எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![Electronic-Machine 2023-10-](/sites/default/files/styles/thumb-890-395/public/field/image/2025/02/07/Electronic-Machine_2023-10-.jpg?itok=t29UYXMd)
Source: provided
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்படுகின்றன. பகல் 11 மணிக்கு முன்னணி நிலவரம் தெரியவரும்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 3 தினங்களுக்கு முன் (பிப்.05) நடந்தது. தி.மு.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளா்களுடன் 46 பேர் போட்டியிட்டனர். 53 இடங்களில் அமைக்கப்பட்டு இருந்த 237 வாக்குச்சாவடிகளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.
3 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், ஒரு கட்டுப்பாட்டு கருவி, ஒரு வி.வி.பேட் கருவி என வாக்குச்சாவடியில் எந்திரங்கள் பொருத்தப்பட்டு இருந்தன. காலை முதல் மாலை வரை வாக்காளர்கள் ஆர்வமாக வந்து ஓட்டுப்போட்டனர். இறுதியில் 67.97 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்ததாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஓட்டுப்பதிவுக்கு பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, சித்தோட்டில் உள்ள அரசு என்ஜினீயரிங் கல்லூரி (ஐ.ஆர்.டி.டி.) வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு பாதுகாப்பு அறையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வரிசைப்படி அடுக்கி வைக்கப்பட்டன. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள பாதுகாப்பு அறை மற்றும் அரசு என்ஜினீயரிங் கல்லூரி வளாகம் பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான வாக்குகள் இன்று (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு எண்ணப்படுகின்றன. இதை முன்னிட்டு வாக்கு எண்ணும் மையம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்துக்கு வேட்பாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். ஒவ்வொரு சுற்று முடிவிலும் வேட்பாளர்கள் பெற்ற வாக்கு எண்ணிக்கை அறிவிக்கப்படும்.
பொதுமக்கள், கட்சியினர் என அனைவரும் சித்தோடு அரசு என்ஜினீயரிங் கல்லூரியின் நுழைவு வாயில் அருகே நின்று தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. பகல் 11 மணிக்கு முன்னணி நிலவரம் தெரியவரும். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக வெற்றி பெறுமா? அல்லது நா.த.க வெற்றி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 4 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 4 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 1 week ago |
-
திருச்சியில் கட்டுமான பணியின் போது முருகன் கோவில் வளைவு சரிந்து விபத்து
06 Feb 2025திருச்சி, திருச்சியில் உள்ள முருகன் கோவிலில் ஆர்ச் கட்டும் பணியின் போது திடீரென சரிந்து விழுந்தது.
-
சாம்பியன்ஸ் டிராபி இந்திய அணியில் வருண் சக்ரவர்த்தி? கேப்டன் ரோகித் சர்மா பதில்
06 Feb 2025நாக்பூர்: சாம்பியன்ஸ் டிராபியில் வருண் சக்ரவர்த்திக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது குறித்து ரோஹித் சர்மா பதிலளித்துள்ளார்.
-
ஓய்வு பெறுவது எப்போது? நிருபர்களின் கேள்வியால் கேப்டன் ரோகித் ஆத்திரம்
06 Feb 2025நாக்பூர், ஓய்வு குறித்த நிருபர்களின் கேள்வியால் ரோஹித் சர்மா கோபமடைந்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பு...
-
மத்தியப் பிரதேசத்தில் இந்திய போர் பயிற்சி விமானம் விபத்து
06 Feb 2025போபால், மத்தியப் பிரதேசத்தில் இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 பயிற்சி விமானம் விபத்தில் சிக்கியது.
-
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டவர்களில் 33 பேர் குஜராத்தை சேர்ந்தவர்கள்
06 Feb 2025அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டவர்களில் 33 பேர் குஜராத்தை சேர்ந்தவர்கள்
-
மீண்டும் சொதப்பிய ரோகித்
06 Feb 2025இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடைபெற்றது.
-
12ம் தேதி வரை வறண்ட வானிலை: சென்னை வானிலை மையம் தகவல்
06 Feb 2025சென்னை, தமிழகத்தில் 12ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது
-
இங்கி.க்கு எதிராக அதிக விக்கெட்டுகள்: ஜடேஜா புதிய சாதனை
06 Feb 2025நாக்பூர்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் கைப்பற்றிய 3 விக்கெட்டுகளையும் சேர்த்து, இந்திய வீரர் ஜடேஜா இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் ப
-
சாம்பியன்ஸ் டிராபி இந்திய அணியில் வருண் சக்ரவர்த்தி? கேப்டன் ரோகித் சர்மா பதில்
06 Feb 2025நாக்பூர்: சாம்பியன்ஸ் டிராபியில் வருண் சக்ரவர்த்திக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது குறித்து ரோஹித் சர்மா பதிலளித்துள்ளார்.
-
திருப்பூர் அருகே விபத்தில் 2 பேர் பலி
06 Feb 2025திருப்பூர் : திருப்பூர் ஊத்துக்குளி கவுண்டம்பாளையம் பகுதியில் தனியார் பேருந்து கவிழந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
அறிமுக போட்டியில் அதிக விக்கெட்டுகள் ஹர்ஷித் ராணா புதிய சாதனை
06 Feb 2025நாக்பூர், 3 வடிவிலான கிரிக்கெட்டிலும் அறிமுகமான முதல் போட்டியிலேயே அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி ஹர்ஷித் ராணா சாதனை படைத்துள்ளார்.
-
ஜனாதிபதியுடன் சச்சின் சந்திப்பு
06 Feb 2025புதுடில்லி, முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், குடும்பத்தினருடன் டில்லி சென்று ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்தார்.
-
மதுரையில் எச்.ராஜா மீது வழக்குப்பதிவு
06 Feb 2025மதுரை, மதுரை சுப்பிரமணியபுரம் காவல்நிலையத்தில் பா.ஜ.க. முன்னாள் தேசியச் செயலா் எச். ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
தனது பெயரை எடேர்னல் என மாற்றிய சொமாட்டோ நிறுவனம்
06 Feb 2025மும்பை, உணவு விநியோக சேவையில் ஈடுபட்டுவரும் சொமாட்டோ நிறுவனம் தனது பெயரை மாற்றியுள்ளது.
-
சென்னையில் வரி வசூலை அதிகரிக்க புதிய திட்டம்
06 Feb 2025சென்னை: சென்னை மாநகராட்சியில் நீண்ட காலமாக வரி செலுத்தாமல் உள்ள இரண்டு லட்சம் பேருக்கு நோட்டீஸ் அனுப்பவும் அப்படி நோட்டீஸ் அனுப்பியும் வரி செலுத்தாதோர் மீது நடவடிக்கை எ
-
ஐ.சி.சி. சிறந்த வீரர் பரிந்துரை பட்டியலில் தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி
06 Feb 2025துபாய், ஐ.சி.சி. ஜனவரி மாத சிறந்த வீரர் விருது: பரிந்துரை பட்டியலில் தமிழக வீரர் இடம்பெற்றுள்ளார்.
பரிந்துரை பட்டியல்...
-
குடியுரிமை தொடர்பான அதிபர் டிரம்ப் உத்தரவுக்கு மேலும் ஒரு கோர்ட் தடை
06 Feb 2025வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் குடியுரிமை உத்தரவுக்கு கோர்ட்டு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
-
காசி தமிழ் சங்கமம்: கோவை-பனாரஸ் இடையே சிறப்பு ரெயில்
06 Feb 2025சென்னை, காசி தமிழ் சங்கமத்தை முன்னிட்டு கோவை-பனாரஸ் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
-
கப்பல்களுக்கு கட்டண விலக்கு அளிக்கும் அமெரிக்காவின் புதிய அறிவிப்பை ஏற்க மறுப்பு: பனாமா திட்டவட்டம்
06 Feb 2025அமெரிக்கா: பனாமா கால்வாய் வழியாகச் செல்லும் அமெரிக்க அரசு கப்பல்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்திருக்கும் நிலையில், அதனை பனாமா கால்வாய் நிர்
-
நடத்தையில் சந்தேகம்: மனைவியை சரமாரியாக குத்திக்கொன்ற கணவர்
06 Feb 2025பெங்களூரு: மனைவியை சரமாரியாக குத்திக் கொன்ற கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
டிரம்ப் நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்காவில் திடீர் போராட்டம்
06 Feb 2025டிரம்ப் நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்காவில் திடீர் போராட்டம்
-
ஜகபர் அலி கொலை வழக்கில் 5 பேருக்கு நீதிமன்ற காவல்
06 Feb 2025புதுக்கோட்டை, ஜகபர் கொலை வழக்கில் கைதான 5 பேரை நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-02-2025.
07 Feb 2025 -
சிறுமி வன்கொடுமை வழக்கில் கைதான ஆசிரியர்களுக்கு வாதாடப்போவதில்லை; வழக்கறிஞர்கள் முடிவு
06 Feb 2025சிறுமி வன்கொடுமை வழக்கில் கைதான ஆசிரியர்களுக்கு வாதாடப்போவதில்லை; வழக்கறிஞர்கள் முடிவு
-
ராகிங் எதிர்ப்பு விதிமுறைகளைப் பின்பற்றாத 18 மருத்துவக் கல்லூரிகளுக்கு யு.ஜி.சி. நோட்டீஸ்
06 Feb 2025புதுடில்லி, ராகிங் எதிர்ப்பு விதிமுறைகளைப் பின்பற்றாத 18 மருத்துவக் கல்லூரிகளுக்கு பல்கலைக் கழக மானியக் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.