எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் முதல் சுற்றிலேயே முன்னிலை வீரரான நோவக் ஜோகோவிச் (செர்பியா) தோல்வி கண்டார். அடுத்த மாதம் 25-ம் தேதி பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி தொடங்கவுள்ளது. இந்நிலையில் மாட்ரிட் ஓபன் போட்டியில் நோவக் ஜோகோவிச் பங்கேற்றார். முதல் சுற்றில் இத்தாலி வீரர் மேட்டியோ அர்னால்டியும், ஜோகோவிச்சும் மோதினர்.
இதில் அர்னால்டி 6-3, 6-4 என்ற நேர் செட்களில் ஜோகோவிச்சை வீழ்த்தினார். 15 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற மான்டி கார்லோ டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றிலும் ஜோகோவிச் முதல் சுற்றிலேயே தோல்வி கண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
_________________________________________________________________________________________________
புள்ளிப்பட்டியலில் ஆர்.சி.பி. முதல் இடம்
நடப்பு ஐ.பி.எல். தொடரின் 46-வது லீக் ஆட்டம் டெல்லியில் நடந்தது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. முதலில் பேட் செய்த டெல்லி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய பெங்களூரு அணி 18.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், நடப்பு ஐ.பி.எல். தொடரில் எழுச்சி பெற்றுள்ள ஆர்.சி.பி. அணி தொடர்ந்து 6 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறி அசத்தியது. 2வது இடத்தை குஜராத்தும், 3வது இடத்தை மும்பையும், 4வது இடத்தை டெல்லியும், பஞ்சாப் கிங்ஸ் 5வது இடத்தையும் பிடித்துள்ளது.
_________________________________________________________________________________________________
ராகுலை நக்கல் அடித்த கோலி
டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் ஐபிஎல் தொடரின் 46-வது லீக் ஆட்டம் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிங்கியபெங்களூரு அணி 18.3 ஓவரில் 165 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் பெங்களூரு அணி 7வது வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது.
இதனையடுத்து இது என்னோட ஹோம் கிரவுண்ட் என பெங்களூரு மைதானத்தில் கே.எல்.ராகுல் செய்த சைகையை டெல்லி மைதானத்தில் ஜாலியாக ரீ-க்ரியேட் செய்து விராட் கோலி கிண்டலடித்தார். முன்னதாக பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றது. அப்போட்டியில் 93 ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்ட கே.எல்.ராகுல், தனது பேட்டை தரையில் வட்டமிட்டு அடித்து ஆக்ரோஷமாக கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
_________________________________________________________________________________________________
சாதனை படைத்த புவனேஸ்வர்
18-வது ஐ.பி.எல். தொடரில், டெல்லியில் நேற்றிரவு நடந்த 46-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 162 ரன்கள் அடித்தது. அடுத்து 163 ரன் இலக்கை நோக்கி ஆடிய பெங்களூரு அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் கைப்பற்றிய 3 விக்கெட்டுகளையும் சேர்த்து ஐ.பி.எல். தொடரில் புவனேஸ்வர் குமார் இதுவரை 193 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் 18 ஆண்டு கால ஐ.பி.எல். வரலாற்றில் அதிக விக்கெட் கைப்பற்றிய 2-வது வீரர் என்ற சாதனையை புவனேஸ்வர் குமார் படைத்துள்ளார்.
_________________________________________________________________________________________________
மலிங்கா சாதனையை முறியடித்த பும்ரா
மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் 45-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் மோதியது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் குவித்தது. இதனையடுத்து, 216 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ அணி 19 ஆவது ஓவரில் 161 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் 54 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது.
இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய பும்ரா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய மலிங்காவின் சாதனையை பும்ரா முறியடித்துள்ளார். மும்பை அணிக்காக பும்ரா இதுவரை 174 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதற்கு முன்பாக மும்பை அணிக்காக மலிங்கா 170 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்ததே சாதனையாக இருந்தது.
_________________________________________________________________________________________________
சி.எஸ்.கே. குறித்து ரெய்னா
நடப்பு ஐ.பி.எல். தொடரில் 9 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 வெற்றி, 7 தோல்விகளை பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் நீடிக்கிறது. இந்நிலையில், சி.எஸ்.கே. அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா ரசிகர்களுடன் நடந்த உரையாடலில் கூறியதாவது: ஐ.பி.எல். ஏலத்திலேயே சி.எஸ்.கே. அணி தோற்றுவிட்டது. கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் அய்யர் போன்ற வீரர்களை ஏன் சி.எஸ்.கே. வாங்கவில்லை?
இந்த ஐ.பி.எல். ஏலத்தைப் பொறுத்தவரை தோனியின் தலையீடு ஏதும் இல்லை. முழுக்க முழுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் எடுத்த முடிவு. தோனியைப் பொறுத்தவரை 43 வயதிலும் அணிக்கு தேவையானதை களத்தில் இருந்து செய்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவ்வளவு மோசமாக விளையாடி நான் பார்த்தது இல்லை. இளம் பிளேயர்கள் மற்றும் வாய்ப்பு கிடைத்தவர்கள் சிறப்பாக விளையாட வேண்டும். என்னைப் பொறுத்தவரை தோனி அடுத்த ஆண்டு ஐ.பி.எல். போட்டிகளிலும் விளையாடுவார். சி.எஸ்.கே. நிச்சயம் கம்பேக் கொடுக்கும் என தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 5 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 9 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-04-2025
28 Apr 2025 -
செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கை முடித்து வைத்தது சுப்ரீம் கோர்ட்
28 Apr 2025புதுடெல்லி, செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கை முடித்து வைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
4-வது நாளாக போர் நிறுத்த ஒப்பந்தம் மீறல்: பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் சாடல்
28 Apr 2025ஜம்மு, ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மற்றும் குப்வாரா மாவட்டங்களில் தொடர்ந்து 4-வது நாளாக போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இந்திய ராணுவம
-
வான்வெளியை பயன்படுத்தத் தடை: பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய இழப்பு
28 Apr 2025லாகூர் : பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா எடுத்த நடவடிக்கைகளுக்கு எதிர்வினையாற்றுவதாகக் கருதி தங்களது வான்வெளியை இந்திய விமானங்கள் பயன்படுத்தத் தடை விதித்த பாகிஸ
-
‘ஹிட் - தி தேர்ட் கேஸ்’
28 Apr 2025ரசிகர்கள் கொண்டாடுவதற்கான அனைத்து அம்சங்களும் ‘ஹிட் - தி தேர்ட் கேஸ்’ படத்தில் உள்ளது என நானி உறுதியளித்துள்ளார்.
-
வல்லமை விமர்சனம்
28 Apr 2025கிராமத்திலிருந்து சென்னைக்கு மகளுடன் வருகிறார் மிரேம்ஜி.
-
பஹல்காம் விவகாரத்தில் இந்தியா நடவடிக்கை: பாக். ராணுவத்தில் இருந்து 1,200 வீரர்கள் வெளியேறினர்
28 Apr 2025இஸ்லாமாபாத் : பஹல்காம் விவகாரத்தில் இந்தியா நடவடிக்கை காரணமாக ராணுவத்தில் இருந்து பாகிஸ்தான் வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறி வருகின்றனர்.
-
புதுச்சேரியில் தங்கியிருந்த 2 பாகிஸ்தானியர்கள் வெளியேற உத்தரவு
28 Apr 2025புதுச்சேரி, விசா காலாவதியானதால் வழக்கு பதிவான நிலையில், புதுச்சேரியில் தங்கியிருந்த பாகிஸ்தானியர்கள் இருவர் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
-
பஹல்காம் தீவிரவாத தாக்குதல்: இந்தியா, பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்
28 Apr 2025வாஷிங்டன் : பஹல்காம் தீவிரவாத தாக்குதலை அடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் உரிய தீர்வு காண வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது
-
ஒய்.ஜி.மகேந்திரனின் ‘டார்க் பேஸ்’
28 Apr 2025ஒய்.ஜி.மகேந்திரன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘டார்க் ஃபேஸ்’ (Dark Face) என்ற கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் இணையத் தொடர் விரைவில் வெளியாகவுள்ளது.
-
ரசிகர்களுக்கு நன்றி சொன்ன தயாரிப்பாளர் தாணு
28 Apr 2025கடந்த காலங்களில் வெற்றி பெற்ற பல படங்கள் மறு வெளியீடு செய்வது சமீபத்திய ட்ரென்டாக உள்ளது.
-
புதுச்சேரி பா.ஜ.க. பிரமுகர் கொலை வழக்கில் 8 பேர் கைது
28 Apr 2025புதுச்சேரி, பா.ஜ.க. பிரமுகர் கொலை வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
-
டூரிஸ்ட் பேமிலி படத்தின் இசை வெளியீட்டு விழா
28 Apr 2025அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு ,மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், எம். எஸ்.
-
சட்டசபை கூட்டம் இன்றுடன் முடிகிறது: மானியக்கோரிக்கைகளுக்கு விரிவான பதில் அளிக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
28 Apr 2025சென்னை, சட்டசபை கூட்டம் இன்றுடன் முடிகிறது. மானியக் கோரிக்கைகளுக்கான விரிவான பதிலுரையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தெரிவிக்கிறார் &n
-
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மே 13-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும்: கோவை மகிளா நீதிமன்றம் உத்தரவு
28 Apr 2025கோவை, பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மே 13ம் தேதி தீர்ப்பு வழங்குவதாக கோவை மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
நாங்குநேரி விபத்தில் உயிரிழந்த ஏழு பேரின் குடும்பத்துக்கும் தலா ரூ.2 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
28 Apr 2025சென்னை, திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே கார்கள் மோதிக் கொண்ட விபத்தில் பலியான 7 பேரின் குடும்பத்துக்கும் தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டால
-
மோசடி நிறுவனங்களிடம் இருந்து ரூ.319 கோடி சொத்து பறிமுதல் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
28 Apr 2025சென்னை : தி.மு.க. ஆட்சியில் மோசடி நிறுவனங்களிடம் இருந்து ரூ.319 கோடி சொத்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் இருந்து 200 பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம்
28 Apr 2025சென்னை : மத்திய அரசு உத்தரவைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் இருந்து 200 பாகிஸ்தானியர்கள் வெளியேற்றபட்டுள்ளனர்.
-
இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: காாசவில் 27 பேர் உயிரிழப்பு
28 Apr 2025காசா சிட்டி : காசாவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியதில் 27 பேர் உயிரிழந்தனர்.
-
மகளிர் உரிமை தொகை பெற ஜூன் 4ல் விண்ணப்பிக்கலாம் : அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு
28 Apr 2025சென்னை : மகளிர் உரிமை தொகை கிடைக்காத தகுதியுடையோர், ஜூன், 4ல் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.
-
ரஷ்யாவுக்காக போரிட படைகளை அனுப்பியதாக வட கொரியா அறிவிப்பு
28 Apr 2025மாஸ்கோ : ரஷ்யாவுக்காக போரிட படைகளை அனுப்பினோம் என்று வட கொரியா தெரிவித்துள்ளது.
-
அமெரிக்கா வான்வழி தாக்குதல்: 30 பேர் பலி
28 Apr 2025ஆப்பிரிக்கா : ஆப்பிரிக்க புலம்பெயர்ந்தோர் அடைத்துவைக்கப்பட்டிருந்த சிறையின் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியதில், 30 பேர் கொல்லப்பட்டதாக யேமனில் ஹவுத்தி கிளர்
-
போர் பதற்றத்தால் காஷ்மீரில் எல்லையோர கிராமத்தில் பதுங்கு குழிகளை தயார் செய்யும் மக்கள்
28 Apr 2025புதுடெல்லி : பாகிஸ்தானுடன் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் காஷ்மீர் எல்லையோர கிராமங்களில் உள்ள மோடி பதுங்கு குழிகளை அப்பகுதி மக்கள் தயார் செய்து வருகின்றனர்.
-
தமிழக சட்டசபையில் வானதி - அமைச்சர் கீதா ஜீவன் இடையே காரசார விவாதம்
28 Apr 2025சென்னை : தமிழக சட்டசபையில் 'பெண்கள் பாதுகாப்பு' தொடர்பாக பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், அமைச்சர் கீதா ஜீவன் இடையே காரசார விவாதம் நடந்தது.
-
4 நாட்களில் 537 பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம்: மத்திய அரசு தகவல்
28 Apr 2025புதுடில்லி : கடந்த 4 நாட்களில் 9 தூதர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட 537 பாகிஸ்தானிய குடிமக்கள் எல்லையில் இருந்து இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளனர்.