எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை, செப் 29 - தமிழ்நாட்டில் அண்ணா விரும்பிய அறிவுப் புரட்சியை ஏற்படுத்தி தந்தவர் தழிழக முதல்வர் ஜெயலலிதா என்று தமிழ்நாடு டெல்லி சிறப்பு பிரதிநிதி எஸ்.டி.கே.ஜக்கையன் மதுரை புறநகர் மாவட்டம் உசிலம்பட்டியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசினார்.
அ.தி.மு.க பொதுச்செயலாளர் ,தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின்ஆணைக்கிணங்க மதுரை புறநகர் மாவட்டம் உசிலம்பட்டி நகர் அ.தி.மு.க சார்பாக பேரறிஞர் அண்ணா அவர்களின் 105-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் உசிலம்பட்டியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு உசிலம்பட்டி நகர் கழக செயலாளர் கே. ஆர். ராஜா தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் தழிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி எஸ்.டி.கே.ஜக்கையன் சிறப்புரையாற்றினார் மற்றும் இக்கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர்பட்டணம் (எ) நைனா முகமது, மாவட்ட கழகச் செயலாளர் ம. முத்துராமலிங்கம்,எம்.எல்.ஏ முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் க. தவசி,மகேந்திரன்,பாண்டியம்மாள்,தொகுதி கழகச்செயலாளர் நீதிபதி,ஒன்றியக்கழக செயலாளர் கே.சி. மாயன்,மாவட்ட கழக நிர்வாகிகள் பஞ்சவர்ணம்,பி. அய்யப்பன்,யு.பி.ஆர்.பஞ்சம்மாள்,மாவட்ட அணி நிர்வாகிகள் வேலுச்சாமி,போத்திராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் எஸ்.டி.கே.ஜக்கையன் பேசியதாவது,
பேரறிஞர் பெருந்தகை அண்ணாஅவர்களின் 105-வது பிறந்த நாள் விழா பட்டி தொட்டி எங்கும் அவரின் புகழை பறை சாற்றும் வண்ணம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணைக்கிணங்க கொண்டாடப்பட்டு வருகின்றது. பேரறிஞர் அண்ணாஅவர்கள் சிறந்த பேச்சாளராகவும், சிறந்த எழுத்தாளராகவும், மனிதநேய பண்பாளராகவும், இது போன்ற பன்முக பரிமாணம் கொண்ட தலைவராக விளங்கியவர்.தமிழ்நாடும் தமிழ் மக்களும் தமிழ் மொழியும் பாதிப்புக்குள்ளான சமயத்தில் தமிழ்நாட்டையும் தமிழ்மக்களையும் விழிப்படையச் செய்து தமிழ் மக்களுக்கு உரிய உயர்வையும் தமிழ்மொழிக்கு வரவிருந்த ஆபத்திலிருந்து காப்பாற்றியதுடன் தமிழ்மொழியின் புகழை உலகம் முழுவதும் பரவும் வகை செய்து அயராது பாடுபட்டவர் நம் அண்ணா அவர்கள்.
காங்கிரஸ் இயக்கம் தமிழகத்தில் ஆண்டபோது மிட்டாமிராசு தான் ஆட்சி பொறுப்பில் வரும் சூழ்நிலை இருந்தது. அதையெல்லாம் மாற்றி ஏழை எளிய சாமானியர்கள் எல்லாம் கோட்டை கொத்தளத்தில் அமர வைத்து அழகு பார்த்தவர் தான் பேரறிஞர் அண்ணா அவர்கள். அதேபோல் அரசியல் இயக்கத்தை ஒரு குடும்ப உறவாக அதாவது தலைவர், தொண்டன் என்ற நிலையை மாற்றி அண்ணன் தம்பி என்ற உறவை நிலை நாட்டினார். அண்ணா அவர்கள் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற பின் சட்டமன்றத்தில் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்து வரலாற்றுத் தீர்மானத்தை நிறைவேற்றினார்.
இப்படிப்பட்ட இயக்கத்தை குறுக்கு வழியில் வந்து தன் சுயநலத்திற்காக கருணாநிதி சீரழித்து அண்ணா புகழை அழித்து வந்ததை கண்டு புரட்சித்தலைவர் அவர்கள் அண்ணாவின் கொள்கைகளை காப்பாற்ற அண்ணா பெயரில் கட்சியை ஆரம்பித்து அண்ணாவின் புகழை பரப்பினார்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் நாடாளுமன்றத்தில் பேசியதை கண்டு அப்போத பாரதப்பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு அப்படியே மெய் சிலிர்த்து அண்ணாவை பாராட்டினார். அதேபோல் அம்மா அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராகி பேரறிஞர் அண்ணா அமர்ந்த அதே இருக்கையில் அமர்ந்து தன்னுடைய கன்னிப்பேச்சால் அவையில் இருந்த அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தார். அப்போது பாரதப்பிரதமராக இருந்த இந்திராகாந்தி அவர்கள் இந்த பேச்சை போல் நான் எங்கும் கேட்டதில்லை என்று அம்மாவை பாராட்டினார். இப்படி நாடாளுமன்றத்தில் அறிஞர் அண்ணாவும், புரட்சித்தலைவி அம்மாவும் தங்களின் பேச்சுதிறமையால் தமிழகத்திற்கு புகழை சேர்த்தனர். ஆனால் இன்று நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சராக இருந்து எந்த கேள்விக்கும் பதில் பேச தெரியாமல் வாய்மூடி மவுனியாக இருந்து மற்றவர்கள் எள்ளி நகையாடும் வகையில் தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய களங்கத்தை தந்தவர் தான் கருணாநிதி மகன் அழகிரி.அண்ணா அவர்களின் குடும்பம் வறுமையில் வாடுவதை கண்டு அம்மா அவர்கள் அண்ணாவின் துணைவியார் ராணி அம்மாள் அவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியது மட்டுமல்லாமல் அண்ணாவின் நூல்களை நாட்டுடைமையாக்கி அதன்மூலம் கிடைத்த 75 இலட்சம் ரூபாயை அண்ணாவின் துணைவியாரிடம் வழங்கினார். ஆனால் கருணாநிதியோ தன்னுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு கூட அண்ணாவின் பெயரை வைத்தது கிடையாது. மேலும் அண்ணாவின் பெயரை சொல்லியே அதன்மூலம் புத்தகம் போட்டு அந்த வருமானத்தை தன் குடும்ப கஜானாவில் சேர்த்தவர் தான் கருணாநிதி. பேரறிஞர் அண்ணா அவர்கள் கொள்கைப்படி சாமானிய மக்கள் பொருளதாரத்தில் உயரும் வண்ணம் பல்வேறு திட்டங்களை கடந்த இரண்டு ஆண்டுகளில் நிறைவேற்றி சாமானிய மக்களை இன்று அம்மா அவர்கள் பொருளாதாரத்தில் உயர்த்தி உள்ளார்கள். தமிழ்நாட்டில் அம்மா அவர்கள் கொண்டு வந்த திட்டங்களை கண்டு மற்ற மாநில முதலமைச்சர்களும் தங்கள் மாநிலங்களுக்கு இதை வழங்க அங்கிருக்கும் அரசு உயரதிகாரிகளை தமிழகத்திற்கு அனுப்பி ஆலோசனைகளை பெற்று செல்கின்றார்கள்.பள்ளிக்கல்வித்துறைக்கு 17 ஆயிரம் கோடி ரூபாய் உயர்கல்வித்துறைக்கு 4 ஆயிரம் கோடி ரூபாய் என கல்வித்துறைக்காக மட்டும் 21 ஆயிரம் கோடி ஒதுக்கி உள்ளார். 1 முதல் 12 ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகம்இ காலணிஇ சீருடை உட்பட 14 வகையான பொருட்களை வழங்கியுள்ளார்கள். இரண்டு ஆண்டுகளில் 52 அரசு கல்லூரிகளை அம்மா அவர்கள் துவங்கியுள்ளார்கள். மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்களை வழங்கியதின் மூலம் இந்த ஆண்டில் கூடுதலாக 1 இலட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்;ந்துள்ளனர். இதன்மூலம் தமிழ்நாட்டில் அண்ணா அவர்கள் விரும்பிய அறிவுப் புரட்சியை ஏற்படுத்தி தந்தவர் நம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் .
அண்ணா அவர்கள் படி அரிசி திட்டத்தை கோவையிலும், சென்னையிலும் கொண்டு வந்தார். ஆனால் நிதிப்பற்றாக்குறையால் அதை அவரால் செயல்படுத்த முடியவில்லை. ஆனால் இன்று அண்ணாவின் கனவை நனவாக்கும் வகையில் 1 கோடியே 85 லட்சம் குடும்பங்களுக்கு மாதந்தோறும் 20 கிலோ அரிசியை அம்மா அவர்கள் வழங்கி வருகிறார்கள். இந்தியாவில் உள்ளமாநிலங்களில்தமிழகத்தில் தான் முழு உணவு பாதுகாப்பு உள்ளது. இது மட்டுமல்லாது பேரறிஞர் அண்ணா வகுத்த மத்தியில் கூட்டாட்சி மாநில சுயாட்சி என்ற கொள்கைக்கு எதிராக மத்திய காங்கிரஸ் அரசு திகழ்ந்து வருகிறது. தமிழகத்திற்கு நியாயமான முறையில் வழங்க வேண்டிய நிதி, மண்ணெண்ணெய் அளவு, மின்சாரம் போன்றவற்றை தர மறுப்பதுடன் தமிழகத்தின் ஜீவதார உரிமைகளுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. இதையெல்லாம் அம்மா அவர்கள் சட்டத்தின் மூலம் கடுமையாக போராடி மீட்டு வருகிறார். பேரறிஞர் அண்ணா வகுத்த மாநில சுயாட்சி கொள்கைகளை பறித்து வரும் மத்திய காங்கிரஸ் அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் கருணாநிதிக்கு வரும் தேர்தலில் நிச்சயம் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். மற்றும் தமிழ்நாட்டிற்கு வழங்கும் திட்டங்களை கண்டு ஒட்டுமொத்த இந்தியாவில் வாழும் மக்கள் இத்திட்டம் தங்கள் மாநிலத்திற்கு வர வேண்டும் என்றால் அம்மா அவர்கள் பாரத பிரதமராக வர வேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். வரும் நாடாளுமன்ற தேர்தலில் கழகம் 40 இடங்களில் அமோக வெற்றி பெற்று அம்மா அவர்கள் பாரத பிரதமராகி இந்திய தேசத்தை உலக அரங்கில் வல்லரசாக உருவாக்கி காட்டுவார்கள்.இவ்வாறு அவர் பேசினார்.
------------------------------------------------------------------------
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 6 hours ago |
ஸ்வீட் பால்.4 days 12 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 11 hours ago |
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
இ.வி.எம். வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றி இடி மின்னல் காரணமாக சி.சி.டி.வி-கள் செயலிழப்பு : தென்காசி மாவட்ட கலெக்டர் விளக்கம்
01 May 2024தென்காசி : வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகம் மற்றும் பாதுகாப்பு அறைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழையினால் சிசிடிவி கேமிராக்கள் செயல
-
10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் கருணாநிதி பாடம் அறிமுகம்
01 May 2024சென்னை : 10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த பாடம் அறிமுகமப்படுத்தப்பட்டுள்ளது.