எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, மார்ச். 21 - காங்கிரஸ் கூட்டணி அரசில் இருந்து தி.மு.க வெளியேறியதன் பின்னணியில் கடந்த இரு நாட்களில் நடந்த விறுவிறுப்பான விவகாரங்கள் தற்போது வெளியில் வர ஆரம்பித்துள்ளன. தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி என்பது கருணாநிதி, சோனியா ஆகியோரால் உருவாக்கப்பட்டு, பரஸ்பர நம்பிக்கையோடு நீடித்த கூட்டணி. முதல் 6 ஆண்டுகள் மிக மிக நெருக்கமான கூட்டணியாகத்தான் இது இருந்தது. எப்போது 2 ஜி ஊழல் விவகாரம் வெளியே வந்ததோ அப்போது தான் இந்தக் கட்சிகளிடையே முதலில் விரிசல் விழுந்தது.
அடுத்து ராகுல் காந்தி எப்போது காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஆனாரோ, அன்று முதல் இந்தக் கூட்டணியின் விரிசல் அளவு அதிகரித்துக் கொண்டே வந்தது. கருணாநிதியை ராகுல் காந்தி ஒரு பொருட்டாகவே மதிக்காத நிலை இருந்து வந்தது. அதிலும் ராகுல் காங்கிரஸ் துணைத் தலைவரான பிறகு, இந்தக் கூட்டணியே வேண்டாம் என்ற முடிவுக்கு கருணாநிதி வந்து விட்டாராம். சோனியாவைப் போல கூட்டணிக் கட்சிகளை மதிக்கவோ, அவர்களுடன் ஆலோசிக்கவோ தெரியாத பிள்ளை ராகுல் என்று உணர்ந்தாராம் கருணாநிதி.
தன்னைச் சுற்றியுள்ள அதிமேதாவிக் கூட்டத்தை நம்பி அரசியல் நடத்தும் அவருக்கு அடுத்தடுத்து பல மாநிலங்களில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் பலத்த தோல்வி ஏற்பட்டது. ஆனாலும், ராகுல் தான் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணிகளையும் வேட்பாளர்களையும் முடிவு செய்யப் போகிறார்.
ராகுல், கருணாநிதி ராசி ஆரம்பத்தில் இருந்தே சரியில்லாத நிலையில், அவருடன் இணைந்து அரசியலைத் தொடர கருணாநிதி விரும்பவில்லையாம். மேலும் கருணாநிதியின் கூரிய மூளைக்கு, அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தேசிய அளவில் மரண அடி வாங்கப் போவதும் தெரிந்து விட்டது.
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது இந்தியாவே ஒளிர்கிறது என்ற போலியான பிரமையை பா.ஜ.க ஏற்படுத்தி வைத்திருந்த நேரத்தில், காங்கிரசுக்கே ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கை இல்லாத நிலையில், பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறிக் காட்டியவர் கருணாநிதி. காரணம், அடுத்தத் தேர்தலில் பா.ஜ.க. மூழ்கப் போகிறது என்பதை அவர் முன்கூட்டியே உணர்ந்திருந்தாராம். அவர் நினைத்த மாதிரியே பா.ஜ.க அந்தத் தேர்தலில் மரண அடி வாங்கியது,
இப்போதும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் காங்கிரஸ் மீது நாட்டு மக்களிடையே கடும் அதிருப்தி பரவியுள்ளது. அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு 120 இடங்கள் கிடைத்தாலே பெரிய விஷயம் தான். இதனால் காங்கிரசோடு கூட்டணியைத் தொடர்வது தற்கொலைக்கு சமம் என்பதை கருணாநிதி உணர்ந்து கொண்டு விட்டார். இதற்கு இலங்கை விவகாரத்தை சமயம் பார்த்து கையில் எடுத்தார். உலக அளவில் இலங்கை விவகாரம் பெரிதான நிலையில், தமிழகத்திலும் இந்தப் பிரச்சனைக்கு நீண்ட நாட்களுக்குப் பின் ஆதரவு கிடைக்க ஆரம்பித்துள்ளதையும் மனதில் வைத்து, இதுவே சரியான சமயம் என்ற முடிவுக்கு கருணாநிதி வந்து அஸ்திரத்தை ஏவி விட்டார்.
டெல்லிக்கு ஒரு போனைப் போட்ட அவர், அமெரிக்கத் தீர்மானத்தில் இந்தியா திருத்தங்கள் செய்ய வேண்டும், தீர்மானத்தை ஆதரித்து ஓட்டு போட்டே ஆக வேண்டும், இல்லாவிட்டால் கூட்டணியில் இருக்க மாட்டேன் என்று கறாராகக் கூற, பதறிப் போன காங்கிரஸ் தலைமை அவரை சமாதானப்படுத்த மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஏ.கே. அந்தோணி, குலாம் நபி ஆசாத் ஆகியோரை அனுப்பியது.
அவர்களிடம் இலங்கை அரசு இனப் படுகொலையில் ்ஈடுபட்டது, இலங்கை அரசின் போர்க் குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை போன்ற வாசகங்களுடன் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கருணாநிதி புதிய குண்டைப் போடவே, மத்திய அமைச்சர்களின் முகம் வெளிறிப் போனதாம். நாடாளுமன்றத்திலும் தீர்மானமா, நீங்க திடீர் திடீர்னு நிலையை மாற்றிக் கொள்கிறீர்கள். என்று குலாம் நபி ஆசாத்தும் ப.சிதம்பரமும் கூற, கடுப்பாகிப் போனாராம் கருணாநிதி.
நான் நிலை மாறுகிறேனா. 9 வருடமா உங்களை தூக்கி சுமக்குறேன், இந்த 9 வருடத்தில் தி.மு.க சந்தித்த இழப்பு போல் என் வாழ்க்கையில் எப்போதுமே சந்தித்ததில்லை. எம்.ஜி.ஆர். ஆட்சியில் இருந்த காலத்தில்கூட தி.மு.க வுக்கு இவ்வளவு செல்வாக்கு இழப்பு ஏற்பட்டதில்லை, நானும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்துட்டேன், எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்துறீங்க என்று பொங்கிய கருணாநிதி, நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வருவதா இருந்தா மேலே பேசுவோம். போயிட்டு வாங்க என்று கூறிவிட்டார்.
நாடாளுமன்றத்தில் தீர்மானம் குறித்து சோனியா காந்தி, ராகுல் காந்திகிட்டே ஆலோசித்துவிட்டு பதில் சொல்றோம், அதே நேரத்தில் அமெரிக்கத் தீர்மானத்தில் திருத்தம் செய்யாவிட்டாலும், இலங்கை அரசு இனப்படுகொலையில் ஈ்டுபட்டது போன்ற வாசகங்கள் இல்லாவிட்டாலும், இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அமெரிக்காவின் தீர்மானம் இருக்கும் என்று உறுதி அளித்தார்களாம் மத்திய மந்திரிகள்.
இந்த உறுதியை நம்பி கருணாநிதி காத்திருக்க, செவ்வாய்க் கிழமை அதிகாலை ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்காவின் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அந்தத் தீர்மானத்தில் இலங்கை அரசைக் கண்டிக்கும் வகையில் எந்த வாசகமும் இடம் பெறவில்லை என்ற தகவல் ஆம்னெஸ்டி இன்டர்நேசனல் மூலம் கருணாநிதிக்குக் கிடைத்துள்ளது.
அதில், இலங்கை அரசை வலியுறுத்துகிறோம் என்ற வாசகத்துக்குப் பதிலாக இலங்கை அரசுக்கு ஆலோசனை கூறுகிறோம் என்ற வகையிலேதான் வாசகங்கள் இருக்கவே, நம்ப வைத்து கழுத்தை அறுத்துட்டாங்க என்று கூறியபடி, மூத்த திமுக தலைவர்களையும் டெசோ தலைவர்களையும் அழைத்து உடனடியாக ஆலோசனை நடத்தியுள்ளார் கருணாநிதி.
இனியும் இந்தக் கூட்டணியிலே நீடிக்கனுமா என்ற கருணாநிதியின் கேள்விக்கு, வேண்டாம் என்பதே அனைவரின் பதிலாகவும் இருந்துள்ளது. குறிப்பாக ஸ்டாலின் இந்த விஷயத்தில், மிகத் தீவிரமாக இருந்துள்ளார். இதனையடுத்தே கருணாநிதி தனது விலகல் முடிவை அறிவித்தார் என்கிறது தி.மு.க டெசோ வட்டாரங்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 12 hours ago |
ஸ்வீட் பால்.4 days 18 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 17 hours ago |
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்
-
10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் கருணாநிதி பாடம் அறிமுகம்
01 May 2024சென்னை : 10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த பாடம் அறிமுகமப்படுத்தப்பட்டுள்ளது.