எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜாகர்த்தா,ஏப்.12 - இந்தோனேஷியாவில் மீண்டும் பூகம்பம். இந்த பூகம்பத்தின் அளவு ரிக்டரில் 8.6 ஆக பதிவாகி இருந்தது. கட்டிடங்கள் குலங்கின. வீடுகளில் இருந்து மக்கள் அலறிக்கொண்டு தெருக்களுக்கு ஓடி வந்து தஞ்சம் புகுந்துள்ளனர். இலங்கை,மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனையொட்டி முதலில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. பின்னர் அது வாபஸ் பெறப்பட்டது. இருந்தபோதிலும் சுனாமி பீதியில் மக்கள் உள்ளனர்.
இந்தியாவுக்கு கிழக்கே இந்தோனேஷியா அமைந்துள்ளது. இந்த நாடு அடிக்கடி பூகம்பம் ஏற்படும் பகுதியில் அமைந்துள்ளது. கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தோனேஷியாவில் உள்ள சுமத்ரா தீவுப்பகுதியில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டு சுனாமி வீசியதில் அந்த நாட்டில் லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். அந்த சுனாமி இந்தியாவையும் தாக்கியது. சுனாமியில் அந்தமான் நிகோபர் தீவுகள் மற்றும் தமிழகம் குறிப்பாக நாகைப்பட்டினம், கடலூர், சென்னை மற்றும் தமிழக கடல் பகுதியில் உள்ள நகரங்கள், ஊர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். அதன் பின்னர் சுமத்ரா பகுதியில் அடிக்கடி நிலநடுக்கும் ஏற்பட்டது. ஆனால் அந்த நிலநடுக்கம் அதிக அளவில் இல்லை.
இந்தநிலையில் நேற்று இந்தோனேஷியாவில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டரில் 8.6 ஆக பதிவாகி இருந்தது. இந்தோனேஷியாவில் உள்ள சுமத்ரா தீவுப்பகுதியில் இந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இந்த பூகம்பம் தொடர்ந்து 4 நிமிடங்கள் நீடித்தது என்று நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாண்டா தீவுப்பகுதிகளில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. பூகம்பத்தால் பயந்துபோன மக்கள் அலறியடித்துக்கொண்டு பெரும் பீதியில் வீடுகளில் இருந்து தெருக்களுக்கு ஓடி வந்துள்ளனர் என்றும் அந்த தகவல்கள் கூறுகின்றன. முதலில் நேற்றுக்காலையில் இந்தோனேஷியாவின் கடல் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 8.7 ஆக பதிவாகி இருந்தது. இதனையொட்டி இந்துமகா சமுத்திரப்பகுதி முழுமைக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. இந்தியாவின் கடல்பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. அந்தமான் நிகோபர் தீவுப்பகுதிகளுக்கு முதலில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. கடல் பகுதி தகவல் மையமான இந்திய தேசிய மையம் இந்த எச்சரிக்கையை விடுத்தது. சுனாமி பெரிய அளவில் சுனாமி தாக்கும் என்றும் இந்த மையம் எச்சரித்தது. இதனையொட்டி மேற்குவங்காளம், ஒரிசா, ஆந்திர, தமிழகம். கேரள ஆகிய மாநிலங்களில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. மக்கள் உஷார்படுத்தப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தமான் நிகோபர் தலைநகரான போர்ட்பிளேயருக்கு 2 விமானங்களில் விமானப்படையினர் அனுப்பப்பட்டுள்ளனர். 5 டன் நிவாரணப்பொருட்களும் அனுப்பப்பட்டுள்ளன. அண்டை நாடுகளான இலங்கை மற்றும் சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இலங்கையில் தலைநகர் கொழும்பில் நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. அதனால் மக்கள் அலறயடித்துக்கொண்டு தெருக்களுக்கு ஓடி வந்தனர். தாய்லாந்து நாட்டில் உள்ள புகெத் பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டது. கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் இந்த நாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதால் அந்த நாட்டு மக்கள் பெரும் கவலையிலும் பீதியிலும் உள்ளனர். அங்கு கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமியில் சுமார் 2 லட்சம் பேர் பலினார்கள். அதேமாதிரி இந்தத்தடவையும் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். மக்கள் வீடுகளை விட்டு அலறியடித்துக்கொண்டு ஓடி வந்தபோது உறவினர்கள், உடன்பிறப்புக்கள் இருக்கிறார்களை என்று தேடிக்கொண்டு வந்தனர். அப்போது இறைவனை அவர்கள் வழிபட்டு எங்களை காப்பாற்று என்று கூறினர். ஒருசில மக்கள் கடவுள் மிகப்பெரியவர், கடவுள் மிகப்பெரியவர் என்று கூறிக்கொண்டே வந்தனர். நேற்று ஏற்பட்ட இந்த பூகம்பத்தின் அளவு ரிக்டரில் 8.6 ஆக பதிவாகி இருந்தது என்று அமெரிக்க பூகம்ப ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. ஆசெஹ் தீவுப்பகுதியில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்தில் சுமார் 430 கிலோ மீட்டர் தூரத்திற்கு பூகம்பம் மையம் கொண்டியிருந்தது என்றும் அந்த ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்தோனேஷியா, இந்தியா,இலங்கை, ஆஸ்திரேலியா, மியான்மர், தாய்லாந்து, மாலத்தீவு, இந்துமகா சமுத்திர தீவுகள், மலேசியா, பாகிஸ்தான், சோமாலியா, ஓமன், இரான், வங்கதேசம், கென்யா, தென்னாப்பிரிக்கா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் சுனாமி தாக்குதல் இருக்கலாம் என்று பசிபிக் கடல் பிராந்தியத்தில் உள்ள ஹவாலி சுனாமி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளதை அமெரிக்க பூகம்ப ஆராய்ச்சி மையம் உறுதி செய்துள்ளது. இந்தோனேஷியா பகுதி கடலில் அலைகள் 7 அடி உயரம் வரை வீசியது. ஆனால் பூகம்பத்தால் பெரிய அளவில் சேதம் இல்லை என்று முதலில் வந்த தகவல்கள் கூறுகின்றன. இருந்தபோதிலும் இரண்டாவது தடவையாக இந்தோனேஷியா சுனாமி எச்சரிக்கையை விடுத்தது. சுமத்ரா, மென்தவாய் தீவுப்பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி இந்தோனேஷியா நாட்டு அரசு கேட்டுக்கொண்டுள்ளது. பூகம்பத்தின்போது மண்சரிவு செங்குத்தாக இல்லாமல் சரிவாக இருந்ததால் அதிக அளவு கடல் தண்ணீரை தள்ளி சுனாமியை ஏற்படுத்தாது என்றும் பூகம்ப ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தோனேஷியாவை அடுத்து மலேசியா,சிங்கப்பூர், தாய்லாந்து வங்கேதசம், இந்தியா ஆகிய நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.1 day 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 23 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 23 hours ago |
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
27 Apr 2024சென்னை, தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை நேற்றும் உயர்ந்து விற்பனையானது.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
அரசியல் எதிரிகளை பழிவாங்க அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் பதில் மனு
27 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் பதில்மனு தாக்கல் செய்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறைய
-
உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருள் எப்படி கிடைக்கிறது? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
27 Apr 2024மதுரை:உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
-
நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Apr 2024சென்னை, தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்:பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகளை வழங்க உத்தரவு
27 Apr 2024சென்னை:அதிகரிக்கும் வெப்பத்தால் பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இரண்டு குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒருவர் பலி
27 Apr 2024இம்பால், மணிப்பூரில் 2 குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் இளைஞர் பலியான சம்பவத்தில், வன்முறை பரவி விடாமல் தடுப்பதற்காக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளன
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
தமிழகத்தில் இயல்பைவிட 83 சதவீதம் மழை குறைவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் கோடைக்கால பருவமழை இயல்பைவிட 83 சதவீதம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத
-
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள், மாலுமிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு
27 Apr 2024டெக்ரான், ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் மற்றும் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.&n
-
வட தமிழ்நாட்டில் மே 2 தேதிக்கு பிறகு லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் 1-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மே 2-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய வட