எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புட்டபர்த்தி,ஏப்.- 25 - ஆன்மீக குரு புட்டபர்த்தி ஸ்ரீசத்ய சாய்பாபா கிட்டத்தட்ட ஒரு மாத உயிர் போராட்டத்திற்கு பிறகு நேற்று காலமானார். அவரது உயிர் நேற்று காலை 7.40 மணியளவில் பிரிந்தது. அவரது உடலுக்கு லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். சாய்பாபாவின் உடல் புதன்கிழமையன்று நல்லடக்கம் செய்யப்படும். ஆந்திர மாநில மக்களால் புட்டபர்த்தி சாய்பாபா என்று அன்போடு அழைக்கப்பட்ட சாய்பாபாவின் உடல் நிலை கடந்த சில நாட்களாகவே மோசமான நிலையை அடைந்தது. அவரது உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக அவரை கவனித்து வந்த டாக்டர்கள் தெரிவித்து வந்தனர்.
இது குறித்து சாய்பாபாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் ஏ.என். சபையா 2 தினங்களுக்கு முன் கூறுகையில்,
சாய்பாபாவுக்கு சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். அவரது கல்லீரல் செயல்படவில்லை என்றும் ரத்த அழுத்தம் தொடர்ந்து குறைவாக இருப்பதாகவும் இது தங்களுக்கு பெரும் கவலையளிப்பதாகவும் டாக்டர் சபையா தெரிவித்திருந்தார். அவரது இதய துடிப்பு குறைந்து வருவதாகவும் டாக்டர் சபையா தெரிவித்திருந்தார்.
மேலும் சாய்பாபாவின் உடல் நிலை தேற வாய்ப்பே இல்லை என்றும் டாக்டர்கள் கூறினர். ஆனால் அவரது பக்தர்களோ, சாய்பாபா நோயில் இருந்து மீண்டு வருவார் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தனர். இந்த நிலையில் ஆன்மீக குரு சாய்பாபா, நேற்று காலையில் காலமானார். அவரது உயிர் காலை 7.40 மணியளவில் பிரிந்ததாக டாக்டர் சபையா தெரிவித்தார்.
உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்களை தன்பால் ஈர்த்தவர் சாய்பாபா. கடந்த 28 நாட்களாக இவர் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். குறிப்பாக, இருதயம் மற்றும் நுரையீரல் பாதிக்கப்பட்டதால் இவரது உடலின் முக்கிய உறுப்புக்கள் செயலிழந்தன. இதையடுத்து ஒரு மாத போராட்டத்திற்கு பிறகு நேற்று காலை இவரது உயிர் பிரிந்தது.
உயிர் பிரிந்தது:
ஆந்திர மாநிலத்தில் அனந்தபூர் மாவட்டத்தில் இவரால் உருவாக்கப்பட்ட மருத்துவமனை ஸ்ரீசத்யசாய் உயர் மருத்துவ விஞ்ஞான மையம் என்பதாகும். இந்த மருத்துவமனையிலேயே நேற்று சாய்பாபாவின் உயிர் பிரிந்தது. சாய்பாபாவின் மரணம் பற்றிய தகவலை இந்த மையத்தின் இயக்குனரும், பிரபல டாக்டருமான சபையா அதிகாரபூர்வமாக தெரிவித்தார். சாய்பாபா உடலால் தற்போது நம்மிடையே இல்லை. அவரது பக்தர்கள் மருத்துவமனையை நோக்கி திரண்டு வர வேண்டாம். மிகுந்த பொறுமையும், அமைதியும் காக்க வேண்டும். முறைப்படியான இடத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தலாம் என்று டாக்டர் சபையா கேட்டுக் கொண்டார். சாய்பாபாவின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரு நாட்கள் சாய் குல்வந்த் ஹாலில் வைக்கப்படும். பின்னர் புதன் கிழமையன்று அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும்.
வாழ்க்கை வரலாறு:
உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்களை கொண்ட சத்ய சாய்பாபா, 1926 ம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ம் தேதி ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் பிறந்தார். இவரது தாயார் பெயர் ஈஸ்வரம்மா. தந்தை பெயர் பெத்த வெங்கண்ண ராஜூ. நான்காவது குழந்தையாக பிறந்த பாபாவின் இயற்பெயர் ரத்னாகரம் சத்ய நாராயண ராஜூ என்பதாகும். சிறு வயதில் இருந்தே சாய்பாபாவுக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு இருந்து வந்தது. பின்னர் 1940 ல் இந்த ஈடுபாடு அதிகரித்தது. 1940 ம் ஆண்டு அக்டோபர் 20 ம் தேதி சாய்பாபா சன்னியாச வாழ்க்கைக்கு மாறினார்.
நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து பல இலவச மருத்துவமனைகளை துவக்கி வைத்தவர் சாய்பாபா. மருத்துவம், கல்வி, கிராம முன்னேற்றம் போன்ற பல துறைகளில் நாட்டு மக்களுக்கு சேவை ஆற்றியவர் சாய்பாபா. சென்னைக்கு குடிநீர் வழங்கும் திட்டத்திற்காக ரூ. 200 கோடி கொடுத்தவர் சாய்பாபா. இப்படியாக மக்கள் சேவையாற்றியதால் இவருக்கு உலகம் முழுவதும் நன் மதிப்பும் மரியாதையும் இருந்து வருகிறது. சாய்பாபாவின் இறுதி சடங்கிற்கான பொறுப்பை ஆந்திர அரசு ஏற்றுள்ளது. அம்மாநிலத்தில் 3 நாள் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைவர்கள் இரங்கல்:
சாய்பாபாவின் மறைவிற்கு ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், துணை ஜனாதிபதி அன்சாரி, பிரதமர் மன்மோகன்சிங், பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி, மத்திய அமைச்சர்கள், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் கருணாநிதி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், லட்சக்கணக்கான மக்கள் சாய்பாபாவின் நன்னெறிகளை பின்பற்றி ஊக்கமடைந்ததாக தெரிவித்தார்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், சாய்பாபாவின் மறைவு மனித குலத்திற்கு ஏற்பட்ட ஒரு மாபெரும் இழப்பு என்று கூறியுள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா விடுத்துள்ள அறிக்கையில், சாய்பாபாவின் மறைவு ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பு என்று கூறியுள்ளார். மறைந்த சத்ய சாய்பாபா சென்னையில் 1981 ம் ஆண்டு சுந்தரம் மந்திர் என்ற அமைப்பை நிறுவினார். இங்கு சாய்பாபா மறைந்ததையடுத்து நேற்று பஜனை பாடல்கள் பாடப்பட்டன.
பலத்த பாதுகாப்பு:
சாய்பாபா மறைவையடுத்து ஆந்திர மாநிலம் முழுவதும் போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது. அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான மக்கள் ஆந்திராவை நோக்கி வரக்கூடும் என்பதால் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. புட்டபர்த்தியில் நேற்று கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் கூறுகின்றன. மேலும் வேறு எந்த நிறுவனங்களுமே திறக்கப்படவில்லை. ஆந்திர மாநிலம் தற்போது சோகக் கடலில் மூழ்கியிருக்கிறது. அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஏற்கனவே முதல்வர் கிரண்குமார் ரெட்டி ஆலோசனை நடத்தியிருந்தார். நேற்றும் அவர் ஆலோசனை நடத்தினார்.
அடுத்து ஆளப் போவது யார்?
ஆன்மீக குரு என்றும் பகவான் என்றும் அழைக்கப்படும் ஸ்ரீசத்ய சாய்பாபாவுக்கு 166 நாடுகளில் 3 கோடியே 70 லட்சம் பக்தர்கள் இருக்கிறார்கள். பகவானுடைய அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துக்களின் மதிப்பு குறைந்தபட்சம் 35 ஆயிரம் கோடி முதல் 40 ஆயிரம் கோடி வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி, கோடிக்கணக்கான ரூபாய்கள் அறக்கட்டளையின் வெவ்வேறு அமைப்புகளிடம் ரொக்கமாக கையிருப்பில் உள்ளன. பாபாவுக்கு பிறகு தங்களுக்கு நல்வழி காட்ட யார்? அவர் தொடங்கி நடத்தி வந்த அறப்பணிகளின் நிலை என்னவாகும் என்ற கவலை தற்போது அவருடைய பக்தர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
புட்டபர்த்தியிலேயே பாபாவின் உறவினர்கள் பலர் வசிக்கின்றனர். ஆனால் அவர்களுக்கும் அறக்கட்டளைகளின் நிர்வாகிகளுக்கும் இடையே பரஸ்பரம் நம்பிக்கை இல்லையாம். அவ நம்பிக்கைதான் நிலவுகிறதாம். 1964 ல் சத்யசாயி மைய அறக்கட்டளை நிறுவப்பட்டது. பாபாவே இதன் தலைவராக இருந்தார். இதன் நிர்வாக குழு 2010 ல்தான் திருத்தி அமைக்கப்பட்டது. அறக்கட்டளை நிர்வாகிகளுக்கும், பாபாவின் உறவினர்களுக்கும் இடையே நல்ல ஒரு புரிந்துணர்வு சுத்தமாக இல்லை. எனவே இந்த மிகப் பெரிய ஆன்மீக சாம்ராஜ்யத்தை அடுத்து ஆளப் போவது யார் என்ற மாபெரும் கேள்விக்கு யாருக்கும் விடை தெரியவில்லை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 12 hours ago |
ஸ்வீட் பால்.4 days 18 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 17 hours ago |
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
-
10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் கருணாநிதி பாடம் அறிமுகம்
01 May 2024சென்னை : 10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த பாடம் அறிமுகமப்படுத்தப்பட்டுள்ளது.
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்