எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சரை இனவெறி கருத்துகளால் விமர்சித்த இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு கண்டனம் எழுந்துள்ளது. இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார். இதனிடையே, ஐபிஎல் போட்டிகளில் வர்ணனையாளராகவும் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில், ஹைதராபாத் திடலில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் நடந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியை ஹர்பஜன் சிங் வர்ணனை செய்தார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, 20 ஓவர்களில் 286 ரன்கள் குவித்தது. ராஜஸ்தானின் நட்சத்திர வீரரும் இங்கிலாந்தைச் சேர்ந்தவருமான ஜோஃப்ரா ஆர்ச்சர் 4 ஓவர்களில் 76 ரன்களை வழங்கி மோசமான சாதனையைப் படைத்தார். இதுகுறித்து வர்ணனையில் ஈடுபட்டிருந்த ஹர்பஜன் சிங் பேசுகையில், “லண்டனின் கருப்பு நிற டேக்ஸிகளின் மீட்டர்களைப் போல, ஜோஃப்ரா ஆர்ச்சரின் மீட்டர்களும் (ரன்கள்) அதிகளவில் இருக்கிறது” என்று விமர்சனம் செய்தார். இந்திய அணிக்காக விளையாடிய காலத்தில், வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது, தான் இனவெறியால் பாதிக்கப்பட்டதாக ஹர்பஜன் சிங் ஒருமுறை பேட்டியில் தெரிவித்திருந்தார். அந்த கருத்துகளை பகிர்ந்து தற்போது ஹர்பஜன் சிங்கே இனவெறி கருத்துகளை தெரிவித்ததாக பதிவிட்டு கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.
____________________________________________________________________________
ஐ.பி.எல். வரலாற்றில் அதிக ரன்கள்
நடப்பு ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள ஜோப்ரா ஆர்ச்சர் 4 ஓவர்களை வீசி விக்கெட் ஏதும் கைப்பற்றாமல் 76 ரன்களை வழங்கினார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த பந்து வீச்சாளர் என்ற மோசமான சாதனையை அவர் படைத்தார். இந்த ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 286 ரன்கள் எடுத்தது. அதை விரட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 242 ரன்கள் எடுத்தது. 44 ரன்களில் ஆட்டத்தை வென்றது கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.
இதற்கு முன்னர் கடந்த 2024-ம் ஆண்டு சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடிய மோஹித் சர்மா, டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 73 ரன்களை விட்டுக்கொடுத்திருந்தார். இதை தற்போது மிஞ்சியுள்ளார் ஜோப்ரா ஆர்ச்சர். ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த பவுலர்கள்: 0/76 - ஆர்ச்சர் - 2025ம் ஆண்டு சீசன், 0/73 - மோஹித் சர்மா - 2024ம் ஆண்டு சீசன், 0/70 - பஸில் தாம்பி - 2018ம் ஆண்டு சீசன், 0/69 - யஷ் தயாள் - 2023ம் ஆண்டு சீசன், 1/68 - ரீஸ் டாப்லி - 2024ம் ஆண்டு சீசன்
____________________________________________________________________________
ஸ்டம்பிங்கை புகழ்ந்த ஹேடன்
43 வயதான தோனி, விளையாட்டு களத்தில் தனது இறுதி அத்தியாயத்தை எட்டி உள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து 5 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்ற நிலையில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார். 5 முறை சிஎஸ்கே அணிக்கு ஐபிஎல் பட்டம் வென்று கொடுத்த கேப்டனான தோனி, தற்போது அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தொடர்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் அவர் தற்போது விளையாடாத நிலையிலும் அவரது விக்கெட் கீப்பிங் திறன் அபாரமாக உள்ளது. அதை பிரதிபலிக்கும் வகையில் நடப்பு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் செயல்பட்டார்.
மும்பைக்கு எதிரான போட்டியில்துல்லிய செயல்பாட்டை பலரும் பாராட்டி பேசி வருகின்றனர். அந்த பட்டியலில் ஹேடனும் இணைந்துள்ளார். “அவருக்குள் அந்த ஃபயர் இன்னும் அப்படியே இருக்கிறது. நூர் அகமது பந்தை லெக் திசையில் வீசிக் கொண்டிருந்தார். பேட்ஸ்மேன் முன்னாள் இருப்பதால் பகுதி அளவில் மறைக்கப்பட்டிருக்கும் நிலையில் பந்தை பிடித்து ஸ்டம்ப் செய்தது அபாரம். அதில் குயிக் டைமிங், குட் விஷன் மாதிரியானவை அடங்கி உள்ளது” என ஹேடன் தெரிவித்துள்ளார். “ஸ்டம்புகளுக்குப் பின்னால் தோனி போன்ற ஒருவர் இருப்பது எனக்கு நல்ல சப்போர்ட்டாக அமைந்துள்ளது. அவர் சூர்யகுமாரை ஸ்டம்பிங் செய்த விதம் அபாரம்” என ஆட்டத்துக்கு பிறகு நூர் அகமது தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 3 weeks ago |
-
100 நாள் வேலை திட்ட நிதியை மத்திய அரசு உடனே விடுவிக்க கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்
25 Mar 2025புதுடெல்லி : 100 நாள் வேலை திட்டத்தில், தமிழ்நாட்டிற்கான ரூ. 4,034 கோடி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தி உள்ளார்.
-
செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 வடமாநில இளைஞர்கள் சென்னை ஏர்போர்ட்டில் கைது
25 Mar 2025சென்னை : சென்னையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவரை விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.
-
பஸ் பின்னால் ஓடிய மாணவி: அரசு பஸ் டிரைவர் சஸ்பெண்ட்
25 Mar 2025திருப்பத்தூர் : அரசு பஸ் பின்னால் பிளஸ்-2 மாணவி ஓடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் டிரைவர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
-
மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து - காவலாளி பலி
25 Mar 2025மும்பை, மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது இதில் காவலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
-
சூடான்: மதவழிபாட்டு தலம் மீது துணை ராணுவம் தாக்குதல் 5 பேர் பலி
25 Mar 2025கார்டூம், சூடானில் மதவழிபாட்டு தலம் மீது துணை ராணுவம் தாக்குதல் நடத்தியதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
தமிழ்நாடு அரசியல் களத்தில் பரபரப்பு: எடப்பாடி பழனிசாமி திடீர் டெல்லி பயணம்
25 Mar 2025சென்னை : அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு புறப்பட்டதால் தமிழக அரசியல் களத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
கள் இறக்க விதிக்கப்பட்டுள்ள தடை தமிழகத்தில் நீக்கப்படுமா? சட்டசபையில் விவாதம்
25 Mar 2025சென்னை, தமிழகத்தில் கள் இறக்க விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படுமா? என்பது குறித்து சட்டசபையில் விவாதம் நடந்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-03-2025.
25 Mar 2025 -
கள் இறக்க விதிக்கப்பட்டுள்ள தடை தமிழகத்தில் நீக்கப்படுமா? சட்டசபையில் விவாதம்
25 Mar 2025சென்னை, தமிழகத்தில் கள் இறக்க விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படுமா? என்பது குறித்து சட்டசபையில் விவாதம் நடந்தது.
-
100 நாள் வேலை திட்ட நிதியை மத்திய அரசு உடனே விடுவிக்க கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்
25 Mar 2025புதுடெல்லி : 100 நாள் வேலை திட்டத்தில், தமிழ்நாட்டிற்கான ரூ. 4,034 கோடி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தி உள்ளார்.
-
100 நாள் வேலை திட்ட நிதியை மத்திய அரசு உடனே விடுவிக்க கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்
25 Mar 2025புதுடெல்லி : 100 நாள் வேலை திட்டத்தில், தமிழ்நாட்டிற்கான ரூ. 4,034 கோடி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தி உள்ளார்.
-
அமெரிக்காவில் கேளிக்கை விடுதியில் திடீர் துப்பாக்கி சூடு; 6 பேர் படுகாயம்
25 Mar 2025வாஷிங்டன், அமெரிக்காவில் உள்ள கேளிக்கை விடுதியில் துப்பாக்கி சூடு நடைபெற்றது. இதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
-
டெல்லி சட்டப்பேரவையில் 1 லட்சம் கோடி ரூபாயில் பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல்வர் ரேகா குப்தா
25 Mar 2025புதுடெல்லி : டெல்லி சட்டசபையில் ரூ.1 லட்சம் கோடியில் பட்ஜெட்டை முதல்வர் ரேகா குப்தா தாக்கல் செய்தார்
-
திருப்பரங்குன்றம் விவகாரம்: அண்ணாமலை, எச்.ராஜா மீது வழக்குப்பதிவு
25 Mar 2025சென்னை : மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக அண்ணாமலை, எச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
டெல்லி சட்டப்பேரவையில் 1 லட்சம் கோடி ரூபாயில் பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல்வர் ரேகா குப்தா
25 Mar 2025புதுடெல்லி : டெல்லி சட்டசபையில் ரூ.1 லட்சம் கோடியில் பட்ஜெட்டை முதல்வர் ரேகா குப்தா தாக்கல் செய்தார்
-
அமைச்சரை "முறை" வைத்து அழைத்த எம்.எல்.ஏ.வால் அவையில் சிரிப்பலை!
25 Mar 2025சென்னை : அமைச்சர் செந்தில் பாலாஜியை மாப்பிள்ளை என அ.தி.மு.க. எம்.எல்.ஏ. குறிப்பிட்டதால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.
-
ஆப்பிரிக்க நாடுகளுடன் சேர்ந்து கூட்டு ராணுவ பயிற்சியில் இந்திய ராணுவம்
25 Mar 2025டெல்லி, ஆப்பிரிக்கநாடுகளுடன் சேர்ந்து கூட்டு ராணுவ பயிற்சியில் இந்தியா ஈடுபடும் என்று கூறப்பட்டுள்ளது.
-
திருப்பதி கோயிலில் ரூ.5,258 கோடியில் பட்ஜெட்
25 Mar 2025திருப்பதி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரவு செலவுடன் கூடிய பட்ஜெட்டிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
-
டெல்லி சட்டப்பேரவையில் 1 லட்சம் கோடி ரூபாயில் பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல்வர் ரேகா குப்தா
25 Mar 2025புதுடெல்லி : டெல்லி சட்டசபையில் ரூ.1 லட்சம் கோடியில் பட்ஜெட்டை முதல்வர் ரேகா குப்தா தாக்கல் செய்தார்
-
ஆன்லைன் விளம்பரங்களுக்கான டிஜிட்டல் சேவை வரி ரத்தாகிறது
25 Mar 2025புதுடெல்லி : ஆன்லைன் விளம்பரங்களுக்கான டிஜிட்டல் சேவை வரியை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது
-
தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா போராட்டம்
25 Mar 2025புதுடில்லி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் தொடர்பாக ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா உள்பட எதிர்க்கட்சி எம்பிக்க
-
பிரபல கராத்தே பயிற்சியாளர் ஷிகான் ஹூசைனி காலமானார்
25 Mar 2025சென்னை, பிரபல கராத்தே பயிற்சியாளரும், நடிகருமான ஷிகான் ஹூசைனி காலமானார்.
-
டாஸ்மாக் நிர்வாகம் தொடர்ந்த வழக்கின் விசாரணையில் இருந்து 2 நீதிபதிகள் விலகல்
25 Mar 2025சென்னை : டாஸ்மாக் நிர்வாகம் தொடர்ந்த வழக்கின் விசாரணையில் இருந்து 2 நீதிபதிகள் விலகியுள்ளனர்.
-
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை சந்திக்க 5 பேர் கொண்ட குழு பயணம்
25 Mar 2025ராமேசுவரம், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை சந்திக்க 5 பேர் கொண்ட குழுவினர் நேற்று புறப்பட்டு சென்றனர்.
-
100 நாள் வேலை திட்ட நிதியை மத்திய அரசு உடனே விடுவிக்க கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்
25 Mar 2025புதுடெல்லி : 100 நாள் வேலை திட்டத்தில், தமிழ்நாட்டிற்கான ரூ. 4,034 கோடி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தி உள்ளார்.