எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச் 24 - காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் தயாரிப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. ஐவர் குழுவை நிராகரித்து தங்கபாலு கொடுத்த லிஸ்டை சோனியா நிராகரித்தார். இரு முறைக்கு மேல் வாய்ப்பில்லை என்பதால் பல முக்கிய தலைவர்களுக்கு எம்.எல்.ஏ. பதவி கிடைக்காது என தெரிகிறது.
காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணியில் ஆரம்பம் முதலே இழுபறி நீடித்து வருகிறது. இட ஒதுக்கீடு முதல் பிரச்சினை ஆரம்பித்து தற்போது வேட்பாளர்களை இறுதிப்படுத்துவதில் வந்து நிற்கிறது. தி.மு.க., காங்கிரஸ் உறவு உறுதியாக இருக்கிறது என்று கூறி வந்தவர்கள் பிறகு ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டு டெல்லி வரை ராஜினாமா கடிதத்தோடு சென்று சமாதானமானது காலம் முழுவதும் சொல்லி கைகொட்டி சிரிக்க வேண்டிய வரலாறு.
காங்கிரஸ் தரப்பில் ஐவர் குழு அமைக்கப்பட்டது. ஐவர் குழுவில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை சேர்க்காததால் அவர்கள் ஆதரவாளர்கள் சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட்டு உண்ணாவிரதம் இருந்தனர். ஐவர் குழு தி.மு.க.விடம் சீட் கேட்டு பெறுவதை விட தங்கள் கோஷ்டிக்கு எத்தனை எம்.எல்.ஏ.க்களை ஒதுக்குவது என்று போட்டியிட்டதை கருணாநிதி தனக்கு சாதகமாக்கிக் கொள்ள பார்த்தார். ஒரு மலையையும் சிறு உளி உடைத்து விடும் என்பது போல் கருணாநிதியின் பேரன் வயசு உள்ள ராகுல் கருணாநிதியின் எண்ணத்தை தவிடுபொடியாக்கி காங்கிரசுக்கு வேண்டிய தொகுதிகளை பெற்றார். தி.மு.க. தனது பலமான 8 தொகுதிகளை காங்கிரசுக்கு விட்டு கொடுக்க வேண்டியதாகி விட்டது. 63 தொகுதிகளாக தனது எண்ணிக்கையில் காங்கிரஸ் வளர்த்துக் கொண்டது. இதனிடையே காங்கிரசில் இளங்கோவன் கோஷ்டி பட்டியல், யுவராஜாவின் இளைஞர் காங்கிரசார் பட்டியல், ஜி.கே.வாசன் கோஷ்டி, சிதம்பரம் கோஷ்டி, தங்கபாலு கோஷ்டி என அனைவருக்கும் 63 தொகுதிகளுக்குள் பிரித்தாக வேண்டிய நிலைமை.
இங்கு இரண்டு நாள் விருப்ப மனு பெற்று அனைத்து மனுக்களையும் டெல்லிக்கு எடுத்துச் சென்றனர். அங்கு வேட்பாளர் பட்டியலை இறுதிப்படுத்தும் பணியை ஐவர் குழுவை நிராகரித்தது. தங்கபாலுவை போட்டு வயலார் ரவி, அகமது பட்டேல், ஆசாத் ஆகியோரை கொண்ட குழுவை அமைத்தார் சோனியா. தமிழ்நாட்டை பற்றி நன்கு அறிந்த சிதம்பரம், வாசன், ஈ.வி.கே.எஸ்., ஜெயக்குமார் முதலியவர்களை பயன்படுத்தாமல் தங்கபாலுவை மட்டுமே போட்டு வேட்பாளர் பட்டியலை தயாரிக்க நினைத்தது தமிழக காங்கிரஸ் தலைவர்களிடையே அதிருப்தியை உண்டு பண்ணியது.
தங்கபாலு, ஆஸ்கர், ஆசாத், வயலார் ரவி, அகமது பட்டேல் ஆகியோர் சேர்ந்து நேற்று முன்தினம் மாலை ஒரு பட்டியலை தயாரித்தனர். வெளிநாடு சென்று விட்டு நேற்று முன்தினம் மாலை டெல்லி திரும்பிய சோனியாவிடம் மேற்கண்ட குழுவினர் தயாரித்த பட்டியல் தரப்பட்டது. அதில் தங்கபாலுவின் மனைவி முதல் வேண்டிய பட்டவர்களுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டிருப்பதும், பழைய தி.மு.க. விசுவாசிகளே மீண்டும் பெயர் பட்டியலில் இருப்பதை தெரிந்து கொண்ட சோனியா பட்டியலை நிராகரித்துள்ளார். போய் புது பட்டியல் தயாரித்து வாருங்கள், 2 முறை எம்.எல்.வாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வாய்ப்பு இல்லை என்று கூறி விட்டாராம். இதனால் அதிர்ச்சி அடைந்த தங்கபாலு குழுவினர் புதுப்பட்டியலை தயாரித்து வருகிறார்களாம்.
இரண்டு முறைக்கு மேல் எம்.எல்.ஏ.க்களாக இருந்தவர்களுக்கு பதவி இல்லையென்றால் காங்கிரசில் உள்ள பல பெரிய தலைவர்கள் உருளும் என தெரிகிறது. தற்போது எம்.எல்.ஏ.க்களாக உள்ள ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. டி.யசோதா, பீட்டர் அல்போன்ஸ் (கடையநல்லூர்) ,ஞானசேகரன் (வேலூர்), டி.அமரமூர்த்தி (அரியலூர்), கோபிநாத் (ஓசூர்), சிவராஜ் (ரிஷிவந்தியம்), கோவை தங்கம் (வால்பாறை), ராம்பிரபு (பரமகுடி), கே.ஆர்.ராமசாமி (திருவாடனை), சுந்தரம்(காரைக்குடி), வேல்துரை (சேரன்மாதேவி), டாக்டர் இ.எஸ்.ராமன் (பள்ளிப்பட்டு), என்.ஆர்.ரங்கராஜன் (பட்டுக்கோட்டை) ஆகியோருக்கு மீண்டும் சீட் கிடைக்காது. இதில் பலரும் ஜி.கே.வாசன் கோஷ்டி. பலர் கருணாநிதியின் விசுவாசிகள். (காங்கிரசில் உள்ள கருணாநிதி கோஷ்டி) இவர்களுக்கு சீட் மறுக்கப்பட்டால் கருணாநிதி காங்கிரசுக்குள் காய் நகர்த்தும் பல வேலைகள் நடைபெறாது. இதுபோக எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம்,பி.வி.ராஜேந்திரன், குமாரதாஸ், டாக்டர் செல்லக்குமார், ஜெயக்குமார் ஆகியோருக்கும் மீண்டும் வாய்ப்பு கிடைக்காது. இதனால் காங்கிரசுக்குள் குத்து வெட்டு மேலும் அதிகமாகும் என தெரிகிறது. தங்கபாலு தனது மனைவிக்கு மயிலாப்பூரில் சீட்டு வாங்கி தருவதால் அங்கு போட்டியிடும் எண்ணத்தில் உள்ள கராத்தே தியாகராஜன் கடும் வெறுப்பில் உள்ளார்.
வேட்பு மனுதாக்கல் 19-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி முடிய உள்ளது. இன்னும் சில தினங்கள் மட்டும் உள்ள நிலையில் வேட்பாளர் பட்டியலே தயாரிக்க முடியாமல் திணறி வருகின்றனர். இன்று பட்டியல் வெளியானால் இரண்டு நாளைக்குள் வேட்பாளர் மனுத்தாக்கல் செய்ய வேண்டும். வேட்பாளர் பட்டியல் வெளியிட்டவுடன் காங்கிரசில் பெரும் ரகளை காத்திருக்கிறது. தற்போது டெல்லியில் இருக்கும் யசோதாவிற்கு சீட் தராவிட்டால் அங்கேயே தீக்குளிப்பேன் என்று கூறியுள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் டெல்லியிலும், சென்னை சத்தியமூர்த்திபவனிலும் தங்கபாலுவின் கொடுபாவியை கொளுத்த எதிர்ப்பாளர்கள் தயாராகி வருவதால் சென்னை சத்தியமூர்த்தி பவனில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சோனியாவின் திட்டப்படி பழைய தலைகளை புறக்கணித்துவிட்டு புதுமுகங்களை போட்டால் பெரும் ரகளை வெடிக்கும். தமிழகம் முழுவதும் தொகுதிகளில் அதன் பிரதிபலிப்பு இருக்கும். புதுமுகங்களை ஜெயிக்க விடாமல் பழைய தலைகள் உள்வேலைகள் செய்யும் என கூறப்படுகிறது. ஏற்கனவே தி.மு.க.வை நெருக்கி தொகுதிகளை பிடுங்கியதால் தனக்கு 2 கண் போனாலும் பரவாயில்லை, எதிரிக்கு 1 கண் போக வேண்டும் என்று தி.மு.க. மேலிடம் முதல் தொண்டர்கள் வரை முடிவெடுத்து உள்ளதால் பிரச்சினை உள்ளது. இதில் இந்த பிரச்சினையும் உள்ளதால் தமிழகத்தில் பல தொகுதிகளிலும் காங்கிரஸ் வெல்வது கேள்விக்குறியே.
தன்னால் நடக்க முடியாதவன் ஓடுகிறவனை குறை சொன்னானாம். அதுபோல் தற்போது இவர்களுக்குள் ஆயிரம் குத்துவெட்டு, குழிப்பறிப்பு, கூட்டணி மோதல் இருக்கும்போது நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று உள்ளுக்குள் பொறுமியபடி தி.மு.க. கூட்டணி தலைவர்கள் பேட்டி அளிப்பதுதான் விந்தையிலும் விந்தை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.18 hours 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 17 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 17 hours ago |
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
27 Apr 2024சென்னை, தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை நேற்றும் உயர்ந்து விற்பனையானது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருள் எப்படி கிடைக்கிறது? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
27 Apr 2024மதுரை:உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Apr 2024சென்னை, தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இரண்டு குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒருவர் பலி
27 Apr 2024இம்பால், மணிப்பூரில் 2 குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் இளைஞர் பலியான சம்பவத்தில், வன்முறை பரவி விடாமல் தடுப்பதற்காக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளன
-
தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்:பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகளை வழங்க உத்தரவு
27 Apr 2024சென்னை:அதிகரிக்கும் வெப்பத்தால் பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத
-
தமிழகத்தில் இயல்பைவிட 83 சதவீதம் மழை குறைவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் கோடைக்கால பருவமழை இயல்பைவிட 83 சதவீதம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள், மாலுமிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு
27 Apr 2024டெக்ரான், ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் மற்றும் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.&n
-
அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பதே எங்கள் நோக்கம்: மல்லிகார்ஜூன கார்கே பேட்டி
27 Apr 2024திஸ்பூர், நாட்டின் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதே எங்கள் நோக்கம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.