எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![Modi 2024-06-10](/sites/default/files/styles/thumb-890-395/public/field/image/2025/02/12/Modi_2024-06-10.jpg?itok=_EYuqIbL)
Source: provided
பாரீஸ் : இந்தியாவில் பல கண்டுபிடிப்புகள் மற்றும் உள்கட்டமைப்பு காரணமாக, இயற்கை எரிவாயு விநியோகம் அதிகரித்து வருவதால் எதிர்காலத்தில் இயற்கை எரிவாயு பயன்பாடு அதிகரிக்க வழிவகுக்கும் என்றும் இந்தத் துறைகளில் ஏராளமான முதலீட்டு வாய்ப்புகள் இருப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலம் 2025 ஆம் ஆண்டுக்கான இந்திய எரிசக்தி வாரத்தின் மூன்றாவது பதிப்பின் தொடக்க விழாவில் உரையாற்றினார். அப்போது, இந்தியா தனது வளர்ச்சியை மட்டுமல்லாமல், உலகின் வளர்ச்சியையும் முன்னெடுத்துச் செல்கிறது, அதில் எரிசக்தித் துறை குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது.
இந்தியாவின் எரிசக்தி லட்சியங்கள் 5 தூண்களாக கட்டமைக்கப்பட்டுள்ளன. வளங்களை பயன்படுத்துதல், புத்திசாலித்தனமான மனங்களிடையே புதுமைகளை ஊக்குவித்தல், பொருளாதார வலிமை மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை, எரிசக்தி வர்த்தகத்தை கவர்ச்சிகரமானதாகவும், எளிதாகவும் மாற்றும் மூலோபாய புவியியல் மற்றும் உலகளாவிய நிலைத்தன்மைக்கான அர்ப்பணிப்பு ஆகிய ஐந்து தூண்களின் மீது இந்தியாவின் ஆற்றல் லட்சியங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. இவைகள் இந்தியாவின் எரிசக்தி துறையில் புதிய வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது என்றார்.
அடுத்த இருபது ஆண்டுகள் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கு முக்கியமானவை, அடுத்த ஐந்தாண்டுகளில் பல குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டுவோம். 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறன், இந்திய ரயில்வேயின் நிகர பூஜ்ஜிய கரியமில வாயு உமிழ்வை அடைதல், ஆண்டுதோறும் ஐந்து மில்லியன் மெட்ரிக் டன் பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்தல் உள்ளிட்ட இந்தியாவின் பல எரிசக்தி இலக்குகள் 2030 காலக்கெடுவுடன் இணைக்கப்பட்டுள்ளன, இந்த இலக்குகள் லட்சியமாகத் தோன்றலாம், ஆனால் கடந்த பத்தாண்டின் சாதனைகள் இந்த இலக்குகள் அடையப்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் சூரிய சக்தி உர்பத்தி 32 மடங்கு அதிகரித்து, உலகின் மூன்றாவது பெரிய சூரிய சக்தி உற்பத்தி நாடாக மாற்றியுள்ளது. ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக வளர்ந்துள்ள இந்தியா, புதைபடிவ எரிபொருள் அல்லாத எரிசக்தித் திறன் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாகவும், பாரீஸ் ஒப்பந்தத்தின் இலக்குகளை அடைந்த முதல் ஜி-20 நாடு இந்தியா. தற்போதைய 19 சதவிகித எத்தனால் கலப்பு என்பது இந்தியாவின் அந்நியச் செலாவணி சேமிப்பு, விவசாயிகளின் கணிசமான வருவாய் மற்றும் கரியமில வாயு வெளியேற்றத்தில் குறிப்பிடத்தக்க குறைப்புக்கு வழிவகுத்துள்ளது.
2025 அக்டோபர் மாதத்திற்குள் 20 சதவிகித எத்தனால் கலப்பை அடைய வேண்டும் என்ற இந்தியாவின் இலக்கை எடுத்துரைத்த மோடி, இந்தியாவின் உயிரி எரிபொருள் தொழில்துறை 500 மில்லியன் மெட்ரிக் டன்கள் என்ற நிலையான மூலப்பொருள்களுடன் விரைவான வளர்ச்சிக்குத் தயாராக உள்ளது.
மேலும் இந்தியாவின் ஜி-20 தலைமையின் போது, உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி நிறுவப்பட்டது. அது தற்போது 28 நாடுகள் மற்றும் 12 சர்வதேச அமைப்புகளை உள்ளடக்கியுள்ளதாக வளர்ந்துள்ளது. இந்தக் கூட்டணி கழிவுகளை செல்வமாக மாற்றி, சிறப்பு மையங்களை அமைக்கிறது.
இந்தியா தனது ஹைட்ரோகார்பன் வளங்களின் திறனை முழுமையாக ஆராய்வதற்காக தொடர்ந்து சீர்திருத்தம் செய்து வருகிறது. முக்கிய கண்டுபிடிப்புகள் மற்றும் எரிவாயு உள்கட்டமைப்பின் விரிவாக்கம் ஆகியன எரிவாயு துறையின் வளர்ச்சிக்கு பங்களிப்பதாகவும், இந்தியாவின் எரிசக்தி கலவையில் இயற்கை எரிவாயுவின் பங்கை அதிகரித்துள்ளது. இந்தியா தற்போது நான்காவது பெரிய சுத்திகரிப்பு மையமாக உள்ளது, அதன் திறனை 20 சதவிகிதம் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவின் வண்டல் படுகைகளில் ஏராளமான ஹைட்ரோகார்பன் வளங்களை கொண்டுள்ளன, அவற்றில் சில ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளன, மற்றவை ஆய்வுக்காக காத்திருக்கின்றன, இந்தியாவின் இந்த முக்கியத் துறையை மேலும் கவர்ச்சிகரமானதாக மாற்ற, அரசு வெளிப்படையான நில உரிமக் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது.
சிறப்பு பொருளாதார மண்டலத்தைத் திறப்பது மற்றும் ஒற்றைச் சாளர அனுமதி முறையை நிறுவுவது உள்பட அரசு விரிவான ஆதரவை வழங்கியுள்ளது.எண்ணெய் வயல்களின் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டுச் சட்டத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள் தற்போது பங்குதாரர்களுக்கு கொள்கை ஸ்திரத்தன்மை, நீட்டிக்கப்பட்ட குத்தகைகள் மற்றும் மேம்பட்ட நிதி விதிமுறைகளை வழங்குகின்றன.
இந்த சீர்திருத்தங்கள் கடல்சார் துறையில் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களை ஆராய்வதற்கும், உற்பத்தியை அதிகரிப்பதற்கும், மூலோபாய பெட்ரோலிய இருப்புக்களை பராமரிப்பதற்கும் உதவும் என்று கூறினார். மேலும், இந்தியாவில் பல கண்டுபிடிப்புகள் மற்றும் விரிவடைந்து வரும் குழாய் உள்கட்டமைப்பு காரணமாக, இயற்கை எரிவாயு விநியோகம் அதிகரித்து வருவதாகவும், இது எதிர்காலத்தில் இயற்கை எரிவாயு பயன்பாடு அதிகரிக்க வழிவகுக்கும் என்றும் இந்தத் துறைகளில் ஏராளமான முதலீட்டு வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 4 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 4 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-02-2025.
12 Feb 2025 -
ஆப்கானில் திடீர் நிலநடுக்கம்
12 Feb 2025ஆப்கானிஸ்தான் : ஆப்கானிஸ்தானில் திடீர் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் பதிவாக உள்ளது.
-
மாநிலங்களவை உறுப்பினராக கமல்ஹாசன் தேர்வாகிறார்..?
12 Feb 2025சென்னை: மாநிலங்களவை உறுப்பினராக கமல்ஹாசன் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பாக்கப்படுகிறது.
-
பிரெஞ்சு மண்ணில் சாவர்க்கருக்கு புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி
12 Feb 2025பாரிஸ்: சாவர்க்கரை பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் ஒப்படைக்கக் கூடாது என்று கோரிய அக்கால பிரெஞ்சு ஆர்வலர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக மோடி, எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
-
இந்தியாவில் டிஜிட்டல் மாற்றம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் சுந்தர் பிச்சை ஆலோசனை
12 Feb 2025பாரிஸ் : பாரிஸ் ஏஐ உச்சி மாநாட்டை ஒட்டி பிரதமர் மோடியை சந்தித்த கூகுள் நிறுவன சிஇஓ, பிரதமருடன் இந்தியாவின் டிஜிட்டல் மாற்றம் தொடர்பாக ஆலோசித்ததாகத் தெரிவித்துள்ளார்.
-
அயோத்தி ராமர் கோவில் தலைமை அர்ச்சகர் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
12 Feb 2025புதுடெல்லி: அயோத்தி ராமர் கோவில் தலைமை அர்ச்சகர் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
பணய கைதிகள் விவகாரம்: மிரட்டல் விடுத்த டிரம்புக்கு ஹமாஸ் அமைப்பு பதிலடி
12 Feb 2025காசா : பணய கைதிகள் விவகாரம் மிரட்டலுக்கு இடமில்லை என டிரம்புக்கு ஹமாஸ் பதிலடி கொடுதத்துள்ளது.
-
பணய கைதிகள் விவகாரம்: ஹமாசுக்கு நெதன்யாகு மிரட்டல்
12 Feb 2025ஜெருசலேம் : வருகிற 15-ம் தேதிக்குள் பணய கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று ஹமாஸ் அமைப்புக்கு நெதன்யாகு மிரட்டல் விடுத்துள்ளார்.
-
அ.தி.மு.க. சின்னம் உள்ளிட்ட விவகாரங்களை தேர்தல் ஆணையம் விசாரிக்க அனுமதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
12 Feb 2025சென்னை: அ.தி.மு.க.
-
28 ஆண்டு காலம் பணியாற்றிய ராமர் கோயில் தலைமை அர்ச்சகர் காலமானார்
12 Feb 2025புதுடெல்லி : அயோத்தி ராமர் கோயிலின் தலைமை அர்ச்சகராக இருந்த ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் (87) நேற்று காலமானார்.
-
இனி அரசியலுக்கு ‘நோ’: நடிகர் சிரஞ்சீவி உறுதி
12 Feb 2025ஐதராபாத் : வாழ்நாள் முழுவதும் இனி அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்று நடிகர் சிரஞ்சீவி உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
நெடுஞ்சாலை பணிகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
12 Feb 2025சென்னை: நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பராமரிப்பு பணிகளை அமைச்சர் எ.வ. வேலு ஆய்வு செய்தார்.
-
இலவசங்களால் மக்கள் உழைக்க தயாராக இல்லை சுப்ரீம் கோர்ட் கருத்து
12 Feb 2025புதுடெல்லி: நாட்டில் அரசியல் கட்சிகள் வழங்கும் இலவசங்களால் மக்கள் உழைக்க தயாராக இல்லை என்று சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.
-
அத்திக்கடவு-அவினாசி திட்டம்: ஓ.பன்னீர்செல்வம் காட்டம்
12 Feb 2025சென்னை : ஜெயலலிதாவால் வித்திடப்பட்ட அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கு உரிமை கொண்டாட யாருக்கும் தகுதியில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
-
பிரான்சில் முதல் உலகப்போரில் உயிரிழந்த இந்திய வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி
12 Feb 2025பாரிஸ் : பிரான்ஸ் நாட்டின் மெர்சிலி நகரில் முதல் உலகப்போரில் உயிரிழந்த இந்திய வீரர்களின் நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.
-
சேலம் அருகே பஸ் கவிழ்ந்து விபத்து: செல்போன் பேசியபடி பஸ்சை இயக்கிய ஓட்டுநர் பணி நீக்கம்
12 Feb 2025சேலம்: சேலம் அருகே பஸ் கவிழ்ந்து விபத்தில் செல்போன் பேசியபடி பஸ்சை இயக்கிய ஓட்டுநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
-
ஹூப்பள்ளி - ராமேஸ்வரம் ரெயில் சேவை ரத்து- தெற்கு தெற்கு ரெயில்வே அறிவிப்பு
12 Feb 2025சென்னை : ஹூப்பள்ளி-ராமேசுவரம் இடையே வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த ரெயில் சேவை தற்போது ரத்துசெய்யப்பட்டுள்ளது.
-
மணிப்பூரில் 3 பயங்கரவாதிகள் கைது
12 Feb 2025இம்பால் : மணிப்பூரில் தடைசெய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த 3 பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டம்: எதிரான வழக்கை பிப். 19-ல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்
12 Feb 2025புதுடெல்லி : தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு வரும் 19-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று சுப்ர
-
தே.மு.தி.க. மாநிலங்களவை உறுப்பினர் யார் என்பது குறித்து விரைவில் அறிவிப்பு: பிரேமலதா
12 Feb 2025சென்னை : அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு ஏற்கெனவே ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி உறுதி செய்யப்பட்டுவிட்டதாக தே.மு.தி.க.
-
மகாராஸ்டிராவில் ஜி.பி.எஸ். நோய் பாதிப்பு 197 ஆக உயர்வு
12 Feb 2025புனே : மராட்டியத்தில் ஜி.பி.எஸ். தொற்று நோய் அதிகரித்து வருகிறது. இந்த நோயால் மேலும் 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
பிரான்சில் புதிய இந்திய தூதரகம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்
12 Feb 2025பாரிஸ் : பிரான்ஸ் அதிபருடன் சேர்ந்து புதிய இந்திய தூதரகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
-
மாகி பௌர்ணமியை முன்னிட்டு பிரயாக்ராஜில் 1.60 கோடி பேர் நீராடல்
12 Feb 2025லக்னோ : மாகி பௌர்ணமியை முன்னிட்டு பிரயாக்ராஜில் 1.60 கோடி பேர் புனித நீராடி உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
-
தமிழகம் முழுக்க தி.மு.க.வுக்கு ஆதரவான சூழலே நிலவுகிறது : அமைச்சர் செந்தில்பாலாஜி கருத்து
12 Feb 2025சென்னை : தமிழகம் முழுக்க தி.மு.க.வுக்கு ஆதரவான சூழலே நிலவுகிறது. இது 2026 தேர்தலிலும் எதிரொலிக்கும்’ என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
-
புதிய வருமான வரி மசோதா இன்று பார்லி.யில் தாக்கல்
12 Feb 2025புது டெல்லி: புதிய, எளிமைப்படுத்தப்பட்ட வருமான வரி மசோதாவை இன்று (பிப்.13) மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.