எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![Acctnet](/sites/default/files/styles/thumb-890-395/public/field/image/2025/02/12/Acctnet.jpg?itok=fdkTRtnW)
Source: provided
சேலம்: சேலம் அருகே பஸ் கவிழ்ந்து விபத்தில் செல்போன் பேசியபடி பஸ்சை இயக்கிய ஓட்டுநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டத்திலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் பகுதியில் இருந்து கிராமங்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக ஆத்தூரில் இருந்து வானகரம் மலை கிராமத்திற்கு ஒரு அரசு பஸ் தினந்தோறும் இயக்கப்பட்டு வருகின்றது.
அதில் பள்ளி, கல்லூரி, மற்றும் பணிக்கு செல்வோர் என ஏராளமானூர் காலை மாலை என பயணம் செய்கின்றனர். இந்நிலையில் வானகரம் மலை கிராமத்திற்கு சென்று கொண்டிருந்த அரசு பஸ்திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் பள்ளத்தில் தலை குப்பிற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட ஏழு பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ஆத்தூர் போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், பஸ்சில் பழுது ஏதும் இல்லாத நிலையில் ஓட்டுனர் செல்போனில் பேசிக்கொண்டே பஸ்சை இயக்கியதால்தான் விபத்து ஏற்பட்டது என உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து ஓட்டுநரை பணியிடை நீக்கம் செய்து சேலம் கோட்ட போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் உத்தரவிட்டார். இது தொடர்பாக சேலம் கோட்ட போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம். சேலம் மண்டலம் ஆத்தூர் கிளையை சார்ந்த நகர பேருந்து ஆத்தூர் பேருந்து நிலையத்தில் 12.02.2025 நேற்று காலை 8.10 மணிக்கு புறப்பட்டு தவளைப்பட்டி செல்லும்பொழுது கல்லுக்காடு என்ற இடத்தில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தினை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர். சேலம் அவர்கள் தொழில்நுட்ப குழுவினருடன் நேரடியாக சென்று ஆய்வு செய்தபோது அப்பேருந்தின் பிரேக் நல்ல நிலையில் வேலை செய்வது உறுதி செய்யப்பட்டது. மேலும், இவ்விபத்திற்கு ஓட்டுநர் அலைபேசியில் பேசிக்கொண்டே பேருந்தை இயக்கியதால்தான் ஏற்பட்டது என ஆய்வில் கண்டறியப்பட்டு அப்பேருந்தின் நடத்துநர் மூலமும் மேற்படி ஓட்டுநர் அலைபேசியில் பேசிக்கொண்டு பேருந்தை இயக்கியதை உறுதி செய்யப்பட்டது.
மேலும் இத்தகவல் காவல் துறையினருக்கும் தெரிவிக்கப்பட்டது. எனவே. தற்போது சமூக ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சியில் செய்தி வெளியிடப்பட்டது போல் பிரேக் பழுது காரணமாக விபத்து ஏற்படவில்லை என்பதனையும், இவ்விபத்திற்கு ஓட்டுநர் அலைபேசியில் பேசிக்கொண்டே கவனக்குறைவால் பேருந்தை இயக்கியதால்தான் இவ்விபத்து ஏற்பட்டது என உறுதி செய்யப்பட்டு இது சம்மந்தமாக சம்மந்தப்பட்ட ஓட்டுநர் உடனடியாக தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்டார் என்ற செய்தியை மறுப்பு செய்தியாக வெளியிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 4 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 4 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 2 weeks ago |
-
இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்யுமா இந்திய அணி? - இன்று கடைசி ஒருநாள் போட்டியில் பலப்பரீட்சை
11 Feb 2025அகமதாபாத் : இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் இந்திய அணி களமிறங்கவுள்ளது.
இந்தியா அசத்தல்...
-
கேரளாவுக்கு அதிவேக ரயில் தேவையில்லை: மெட்ரோமேன் ஸ்ரீதரன் பரிந்துரை
11 Feb 2025திருவனந்தபுரம் : நகர்ப்புற பகுதிகள் மிகுந்த கேரளா மாநிலத்தில், மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய அதிவேக ரயில் போக்குவரத்து வசதி தேவையில்லை என்று மெட்ரோமேன்
-
குஜராத் டைட்டன்ஸ் அணியை வாங்குகிறது டோரண்ட் குழுமம்
11 Feb 2025அகமதாபாத் : குஜராத் டைட்டன்ஸ் அணியின் பெரும்பாலான பங்குகளை அகமதாபாத்தை மையமாக கொண்டு இயங்கி வரும் டோரண்ட் குழுமம் வாங்கவுள்ளது.
-
ஹேக் செய்யப்பட்ட நடிகை திரிஷாவின் வலைதள கணக்கு
11 Feb 2025சென்னை : நடிகை திரிஷாவின் சமூக வலைதள கணக்கு, இணையக்குறும்பர்களால் கைப்பற்றப்பட்டுள்ளது.
-
மின்விளக்கு பழுது: அரசு நோட்டீஸ்
11 Feb 2025இந்தியா-இங்கிலாந்து இடையிலான 2வது ஒருநாள் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள பராபதி மைதானத்தில் கடந்த 9ம் தேதி நடைபெற்றது.
-
கண்ணியத்துடன் இறக்க காத்திருக்கும் முதல் பெண்மணி காரிபசம்மா
11 Feb 2025தேவநாகரி : கர்நாடக மாநிலத்தில் பல்வேறு சட்டப்போராட்டங்களுக்குப் பின், ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியை காரிபசம்மா (85) கண்ணியத்துடன் இறக்கும் உரிமையைப் பெறும் முதல் ஆளாக
-
தினம் ஒரு உச்சத்தை தொடும் தங்கம்: ஒரு கிராம் ரூ.8060, சவரன் ரூ.64,480
11 Feb 2025சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை தினம் ஒரு உச்சத்தை தொட்டு வருகிறது. நேற்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.64480 ஆக விற்கப்பட்டது.
-
ஐ.சி.சி. சிறந்த வீரர் ஜோமல் வாரிக்கன்
11 Feb 2025துபாய் : ஜனவரி மாத சிறந்த வீரர், வீராங்கனைக்கான விருதுகளை ஐ.சி.சி. அறிவித்துள்ளது.
ஐ.சி.சி. விருது...
-
ராகுலின் சென்னை பயணம் ரத்து
11 Feb 2025சென்னை : மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் சென்னை பயணம் ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பிரசாந்த் கிஷோர் அறிக்கை விஜய்யிடம் ஒப்படைப்பு
11 Feb 2025சென்னை : தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் அளித்த அறிக்கையை, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யிடம் கட்சி நிர்வாகிகள் அளித்துள்ளனர்.
-
உ.பி. மகா கும்பமேளாவில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் துறவறம்
11 Feb 2025பிரயாக்ராஜ் : உத்தரப்பிரதேசத்தில் நடைபெறும் மகா கும்பமேளாவில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் சன்யாச தீட்சை பெற்றுள்ளனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-02-2025.
12 Feb 2025 -
வர்த்தகப் போர் பீதியால் மும்பை பங்கு சந்தையில் கடும் சரிவு
11 Feb 2025மும்பை : ட்ரம்பின் அறிவிப்புகளால் வர்த்தகப் போர் உருவாகும் வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் தாக்கம் இந்திய பங்குச்சந்தைகளில் எதிரொலித்தது.
-
200 ரூபாய் தாள்களை ரத்து செய்யும் திட்டம் இல்லை: ஆர்.பி.ஐ. தகவல்
11 Feb 2025மும்பை : 200 ரூபாய் தாள்களை ரத்து செய்யும் எந்த திட்டமும் இல்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
-
உ.பி. மகா கும்பமேளாவில் கடும் கூட்ட நெரிசலைத் தவிர்க்க ஹெலிகாப்டர் சேவை அறிமுகம் : கட்டணமாக ஒரு நபருக்கு ரூ. 35,000 வசூல்
11 Feb 2025லக்னோ : மகா கும்பமேளாவில் வாகன நெரிசலைக் குறைக்கும் வகையில் ஹெலிகாப்டர் சேவைகள் வழங்கப்பட்டுள்ளன.
-
பும்ராவுக்கு பதில் இந்திய அணியில் வருண், ஹர்ஷித் ராணாவுக்கு வாய்ப்பு
11 Feb 2025மும்பை : சாம்பியன்ஸ் கோப்பைக்கான இந்திய அணியில் பும்ராவுக்கு பதில் வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித் ராணா இடம் பெற வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
-
குஜராத் டைட்டன்ஸ் அணியை வாங்குகிறது டோரண்ட் குழுமம்
11 Feb 2025அகமதாபாத் : குஜராத் டைட்டன்ஸ் அணியின் பெரும்பாலான பங்குகளை அகமதாபாத்தை மையமாக கொண்டு இயங்கி வரும் டோரண்ட் குழுமம் வாங்கவுள்ளது.
-
ஐ.பி.எல். நடைபெறும் மைதானங்கள்: மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு பி.சி.சி.ஐ. திடீர் அறிவுறுத்தல்
11 Feb 2025மும்பை : ஐ.பி.எல். போட்டி நடைபெறும் மைதானங்களை எந்தவிதமான மற்ற நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்கக்கூடாது என பி.சி.சி.ஐ. அறிவுறுத்தியுள்ளது.
-
ஆப்கானில் திடீர் நிலநடுக்கம்
12 Feb 2025ஆப்கானிஸ்தான் : ஆப்கானிஸ்தானில் திடீர் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் பதிவாக உள்ளது.
-
அ.தி.மு.க. சின்னம் உள்ளிட்ட விவகாரங்களை தேர்தல் ஆணையம் விசாரிக்க அனுமதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
12 Feb 2025சென்னை: அ.தி.மு.க.
-
அயோத்தி ராமர் கோவில் தலைமை அர்ச்சகர் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
12 Feb 2025புதுடெல்லி: அயோத்தி ராமர் கோவில் தலைமை அர்ச்சகர் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
பிரெஞ்சு மண்ணில் சாவர்க்கருக்கு புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி
12 Feb 2025பாரிஸ்: சாவர்க்கரை பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் ஒப்படைக்கக் கூடாது என்று கோரிய அக்கால பிரெஞ்சு ஆர்வலர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக மோடி, எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
-
மாநிலங்களவை உறுப்பினராக கமல்ஹாசன் தேர்வாகிறார்..?
12 Feb 2025சென்னை: மாநிலங்களவை உறுப்பினராக கமல்ஹாசன் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பாக்கப்படுகிறது.
-
நெடுஞ்சாலை பணிகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
12 Feb 2025சென்னை: நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பராமரிப்பு பணிகளை அமைச்சர் எ.வ. வேலு ஆய்வு செய்தார்.
-
இலவசங்களால் மக்கள் உழைக்க தயாராக இல்லை சுப்ரீம் கோர்ட் கருத்து
12 Feb 2025புதுடெல்லி: நாட்டில் அரசியல் கட்சிகள் வழங்கும் இலவசங்களால் மக்கள் உழைக்க தயாராக இல்லை என்று சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.