எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இஸ்லாமாபாத், ஜன. 17 - பாகிஸ்தான் பிரதமராக இருந்த யூசுபர் ரசாக் கிலானி, அதிபர் ஆசிப் அலி ஜர்தாரிக்கு எதிரான ஊழல் வழக்கில் சுவிட்சர்லாந்து அரசிடம் தகவல்களை கோரி கடிதம் எழுதுமாறு பணித்த உச்சநீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்தாத காரணத்தால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 19 ம் தேதி செவ்வாய்க் கிழமையன்று பதவியை இழந்தார்.
இதைத் தொடர்ந்து ராஜா பர்வேஸ் அஸ்ரப் பாகிஸ்தான் பிரதமரானார். அதிபர் ஜர்தாரி மீதான ஊழல் வழக்கு தொடர்பாக புதிதாக விசாரணை தொடங்க கோரி சுவிட்சர்லாந்து அரசுக்கு அஸ்ரப் தலைமையிலான பாகிஸ்தான் அரசு கடிதம் எழுதி அனுப்பியது. இந்நிலையில் எதிர்பாராத திருப்பம் இப்போது ஏற்பட்டுள்ளது. ராஜா பர்வேஸ் அஸ்ரப் முன்பு நீர்வளம் மற்றும் மின்சார துறை மந்திரியாக இருந்த போது மின் திட்டங்களை செயல்படுத்த தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கியதில் கணிசமான தொகையை லஞ்சமாக பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக பாகிஸ்தான் முஸ்லீம் லீக்(கியூ பிரிவு) கட்சி எம்.பி. மக்தூம் பைசல் ஹயாத், உச்சநீதிமன்றத்தில் 2009 ம் ஆண்டு தொடுத்த வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட்டது. இதில் முறைகேடு நடந்துள்ளது உண்மைதான் என்பதை உச்சநீதிமன்றம் கண்டறிந்தது. இது தொடர்பாக அரசு அளித்த எல்லா ஒப்பந்தங்களையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்தது. பிரதமர் ராஜா பர்வேஸ் அஸ்ரப் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தேசிய பொறுப்புடைமை அமைப்புக்கு உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உத்தரவிட்டது.
ஆனால் தேசிய பொறுப்புடைய அமைப்பு அடுத்தகட்ட நடவடிக்கை எதையும் மேற்கொள்ளவில்லை. இதையடுத்து இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இப்திகார் சவுத்ரி தலைமையிலாந மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் தேசிய பொறுப்புடைமை அமைப்பு தலைவவ் பாசி புகாரிக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. பாகிஸ்தான் பிரதமர் ராஜா பார்வேஸ் அஸ்ரப்பையும், வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள மற்ற 15 பேரையும் 24 மணி நேரத்திற்குள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு தேசிய பொறுப்புடைமை அமைப்புக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனால் பாகிஸ்தான் அதிபர் ஜர்தாரிக்கும், பிரதமர் அஸ்ரப்புக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் நடைபெற்று வரும் ஜர்தாரி தலைமையிலான ஆட்சியை தூக்கியெறிய கோரி மதகுரு தாஹிர் உல்காத்ரி தலைமையில் நடத்தப்பட்ட பேரணியில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டார்கள். பாராளுமன்றத்தை கலைக்க வேண்டுமென்று காத்ரி வற்புறுத்தி வருகிறார். உச்சநீதிமன்ற உத்தரவுக்கும், காத்ரியின் போராட்டத்திற்கும் இடையே தொடர்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். அஸ்ரப் குற்றவாளி என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளிப்பதற்கு முன்பாகவே தெக்ரிக் மின்ஹஜ் உல்குரான் என்ற அமைப்பின் தலைவராக காத்ரி தனது உரையில் அஸ்ரப்பை முன்னாள் பிரதமர் என்றும், ஜர்தாரியை முன்னாள் அதிபர் என்றும் குறிப்பிட்டார்.
இதற்கு பின்னனியில் சதி திட்டம் உள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. பாகிஸ்தானில் கொந்தளிப்பு உச்சக்கட்டத்தை எட்டி வருகிறது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு ஆட்சியை கைப்பற்றும் ராணுவ தளபதிகள் முயற்சி செய்யக்கூடும் என்று கூறப்படுகிறது. பாகிஸ்தானில் ராணுவ புரட்சி வெடிக்கும் அபாயம் வலுத்து வருகிறது என்று இஸ்லாமாபாத் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 12 hours ago |
ஸ்வீட் பால்.4 days 18 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 17 hours ago |
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்
-
இ.வி.எம். வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றி இடி மின்னல் காரணமாக சி.சி.டி.வி-கள் செயலிழப்பு : தென்காசி மாவட்ட கலெக்டர் விளக்கம்
01 May 2024தென்காசி : வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகம் மற்றும் பாதுகாப்பு அறைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழையினால் சிசிடிவி கேமிராக்கள் செயல