எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூலை.10 - தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினரின் தாக்குதல்களுக்கு இந்திய அரசு எதிர்ப்பு தெரிவிக்காதது நிலைமையை மேலும் மோசமாக்குகிறது என்று முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன்சிங்குக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார். முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன்சிங்குக்கு எழுதிய கடிதத்தின் விபரம் வருமாறு:-
இலங்கை கடற்படையினர் இந்திய மீனவர்கள் 21 பேரை பகிரங்கமாகவும் சட்டவிரோதமாகவும் கடத்திச் சென்று காவலில் வைத்துள்ள மற்றுமொரு கொடிய செயல் குறித்து உங்கள் கவனத்திற்கு நான் கொண்டு வர விழைகிறேன். இராமநாதபுர மாவட்டத்தைச் சேர்ந்த இந்த 21 மீனவர்கள் 6.7.2013 அன்று இரவு IND/TN/10/MM/474, IND/TN/10/MM/302, IND/TN/11/MM/117,IND/TN/11/MM/259, IND/TN/10/MM/008 ஆகிய பதிவெண்கள் கொண்ட ஐந்து படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற போது, நடுக்கடலில் அவர்கள் அனைவரும் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். அவர்கள் 19.7.2013 ஆம் நாள் வரையில் விசாரணை காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.
இலங்கை கடற்படையினர், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏதுமறியா மீனவர்களை நடுக்கடலில் எவ்வித காரணமுமின்றி தாக்குவது, கடத்திச் செல்வது மற்றும் சட்டவிரோதமாக தடுப்புக் காவலில் வைப்பது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் என்பது பற்றி நான் தங்களுக்கு மீண்டும் மீண்டும் கடிதம் எழுதிவந்துள்ளேன். 5.6.2013 அன்று 10 படகுகளில் சென்ற 49 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பதை நீங்கள் அறிவீர்கள். சட்டவிரோமாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு ஏறக்குறைய ஒரு மாதத்திற்குப் பின்னர் இவர்களில் 24 மீனவர்கள் 2.7.2013 அன்றும், எஞ்சியிருந்த 25 மீனவர்கள் 3,7,2013 அன்றும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இரண்டு படகுகளில் சென்ற மற்றுமொரு 8 மீனவர்கள் 15.6.2013 அன்று கைது செய்யப்பட்டு, இலங்கை சிறையில் இந்நாள் வரையிலும் வாடிவருகின்றனர். இவை தவிர, ராமேஸ்வரத்தை சேர்ந்த 5 மீனவர்கள் பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு உட்படுத்தப்பட்டு, 29.11.2011 ஆம் நாளிலிருந்து இலங்கை நீதித்துறை காவலில் இருந்து வருகின்றனர். இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் ஒரு பகுதியாக கச்சத்தீவை எனது அரசு எப்போதும் கோரி வரும் இச்சூழலில், அவர்களை கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கச் செல்லாமல் தடுக்கும் வகையில் அச்சுறுத்தும் நோக்கில் ஏதுமறியாத, ஆயுதமற்ற இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர், இத்தகைய கடுமையான வன்முறை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இத்தகைய காரணமற்ற இலங்கை கடற்படையினரின் வன்முறை செயல்களுக்கு துரதிருஷ்டவசமாக இந்திய அரசு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் வெறுமனே இருந்து வருகிறது. இது நிலைமையை மேலும் மோசமாக்குவதோடு, தமிழ்நாட்டில் மீனவ சமுதாயத்திற்கிடையே அதிக பதற்ற நிலையை உருவாக்கும்.
எனது 17.6.2013 ஆம் நாளிட்ட கடிதத்தில் ஏற்கெனவே நான் சுட்டிக்காட்டியுள்ளவாறு, வெளிவிவகாரத் துறை அமைச்சகம் தொடர்ந்து எதையும் பொருட்படுத்தாமல், அக்கறையின்று மெளனம் சாதித்து வருகிறது. வேதனையான இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் பொருட்டு இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எந்தவொரு முயற்சியும் எடுப்பதாகத் தெரியவில்லை. இலங்கை கடற்படையினர், தமிழ்நாடு மீனவர்களை அதிலும் குறிப்பாக அண்மைக் காலங்களில் கைது செய்யும் இத்தகைய எண்ணற்ற நேர்வுகளுக்கு மத்.ய அரசின் உயர் நிலை அளவில் வலுவான, ஒருங்கிணைந்த விவேகமான பதிலடி கொடுப்பது அவசியமாகும். எனவே, இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் ஏதுமறியா இந்திய மீனவர்கள் மீது காரணமின்றி தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களை நிறுத்துவதற்கு புதுடில்லியிலுள்ள இலங்கை தூதரக அதிகாரியை அழைத்து அவர் வாயிலாக இலங்கை அரசுக்கு வலுவாலன ஆலோசனை வழங்குமாறு நான் உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்நாடு மீனவர்களை, காவலிலிருந்து உடனடியாக விடுவிக்க இலங்கை அரசை வலியுறுத்துமாறும் நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கடிதத்தில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 12 hours ago |
ஸ்வீட் பால்.4 days 18 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 17 hours ago |
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
-
10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் கருணாநிதி பாடம் அறிமுகம்
01 May 2024சென்னை : 10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த பாடம் அறிமுகமப்படுத்தப்பட்டுள்ளது.
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்