எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச், - 28 - சோனியா காந்தி அறிவித்த வேட்பாளரை போட்டியிடாமல் தடுக்க ரூ.50 லட்சத்தை தற்போது போட்டியிடும் வேட்பாளரிடம் பெற்று அறிவிக்கப்பட்ட வேட்பாளரிடம் ரூ.10 லட்சம் கொடுத்து போட்டியிடாமல் தடுத்து விட்டதாக தலைமை தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் பெண் கவுன்சிலர் புகார் அளித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து தள்ளாடி தடுமாறி கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் கூட்டணிக்குள் தொகுதி பிரிப்பதில் குத்துவெட்டு, தி.மு.க. ராஜினாமா பின்பு 63 தொகுதிகளுக்கு வேட்பாளர் அறிவிப்பதில் இழுபறி, கோஷ்டிகளுக்கு இடம் பிரிப்பதில் தங்கபாலு, வாசன், பா.சிதம்பரம் கோஷ்டிகளிடையே ஏற்பட்ட மோதலால் வேட்பாளர் அறிவிப்பதில் பெரும் தாமதம் என தொடர்ந்தது. கடைசியில் மோதலில் தங்கபாலு வென்று வாசனுக்கு அடுத்து பெரும் அளவில் தனது கோஷ்டி ஆட்களுக்கு தொகுதிகளை பெற்றுக்கொடுத்தார். அதிலிருந்து பிரச்சினைகள் மேலும் பெரிதானது.
தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டங்கள், மறியல்கள், கொடும்பாவி எரிப்பு, தீக்குளிப்பு போன்ற தொடர்ச்சியான போராட்டங்களை காங்கிரஸ் தொண்டர்கள் தங்கபாலுவிற்கு எதிராக அரங்கேற்றினர்.
மயிலாப்பூர் தொகுதியில் தங்கபாலு தனது மனைவி ஜெயந்திக்கு சீட்டு வாங்கிக் கொடுத்தது எரிகிற தீயில் எண்ணையை வார்த்தது போல் தொண்டர்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக தங்கபாலு வீட்டை முற்றுகையிட்ட காங்கிரஸ் தொண்டர்கள், மகளிர் அணியினர் தங்கபாலு உருவத்திற்கு செருப்பு மாலை போட்டு தீயிட்டு கொளுத்தினர்.
பல தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு எதிர்பாக போட்டி வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்தனர். சில தொகுதிகளில் வேட்பாளர்களை மாற்றவேண்டும் என்று மேலிடத்திற்கு புகார்கள் அனுப்பப்பட்டன. கிருஷ்ணகிரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ஹசீனா சையத் என்பவர் அறிவிக்கப்பட்டார். ஹசீனா சையத்தை கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரசார் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. சோனியாகாந்திக்கு வேட்பாளரை மாற்றவேண்டும் என்று புகார் அனுப்பப்பட்டது. அதன் எதிரொலியாக கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளராக ஹசீனா சையத்திற்கு பதில் மக்பூல்ஜான் என்பவர் அறிவிக்கப்பட்டார்.
நேற்று முன்தினம் வேட்பு மனுதாக்கலின் கடைசி நாள் என்பதால் மக்பூல்ஜான் வேட்பு மனுதாக்கல் செய்யவருவார் என்று காங்கிரசார் எதிர் பார்த்தனர் ஆனால் கடைசி நேரம் வரை மக்பூல்ஜான் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் வேட்பாளர் கடத்தப்பட்டதாக நேற்று பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே நேற்று காங்கிரஸ் கட்சியின் சென்னை மாநகர 155-வது வட்ட கவுன்சிலரும், மகளிர் காங்கிரஸ் தலைவியுமான சாந்தி என்பவர் தனது ஆதரவாளர்களுடன் சென்னை தலைமை செயலகத்திற்கு வந்து தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமாரை சந்தித்து புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் தங்கபாலு மேலிடம் அறிவித்த வேட்பாளரை வேட்பு மனுதாக்கல் செய்யவிடாமல் தடுப்பதற்காக தற்போது உள்ள வேட்பாளரிடம் ரூ.50 லட்சம் லஞ்சமாக பெற்று மேலிடம் அறிவித்த வேட்பாளர் மக்பூல்ஜானிடம் ரூ.10 லட்சத்தை அளித்து மனுதாக்கல் செய்யவிடாமல் தடுத்து விட்டார் என்று உள்ளதாக கூறப்படுகிறது.
ஒரு கட்சியின் தலைவரை லஞ்சம் வாங்கியதாக அக்கட்சியில் உள்ள மகளிர் அணித் தலைவியே தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தது காங்கிரஸ் கட்சியில் மட்டுமே நடக்கும். இந்த புகாரை மறுத்துள்ள தங்கபாலு அவகாசம் இல்லாததால் உரிய ஆவணங்களை தயாரிக்க முடியாத காரணத்தினால் மக்பூல்ஜான் தேர்தலில் போட்டியிட வில்லை என்று கூறியுள்ளார்.
இதற்கு நேர்மாறாக தற்போது உள்ள வேட்பாளர் ஹசீனா சையத் தங்கபாலு மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை தெரிவித்துள்ளார். அத்தனை குழப்பங்களுக்கும் காரணம் தங்கபாலு தான் என்று தெரிவித்துள்ள ஹசீனா சையத் நான் தங்கபாலுவின் ஆதரவாளர் என்பது போலவும், தங்கபாலுவின தொலைக்காட்சியில் அழகு கலை நிகழ்ச்சி நடத்துவதாகவும் பொய்யான செய்திகளை பரப்பியுள்ளார். நான் சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளர். இளைஞர் காங்கிரசில் ஏராளமான உறுப்பினர்களை சேர்த்ததை பார்த்து ராகுல்காந்தி எனக்கு இந்த வாய்ப்பை அளித்தார். அதையும், தங்கபாலு கெடுத்துவிட்டார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
மேற்கண்ட குழப்பத்தினால் தற்போது கிருஷ்ணகிரியின் காங்கிரஸ் வேட்பாளர் யார் என்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டு உள்ளது. மேலிடம் அறிவித்த மக்பூல்ஜான் போட்டியிடாததால் ஹசீனா சையத் காங்கிரஸ் வேட்பாளராக நீடிப்பாரா? அல்லது போட்டி வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்துள்ள 8-க்கும் மேற்பட்ட காங்கிரசாரில் ஒருவரை மேலிடம் அறிவிக்குமா? என்பது கேள்விக்குறி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 12 hours ago |
ஸ்வீட் பால்.4 days 18 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 17 hours ago |
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
-
10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் கருணாநிதி பாடம் அறிமுகம்
01 May 2024சென்னை : 10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த பாடம் அறிமுகமப்படுத்தப்பட்டுள்ளது.
-
இ.வி.எம். வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றி இடி மின்னல் காரணமாக சி.சி.டி.வி-கள் செயலிழப்பு : தென்காசி மாவட்ட கலெக்டர் விளக்கம்
01 May 2024தென்காசி : வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகம் மற்றும் பாதுகாப்பு அறைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழையினால் சிசிடிவி கேமிராக்கள் செயல