எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச் - 27 - தன் மீது எந்த வழக்கு விசாரணையும் வரக்கூடாது என்பதற்காக கச்சத்தீவை தாரை வார்த்தது போல், தன்னுடைய குடும்பத்தினருக்காக எதையும் செய்வார் கருணாநிதி என்று சைதை துரைசாமியை ஆதரித்து பேசிய விஜயகாந்த் கூறினார். வருகிற சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளராக சைதை துரைசாமி நிறுத்தப்பட்டுள்ளார். தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து களம் இறங்கும் சைதை துரைசாமியை ஆதரித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று தீவர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். கொளத்தூர் இரட்டை ஏரி சந்திப்பில் துவங்கிய இந்த பிரச்சார பயணம் அண்ணாசிலை சந்திப்பு, 70 அடி ரோடு சந்திப்பு, பெரவள்ளூர் சந்திப்பு வழியாக திரு.வி.க. நகர் பேருந்துநிலையத்தை அடைந்தது. வழிநெடுகிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் விஜயகாந்த் மற்றும் வேட்பாளர் சைதை துரைசாமி ஆகியோருக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.
பின்னர் திரு.வி.க. நகர் பேருந்து நிலையம் அருகில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் விஜயகாந்த் திறந்த வேனில் இருந்தபடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
இந்த தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர் சைதை துரைசாமியை எதிர்த்து போட்டியிடுகின்ற தி.மு.க. வேட்பாளரை தளபதி, தளபதி என்கிறார்கள். அவர் எதற்கு தளபதி என்று தெரியவில்லை. அவர் துணை முதல்வர் ஆனது எப்படி? அவருடைய அப்பாவால் தான் துணை முதல்வர் ஆனார். மக்களா அவரை துணை முதல்வராக தேர்ந்தெடுத்தார்கள்?
ஆனால், அதே நேரத்தில் அவரை எதிர்த்து போட்டியிடுகின்ற சைதை துரைசாமி மனிதநேயம் மிகுந்தவர். இவர், தன்னுடைய சொந்த முயற்சியால் பல ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை உருவாக்கி வருபவர். அரசு பணத்தில் ஒரு ஐ.ஏ.எஸ். ஐ.பி.எல். அதிகாரியைக்கூட உருவாக்காதாவர் கருணாநிதி. ஆனால், இவரோ தனிப்பட்ட முறையில் பல அதிகாரிகளை உருவாக்கி வருபவர். அதோடு கல்விக்காக பல அருந்தொண்டு ஆற்றி வருபவர்.
இவர், சைதாப்பேட்டையில் நின்று வெற்றி பெற்றதால் சைதை துரைசாமி ஆனார். இப்போது கொளத்தூரில் வேட்பாளராக நிற்கிறார். இவர் நிச்சயம் வெற்றி பெற்று கொளத்தூர் துரைசாமி என அழைக்கப்படுவார்.
ஒரு நல்ல வேட்பாளர் உங்களுக்கு கிடைத்து இருக்கிறார். இவருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வைக்க வேண்டும்.
குடும்பத்திலுள்ள கஷ்டம் வீட்டில் உள்ள பெண்களுக்கு தான் தெரியும். ஆனால் கருணாநிதி வீட்டில் இதேபோல் எந்த பிரச்சனையும் இல்லை. நீங்க கொள்ளையடிக்கிற பணத்தில் நான் பங்கு கேட்கவில்லை. மக்களுக்கு நன்மை செய்யுங்க, மக்களை தங்க தட்டில் வைத்து தாலாட்டுங்க என்று தான் கேட்கிறோம். ஆனால் இதை கருணாநிதி கேட்கவில்லை. எனவே தான் கட்சி ஆரம்பித்து கருணாநிதியை கேள்வி கேட்கிறேன். அதை கேட்டால் என்னை கெட்டவன் என்று கருணாநிதி கூறுகிறார். இதையெல்லாம் மக்கள் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். கருணாநிதி என்னை பார்த்து கேட்கிறார். மக்களோடும், தெய்வத்தோடும் கூட்டணி என்று சொல்லிவிட்டு இன்று அ.தி.மு.க.-வோடு கூட்டணி வைத்திருக்கிறாய் என்று, இப்பவும் சொல்கிறேன், தெய்வம் தான் மக்கள் ரூபத்தில் வந்து என்னை கூட்டணி வைக்க வேண்டும் என்றது. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று நான் கூட்டணி வைத்தேன். யார் கூட கூட்டணி வைத்தேன் பெரிதும் மதிக்கின்ற எம்.ஜி.ஆர் கட்சியான அ.தி.மு.க.வோடு தான் கூட்டணி வைத்தேன். உங்ககூட கூட்டணி வைத்திருந்தால் கங்கை நீர் ஆகிவிடுவேனா? உங்க கூட்டமே கூவம் நீர் கூட்டம்.
நான் அ.தி.மு.க.வில் கூட்டணி சேர ஆட்சியில் பங்கும் கேட்கவில்லை, துணை முதல்வர் பதவியும் கேட்கவில்லை, மக்கள் விரோத தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும், அதற்காக தான் கூட்டணி வைத்தேன். கருணாநிதி குடும்ப சேனல்களில் பெண்களுக்கு 33 சதவித இடஒதுக்கீடு பெற தி.மு.க. போராடுகிறது என்று செய்தி வருகிறது. ஆனால் என் மனைவிக்கு தே.மு.தி.க.வில் சீட் கொடுத்தால் விஜயகாந்த் மனைவி, மச்சினன் எல்லாருக்கும் சீட் கொடுக்கிறார் என்று இன்னும் ஒன்றை கருணாநிதி அடிக்கடி சொல்கிறார். (விஜயகாந்த்) பணம் வாங்கிவிட்டார். அதுவும் 500 கோடி, 1000 கோடி என்று கூறுகிறார். இப்படி பொய் சொல்லி, பொய் சொல்லி மக்களை கருணாநிதி ஏமாற்றி வருகிறார்.
அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியை பார்த்து வென்டிலேட்டர் கூட்டணி என்று கருணாநிதி சொல்கிறார். எங்க கூட்டணி வென்டிலேட்டர் கூட்டணி இல்லை. எஸ்கலேட்டர் கூட்டணி நாங்க மேலே போய் கொண்டே இருப்போம். அதை நீங்க கீழே இருந்து பார்த்து கொண்டே இருங்க.
போலீசுக்கு பரியாதை கொடுக்காத இந்த கருணாநிதி தேர்தல் கமிஷனை கண்டிக்கிறார். இவருக்கு நேர்மையாக யாரும் இருக்க கூடாது. அப்படி இருந்தால் பிடிக்காது. அதனால்தான் தேர்தல் கமிஷனர் மீது குற்றச்சாட்டுகிறார்.
கருணாநிதி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து சீட் தர 60 சீட், 63 சீட் என நடத்திய பேரம், தனது குடும்பத்து மக்களை காப்பாற்றத்தான். தமிழக மக்களை காப்பாற்ற அல்ல.
தமிழ், தமிழ் என்று பேசும் இவர், ஒரு இனத்தையே அழித்தவர் தான். இலங்கைத்தமிழர்களை அழித்தவர்.
இலங்கை தமிழர்களுக்கு கடுகளவும் துரோகம் செய்யவில்லை என்கிறார். ஆனால், இவர் கடுகளவு அல்ல, கடலளவு துரோகம் செய்தவர். கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்தவர். இந்திராகாந்தியிடம், தனது குடும்பத்தின் மீது மேற்கொள்ளப்பட இருந்த விசாரணைக்காக கச்சத்தீவை விட்டுக்கொடுத்தவர். தன்னுடைய குடும்பத்து மக்களுக்காக எந்த துரோகத்தையும் செய்வார் கருணாநிதி. குடும்பத்தை காப்பாற்ற எதை வேண்டுமானாலும் செய்வார்.
அவருடைய ஆட்சியை கண்டு இப்போது மக்கள் கொதித்து எழுந்துள்ளனர். தி.மு.க. கூட்டணி ஓரங்கட்ட வேண்டிய கூட்டணி. உங்களுடைய கருப்பு மை தான்(வாக்கு) அவர்களை ஓட வைக்க வேண்டும்.
எகிப்து, லிபியா போன்ற நாடுகளில் மக்கள் புரட்சி வெடித்துள்ளது. அதுபோல் மக்கள் புரட்சி வெடிக்கும். ஏப்ரல் 13ம் தேதி இதற்கான முடிவை மக்கள் தெரிவிப்பார்கள். மக்கள் நன்றாக, நிம்மதியாக வாழ வேண்டுமானால், அ.தி.மு.க.கூட்டணிக்கு வாக்களியுங்கள்.
ஏழை, நடுத்தர மக்கள் அதிகம் உள்ள இந்த கொளத்தூர் பகுதியின் மக்களுக்காக துரைசாமி எப்போதும் கடுமையாக உழைப்பார். உங்களோடு இருந்து பணியாற்றுவார். எனவே, அவருக்கு உங்களது வாக்குகளை இரட்டை இலை சின்னத்தில் அளித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும் என மீண்டும் கேட்டு விடை பெறுகிறேன்.
இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.
இந்த பிரச்சாரத்தின் போது அ.தி.மு.க. தேர்தல் பிரிவு இணை செயலாளர் பாலகங்கா, சுலோச்சனா சம்பத், ஏ.ஏ.எஸ்.முருகன், வெற்றிநகர் மு.சுந்தர், பி.முனுசாமி, தே.மு.தி.க. வடசென்னை மாவட்ட துணை செயலாளர் வசந்தராமன், பகுதி செயலாளர் எஸ்.என்.பாலாஜி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.
திரு.வி.க.நகர் பேருந்து நிலையம் அருகில் பிரச்சார கூட்டத்தை முடித்துக்கொண்டு மூலக்கடையில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசினார். இதற்கிடையில் வழி நெடுகிலும் வாக்கு சேகரித்துக்கொண்டே சென்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.1 day 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 23 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 23 hours ago |
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
27 Apr 2024சென்னை, தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை நேற்றும் உயர்ந்து விற்பனையானது.
-
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
அரசியல் எதிரிகளை பழிவாங்க அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் பதில் மனு
27 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் பதில்மனு தாக்கல் செய்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறைய
-
உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருள் எப்படி கிடைக்கிறது? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
27 Apr 2024மதுரை:உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
-
நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Apr 2024சென்னை, தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்:பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகளை வழங்க உத்தரவு
27 Apr 2024சென்னை:அதிகரிக்கும் வெப்பத்தால் பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இரண்டு குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒருவர் பலி
27 Apr 2024இம்பால், மணிப்பூரில் 2 குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் இளைஞர் பலியான சம்பவத்தில், வன்முறை பரவி விடாமல் தடுப்பதற்காக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளன
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
தமிழகத்தில் இயல்பைவிட 83 சதவீதம் மழை குறைவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் கோடைக்கால பருவமழை இயல்பைவிட 83 சதவீதம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத
-
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள், மாலுமிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு
27 Apr 2024டெக்ரான், ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் மற்றும் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.&n
-
வட தமிழ்நாட்டில் மே 2 தேதிக்கு பிறகு லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் 1-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மே 2-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய வட
-
பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: சென்னை விடுதிகளில் என்.ஐ.ஏ. திடீர் சோதனை
27 Apr 2024சென்னை:பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக சென்னை விடுதிகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
-
அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பதே எங்கள் நோக்கம்: மல்லிகார்ஜூன கார்கே பேட்டி
27 Apr 2024திஸ்பூர், நாட்டின் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதே எங்கள் நோக்கம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.
-
உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மேலும் கால அவகாசம்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
27 Apr 2024சென்னை, அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 4,000 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தே