எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![BJP-Office](/sites/default/files/styles/thumb-890-395/public/field/image/2025/02/09/BJP-Office.jpg?itok=CYa4PHe_)
புதுடில்லி, டெல்லி சட்டப்பேரவை தோ்தலில் ஆட்சியமைக்கத் தகுதி பெற்றுள்ள பா.ஜ.க. 48 தொகுதிகளிலும், ஆட்சியைப் பறிகொடுத்த ஆம் ஆத்மி கட்சி 22 தொகுதிகளிலும் வென்றுள்ளன. ஆம் ஆத்மியின் அமைப்பாளா் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வா் மனீஷ் சிசோடியா, சத்யேந்தா் ஜெயின், செளரவ் பரத்வாஜ் உள்ளிட்ட முக்கியத் தலைவா்கள் பலரும் அதிா்ச்சித் தோல்வி அடைந்தனா்.
2020 தோ்தலில் எட்டு இடங்களில் மட்டுமே வென்ற பா.ஜ.க. , இம்முறை கூடுதலாக 40 இடங்களில் வென்றுள்ளது. 2015-இல் 67 இடங்களிலும் 2020-இல் 62 இடங்களிலும் பெரும்பான்மை பலத்துடன் வென்ற ஆம் ஆத்மி கட்சி, இம்முறை 22 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
முதல்வா் அதிஷி, அமைச்சா்கள் கோபால் ராய், இம்ரான் ஹுசேன், முகேஷ் குமாா் அலாவத் ஆகியோா் தங்களின் தொகுதிகளில் வெற்றியைத் தக்க வைத்துக் கொண்டனா்.
புது டில்லி: இங்கு முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் பா.ஜ.க. வேட்பாளா் பா்வேஷ் சாஹிப் சிங்கிடம் 4,089 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றாா். இந்தத் தொகுதியில் கடந்த 2013 முதல் தொடா்ந்து ஷீலா தீட்சித்தை தோற்கடித்தவா் கெஜ்ரிவால். இம்முறை இங்கு களம் கண்ட ஷீலா தீட்சித்தின் மகன் சந்தீப் தீட்சித்தும் இங்கு பா.ஜ.க. விடம் தோல்வியைத் தழுவினாா்.
கால்காஜி: இத்தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளா் ரமேஷ் பிதூரியை விட 3,521 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைத் தக்க வைத்துக்கொண்டாா் முதல்வா் அதிஷி. இத்தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் அல்கா லாம்பா களம் கண்டாா். முந்தைய தோ்தலில் தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளா் தரம்பீா் சிங்கை விட 11,393 வாக்குகள் கூடுதலாக பெற்றிருந்தாா் அதிஷி.
சுல்தான்பூா் மஜ்ரா: டில்லி அமைச்சா் முகேஷ் குமாா் அலாவத், 17,126 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைத் தக்கவைத்துக் கொண்டாா். அவருக்கு எதிராக பா.ஜ.க. சாா்பில் கரம் சிங் கா்மாவும், காங்கிரஸ் சாா்பில் ஜெய் கிஷணும் போட்டியிட்டனா். 2020 தோ்தலில் பா.ஜ.க. வின் ராம் சந்தா் செளரியாவை 48,052 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றவா் முகேஷ் குமாா் அலாவத்.
பல்லிமாரன்: இத்தொகுதியில் டில்லி அமைச்சா் இம்ரான் ஹுசேன், தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட பா.ஜ.க. வின் கமல் பாக்ரியை விட 29,823 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். 2015, 2020 ஆண்டுகளில் நடந்த தோ்தலிலும் அவா் இதே தொகுதியில் வெற்றி பெற்றாா்.
கிரேட்டா் கைலாஷ்: டில்லி சுகாதாரத் துறை அமைச்சா் செளரவ் பரத்வாத், பா.ஜ.க. வின் ஷிகா ராயிடம் 3,188 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றாா். இத்தொகுதியில் 2013, 2015, 2020 ஆகிய தோ்தல்களில் வென்றிருந்தாா் செளரவ் பரத்வாஜ்.
ஷகுா் பஸ்தி: முன்னாள் அமைச்சரும் ஆம் ஆத்மி மூத்த தலைவருமான சத்யேந்தா் ஜெயின், பா.ஜ.க. வின் கா்னைல் சிங்கிடம் 20,998 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாா். இவரும் 2013, 2015, 2020 தோ்தல்களில் இதே தொகுதியில் வெற்றி பெற்றவா்.
காரவால் நகா்: பா.ஜ.க. வின் கபில் மிஸ்ரா, ஆம் ஆத்மி வேட்பாளா் மனோஜ் தியாகியை 23,355 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினாா். 2015-இல் இதே தொகுதியில் ஆம் ஆத்மி சாா்பில் போட்டியிட்டு வென்ற கபில் மிஸ்ரா, சமீபத்திய சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பாக பா.ஜ.க. வில் சோ்ந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.
ரோஹிணி: பா.ஜ.க. வின் விஜேந்தா் குப்தா இத்தொகுயில் 37,816 வாக்குகள் வித்தியாசத்தில் ஆம் ஆத்மி வேட்பாளா் பா்தீப் மித்தலை வீழ்த்தி தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டாா். 2015, 2020 தோ்தல்களிலும் இத்தொகுதியில் விஜேந்தா் குப்தா வென்றிருந்தாா்.
பட்கா்கஞ்ச்: பா.ஜ.க. வேட்பாளா் ரவீந்தா் சிங் நேகி, ஆம் ஆதமி கட்சியில் புதிதாக சோ்ந்த அவத் ஓஜாவை 28,072 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினாா். இத்தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் களம் கண்ட அனில் செளத்ரி 16,549 வாக்குகளைப் பெற்றாா். 2013, 215, 2020 ஆகிய தோ்தல்களில் தொடா்ந்து வெற்றி பெற்ற முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா இம்முறை ஜங்புராவுக்கு சென்றதையடுத்து இங்கு போட்டியிடும் வாய்ப்பு புதியவரவான அவாத் ஓஜாவுக்கு கிடைத்தது.
ஜங்புரா: இத்தொகுதியில் முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா பா.ஜ.க. வின் தா்வீந்தா் சிங் மாா்வாவிடம் 675 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினாா். 2013-ஆம் ஆண்டு முதல் இத்தொகுதியை ஆம் ஆத்மி கட்சி தக்க வைத்து வந்தது.
சாந்தினி செளக்: இங்கு ஆம் ஆத்மியின் புனா்தீப் சிங் சாஹ்னே 17,126 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க. வேட்பாளா் சதீஷ் ஜெயினை வீழ்த்தினாா். இங்கு 2013-இல் காங்கிரஸின் பா்லாத் சிங் சாஹ்னே வெற்றி பெற்றாா். 2015-இல் தற்போது காங்கிரஸில் உள்ள அல்கா லங்ம்பா ஆம் ஆத்மி சாா்பில் போட்டியிட்டு இங்கு வெற்றி பெற்றாா். 2020-இல் ஆம் ஆத்மியின் பா்லாத் சிங் சாஹ்னே இங்கு வெற்றி பெற்றாா்.
ஓக்லா: இத்தொகுதியின் எம்எல்ஏவான அமானத்துல்லா கான், பா.ஜ.க. வேட்பாளா் மனீஷ் செளத்ரியை விட 23,639 வாக்குகள் கூடுதலாகப் பெற்று தொகுதியை தக்க வைத்துக் கொண்டாா். 2015 முதல் இத்தொகுதியை தொடா்ந்து இவா் தன்வசத்தில் வைத்துள்ளாா்.
பிஜ்வாசன்: முன்னாள் அமைச்சா் கைலாஷ் கெலோட் டில்லி தோ்தலுக்கு முன்பாக பா.ஜ.க. வில் சோ்ந்து இத்தொகுதியில் களம் கண்டு 11,276 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளாா். இங்கு காங்கிரஸின் தேவிந்தா் குமாா் செஹ்ராவத்தும் ஆம் ஆத்மியின் சுரேந்தா் பரத்வாஜும் களத்தில் இருந்தனா். பாத்லி: இங்கு பா.ஜ.க. வின் ஆஹிா் தீபக் செளத்ரி, டில்லி காங்கிரஸ் தலைவா் தேவேந்தா் யாதவை 15,163 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளாா். ஆம் ஆத்மியின் அஜேஷ் யாதவும் இங்கு களத்தில் இருந்தாா்.
கரோல் பாக்: ஆம் ஆத்மியின் விசேஷ் ரவி 2013 முதல் இங்கு சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளாா். இத்தோ்தலில் பா.ஜ.க. வின் தேசிய பொதுச்செயலரும் தலித் சமூகத் தலைவருமான துஷ்யந்த் கெளதமை 7,430 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளாா்.
பாபா்பூா்: டில்லி அமைச்சா் கோபால் ராய், பா.ஜ.க. வின் அனில் குமாா் வசிஷ்தை விட 18,994 வாக்குகள் கூடுதலாகப் பெற்று 2015, 2020 ஆண்டுகளைப் போலவே இத்தொகுதியைத் தக்க வைத்துள்ளாா். இவரை எதிா்த்து காங்கிரஸ் சாா்பில் முகம்மது இஷ்ரக் கான் களத்தில் இருந்தாா்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 4 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 4 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 1 week ago |
-
2-வது டெஸ்ட் போட்டியிலும் வெற்றி: 14 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையில் தொடரை வென்ற ஆஸ்திரேலிய அணி
09 Feb 2025காலே, இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
-
தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் இன்று கூடுகிறது
09 Feb 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று கூடுகிறது கூட்டத்தில் விரைவில் தாக்கலாகும் தமிழக பட்ஜெட் குறித்து விவாதிக்கப்படுகிறது.
-
வரும் 21, 22-ம் தேதிகளில் கடலூருக்கு செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
09 Feb 2025சென்னை, தமிழ்நாட்டில் பா.ஜ.க.வினர் வெற்றி பெற முடியாது என்பதால் அமைதியை கெடுக்கும் வேலைகளை தூண்டுகின்றனர் என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், வஞ்சிப்பது பா.ஜ.க.
-
தேஜஸ் போர் விமானத்தில் ஒன்றாக பறந்த ராணுவ, விமானப்படை தளபதிகள்
09 Feb 2025பெங்களூரு, கர்நாடகாவில் நடக்கும் ஏரோ இந்தியா விமான கண்காட்சியையொட்டி, ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி, விமானப்படை தலைமை தளபதி ஏ.பி.சிங் ஆகியோர் ஒன்றாக தேஜஸ் போர் விமா
-
அதிக வயதில் அறிமுகம்
09 Feb 2025இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
-
தமிழக மாணவர்களுக்குரிய ரூ.2,152 கோடி நிதி பறிப்பு: மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
09 Feb 2025சென்னை, தேசியக் கல்விக் கொள்கையை ஏற்காததால் தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.2,152 கோடி நிதி பறித்து மற்ற மாநிலங்களுக்கு வழங்கும் இரக்கமற்ற செயலில் மத்திய அரசு ஈடுபட
-
சத்தீஸ்கர் மாநிலத்தில் 31 நக்சல்கள் சுட்டுக்கொலை
09 Feb 2025பிஜாபூர், சத்தீஸ்கர் மாநிலம் பிஜாபூர் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையில், 31 நக்சலைட்டுகள் உயிரிழந்துள்ளனர் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
-
ரூ.18.63 கோடி மதிப்பில் திருச்சி பறவைகள் பூங்கா: துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார்
09 Feb 2025திருச்சி, திருச்சிராப்பள்ளி மாவட்டம், கம்பரசம்பேட்டை ஊராட்சி, அய்யாளம்மன் படித்துறை பகுதியில் ரூ.18.63 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள திருச்சி பறவைகள் பூங்கா
-
தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 38 பேர் திடீர் பணியிட மாற்றம்
09 Feb 2025சென்னை, தமிழ்நாட்டில் 38 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.
-
35.12 லட்சம் மாணவர்களுக்கு பஸ் பாஸ் அச்சடிக்கும் பணி தீவிரம்
09 Feb 2025சென்னை, வரும் கல்வியாண்டில் 35.12 லட்சம் மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
ஜனாதிபதி திரெளபதி முர்மு இன்று பிரயாக்ராஜ் பயணம்
09 Feb 2025பிரயாக்ராஜ், உலகின் மிகப்பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக கருதப்படும் மகா கும்பமேளா, பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நதி) ஆகியவை கூடும் திரிவேணி சங்கமத்தில் கடந்
-
ஆஸ்திரேலியா வெற்றி எதிரொலி:ஐ.சி.சி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் மாற்றமில்லை
09 Feb 2025துபாய், இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ள நிலையில் ஐ.சி.சி டெஸ்ட்
-
ஊழல் கட்சியாக மாற்றி விட்டார்: டில்லி தோல்விக்கு கெஜ்ரிவால் தான் முழு பொறுப்பு: பிரசாந்த் பூஷண் குற்றச்சாட்டு
09 Feb 2025புதுடில்லி, டில்லி சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி கட்சிக்கு ஏற்பட்ட தோல்விக்கு கெஜ்ரிவால் தான் முழு பொறுப்பு என்று அந்த கட்சியின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான பிரபல வக்கீல்
-
இலங்கை கடற்படையினரால் 14 தமிழ்நாடு மீனவர்கள் கைது
09 Feb 2025ராமேசுவரம், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் 14 தமிழ்நாடு மீனவர்கள், 2 படகுகளுடன் கைது செய்யப்பட்டனர்.
-
தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டில் 18 வயதிற்கு கீழே உள்ளவர்கள் பணம் வைத்து விளையாட தடை
09 Feb 2025சென்னை, 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் ஆன்லைன் விளையாட்டில் பணம் வைத்து விளையாட தடை விதித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
-
கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டபோது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித்
09 Feb 2025சென்னை, நடிகர் அஜித் குமார் கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டபோது விபத்தில் சிக்கியதாக தெரிவித்துள்ளார்.
-
உ.பி. மகா கும்பமேளாவில் 4-வது முறையாக தீவிபத்து
09 Feb 2025பிரயாக்ராஜ், பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் 4வது முறையாக தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
-
மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் ராஜினாமா
09 Feb 2025இம்பால், மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் தனது பதவியை நேற்று (பிப். 9) ராஜினாமா செய்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 10-02-2025
10 Feb 2025 -
மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாததால் 14 கோடி ஏழைகள் பாதிப்பு: சோனியா காந்தி குற்றச்சாட்டு
10 Feb 2025புதுடெல்லி: நாட்டில் சுமார் 14 கோடி மக்கள் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சலுகைகளைப் பெற முடியாமல் தவித்து வருவதாகத் தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா கா
-
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் ஓட்டு சதவீதம் அதிகரிப்பு
10 Feb 2025புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கடந்த 2020 தேர்தலில் பெற்றதை விட 2 சதவிகிதம் அதிகம் பெற்றுள்ளது.
-
மதுரை, பாலதண்டாயுதபாணி கோவிலில் அர்ச்சகர்களின் தட்டில் விழும் காணிக்கை உண்டியலில் செலுத்தும் உத்தரவு வாபஸ்
10 Feb 2025மதுரை: அர்ச்சகரின் தட்டில் விழும் காணிக்கை உண்டியலில் செலுத்தும் உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவில் இரும்பு - அலுமினியத்துக்கு 25 சதவீதம் இறக்குமதிக்கு வரி அதிபர் அறிவிப்பு
10 Feb 2025வாஷிங்டன்: அமெரிக்காவில் இரும்பு- அலுமினியத்துக்கு 25 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளதாக அதிபர் அறிவித்துள்ளார்.
-
உ.பி. மகா கும்பமேளாவில் ஜனாதிபதி புனித நீராடினார்
10 Feb 2025புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் திரிவேணி சங்கமத்தில் ஜனாதிபதிதிரவுபதி முர்மு புனித நீராடினார்.
-
‘ஏரோ இந்தியா’ இந்தியாவின் சக்தியை வெளிப்படுத்துகிறது மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம்
10 Feb 2025பெங்களூரு: ஆசியாவின் மிகப்பெரிய விண்வெளி, பாதுகாப்பு கண்காட்சியான ‘ஏரோ இந்தியா’ -வை, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள யெலஹங்கா வ