எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாமக்கல் ஜூலை.26 - தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் அவர்கள், மாண்புமிகு தமிழக தொழில்துறை அமைச்சர் திரு.பி.தங்கமணி ஆகியோர் நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் ஐயப்பன் கோயில் பின்புறம் காந்தி நகரில் உள்ள நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்க நியாயவிலைக்கடை, வகுரம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நியாயவிலைக்கடை, வசந்தபுரம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கு, நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க மண்ணெண்ணெய் வழங்கும் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது முதன்மைச் செயலர் உணவு பொருள் வழங்கல் துறை எம்.பி. நிர்மலா, உணவு பொருள் வழங்கல் துறை ஆணையாளர் ஸ்வரன்சிங் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக நிர்வாக இயக்குநர் எம். சந்திரசேகரன், மாவட்ட ஆட்சித்தலைவர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆய்வின்போது நியாயவிலைக்கடைகளில் பொதுமக்களுக்கு சீரான முறையில் தரமான அரிசி வழங்கப்படுகிறதா, அரிசி, பருப்பு, பாமாயில் போன்ற அத்தியாவசியப்பொருட்கள் இருப்பில் உள்ளதா என்பதையும், ஆய்வு செய்ததோடு அங்குள்ள பொதுமக்களிடம் நியாயவிலைக்கடைகளில் தரமான அரிசி நல்ல முறையில் வழங்கப்படுகிறதா என்பதை உணவுத்துறை அமைச்சர் கேட்டறிந்தார். மேலும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கிடங்கில் ஆய்வு செய்தபோது அங்கு அரிசி, கோதுமை சர்க்கரை, துவரம்பருப்பு, உளுந்தம்பருப்பு, பாமாயில் ஆகியவை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதா என்பதையும், கிடங்கிலிருந்து நியாயவிலைக்கடைகளுக்கு லாரிகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பும் முறை குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர். கிடங்கிலிருந்து நியாயவிலைக்கடைகளுக்கு கொண்டு செல்லும் அரிசி மூட்டைகளின் எடையும் சரிபார்க்கப்பட்டது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுவிநியோகத் திட்ட செயல்பாடுகள் குறித்த ஆய்வுகூட்டத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் பேசியதாவது:
தமிழக முதலமைச்சர் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் 1 கோடி 84 இலட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசி வழங்கும் ஒப்பற்ற திட்டத்தை வழங்கி வருகிறார். மாதம் ஒன்றுக்கு 3.16 இலட்சம் மெ.டன் தரமான அரிசி விலையில்லாமல் வழங்கப்படுகிறது. மேலும் 1 கிலோ துவரம்பருப்பு ரூ.30க்கும் 1 கிலோ உளுந்தம்பருப்பு ரூ.30க்கும், பாமாயில் 1 லிட்டர் ரூ.25-க்கும், மானிய விலையில் வழங்கப்படுகிறது. இதற்காக ரூ.4,900 கோடி மானியமாக வழங்கியுள்ளார்கள். இதனடிப்படையில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ஒன்றுக்கு ரூ.291 அரசு மானியமாக வழங்கப்படுகிறது. வெளிச்சந்தையில் அரிசி விலையை கட்டுப்படுத்த ஒரு கிலோ அரிசி ரூ.20 -க்கு வழங்கும் திட்டத்தின் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் 279 கூட்டுறவு மற்றும் அமுதம் நியாயவிலை அங்காடிகளில் இன்றுவரை 30,600 குவிண்டால் தரமான அரிசி விற்பனை செய்யப்பட்டுள்ளது. தமிழக மக்களுக்கு முழுமையான உணவு பாதுகாப்பை அம்மா அளித்து வருகிறார். அதன் காரணமாக மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு விளக்கு அளிக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறார்கள்.
மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்கி வந்த மண்ணெண்ணெய் ஒதுக்கீடு தற்போது 29,060 கிலோ லிட்டராக குறைந்துள்ளது. தமிழக முதல்வர் தமிழகத்தின் முழுத் தேவையான 65,140 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு செய்யுமாறு மத்திய அரசை வலியுறுத்தி வருகிறார். தமிழக முதலமைச்சர் புதுடெல்லியில் நடைபெற்ற முதலமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும்போது அத்தியாவசியப் பொருட்கள் கடத்தப்படுவது இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். தமிழகத்தில் எடுத்த நடவடிக்கையின் காரணமாக உணவு பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கையின் மூலம் 19,143 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 11,655 நபர்கள் கைது செய்யப்பட்டு அதில் 418 நபர்கள் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 702 முழுநேர நியாயவிலைக்கடைகள் 197 பகுதி நேர நியாயவிலைக்கடைகள் மூலம் மாதந்தோறும் 4.98,847 குடும்ப அட்டைதாரர்களுக்கு சராசரியாக 5800 மெ.டன் விலையில்லா அரிசி வழங்கப்பட்டுள்ளது. நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்குகளிலிருந்து அனுப்ப்பபடும் அரிசி தரம் தரக்கட்டுப்பாடு அலுவலர்களால் தீவர பரிசோதனைக்கு பின்னரே அங்காடிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் தரமற்ற அரிசியை கிடங்கிலிருந்து அனுப்பக் கூடாது. விலையில்லா அரிசி சரியான எடையில் பொதுமக்களுக்கு வழங்கிட வேண்டும் எனவும், பொதுவிநியோகத்திட்டத்தை செயல்படுத்துவதில் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ்டுபடவேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் உணவு பொருள் கடத்தல் குற்றப்புலனாய்வுத்துறை, காவல் கண்காணிப்பாளர் ஆசியம்மாள் , சட்டமன்ற உறுப்பினர்கள் கே.பி.பி.பாஸ்கர்,உ.தனியரசு, சாந்தி, மாவட்ட வருவாய் அலுவலர் கோ.செங்குட்டுவன், இணைப்பதிவாளர் கூட்டுறவு சங்கம் முத்துகுமாரசாமி, மாவட்ட வழங்கல் அலுவலர் சுந்தர்ராஜ் உட்பட அரசுத்துறை அலுவலர்கள், கூட்டுறவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.1 day 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 23 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 23 hours ago |
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
27 Apr 2024சென்னை, தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை நேற்றும் உயர்ந்து விற்பனையானது.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
அரசியல் எதிரிகளை பழிவாங்க அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் பதில் மனு
27 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் பதில்மனு தாக்கல் செய்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறைய
-
உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருள் எப்படி கிடைக்கிறது? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
27 Apr 2024மதுரை:உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
-
நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Apr 2024சென்னை, தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்:பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகளை வழங்க உத்தரவு
27 Apr 2024சென்னை:அதிகரிக்கும் வெப்பத்தால் பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இரண்டு குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒருவர் பலி
27 Apr 2024இம்பால், மணிப்பூரில் 2 குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் இளைஞர் பலியான சம்பவத்தில், வன்முறை பரவி விடாமல் தடுப்பதற்காக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளன
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
தமிழகத்தில் இயல்பைவிட 83 சதவீதம் மழை குறைவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் கோடைக்கால பருவமழை இயல்பைவிட 83 சதவீதம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத
-
வட தமிழ்நாட்டில் மே 2 தேதிக்கு பிறகு லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் 1-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மே 2-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய வட
-
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள், மாலுமிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு
27 Apr 2024டெக்ரான், ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் மற்றும் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.&n