எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பரங்குன்றம்,ஏப்.2 - தமிழகத்தில் வரும் 13 ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுவதையொட்டி முறைகேடுகளை தடுக்க தேர்தல் கமிஷனால் அமைக்கப்பட்டுள்ள பல கண்காணிப்பு குழுக்களில் ஒன்றான பறக்கும் படையினர், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடத்திய வாகன சோதனைகளில் பல கோடி ரூபாய்களை பறிமுதல் செய்துள்ளனர். ஆனால் ஆளும் கட்சியினரோ வேட்டி, சேலை, பாத்திரங்கள் மற்றும் பணம் உள்ளிட்டவற்றை தேர்தல் விதிமுறைகளை மீறி வீடு வீடாக கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.
பொதுவாக தமிழகத்தில் தேர்தல் நடக்கிறது என்றால் இரண்டு மாதங்களுக்கு முன்பே அந்தந்த கட்சித் தொண்டர்கள், தங்களது கட்சி சின்னங்களை வரைவதற்காக சுவர்களில் இடம் பிடிக்க தொடங்கி விடுவர். வேட்பாளர் அறிவிப்புக்கு பின்னர் வேட்பாளர் பெயர் சின்னங்களை சுவர்களில் வரைவதில் இருந்து ஓட்டுக்களை சேகரிப்பது, கட்சி கொடிகளை கட்டுவது, டோர் ஸிலிப் வழங்குவது வரை தீவிரமாக சுறுசுறுப்பாக விடிய விடிய தேர்தல் பணிகளில் ஈடுபடுவர். கிராமங்கள் மட்டுமின்றி அனைத்து பகுதிகளும் தீருவிழாக் கோலம் பூண்டிருக்கும். முந்தைய தேர்தலுக்கு நேர்மாறாக நடைபெறவுள்ள தமிழக சட்டசபை பொதுத் தேர்தல் அமைந்துள்ளது. இதற்கு காரணம் தேர்தல் கமிஷன்தான்.
இந்த தேர்தலில் தேர்தல் கமிஷனின் தடாலடி அறிவிப்புக்களால் கட்சியினரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். வாகனங்களில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணம் கொண்டு செல்வதற்கு கமிஷன் கட்டுப்பாடு விதித்துள்ளது. இதற்காக ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் ஒரு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் 24 மணி நேரமும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் ரோந்து சுற்றி வருவர். இவர்கள் வாகனங்களை சோதனையிட்டு கணக்கில் இல்லாத பணம், பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்வது இவர்களது கடமை. பறக்கும் படையினரும் ரோந்து செல்கின்றனர். இதுவரை பல கோடி ரூபாய்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தேர்தல் நேர்மையாக நடக்க இது போன்ற நடவடிக்கைகள் பாராட்டுக்குரியதே.
ஆனால் தி.மு.க., காங்கிரசார், தேர்தல் அலுவலர்களின் கண்களில் மண்ணை தூவி விட்டு பல்வேறு வழிகளில் பணத்தை கொண்டு சேர்த்து விடுகின்றனர். இவ்வாறு சேர்க்கும் பணத்தை வாக்கு வாரியாக பிரித்து அந்தந்த வார்டு பொறுப்பாளர்களிடம் கொடுக்கின்றனர். பணத்தை பெற்றுக் கொண்ட பொறுப்பாளர்களும் மக்களிடம் பணத்தை கொடுக்க தயாராகின்றனர். தினம் இரவு 8 மணிக்கு மேல் மின் சப்ளை நிறுத்தப்படுகிறது. அந்த நேரத்தில் வீடுகளுக்குள் பணம் போடப்படுகிறது.
சில பகுதிகளில் மின்சாரம் தடைபட்ட நேரங்களில் நேரடியாகவே மக்களிடம் பணத்தை கொடுத்து செல்கின்றனர் தி.மு.க.வினர். இந்த விவரம் தெரிந்து அ.தி.மு.க. கூட்டணியினர் போலீசுக்கோ, தேர்தல் அலுவலர்களுக்கோ தகவல் தெரிவிக்கின்றனர். அவர்களும் அங்கு விரைந்து வந்து சோதனையிடுகின்றனர். ஆனால் அதற்குள் தி.மு.க.வினர் பணத்தை பட்டுவாடா செய்து விட்டு சென்று விடுகின்றனர். என்னதான் தேர்தல் ஆணையத்தின் கடுமையான உத்தரவுகளை அதிகாரிகள் பின்பற்றினாலும் வாகனங்களில் செல்லும் பணம், பொருட்களைத்தான் பறிமுதல் செய்ய முடிகிறது. அப்படியிருந்தும் தி.மு.க.வினர் தேர்தல் அதிகாரிகளை ஏமாற்றி விட்டு இரவு நேரங்களில் மக்களுக்கு பணப்பட்டுவாடா செய்கின்றனர். வாகன சோதனையில் ஈடுபட்டு பல கோடி ரூபாய்களை கைப்பற்றும் தேர்தல் அலுவலர்கள் தெருவுக்கு 2 பேரை நியமித்து பணப்பட்டுவாடாவை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்.
மேலும் தேர்தலுக்கு 2 நாட்களுக்கு முன்பு பணப்பட்டுவாடாவை தீவிரப்படுத்த தி.மு.க.வினர் திட்டம் தீட்டியுள்ளனராம். இதையும் தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும். அப்போதுதான் ஜனநாயகம் நிலைக்கும். இல்லையேல் பணநாயகம் வென்று விடும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 12 hours ago |
ஸ்வீட் பால்.4 days 18 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 17 hours ago |
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் கருணாநிதி பாடம் அறிமுகம்
01 May 2024சென்னை : 10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த பாடம் அறிமுகமப்படுத்தப்பட்டுள்ளது.
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.