தால், அடுத்து என்ன? என கேள்விகளை அடுக்கடுக்காக எழுப்பினர்.
பின்னர் வழக்கு விசாரணையை வரும் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்4 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்4 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.5 months 1 week ago |
-
திருச்சியில் கட்டுமான பணியின் போது முருகன் கோவில் வளைவு சரிந்து விபத்து
06 Feb 2025திருச்சி, திருச்சியில் உள்ள முருகன் கோவிலில் ஆர்ச் கட்டும் பணியின் போது திடீரென சரிந்து விழுந்தது.
-
சாம்பியன்ஸ் டிராபி இந்திய அணியில் வருண் சக்ரவர்த்தி? கேப்டன் ரோகித் சர்மா பதில்
06 Feb 2025நாக்பூர்: சாம்பியன்ஸ் டிராபியில் வருண் சக்ரவர்த்திக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது குறித்து ரோஹித் சர்மா பதிலளித்துள்ளார்.
-
ஓய்வு பெறுவது எப்போது? நிருபர்களின் கேள்வியால் கேப்டன் ரோகித் ஆத்திரம்
06 Feb 2025நாக்பூர், ஓய்வு குறித்த நிருபர்களின் கேள்வியால் ரோஹித் சர்மா கோபமடைந்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பு...
-
மத்தியப் பிரதேசத்தில் இந்திய போர் பயிற்சி விமானம் விபத்து
06 Feb 2025போபால், மத்தியப் பிரதேசத்தில் இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 பயிற்சி விமானம் விபத்தில் சிக்கியது.
-
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டவர்களில் 33 பேர் குஜராத்தை சேர்ந்தவர்கள்
06 Feb 2025அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டவர்களில் 33 பேர் குஜராத்தை சேர்ந்தவர்கள்
-
மீண்டும் சொதப்பிய ரோகித்
06 Feb 2025இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடைபெற்றது.
-
12ம் தேதி வரை வறண்ட வானிலை: சென்னை வானிலை மையம் தகவல்
06 Feb 2025சென்னை, தமிழகத்தில் 12ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது
-
இங்கி.க்கு எதிராக அதிக விக்கெட்டுகள்: ஜடேஜா புதிய சாதனை
06 Feb 2025நாக்பூர்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் கைப்பற்றிய 3 விக்கெட்டுகளையும் சேர்த்து, இந்திய வீரர் ஜடேஜா இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் ப
-
சாம்பியன்ஸ் டிராபி இந்திய அணியில் வருண் சக்ரவர்த்தி? கேப்டன் ரோகித் சர்மா பதில்
06 Feb 2025நாக்பூர்: சாம்பியன்ஸ் டிராபியில் வருண் சக்ரவர்த்திக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது குறித்து ரோஹித் சர்மா பதிலளித்துள்ளார்.
-
இந்தியர்கள் என்ன தீவிரவாதிகளா? காங்கிரஸ் எம்.பி. ரன்தீப்சிங் கேள்வி
06 Feb 2025புதுடில்லி, அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்களின் கை, கால்களில் விலங்கு போடப்பட்டது குறித்து இந்தியர்கள் என்ன தீவிரவாதிகளா? என காங்கிரஸ் எம்.பி.
-
திருப்பூர் அருகே விபத்தில் 2 பேர் பலி
06 Feb 2025திருப்பூர் : திருப்பூர் ஊத்துக்குளி கவுண்டம்பாளையம் பகுதியில் தனியார் பேருந்து கவிழந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
அறிமுக போட்டியில் அதிக விக்கெட்டுகள் ஹர்ஷித் ராணா புதிய சாதனை
06 Feb 2025நாக்பூர், 3 வடிவிலான கிரிக்கெட்டிலும் அறிமுகமான முதல் போட்டியிலேயே அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி ஹர்ஷித் ராணா சாதனை படைத்துள்ளார்.
-
காஸா விவகாரத்தில் அமெரிக்காவுக்கு காங். எதிர்ப்பு
06 Feb 2025அமெரிக்கா: இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அவருடன் கடந்த செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த டொனால்ட் டிரம்ப், காஸாவை அமெரிக்க ராணுவத்
-
ஜனாதிபதியுடன் சச்சின் சந்திப்பு
06 Feb 2025புதுடில்லி, முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், குடும்பத்தினருடன் டில்லி சென்று ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்தார்.
-
மதுரையில் எச்.ராஜா மீது வழக்குப்பதிவு
06 Feb 2025மதுரை, மதுரை சுப்பிரமணியபுரம் காவல்நிலையத்தில் பா.ஜ.க. முன்னாள் தேசியச் செயலா் எச். ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
தனது பெயரை எடேர்னல் என மாற்றிய சொமாட்டோ நிறுவனம்
06 Feb 2025மும்பை, உணவு விநியோக சேவையில் ஈடுபட்டுவரும் சொமாட்டோ நிறுவனம் தனது பெயரை மாற்றியுள்ளது.
-
சென்னையில் வரி வசூலை அதிகரிக்க புதிய திட்டம்
06 Feb 2025சென்னை: சென்னை மாநகராட்சியில் நீண்ட காலமாக வரி செலுத்தாமல் உள்ள இரண்டு லட்சம் பேருக்கு நோட்டீஸ் அனுப்பவும் அப்படி நோட்டீஸ் அனுப்பியும் வரி செலுத்தாதோர் மீது நடவடிக்கை எ
-
ஐ.சி.சி. சிறந்த வீரர் பரிந்துரை பட்டியலில் தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி
06 Feb 2025துபாய், ஐ.சி.சி. ஜனவரி மாத சிறந்த வீரர் விருது: பரிந்துரை பட்டியலில் தமிழக வீரர் இடம்பெற்றுள்ளார்.
பரிந்துரை பட்டியல்...
-
குடியுரிமை தொடர்பான அதிபர் டிரம்ப் உத்தரவுக்கு மேலும் ஒரு கோர்ட் தடை
06 Feb 2025வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் குடியுரிமை உத்தரவுக்கு கோர்ட்டு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
-
காசி தமிழ் சங்கமம்: கோவை-பனாரஸ் இடையே சிறப்பு ரெயில்
06 Feb 2025சென்னை, காசி தமிழ் சங்கமத்தை முன்னிட்டு கோவை-பனாரஸ் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
-
கப்பல்களுக்கு கட்டண விலக்கு அளிக்கும் அமெரிக்காவின் புதிய அறிவிப்பை ஏற்க மறுப்பு: பனாமா திட்டவட்டம்
06 Feb 2025அமெரிக்கா: பனாமா கால்வாய் வழியாகச் செல்லும் அமெரிக்க அரசு கப்பல்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்திருக்கும் நிலையில், அதனை பனாமா கால்வாய் நிர்
-
வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை: ஷேக் முஜிபுர் ரகுமான் வீடு சூறை
06 Feb 2025டாக்கா, வங்காளதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் தந்தையின் நினைவு இல்லம் வன்முறையாளர்களால் தீ வைக்கப்பட்டது
-
நடத்தையில் சந்தேகம்: மனைவியை சரமாரியாக குத்திக்கொன்ற கணவர்
06 Feb 2025பெங்களூரு: மனைவியை சரமாரியாக குத்திக் கொன்ற கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
டிரம்ப் நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்காவில் திடீர் போராட்டம்
06 Feb 2025டிரம்ப் நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்காவில் திடீர் போராட்டம்
-
ஜகபர் அலி கொலை வழக்கில் 5 பேருக்கு நீதிமன்ற காவல்
06 Feb 2025புதுக்கோட்டை, ஜகபர் கொலை வழக்கில் கைதான 5 பேரை நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.