எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![CM 2024-05-31](/sites/default/files/styles/thumb-890-395/public/field/image/2025/02/07/CM_2024-05-31.jpg?itok=TRUmefxP)
Source: provided
திருநெல்வேலி : தமிழகத்திற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என்று மத்திய அரசை மீது கடுமையாக குற்றஞ்சாட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தற்போது திருநெல்வேலி அல்வாவைவிட மாநிலங்களுக்கு மத்திய அரசு தரும் அல்வா பேமஸ் என்றும் அவர் கிண்டலாக தெரிவித்தார்.
கனமழையால்...
திருநெல்வேலியில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, முடிவுற்ற திட்டப்பணிகள் திறப்பு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:- 2023 டிசம்பரில் எப்படிப்பட்ட கனமழை பெய்தது என்பது அனைவருக்கும் தெரியும். அந்த கனமழையால் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டது என்பதை அனைவருக்கும் தெரியும். அந்த பாதிப்புகளில் இருந்து மீள மத்திய அரசிடம் தமிழக அரசின் சார்பில் நிதி கோரினோம். இரண்டு மத்திய அமைச்சர்கள் தமிழகம் வந்தனர். ஆனால், அவர்கள் உடனடியாக இடைக்கால நிதி உதவியைக் கூட செய்யவில்லை.
நிவாரணப் பணிகள்....
பா.ஜ.க. எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் கோபித்துக்கொள்ளக்கூடாது. அவருக்கும் உண்மைத் தெரியும். ஆனால், அவர் பேசமாட்டார். நீங்கள் பேசுங்கள் என்றுதான் எனக்கு அனுமதி கொடுப்பார். இருப்பினும் மாநில அரசின் நிதிகளை வைத்து, நிவாரணப் பணிகளை நாம் செய்தோம். தொடர்ந்து மத்திய அரசிடம் நிதி கேட்டு வலியுறுத்தினோம். கொடுத்த மத்திய அரசைக் கண்டித்தோம். அப்போதும் நிதி வரவில்லை. பாராளுமன்றத்திலும் இதுகுறித்து பேசினோம், அப்போதும் வரவில்லை. ஏன் நீதிமன்றம் சென்றோம். அதன்பிறகுதான், தமிழகத்துக்கு மத்திய அரசு வெள்ள நிவாரண நிதியை அறிவித்தது.
வெறும் ரூ.276 கோடி...
வெள்ள நிவாரணமாக நாம் கேட்டது ரூ.37 ஆயிரத்து 907 கோடி. வேறு வழியில்லாமல் மத்திய அரசு நிதி கொடுத்தது எவ்வளவு தெரியுமா? வெறும் ரூ.276 கோடி. நாம் கேட்ட நிதியில் ஒரு விழுக்காட்டைக் கூட மத்திய அரசு கொடுக்கவில்லை. இப்படித்தான் மத்திய அரசு நடந்து கொண்டிருக்கிறது. சரிபோகட்டும், இந்த பட்ஜெட்டில் ஆவது தமிழகம் கோரிய நிதியை ஒதுக்கித் தருவார்கள் என்று எதிர்பார்த்தோம். அதுவும் இல்லை. தமிழகத்துக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என்று ஒதுக்கிவிட்டார்கள்.
தமிழகத்தின் பெயர்....
தமிழகத்தை மீண்டும் மீண்டும் வஞ்சிக்கிறது மத்திய பாஜக அரசு. அவர்களைப் பொருத்தவரை கூட்டணியில் இருக்கக்கூடிய மாநிலங்களுக்கும், தேர்தல் வரக்கூடிய மாநிலங்களுக்கும் மட்டும்தான் அறிவிப்புகளையும், நிதியையும் கொடுப்பார்கள். அதனால்தான் நாம் கேட்கிறோம். இந்தியாவின் வரைபடத்தில் மட்டும் தமிழகம் இருந்தால் போதுமா? அரசு வெளியிடுகிற நிதிநிலை அறிக்கையில் இருக்க வேண்டாமா? மத்திய அரசின் திட்டங்களில் தமிழகத்தின் பெயர் இருக்க வேண்டாமா?
நெல்லை அல்வாவை விட....
தமிழகத்துக்கு சிறப்புத் திட்டங்கள் அறிவிக்க வேண்டாமா? தேர்தல் நேரத்தில் வாக்கு சேகரிக்க மட்டும் தமிழகத்துக்கு வந்தால் போதுமென்று நினைக்கிறார்களா? இப்படி நாம் கேட்கிற கேள்விகளுக்கு பாஜக-விடமிருந்து எந்த பதிலும் வராது. திருநெல்வேலி அல்வா என்றால் உலகளவில் பேமஸ். ஆனால், இப்போது மாநிலங்களுக்கு மத்திய அரசு தரும் அல்வாதான் அதைவிட பேமஸாக இருக்கிறது.
புதிய புதிய திட்டங்கள்...
மத்திய அரசைப் பொருட்படுத்தாமல், நமக்கு நாமே தமிழகத்தை மேம்படுத்தி வருகிறது திராவிட மாடல் அரசு. அதனால்தான் மத்திய அரசு வெளியிடுகிற அனைத்து புள்ளி விவரங்களிலும், தமிழகம் முன்னிலையில் இருக்கிறது. அதற்கு காரணம், வாக்களித்த மக்களான உங்களுக்கு நாங்கள் உண்மையாக இருக்கிறோம். மத்திய அரசின் மீது குறை கூறிவிட்டு, எந்த திட்டங்களையும் உருவாக்காமல் நாங்கள் விட்டுவிடவில்லை. நாளுக்கு நாள் புதிய திட்டங்கள் வந்துகொண்டே இருக்கிறது. நாங்கள் உருவாக்கிக் கொண்டே இருப்போம், என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 4 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 4 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-02-2025.
07 Feb 2025 -
இடைத்தேர்தல் நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று வாக்கு எண்ணிக்கை
07 Feb 2025ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்படுகின்றன. பகல் 11 மணிக்கு முன்னணி நிலவரம் தெரியவரும்.
-
நெல்லையில் பிரசித்தி பெற்ற இருட்டுக்கடை அல்வாவை சுவைத்த முதல்வர் ஸ்டாலின்
07 Feb 2025திருநெல்வேலி: திருநெல்வேலி டவுனிலுள்ள பிரசித்தி பெற்ற இருட்டுக்கடை அல்வாவை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று இரவு வாங்கி ருசித்தார்.
-
டெல்லியில் இன்று வாக்கு எண்ணிக்கை பிற்பகலுக்குள் முன்னிலை நிலவரம் தெரியவரும்
07 Feb 2025புதுடெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. இன்று பிற்பகலுக்குள் முன்னிலை நிலவரம் தெரியவந்துவிடும்.
-
சட்ட விரோதமாக கட்டிட கழிவுகள்: சென்னையில் ரூ.8 லட்சம் அபராதம் விதிப்பு
07 Feb 2025சென்னை : சென்னையில் சட்ட விரோதமாக கட்டிட கழிவுகள் கொட்டியவர்கள் மீது ரூ.8 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டது
-
ஸ்ரேயாஸ் ஐயர்-சுப்மன் கில் பார்ட்னஷிப்பால் தோல்வி : இங்கிலாந்து கேப்டன் பட்லர் பேட்டி
07 Feb 2025நாக்பூர் : இந்திய அணியின் பேட்ஸ்மேன்க ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சுப்மன் கில் ஆகியோரது பார்ட்னர்ஷிப்தான் வெற்றியை எங்களிடம் இருந்து பறித்தது என்று இங்கிலாந்து கேப்டன்
-
மேலும் 487 இந்தியர்களை வெளியேற்ற அமெரிக்கா முடிவு
07 Feb 2025புதுடெல்லி, : மேலும் 487 இந்தியர்களை வெளியேற்ற அமெரிக்கா நடவடிக்கைகள் எடுத்து வருவதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
-
இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் வரும் 12-ம் தேதி தீர்ப்பு வழங்குகிறது சென்னை ஐகோர்ட்
07 Feb 2025சென்னை: இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை வருகிற 12-ம் தேதிக்கு சென்னை ஐகோர்ட் ஒத்தி வைத்துள்ளது
-
பாதுகாப்புப்படை தாக்குதலில் பாக்.கில் 12 பயங்கரவாதிகள் பலி
07 Feb 2025பெஷாவர் : பாகிஸ்தான் அருகே உள்ள வடமேற்கு பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 12 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர்.
-
தங்கம் விலையில் மாற்றமில்லை
07 Feb 2025சென்னை: தங்கம் விலை நேற்று மாற்றமின்றி விற்பனையானது.
-
பா.ஜ .க.வுக்கு எதிரான குற்றச்சாட்டு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நோட்டீஸ்
07 Feb 2025புதுடெல்லி : டெல்லியில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் கெஜ்ரிவாலுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
-
ட்ரம்புக்கு ‘கோல்டன் பேஜர்’ பரிசளித்த இஸ்ரேல் பிரதமர்
07 Feb 2025நியூயார்க் : அமெரிக்க அதிபராக இரண்டாவது முறை ட்ரம்ப் கடந்த மாதம் பதவியேற்ற நிலையில், அவரை சந்தித்த முதல் வெளிநாட்டு தலைவராக நெதன்யாகு அறியப்படுகிறார்.
-
சேலத்தில் மாணவியிடம் சில்மிஷம்: உடற்கல்வி ஆசிரியர் கைது
07 Feb 2025சேலம் : சேலத்தில் மாணவியிடம் சில்மிஷம் செய்த தற்காலிக உடற்கல்வி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
-
நில முறைகேடு வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற கர்நாடக ஐகோர்ட்டு மறுப்பு
07 Feb 2025பெங்களூரூ: சித்தராமையா மனைவி பார்வதி தொடர்பான நில முறைகேடு வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற கோரிய மனுவை கர்நாடக ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
-
டெல்லியில் தேர்தல் விதிமீறல்: இதுவரை 1,100 வழக்குகள் பதிவு
07 Feb 2025புதுடெல்லி : டெல்லியில் தேர்தல் விதிமீறல் தொடர்பாக 1,100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
-
திண்டுக்கல் டி.ஐ.ஜி. வந்திதா பாண்டே மத்திய அரசு பணிக்கு மாற்றம்
07 Feb 2025சென்னை : திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. வந்திதா பாண்டே ஐ.பி.எஸ். மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
-
இஸ்ரேல் மீது நடவடிக்கை: சர்வதேச நீதிமன்ற உத்தரவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தடை
07 Feb 2025வாஷிங்டன்: இஸ்ரேல் மீதான விசாரணைகள் தொடர்பாக சர்வதேச கோர்ட்டு மீது தடைகளை விதிக்கும் உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டார்.
-
உள்ளாட்சி பணிகளில் பதவிக் காலம் முடிந்த பிரதிநிதிகளின் தலையீட்டை தடுக்க வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
07 Feb 2025சென்னை: பதவிக் காலம் முடிந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் பணியில் தலையிடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என ஓ.பன்னீர்செலவம் தெரிவித்துள்ளார்.
-
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பிறகு இந்திய அணிக்கு புதிய கேப்டன்..?
07 Feb 2025மும்பை : சாம்பியன்ஸ் கோப்பையை இந்தியா வெல்லவில்லையெனில் ரோகித் சர்மா கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டு ஹர்திக் பாண்ட்யா புதிய கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று தகவல்கள
-
உ.பி. மகா கும்பமேளாவில் மீண்டும் தீ விபத்து
07 Feb 2025பிரக்யாராஜ்: பிரக்யராஜ்ஜில் மகா கும்பமேளா நடைபெற்று வரும் நிலையில் அங்கு மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
-
செங்கல்பட்டு மாவட்டத்தில் வரும் 11ம் தேதி கோத்ரேஜ் கன்ஸ்யூமர் நிறுவன புதிய ஆலை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
07 Feb 2025சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள கோத்ரேஜ் கன்ஸ்யூமர் நிறுவனத்தின் புதிய ஆலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 11ம் தேதி திறந்து வைக்கிறார்.
-
மணப்பாறை அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை: தலைமறைவு தலைமை ஆசிரியை சரண்
07 Feb 2025மணப்பாறை: 4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட சம்பவத்தில் தலைமறைவாக இருந்த தலைமை ஆசிரியை போலீசாரிடம் சரண் அடைந்தார்.
-
கனடாவில் காணாமல் போன 20 ஆயிரம் இந்திய மாணவர்கள் : வெளியான தகவலால் அதிர்ச்சி
07 Feb 2025கனடா : இந்தியாவிலிருந்து கனடாவுக்கு மாணவர்கள் விசாவில் சென்று, ஆனால் இதுவரை எந்த கல்லூரியிலும் சேராமல், 20 ஆயிரம் மாணவர்கள் எங்கிருக்கிறார்கள் என்ற தகவலே தெரியாமல் இருப
-
அலெக்ஸ் கேரி புதிய சாதனை
07 Feb 2025இலங்கை - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.
-
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: வழக்கறிஞர் ஜாமீன் மனு தள்ளுபடி
07 Feb 2025சென்னை : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் ஹரிஹரனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.