முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விமான நிலையத்தில் தாக்குதல் நடத்த முயன்றவர் கைது

சனிக்கிழமை, 14 டிசம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

நியூயார்க், டிச.15 - அமெரிக்க விமான நிலையத்தில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்த முயன்ற விமான தொழில்நுட்ப நிபுணர் கைது செய்யப்பட்டார். கன்சாஸ் மாகாணத்தில் உள்ள விசிதாவில் விமான நிலையம் உள்ளது. இங்கு தற்கொலைப் படை தாக்குதல் நடத்த முயற்சி நடந்து வருவதாக போலீ ஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து உஷாரான போலீஸார் தீவிரமாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். வாகனச்சோதனை கடுமை யாக்கப் பட்டது.அப்போது அதிவேகமாக வந்த கார் விமான நிலையத்துக்குள் நுழைய முயன்றது. அந்த காரை தடுத்து நிறுத்திய போலீஸார் காரில் சோதனை நடத்தினர். காருக்குள் வெடிகுண்டுகள் நிரப்பி வைக்கப்பட்டிருந்தன. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. போலீஸார் உடனடியாக வேகமாக காரை ஓட்டி வந்தவரை க் கைது செய்தனர். அவரது பெயர் டெர்ரி லீ லி யோவென். இவர் விமான தொழில் நுட்ப நிபுணர் என்பது விசாரணையில் தெரிய வந்தது. இவர் ஏன் தற்கொலைப் படை தாக்குதல் நடத்த முயன்றார் என்பது தெரியவில்லை.

தீவிரவாத இயக்கத்துக்கும் இவருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் போலீஸார்தெரிவித்தனர். விமான நிலையத்துக்குள் காரை செலுத்தி அங்கு தற்கொலைப் படை தாக்குதல் நடத்த இவர் திட்டமிட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. போலீஸார் திறம்பட செயல்பட்டதால் தாக்குதல் முறியடிக்கப்பட்டது என்றும் இதற்காக போலீஸாருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கன்சாஸ் மாகாண  கவர்னர் சாம்பிரவுன் பேக் தெரிவித்தார்.

                             

 

 

  

   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்