எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![EVa-Velu 2023 04 01](/sites/default/files/styles/thumb-890-395/public/field/image/2025/02/12/EVa-Velu_2023_04_01.jpg?itok=a0BAJqcy)
Source: provided
சென்னை: நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பராமரிப்பு பணிகளை அமைச்சர் எ.வ. வேலு ஆய்வு செய்தார்.
கிண்டி நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள கூட்டரங்கில், நெடுஞ்சாலைத்துறை சாலைகளின் பராமரிப்புப் பணிகள் தொடர்பாக, நேற்று பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், நெடுஞ்சாலைத்துறையின் அனைத்துக் கோட்டப் பொறியாளர்கள், கண்காணிப்புப் பொறியாளர்கள் மற்றும் தலைமைப் பொறியாளர்கள் கலந்து கொண்டனர். அமைச்சர் , ஆய்வுக்கூட்டத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். இந்த உரையில், நெடுஞ்சாலைகளின் பராமரிப்புப் பணிகளில் பொறியாளர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும், கடந்த நான்கு ஆண்டுகளில் பெரும்பாலான சாலைகள் மேம்படுத்தப் பட்டுள்ளன. மீதமுள்ள சாலைகளை பள்ளமில்லா சாலைகளாகப் பராமரிக்க வேண்டும். சாலைகளின் இருபுறங்களில் உள்ள முட்புதர்கள் முழுமையாக அகற்றப்பட வேண்டும்.
சாலைகளின் இருபுறங்களிலும் மண் புருவங்கள் சரியாக அமைக்கப்பட வேண்டும். கிலோ மீட்டர் மற்றும் பர்லாங் கற்களுக்கு வர்ணம் பூச வேண்டும். அறிவிப்பு பலகைகள், சாலை உபகரணங்கள் மற்றும் இரும்பு தடுப்பான்கள் முதலியவற்றை முறையாகப் பராமரிக்க வேண்டும், அதற்குத் தனிப்பதிவேடு பராமரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
சாலைகளில் தேவையில்லாத இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டாம் என்றும், தேவையானால் அதற்குரிய இடத்தில், எச்சரிக்கைப் பலகை அமைக்க வேண்டும். சாலை உபகரணங்கள் வழிகாட்டுதலின்படி, தேவையான இடங்களில் மட்டும் வேகத்தடை அமைக்கப்பட வேண்டும். சாலைகளில் வெள்ளைக் கோடுகள் தரத்துடன் போடப்பட வேண்டும்.
நிலஎடுப்புப் பணிகளில் பொறியாளர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக கண்காணிப்புப் பொறியாளர்கள், மாவட்ட ஆட்சியர்களைத் தொடர்புக் கொண்டு, நிலஎடுப்புப் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்றும், 15.3.2025க்குள் மீண்டும் சாலைப் பாதுகாப்பு தணிக்கைச் செய்யப்பட வேண்டும் என்றும், இந்த ஆண்டு பொறியாளர்களுக்குச் சாலைப் பாதுகாப்பு தணிக்கைப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
பாலங்கள் கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும்போது, ஆற்றின் அகலம், நீர் வெளியேற்றம், நீர்வரத்து, மழையின் அளவு, மண்ணின் தன்மை, பாலத்தின் நேர்பாடு ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும், பாலப்பணிகள் நடைபெறும் தளத்தில் களப்பணியாளர்கள் இல்லாமல் எவ்விதப் பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என்றும் அறிவுறுத்தினார்.
பாலப்பணிகளை கவனிக்க, "பாலம் கண்காணிப்புக் குழுமம்" அலகு என்கிற தனி அலகு உருவாக்கப்படவுள்ளது. அதற்கு விரைவில் அரசாணை பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்து, பணிகளின் நிலைக்குறித்து, இக்குழுமத்தின் மூலம் ஒப்புதல் பெறவேண்டும் என்று உத்தரவிட்டார். தேர்தல் அறிக்கையில், அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளில் முடிக்கப்பட்ட பணிகளை தவிர, இதர அறிவிப்புகளை 31.3.2025க்குள் விரைந்து முடிக்க வேண்டும். அனைத்து நிலஎடுப்பு பணிகளையும் துரிதப்படுத்த வேண்டும். பிற துறைகளினால் சாலைப் பணிகள் காலதாமதம் ஏற்பட்டால் உடனடியாக அரசின் கவனத்திற்கு கொண்டு வரவேண்டும் என்று ஆணையிட்டார்கள். முதல்-அமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டம் மற்றும் சி.ஆர்.ஐ.டி.பி. 2024-2025இல் திட்ட பணிகளுக்கான பிரேரணைகள் தயாரிக்கும்போது, மாண்புமிகு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர்களின் தொகுதி சம்மந்தமான கோரிக்கைகள் முன்னுரிமை அடிப்படையில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். அதனை தலைமைப் பொறியாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார். அமைச்சர் அவர்களின் உரையைத் தொடர்ந்து ஒவ்வொரு திட்டமாக ஆய்வு செய்து, பொறியாளர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 4 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 4 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 2 weeks ago |
-
இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்யுமா இந்திய அணி? - இன்று கடைசி ஒருநாள் போட்டியில் பலப்பரீட்சை
11 Feb 2025அகமதாபாத் : இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் இந்திய அணி களமிறங்கவுள்ளது.
இந்தியா அசத்தல்...
-
கேரளாவுக்கு அதிவேக ரயில் தேவையில்லை: மெட்ரோமேன் ஸ்ரீதரன் பரிந்துரை
11 Feb 2025திருவனந்தபுரம் : நகர்ப்புற பகுதிகள் மிகுந்த கேரளா மாநிலத்தில், மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய அதிவேக ரயில் போக்குவரத்து வசதி தேவையில்லை என்று மெட்ரோமேன்
-
குஜராத் டைட்டன்ஸ் அணியை வாங்குகிறது டோரண்ட் குழுமம்
11 Feb 2025அகமதாபாத் : குஜராத் டைட்டன்ஸ் அணியின் பெரும்பாலான பங்குகளை அகமதாபாத்தை மையமாக கொண்டு இயங்கி வரும் டோரண்ட் குழுமம் வாங்கவுள்ளது.
-
ஹேக் செய்யப்பட்ட நடிகை திரிஷாவின் வலைதள கணக்கு
11 Feb 2025சென்னை : நடிகை திரிஷாவின் சமூக வலைதள கணக்கு, இணையக்குறும்பர்களால் கைப்பற்றப்பட்டுள்ளது.
-
மின்விளக்கு பழுது: அரசு நோட்டீஸ்
11 Feb 2025இந்தியா-இங்கிலாந்து இடையிலான 2வது ஒருநாள் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள பராபதி மைதானத்தில் கடந்த 9ம் தேதி நடைபெற்றது.
-
கண்ணியத்துடன் இறக்க காத்திருக்கும் முதல் பெண்மணி காரிபசம்மா
11 Feb 2025தேவநாகரி : கர்நாடக மாநிலத்தில் பல்வேறு சட்டப்போராட்டங்களுக்குப் பின், ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியை காரிபசம்மா (85) கண்ணியத்துடன் இறக்கும் உரிமையைப் பெறும் முதல் ஆளாக
-
தினம் ஒரு உச்சத்தை தொடும் தங்கம்: ஒரு கிராம் ரூ.8060, சவரன் ரூ.64,480
11 Feb 2025சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை தினம் ஒரு உச்சத்தை தொட்டு வருகிறது. நேற்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.64480 ஆக விற்கப்பட்டது.
-
ஐ.சி.சி. சிறந்த வீரர் ஜோமல் வாரிக்கன்
11 Feb 2025துபாய் : ஜனவரி மாத சிறந்த வீரர், வீராங்கனைக்கான விருதுகளை ஐ.சி.சி. அறிவித்துள்ளது.
ஐ.சி.சி. விருது...
-
ராகுலின் சென்னை பயணம் ரத்து
11 Feb 2025சென்னை : மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் சென்னை பயணம் ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பிரசாந்த் கிஷோர் அறிக்கை விஜய்யிடம் ஒப்படைப்பு
11 Feb 2025சென்னை : தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் அளித்த அறிக்கையை, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யிடம் கட்சி நிர்வாகிகள் அளித்துள்ளனர்.
-
உ.பி. மகா கும்பமேளாவில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் துறவறம்
11 Feb 2025பிரயாக்ராஜ் : உத்தரப்பிரதேசத்தில் நடைபெறும் மகா கும்பமேளாவில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் சன்யாச தீட்சை பெற்றுள்ளனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-02-2025.
12 Feb 2025 -
வர்த்தகப் போர் பீதியால் மும்பை பங்கு சந்தையில் கடும் சரிவு
11 Feb 2025மும்பை : ட்ரம்பின் அறிவிப்புகளால் வர்த்தகப் போர் உருவாகும் வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் தாக்கம் இந்திய பங்குச்சந்தைகளில் எதிரொலித்தது.
-
200 ரூபாய் தாள்களை ரத்து செய்யும் திட்டம் இல்லை: ஆர்.பி.ஐ. தகவல்
11 Feb 2025மும்பை : 200 ரூபாய் தாள்களை ரத்து செய்யும் எந்த திட்டமும் இல்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
-
உ.பி. மகா கும்பமேளாவில் கடும் கூட்ட நெரிசலைத் தவிர்க்க ஹெலிகாப்டர் சேவை அறிமுகம் : கட்டணமாக ஒரு நபருக்கு ரூ. 35,000 வசூல்
11 Feb 2025லக்னோ : மகா கும்பமேளாவில் வாகன நெரிசலைக் குறைக்கும் வகையில் ஹெலிகாப்டர் சேவைகள் வழங்கப்பட்டுள்ளன.
-
பும்ராவுக்கு பதில் இந்திய அணியில் வருண், ஹர்ஷித் ராணாவுக்கு வாய்ப்பு
11 Feb 2025மும்பை : சாம்பியன்ஸ் கோப்பைக்கான இந்திய அணியில் பும்ராவுக்கு பதில் வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித் ராணா இடம் பெற வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
-
குஜராத் டைட்டன்ஸ் அணியை வாங்குகிறது டோரண்ட் குழுமம்
11 Feb 2025அகமதாபாத் : குஜராத் டைட்டன்ஸ் அணியின் பெரும்பாலான பங்குகளை அகமதாபாத்தை மையமாக கொண்டு இயங்கி வரும் டோரண்ட் குழுமம் வாங்கவுள்ளது.
-
ஐ.பி.எல். நடைபெறும் மைதானங்கள்: மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு பி.சி.சி.ஐ. திடீர் அறிவுறுத்தல்
11 Feb 2025மும்பை : ஐ.பி.எல். போட்டி நடைபெறும் மைதானங்களை எந்தவிதமான மற்ற நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்கக்கூடாது என பி.சி.சி.ஐ. அறிவுறுத்தியுள்ளது.
-
அ.தி.மு.க. சின்னம் உள்ளிட்ட விவகாரங்களை தேர்தல் ஆணையம் விசாரிக்க அனுமதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
12 Feb 2025சென்னை: அ.தி.மு.க.
-
ஆப்கானில் திடீர் நிலநடுக்கம்
12 Feb 2025ஆப்கானிஸ்தான் : ஆப்கானிஸ்தானில் திடீர் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் பதிவாக உள்ளது.
-
அயோத்தி ராமர் கோவில் தலைமை அர்ச்சகர் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
12 Feb 2025புதுடெல்லி: அயோத்தி ராமர் கோவில் தலைமை அர்ச்சகர் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
பிரெஞ்சு மண்ணில் சாவர்க்கருக்கு புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி
12 Feb 2025பாரிஸ்: சாவர்க்கரை பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் ஒப்படைக்கக் கூடாது என்று கோரிய அக்கால பிரெஞ்சு ஆர்வலர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக மோடி, எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
-
மாநிலங்களவை உறுப்பினராக கமல்ஹாசன் தேர்வாகிறார்..?
12 Feb 2025சென்னை: மாநிலங்களவை உறுப்பினராக கமல்ஹாசன் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பாக்கப்படுகிறது.
-
பணய கைதிகள் விவகாரம்: ஹமாசுக்கு நெதன்யாகு மிரட்டல்
12 Feb 2025ஜெருசலேம் : வருகிற 15-ம் தேதிக்குள் பணய கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று ஹமாஸ் அமைப்புக்கு நெதன்யாகு மிரட்டல் விடுத்துள்ளார்.
-
இந்தியாவில் டிஜிட்டல் மாற்றம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் சுந்தர் பிச்சை ஆலோசனை
12 Feb 2025பாரிஸ் : பாரிஸ் ஏஐ உச்சி மாநாட்டை ஒட்டி பிரதமர் மோடியை சந்தித்த கூகுள் நிறுவன சிஇஓ, பிரதமருடன் இந்தியாவின் டிஜிட்டல் மாற்றம் தொடர்பாக ஆலோசித்ததாகத் தெரிவித்துள்ளார்.