எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![Us](/sites/default/files/styles/thumb-890-395/public/field/image/2025/02/07/Us.gif?itok=br1hzBjp)
Source: provided
புதுடெல்லி, : மேலும் 487 இந்தியர்களை வெளியேற்ற அமெரிக்கா நடவடிக்கைகள் எடுத்து வருவதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் கண்டு அவர்களை அவர்களது நாடுகளுக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கையை ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது. அந்த வகையில் அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இன்றி வசித்து வந்த இந்தியர்கள் பலர் 'சி-17' ரக ராணுவ விமானத்தில் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். கடந்த செவ்வாய்க்கிழமை காலை டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து புறப்பட்ட விமானம் 3 நாட்களுக்கு முன் மதியம் பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரை வந்தடைந்தது.
அரியானா மற்றும் குஜராத் மாநிலங்களை சேர்ந்த தலா 33 பேர், பஞ்சாப்பை சேர்ந்த 30 பேர், உத்தரபிரதேசம் மற்றும் மராட்டியத்தை சேர்ந்த தலா 3 பேர், சண்டிகாரை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 104 பேர் விமானத்தில் வந்தனர். அவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவர். இதனிடையே இந்தியர்கள் 104 பேரும் கைகளில் விலங்கு பூட்டப்பட்டும், கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டும் விமானத்தில் அழைத்து வரப்பட்டதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறியதாவது: பிப்.,10 -12 தேதிகளில் பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு, பிரதமர் மோடி பிப்.,12, 13 ஆகிய தேதிகளில் அமெரிக்காவிற்கு செல்கிறார். அங்கு அந்நாட்டு ஜனாதிபதி டிரம்ப்பை சந்திக்க உள்ளார். டிரம்ப் இரண்டாவது முறையாக ஜனாதிபதியான பிறகு, மோடியின் முதல் அமெரிக்க பயணம் இதுவாகும். ஜனாதிபதியான பிறகு அவரை சந்திக்கும் வெகு சில தலைவர்களில் மோடியும் ஒருவர் ஆவார். அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் தொடர்பான விவகாரத்தில் அமெரிக்க அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளோம். நாடு கடத்தப்படுபவர்களை, முறையாக கையாள வேண்டும் என அமெரிக்காவிடம் தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.
2012 ல் இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட போது, இந்திய அரசு எதிர்ப்பு தெரிவித்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. இந்தியர்கள் நாடு கடத்தப்படும் விவகாரத்தில், இந்தியா தொடர்ந்து தனது கவலையை வெளிப்படுத்தி வருகிறது. மேலும் 487 இந்தியர்களை வெளியேற்ற அமெரிக்கா திட்டமிட்டு உள்ளது. ஒட்டுமொத்தமாக எத்தனை பேர் என கூற முடியாது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா அரசுடன் தொடர்பில் இருந்து வருகிறோம். அமெரிக்காவில் இருந்து இதற்கு முன்னரும் இந்தியர்கள் வெளியேற்றப் பட்டுள்ளனர். ஆனால் இந்த முறை நடவடிக்கைகள் சற்று வேறுவிதமாக உள்ளன. சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவது தேசிய பாதுகாப்பு நடவடிக்கை என அமெரிக்கா விளக்கம் அளித்து உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 4 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 4 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-02-2025.
07 Feb 2025 -
இடைத்தேர்தல் நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று வாக்கு எண்ணிக்கை
07 Feb 2025ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்படுகின்றன. பகல் 11 மணிக்கு முன்னணி நிலவரம் தெரியவரும்.
-
நெல்லையில் பிரசித்தி பெற்ற இருட்டுக்கடை அல்வாவை சுவைத்த முதல்வர் ஸ்டாலின்
07 Feb 2025திருநெல்வேலி: திருநெல்வேலி டவுனிலுள்ள பிரசித்தி பெற்ற இருட்டுக்கடை அல்வாவை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று இரவு வாங்கி ருசித்தார்.
-
டெல்லியில் இன்று வாக்கு எண்ணிக்கை பிற்பகலுக்குள் முன்னிலை நிலவரம் தெரியவரும்
07 Feb 2025புதுடெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. இன்று பிற்பகலுக்குள் முன்னிலை நிலவரம் தெரியவந்துவிடும்.
-
சட்ட விரோதமாக கட்டிட கழிவுகள்: சென்னையில் ரூ.8 லட்சம் அபராதம் விதிப்பு
07 Feb 2025சென்னை : சென்னையில் சட்ட விரோதமாக கட்டிட கழிவுகள் கொட்டியவர்கள் மீது ரூ.8 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டது
-
ஸ்ரேயாஸ் ஐயர்-சுப்மன் கில் பார்ட்னஷிப்பால் தோல்வி : இங்கிலாந்து கேப்டன் பட்லர் பேட்டி
07 Feb 2025நாக்பூர் : இந்திய அணியின் பேட்ஸ்மேன்க ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சுப்மன் கில் ஆகியோரது பார்ட்னர்ஷிப்தான் வெற்றியை எங்களிடம் இருந்து பறித்தது என்று இங்கிலாந்து கேப்டன்
-
மேலும் 487 இந்தியர்களை வெளியேற்ற அமெரிக்கா முடிவு
07 Feb 2025புதுடெல்லி, : மேலும் 487 இந்தியர்களை வெளியேற்ற அமெரிக்கா நடவடிக்கைகள் எடுத்து வருவதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
-
சேலத்தில் மாணவியிடம் சில்மிஷம்: உடற்கல்வி ஆசிரியர் கைது
07 Feb 2025சேலம் : சேலத்தில் மாணவியிடம் சில்மிஷம் செய்த தற்காலிக உடற்கல்வி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
-
இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் வரும் 12-ம் தேதி தீர்ப்பு வழங்குகிறது சென்னை ஐகோர்ட்
07 Feb 2025சென்னை: இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை வருகிற 12-ம் தேதிக்கு சென்னை ஐகோர்ட் ஒத்தி வைத்துள்ளது
-
பாதுகாப்புப்படை தாக்குதலில் பாக்.கில் 12 பயங்கரவாதிகள் பலி
07 Feb 2025பெஷாவர் : பாகிஸ்தான் அருகே உள்ள வடமேற்கு பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 12 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர்.
-
தங்கம் விலையில் மாற்றமில்லை
07 Feb 2025சென்னை: தங்கம் விலை நேற்று மாற்றமின்றி விற்பனையானது.
-
பா.ஜ .க.வுக்கு எதிரான குற்றச்சாட்டு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நோட்டீஸ்
07 Feb 2025புதுடெல்லி : டெல்லியில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் கெஜ்ரிவாலுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
-
ட்ரம்புக்கு ‘கோல்டன் பேஜர்’ பரிசளித்த இஸ்ரேல் பிரதமர்
07 Feb 2025நியூயார்க் : அமெரிக்க அதிபராக இரண்டாவது முறை ட்ரம்ப் கடந்த மாதம் பதவியேற்ற நிலையில், அவரை சந்தித்த முதல் வெளிநாட்டு தலைவராக நெதன்யாகு அறியப்படுகிறார்.
-
நில முறைகேடு வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற கர்நாடக ஐகோர்ட்டு மறுப்பு
07 Feb 2025பெங்களூரூ: சித்தராமையா மனைவி பார்வதி தொடர்பான நில முறைகேடு வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற கோரிய மனுவை கர்நாடக ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
-
டெல்லியில் தேர்தல் விதிமீறல்: இதுவரை 1,100 வழக்குகள் பதிவு
07 Feb 2025புதுடெல்லி : டெல்லியில் தேர்தல் விதிமீறல் தொடர்பாக 1,100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
-
திண்டுக்கல் டி.ஐ.ஜி. வந்திதா பாண்டே மத்திய அரசு பணிக்கு மாற்றம்
07 Feb 2025சென்னை : திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. வந்திதா பாண்டே ஐ.பி.எஸ். மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
-
உள்ளாட்சி பணிகளில் பதவிக் காலம் முடிந்த பிரதிநிதிகளின் தலையீட்டை தடுக்க வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
07 Feb 2025சென்னை: பதவிக் காலம் முடிந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் பணியில் தலையிடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என ஓ.பன்னீர்செலவம் தெரிவித்துள்ளார்.
-
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பிறகு இந்திய அணிக்கு புதிய கேப்டன்..?
07 Feb 2025மும்பை : சாம்பியன்ஸ் கோப்பையை இந்தியா வெல்லவில்லையெனில் ரோகித் சர்மா கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டு ஹர்திக் பாண்ட்யா புதிய கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று தகவல்கள
-
இஸ்ரேல் மீது நடவடிக்கை: சர்வதேச நீதிமன்ற உத்தரவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தடை
07 Feb 2025வாஷிங்டன்: இஸ்ரேல் மீதான விசாரணைகள் தொடர்பாக சர்வதேச கோர்ட்டு மீது தடைகளை விதிக்கும் உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டார்.
-
பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்களின் கல்விச்சான்றுகள் ரத்து: அமைச்சர் எச்சரிக்கை
07 Feb 2025சென்னை : பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்களின் கல்விச்சான்றுகள் ரத்து செய்யப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.
-
கனடாவில் காணாமல் போன 20 ஆயிரம் இந்திய மாணவர்கள் : வெளியான தகவலால் அதிர்ச்சி
07 Feb 2025கனடா : இந்தியாவிலிருந்து கனடாவுக்கு மாணவர்கள் விசாவில் சென்று, ஆனால் இதுவரை எந்த கல்லூரியிலும் சேராமல், 20 ஆயிரம் மாணவர்கள் எங்கிருக்கிறார்கள் என்ற தகவலே தெரியாமல் இருப
-
அலெக்ஸ் கேரி புதிய சாதனை
07 Feb 2025இலங்கை - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.
-
மணப்பாறை அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை: தலைமறைவு தலைமை ஆசிரியை சரண்
07 Feb 2025மணப்பாறை: 4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட சம்பவத்தில் தலைமறைவாக இருந்த தலைமை ஆசிரியை போலீசாரிடம் சரண் அடைந்தார்.
-
உ.பி. மகா கும்பமேளாவில் மீண்டும் தீ விபத்து
07 Feb 2025பிரக்யாராஜ்: பிரக்யராஜ்ஜில் மகா கும்பமேளா நடைபெற்று வரும் நிலையில் அங்கு மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
-
செங்கல்பட்டு மாவட்டத்தில் வரும் 11ம் தேதி கோத்ரேஜ் கன்ஸ்யூமர் நிறுவன புதிய ஆலை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
07 Feb 2025சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள கோத்ரேஜ் கன்ஸ்யூமர் நிறுவனத்தின் புதிய ஆலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 11ம் தேதி திறந்து வைக்கிறார்.