எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, மீனவர் விடுதலை-கச்சத் தீவு விவகாரத்தில் பெரிய அளவில் எந்த முன்னெடுப்புகளும் இல்லை என்றும் பிரதமர் மோடியின் இலங்கை
பயணம் ஏமாற்றமும், வருத்துமுள் அளிப்பதாக உள்ளது என்றும் சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆதங்கம் தெரிவித்தார்.
தமிழ்நாடு மீனவர் நலன் தொடர்பாக, சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விதி 110-ன்கீழ் அறிவித்து பேசியதாவது:-தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுக்க, கடந்த ஏப்.2ம் தேதி அன்று தமிழக சட்டமன்றத்தில் மீனவர்கள் பிரச்சினை குறித்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினோம். அப்பிரச்சனைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கச்சத்தீவை மீட்க வேண்டும், இலங்கை சிறையில் வாடும் மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும், இலங்கைக் கடற்படை கைப்பற்றியுள்ள படகுகளைத் திருப்பித் தரவேண்டும் என்றும் அதில் வலியுறுத்தியிருந்தோம். இலங்கை சென்றிருந்த பிரதமர் இதுகுறித்து இலங்கை அரசுடன் பேசி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அதிலே குறிப்பிட்டிருந்தோம். அந்தத் தீர்மானத்தை பிரதமருக்கு உடனடியாக அனுப்பியும் வைத்திருந்தோம்.
இந்த நிலையில், பிரதமர் இலங்கை சென்றிருந்தார். அப்போது மீனவர் விடுதலை மற்றும் கச்சத் தீவு குறித்து பெரிய அளவிலான முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. மேலும், சிறையில் வாடும் 97 மீனவர்களும், சிறைபிடிக்கப்பட்ட படகுகளும் மீட்கப்பட்டு தாயகம் திரும்புவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறாதது நமக்கெல்லாம் மிகுந்த வருத்தத்தையும், ஏமாற்றத்தையும் அளிக்கிறது.
தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் அடிக்கடி அதிக எண்ணிக்கையில் கைது செய்யப்படுவது கடந்த சில மாதங்களாக நம் அனைவரையும் கவலைக்கு உள்ளாக்கி வரக்கூடிய செய்தியாகும். மத்திய அரசும், இந்தியப் பிரதமரும் நமது கோரிக்கைகளைப் புறக்கணிக்கின்றார்கள் என்றே கருத வேண்டியுள்ளது. மத்திய அரசு எப்படி நடந்து கொண்டாலும், நமது மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க நாம் தவறமாட்டோம்.
தி.மு.க. அரசு அவர்களுக்கு எப்போதும் துணை நிற்கும். மீனவர்களது பொருளாதாரத்தை மேம்படுத்தல், அவர்களது மீன்பிடித் தொழிலுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருவது போன்ற பல்வேறு புதிய திட்டங்களை வடிவமைத்து செயல்படுத்தி வருகிறோம்.
தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள், குறிப்பாக, மன்னார் வளைகுடா பகுதியில் அமைந்துள்ள ராமநாதபுரம், நாகப்பட்டினம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரின் கைது நடவடிக்கைகளால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இப்பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள், தங்கள் பாரம்பரிய மீன்பிடிப்புப் பகுதிகளில் மீன்பிடிப்பிற்குச் செல்லும்போது அவர்களுக்கு ஏற்படக்கூடிய இன்னல்களைக் களைவதற்கு மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்து வந்தாலும்கூட, இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து நமது மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களுடைய படகுகள் சிறைப்பிடிக்கப்படுவதும், அந்தப் படகுகள் நாட்டுடைமையாக்கப்படுவதுமான செயல்கள் நம்முடைய தொடர் வலியுறுத்தல்களையும், கோரிக்கைகளையும் மீறி நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-04-2025.
07 Apr 2025 -
டெஸ்ட் விமர்சனம்
07 Apr 2025நட்சத்திர கிரிக்கெட் வீரரான சித்தார்தை அணியில் இருந்து நீக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவெடுக்கிறது. அதனால், ஓய்வு அறிவிப்பை வெளியிட அவரை வற்புறுத்துகிறது.
-
திருவாரூர் ஆழித் தேரோட்டம் கோலாகலம்
07 Apr 2025திருவாரூர் : ஆரூரா தியாகேசா’ கோஷங்கள் முழங்க திருவாரூர் ஆழித் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
-
மீ்ண்டும் இணைந்த பிரஷாந்த்-ஹரி கூட்டணி
07 Apr 2025நடிகர் பிரஷாந்தை வைத்து கடந்த 2002 ஆம் ஆண்டு ஹரி இயக்கிய, தமிழ் என்ற படம் மிகப் பெரிய வெற்றி பெற்று வசூலை வாரியது.
-
5 ஆயிரம் கனஅடியாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து உயர்வு
07 Apr 2025தருமபுரி : 5 ஆயிரம் கனஅடியாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
-
வரி விதிப்பை திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை : அதிபர் ட்ரம்ப் திட்டவட்டம்
07 Apr 2025வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பரஸ்பர வரிகளுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
-
ஜப்பானில் விபத்து: 3 பேர் பலி
07 Apr 2025டோக்கியோ : ஜப்பானில் ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் டாக்டர் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
அ.தி.மு.க. எப்போதுமே நொந்து நுலாகி போனது கிடையாது: இ.பி.எஸ். பதிலடி
07 Apr 2025சென்னை, அ.தி.மு.க. எப்போதுமே நொந்து நுலாகி போனது கிடையாது. நான் மட்டுமல்ல அ.தி.மு.க.
-
இந்திய பங்கு சந்தை கடும் வீழ்ச்சி
07 Apr 2025மும்பை : இந்திய பங்கு சந்தையில் வரலாறு காணாத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
-
க.மு க.பி விமர்சனம்
07 Apr 2025காதலர்கள், திருமணத்துக்கு பிறகு சிறு சிறு பிரச்சனைகளைக்கூட கடக்க முடியாமல் விவாகரத்துக்கு சொல்லும் நிலையைச் சொல்லும் படம் தான் க.மு - க.பி.
-
தமிழக டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற கோரவில்லை: அமைச்சர் ரகுபதி விளக்கம்
07 Apr 2025சென்னை, டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டுமென கேட்கவில்லை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கமளித்துள்ளார்.
-
பிரதமர் மோடியின் இலங்கை பயணம் ஏமாற்றம் அளிக்கிறது: சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆதங்கம்
07 Apr 2025சென்னை, மீனவர் விடுதலை-கச்சத் தீவு விவகாரத்தில் பெரிய அளவில் எந்த முன்னெடுப்புகளும் இல்லை என்றும் பிரதமர் மோடியின் இலங்கை
-
புதிய மாநில தலைவர்களை தேர்வு செய்யும் பணியில் பா.ஜ.க. தீவிரம்
07 Apr 2025புதுடெல்லி : புதிய மாநில தலைவர்களை தேர்வு செய்யும் பணியில் பாரதிய ஜனதா கட்சி தீவிரமாக உள்ளது.
-
அமெரிக்க வருவாய் துறையில் 20,000 ஊழியர்கள் பணிநீக்கம் : அதிபர் டிரம்பின் அடுத்த நடவடிக்கை
07 Apr 2025அமெரிக்கா : அமெரிக்காவின் உள்நாட்டு வருவாய் சேவை துறையைச் சேர்ந்த 20 ஆயிரம் அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
-
இஎம்ஐ விமர்சனம்
07 Apr 2025மாத தவனைத் திட்டத்தின் (EMI) கீழ் பொருட்களை வாங்கியவர்கள் என்ன என்ன இன்னலுக்கு ஆளாகிறார்கள் என்பதை எச்சரிக்கையாக சொல்லும் படம் தான் இஎம்ஐ.
-
ஹஜ் புனித யாத்திரை எதிரொலி: இந்தியா உள்பட 14 நாடுகளின் விசாவுக்கு சவுதி தற்காலிகத்தடை
07 Apr 2025ரியாத் : இந்தியா உள்பட 14 நாடுகளின் விசாவுக்கு சவுதி அரேவியா தற்காலிகம் தடை விதித்துள்ளது.
-
தமிழக சட்டசபையில் இருந்து அ.தி.மு.க.வினர் வெளியேற்றம் : செங்கோட்டையனுக்கு மட்டும் பேச அனுமதி
07 Apr 2025சென்னை : பேரவையிலிருந்து அ.தி.மு.க.வினர் வெளியேற்றப்பட்ட நிலையில் செங்கோட்டையன் உள்ளே உரையாற்ற அனுமதி வழங்கப்பட்டது.
-
கலால் வரியால் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்பா? - மத்திய அரசு பதில்
07 Apr 2025புது தில்லி : கலால் வரி உயர்த்தப்பட்டாலும், பெட்ரோல், டீசல் விலையில் உயர்வு இருக்காது என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்திருப்பதாக மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது.
-
இளைஞர்களின் ஆற்றலைத் திரட்டி புதிய பீகாரை உருவாக்க விரும்புகிறோம்: ராகுல்
07 Apr 2025பெகுசராய், பீகார் இளைஞர்களின் ஆற்றலைத் திரட்டி புதிய பீகாரை உருவாக்க விரும்புகிறோம் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
ஜனாதிபதி போர்ச்சுக்கல் பயணம்
07 Apr 2025புதுடெல்லி : அரசுமுறை பயணமாக ஜனாதிபதி திரவுபதி முர்மு போர்ச்சுக்கல் சென்றடைந்தார்.
-
நான் உயிருடன் இருக்கும் வரை யாரும் வேலையை இழக்க மாட்டார்கள: மம்தா
07 Apr 2025கொல்கத்தா, உச்ச நீதிமன்ற உத்தரவால் நியமனம் ரத்து செய்யப்பட்ட ஆசிரியர்களின் வேலை பாதுகாக்கப்படும் என்றும் தான் உயிருடன் இருக்கும் வரை யாரும் வேலையை இழக்க மாட்டார்கள் என்
-
சட்டசபைக்கு பேட்ஜ் அணிந்து வந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்
07 Apr 2025சென்னை, தமிழக சட்டப்பேரவையின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.
-
டி.ஐ.ஜி. வருண்குமாா் தொடர்ந்த வழக்கில் சீமான் இன்று ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
07 Apr 2025திருச்சி : நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (செவ்வாய்க்கிழமை) நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்ட
-
வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.50 உயர்த்தியது மத்திய அரசு : நாடு முழுவதும் இன்று முதல் அமல்
07 Apr 2025புதுடில்லி : நாடு முழுவதும் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.50 உயர்த்தப்படுவதாக பெட்ரோலியத் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
-
வக்பு சட்டம் தொடர்பாக அமளி: ஜம்மு-காஷ்மீர் சட்டசபை ஒத்திவைப்பு
07 Apr 2025ஜம்மு, வக்பு சட்டம் தொடர்பாக விவாதிக்க கேள்வி நேரத்தை ஒத்திவைக்க சபாநாயகர் மறுத்ததை அடுத்து, ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏ