எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பதிவாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள பல்கலைகழகங்களுக்கு துணை வேந்தர்களை அரசே நியமிக்க வழிவகை செய்யும் 10 மசோதாக்கள் உள்ளிட்ட சில மசோதாக்களை சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பிய நிலையில் அவற்றுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்கவில்லை. எனவே சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்டி அதே சட்ட மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி மீண்டும் கவர்னரின் ஒப்புதலுக்காக அவற்றை அரசு அனுப்பி வைத்தது.
மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு சட்டப்படி கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால் அவர் ஒப்புதல் அளிக்காத நிலையில் தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், சட்டசபையில் 2-வது முறை நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களை ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பியது சட்டவிரோதம் என்றும், அந்த 10 பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதாக்களுக்கும், சுப்ரீம் கோர்ட்டு சிறப்பு அதிகாரங்கள் வழங்கும் சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி ஒப்புதல் அளித்து உத்தரவிட்டது.
சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு 8-ம் தேதி பிறப்பிக்கப்பட்டு இருந்தாலும், அதை முழுமையாக வெளியிடுவதில் காலதாமதம் ஏற்பட்டு இருந்தது. இந்த நிலையில் கடந்த 11-ம் தேதி நள்ளிரவில் சுப்ரீம் கோர்ட்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தீர்ப்பு வெளியிடப்பட்டது. இணைதளத்தில் தீர்ப்பு வெளியான சில மணி நேரத்தில் தமிழ்நாடு அரசிதழில் தமிழக அரசின் அனைத்து திருத்த சட்ட மசோதாக்களும் வெளியிடப்பட்டன. அவை 2 அரசிதழ்களாக 11-ம் தேதியிட்டு வெளியிடப்பட்டு இருந்தன. பொதுவாக அரசாணை என்றாலும், அரசிதழ் என்றாலும் அவை கவர்னர் அல்லது ஜனாதிபதியின் ஒப்புதலுடன்தான் வெளியாகும். அதற்கான வாசகங்கள் அதில் இடம்பெற்றிருக்கும்.
ஆனால், சட்ட மசோதாக்களுக்கு சுப்ரீம் கோர்ட்டின் ஒப்புதல் ஏற்கனவே கிடைத்துவிட்டதால் நேற்று வெளியான அதற்கான அரசிதழ்களை, ஜனாதிபதி அல்லது கவர்னரின் ஒப்புதல் இல்லாமல், சட்டத்துறை செயலாளர் ஜார்ஜ் அலெக்சாண்டர் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை அரசே நியமிக்கும் திருத்த சட்டம் அமலுக்கு வந்துவிட்டது. இனி அந்த பல்கலைக்கழகங்களின் சட்டங்களில் அரசு கூறிய திருத்தங்கள் ஏற்றப்பட்டுவிடுகிறது. அதன்படி, வேந்தர் என்ற இடத்தில் தமிழக அரசு என்ற வாசகம் இடம் பெற்றுவிடுகிறது. எனவே வேந்தராக இருந்த கவர்னரின் அனைத்து அதிகாரங்களும் தமிழக அரசு வசம் சென்றுவிட்டன.
இதனால் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் அரசின் அதிகார வரம்புக்குள் வந்துவிடுவதோடு, துணை வேந்தர் நியமனத்தில் கவர்னரின் தலையீடு இல்லாமல் போய்விட்டது. இந்த நியமனம் தொடர்பான வரம்புகளை இனி அரசே வகுத்துக்கொள்ளவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை (16-ம் தேதி) பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பதிவாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 2 weeks ago |
-
சீனாவில் பரவும் காட்டுத்தீ: ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு
15 Apr 2025பெய்ஜிங் : சீனாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ காரணமாக 3,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
சீனாவை மிரட்டும் சூறாவளி: பொதுமக்களுக்கு எச்சரிக்கை
15 Apr 2025பெய்ஜிங் : சீனாவில் கடுமையான சூறாவளிக் காற்று வீசிவரும் நிலையில், மக்களின் பாதுகாப்புக்காக, அங்கு பொதுமுடக்கம் போன்ற கடுமையான காட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-04-2025
15 Apr 2025 -
நயினார் பா.ஜ.க. தேசியத் தலைவராகவே ஆகலாம்: தங்கம் தென்னரசு கிண்டல்
15 Apr 2025சென்னை : பழமொழிப் புலவரான நயினார் பா.ஜ.க. தேசியத் தலைவராகவே ஆகலாம் என அமைச்சர் தங்கம் தென்னரசு கிண்டலடித்துள்ளார்.
-
பா.ம.க.விற்குள் இருந்த சலசலப்பு சரியாகி விட்டது: ஜி.கே. மணி பேட்டி
15 Apr 2025சென்னை, பாட்டாளி மக்கள் கட்சியில் நிலவிய உள்கட்சி பூசல் சரியாகிவிட்டதாக அக்கட்சியின் கெளரவத் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்தார்.
-
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது
15 Apr 2025ராமேஸ்வரம், தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியுள்ளது.
-
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்
15 Apr 2025திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
-
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு
15 Apr 2025சென்னை, தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
-
மேற்கு வங்கம் பற்றி எரிகிறது, முதல்வர் அமைதி காக்கிறார்: யோகி கடும் தாக்கு
15 Apr 2025ஹர்தோய் (உ.பி), மேற்கு வங்கம் பற்றி எரிகிறது.
-
குட் பேட் அக்லி படக்குழுவுக்கு இளையராஜா நோட்டீஸ்
15 Apr 2025சென்னை, குட் பேட் அக்லி படக்குழுவிடன் இழப்பீடு கேட்டு இசையமைப்பாளர் இளையராஜா தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
-
அமலாக்கத்துறை சம்மன் பழிவாங்கல் நடவடிக்கை : ராபர்ட் வதேரா குற்றச்சாட்டு
15 Apr 2025புதுடெல்லி : குருகிராம் நிலமோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய நிலையில், அது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று தொழிலதிபர் ராபர்ட் வதேரா தெரிவித்துள
-
காட்டுமன்னார்கோவில் அருகே நீரில் மூழ்கி உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் நிதி : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
15 Apr 2025சென்னை : காட்டுமன்னார்கோவில் அருகே நீரில் மூழ்கி உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.
-
2025-ம் ஆண்டுக்கான சிறந்த திருநங்கை விருதை இருவருக்கு வழங்கினாா் முதல்வர் மு.க.ஸ்டாலின்
15 Apr 2025சென்னை : 2025-ம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருதினை திருநங்கை ரேவதி மற்றும் திருநங்கை பொன்னி ஆகியோருக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
இந்திய ராணுவத்தில் வீரர்கள் பற்றாக்குறை : பாதுகாப்புத்துறை அமைச்சகம் தகவல்
15 Apr 2025புதுடெல்லி : இந்திய ராணுவம் தற்போது ஒரு லட்சத்துக்கும் அதிகமான வீரர்கள் பற்றாக்குறையை சந்தித்து வருவதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
-
பேசின் பாலம் விரிவுப்படுத்தப்படுமா...? - சட்டசபையில் அமைச்சர் எ.வ.வேலு பதில்
15 Apr 2025சென்னை : பேசின் பாலம் விரிவுப்படுத்தப்படுமா என்பது குறித்து சட்டசபையில் அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்துள்ளார்.
-
வெப்ப அலை பாதிப்பால் உயிரிழந்தால் ரூ.4 லட்சம்: தெலங்கானா அரசு அறிவிப்பு
15 Apr 2025ஐதராபாத், வெப்ப அலை மற்றும் வெயில் தாக்க பாதிப்புகளை மாநில பேரிடராக அறிவித்து தெலங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது.
-
நாசாவின் இந்திய வம்சாவளி பெண் அதிகாரி நீலா டிஸ்மிஸ் : அதிபர் டிரம்ப் உத்தரவு
15 Apr 2025வாஷிங்டன் : நாசாவின் இந்திய வம்சாவளி பெண் அதிகாரி நீலாவை டிஸ்மிஸ் செய்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
-
நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மனநலம் பாதிக்கப்பட்டவர்..!
15 Apr 2025மும்பை : நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் குஜராத்தைச் சேர்ந்த நபர் மனநிலை சரியில்லாதவர் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
-
காஸா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்
15 Apr 2025டெல்அவிவ் : காஸா நகரத்திலுள்ள மருத்துவமனையின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், மருத்துவப் பணியாளர் ஒருவர் பலியாகியுள்ளார்.
-
அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு தொடங்கியது
15 Apr 2025புதுடில்லி, 2025-ஆம் ஆண்டுக்கான அமர்நாத் புனித யாத்திரைக்கான முன்பதிவு தொடங்கியது.
-
ரஷ்யா, உக்ரைன் இடையிலான போருக்கு நான் பொறுப்பல்ல : அமெரிக்க அதிபர் விளக்கம்
15 Apr 2025வாஷிங்டன் : ரஷ்யா, உக்ரைன் இடையிலான போருக்கு நான் பொறுப்பல்ல என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
இஸ்ரேல்-ஹமாஸ் போர் எதிரொலி: காசாவில் பலி 51 ஆயிரமாக உயர்வு
15 Apr 2025காசா சிட்டி : இஸ்ரேல்-ஹமாஸ் போர் காரணமாக இதுவரை காசாவில் பலியானோர் எண்ணிக்கை 51 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
-
போராட்டங்களுக்கு தடை விதிக்க மறுப்பு: ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கான மானியங்களை நிறுத்தினார் ட்ரம்ப்..!
15 Apr 2025வாஷிங்டன், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டங்களுக்கு தடை விதிக்க நிர்வாகம் மறுப்பு தெரிவித்ததையடுத்து 2.2 பில்லியன் டாலர் மானியங்களையும் 60 மில்லியன் டாலர்
-
நைஜீரியாவில் கிராமத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 40 பேர் பலி
15 Apr 2025அபுஜா : நைஜீரியாவில் கிராமத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 40 பேர் பலியானார்கள்.
-
ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் 2-ம் கட்ட திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும் : சட்டசபையில் அமைச்சர் கே.என்.நேரு தகவல்
15 Apr 2025சென்னை : ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் இரண்டாம் கட்டத் திட்டத்திற்கு ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் கே.என்.நேர