எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : நம் உரிமைகளை மீட்டெடுத்திட, நியாயமான தொகுதி மறுவரையறையைப் பெற்றிட, தமிழ்நாட்டில் இருந்து பாராளுமன்றத்தில் பிரநிதித்துவம் உள்ள கட்சிகளின் எம்.பிக்களை அழைத்துச் சென்று பிரதமர் மோடியை நேரில் சந்திக்க இருக்கிறோம் என முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
கூட்டு நடவடிக்கை...
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் நேற்று (திங்கள்கிழமை) பேசியதாவது: தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கை குழுக் கூட்டம் தொடர்பாகத் தெரிவிக்க விரும்புகிறேன். மக்கள் நல்வாழ்வு திட்டங்கள் சிறப்பாகச் செயல்படுத்தியதற்காகத் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் தண்டிக்கப்படக்கூடாது என்பதற்காகச் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாடு சட்டசபையில் தான் தொகுதி மறுவரையறைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பங்கேற்ற கட்சிகளுக்கு...
வட மாநிலங்களில் எந்த விகித்தத்தில் தொகுதிகள் மறுவரையறைக்கப்படுகிறதோ அதே விகிதத்தில் தமிழ்நாட்டிலும் செயல்படுத்த வேண்டும். தமிழ்நாடு முன்னெடுத்துச் செல்கின்ற தொகுதி மறுவரையறை விழிப்புணர்வு குறித்து தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மக்கள்தொகை கட்டுப்பாட்டை வெற்றிகரமாக செயல்படுத்திக் காட்டிய மாநிலங்கள் தண்டிக்கப்படக்கூடாது. இதற்கு துணை நின்ற தமிழ்நாட்டின் கட்சிகளுக்கும், கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பங்கேற்ற கட்சிகளுக்கும் தமிழ்நாடு மக்களின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது இருக்கும் தொகுதி வரையறை, 2026-ல் இருந்து மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் எனப் பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் உறுதியளிக்க வேண்டும். அரசியலமைப்பில் அதற்கான சட்டத்திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும்.
முதல்வர்கள் பங்கேற்ற...
கடந்த வாரம் சனிக்கிழமை கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவந்த்மான் சிங், கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் நேரிலும், ஓடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் காணொளி காட்சி வாயிலாகவும் கலந்துகொண்டு, பாராளுமன்ற தொகுதி மறுவரையறைக்கு எதிரான முதல் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.
வெளிப்படையுடன்...
விரிவான ஆலோசனைக்குப் பிறகு பாராளுமன்ற தொகுதிகள் மறுவரையறை மாநிலங்களுடன் கலந்து ஆலோசித்து வெளிப்படையுடன் நடைபெற வேண்டும், 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி செய்யப்பட்ட தொகுதி மறுவரையறை மேலும் 25 ஆண்டுகள் நீட்டிக்கப்பட வேண்டும், மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்திய மாநிலங்கள் தண்டிக்கப்படக் கூடாது, உரிய சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும், கூட்டுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் அவர்களின் மாநில பேரவைகளிலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
பிரதமரை சந்திக்க....
தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்ற முழக்கத்தினை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்சென்று, நம் உரிமைகளை மீட்டெடுத்திட, நியாயமான தொகுதி மறுவரையறையைப் பெற்றிட, தமிழ்நாட்டில் இருந்து பாராளுமன்றத்தில் பிரநிதித்துவம் உள்ள கட்சிகளின் எம்.பிக்களை அழைத்துச் சென்று பிரதமர் மோடியை சந்திக்க இருக்கிறோம். தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்ற முழக்கத்தின் அடுத்த கட்டமாக, பாராளுமன்றத்தில் உள்ள தமிழக கட்சிகளின் உறுப்பினர்களை அழைத்துச் சென்று பிரதமரை நேரில் சந்திக்க இருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 3 weeks ago |
-
தமிழ்நாடு அரசியல் களத்தில் பரபரப்பு: எடப்பாடி பழனிசாமி திடீர் டெல்லி பயணம்
25 Mar 2025சென்னை : அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு புறப்பட்டதால் தமிழக அரசியல் களத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
ஜாகீர் உசேன் கொலை வழக்கு: தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை
25 Mar 2025நெல்லை, ஜாகீர் உசேன் கொலை வழக்கில் தேசிய மனித உரிமை ஆணயைம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
திருப்பதி கோயிலில் ரூ.5,258 கோடியில் பட்ஜெட்
25 Mar 2025திருப்பதி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரவு செலவுடன் கூடிய பட்ஜெட்டிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
-
காஷ்மீரில் ஆக்கிரமிப்பு பகுதிகளை காலி செய்ய பாக்.கிற்கு இந்தியா வலியுறுத்தல்
25 Mar 2025நியூயார்க், ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது. அதனை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி உள்ளது.
-
தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா போராட்டம்
25 Mar 2025புதுடில்லி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் தொடர்பாக ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா உள்பட எதிர்க்கட்சி எம்பிக்க
-
தஞ்சையில் ரம்ஜான் விடுமுறை ரத்து? தமிழக அரசு விளக்கம்
25 Mar 2025சென்னை : தஞ்சை மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகை விடுமுறையை வேலை நாளாக அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.
-
பிரபல கராத்தே பயிற்சியாளர் ஷிகான் ஹூசைனி காலமானார்
25 Mar 2025சென்னை, பிரபல கராத்தே பயிற்சியாளரும், நடிகருமான ஷிகான் ஹூசைனி காலமானார்.
-
குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் நிதி மசோதா நிறைவேற்றம்
25 Mar 2025புதுடெல்லி : நிதி மசோதா மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
-
சனிப்பெயர்ச்சி எப்போது? திருநள்ளாறு கோயில் நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு
25 Mar 2025காரைக்கால், திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிப்பெயா்ச்சி விழா எப்போது என்பதைக் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
டி.எஸ்.பி.களுக்கு பதவி உயர்வு வழங்க உயர் நீதிமன்றம் இடைக்கால தடை
25 Mar 2025சென்னை : பதவி உயர்வு மூலம் துணை காவல் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களாக பதவி உயர்வு வழங்க இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்
-
இயக்குநர் பாரதிராஜவின் மகன் நடிகர் மனோஜ் மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
25 Mar 2025சென்னை, நடிகரும், இயக்குநருமான மனோஜ் மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிர்ப்பு: அலகாபாத் வழக்கறிஞர்கள் போராட்டம்
25 Mar 2025லக்னோ : டெல்லி ஐகோர்ட்டு நீதிபதியை அலகாபாத்திற்கு பணியிடமாற்றம் செய்ய வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்துள்ளனர்.
-
கனடா தேர்தலில் இந்தியா தலையீடு: அந்நாட்டு உளவு அமைப்பு குற்றச்சாட்டு
25 Mar 2025ஒட்டாவா : கனடா நாட்டின் நாடாளுமன்ற தேர்தலில் சீனா, இந்தியா, ரஷ்யா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் தலையீடு இருக்கலாம் என சி.எஸ்.ஐ.எஸ்.
-
ஹூசைனியின் மறைவுக்கு ஆந்திர துணை முதலவர் பவன் கல்யாண் இறங்கல்
25 Mar 2025சென்னை, கராத்தே பயிற்சியாளர் ஹூசைனியின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் என்று ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
-
நியூசி.யில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
25 Mar 2025வெல்லிங்டன், நியூசிலாந்து நாட்டின் கீழ் தெற்கு தீவில் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் (இந்திய நேரப்படி) நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
ஸ்ரேயாஸ் அதிரடி அரைசதம்
25 Mar 202510 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
-
தெலங்கானா சுரங்க விபத்தில் மேலும் ஒரு தொழிலாளி உடல் கண்டுபிடிப்பு
25 Mar 2025ஐதராபாத், தெலங்கானா சுரங்க விபத்தில் மேலும் ஒரு தொழிலாளி உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
-
வெனிசுலா எண்ணெய் விவகாரம்: டிரம்பின் புதிய அறிவிப்பால் இந்தியாவுக்கு மேலும் சிக்கல்
25 Mar 2025வாஷிங்டன், வெனிசுலாவிடம் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்கும் நாடுகளுக்கு 25 சதவீதம் வரை வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார்.
-
தொடர்ந்து 5-வது நாளாக ஆபரணத் தங்கத்தின் விலை குறைவு
25 Mar 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ. 65,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
இஸ்ரேலில் ஆஸ்கர் வென்ற பாலஸ்தீன இயக்குநர் கைது
25 Mar 2025டெல் அவிவ், ஆஸ்கர் விருது வென்ற பாலஸ்தீன இயக்குநர் ஒருவர் இஸ்ரேல் ராணுவத்தால் கைது செய்யப்பட்டார்.
-
அமெரிக்க மக்கள் ஆவின் நெய்யை விரும்புகின்றனர்: அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல்
25 Mar 2025சென்னை, அமெரிக்கர்கள் ஆவின் நெய்யை தான் அந்த நாட்டு மக்கள் விரும்புகிறார்கள் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
-
வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் மூச்சுத் திணறி பலி
25 Mar 2025கோவை, கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலை ஏறி கீழே இறங்கும் போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு பக்தர் ஒருவர் பலியானார்.
-
ராமநாதபுரம், பெரம்பலூர் நகராட்சியை மாநகராட்சிகளாக உயர்த்த நடவடிக்கை : சட்டசபையில் அமைச்சர் கே.என்.நேரு தகவல்
25 Mar 2025சென்னை : ராமநாதபுரம், பெரம்பலூர் நகராட்சியை மாநகராட்சிகளாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
-
சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த சென்னை போட்டிக்கான டிக்கெட்கள்
25 Mar 2025சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட்டுகள் சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன.
-
தமிழக அரசியலில் பரபரப்பு இ.பி.எஸ். திடீர் டெல்லி பயணம்
25 Mar 2025புதுடில்லி, பட்ஜெட் கூட்டத்தொடருக்கு இடையே திடீரென அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டில்லி பயணம் குறித்து மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.