முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீரங்கி குண்டு வெடித்து பாக். ராணுவத்தினர் சாவு

வியாழக்கிழமை, 31 மார்ச் 2011      உலகம்
Image Unavailable

பெஷாவர்,மார்ச்.- 31 - தலிபான்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு தயாரான போது பீரங்கி குண்டு வெடித்தில் கர்னல், கேப்டன் உள்ளிட்ட பாகிஸ்தான் படைவீரர்கள் 14 பேர் உயிரிழந்தனர்.  பாகிஸ்தானின் வடமேற்கு பழங்குடியினர் வசிக்கும் கைபர் மாகாணத்தில் தலிபான்களை ஒடுக்குவதற்காக பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே அகாகெல் ராணுவ சோதனை சாவடி மீது 50 க்கும் மேற்பட்ட தலிபான் தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்த துவங்கினர். அவர்கள் மீது திருப்பி தாக்குவதற்காக ராணுவத்தினர் குண்டு ஒன்றை பீரங்கியில் பொருத்திய போது எதிர்பாராவிதமாக அது வெடித்து சிதறியது. இதில் அங்கிருந்த கர்னல், கேப்டன் உள்பட 14 பேர் இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்