முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜ.பி.எல். சூதாட்ட அறிக்கை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்

திங்கட்கிழமை, 10 பெப்ரவரி 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, பிப்.11 - கடந்த ஆண்டு நடந்த 6-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீ சாந்த், அங்கீத் சவான், சண்டிலா ஆகிய 3வீரர்கள் சிக்கினார்கள். இவர்கள் மீது கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்தது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கவுரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ராஜீகுந்த்ரா ஆகியோருக்கும் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. கிரிக்கெட் வாரியம் சார்பில் விசாரணை  நடத்திய முன்னாள் நீதிபதிகள் ஜெயராம் சவுதா, பாலசுப்பிரமணியன் ஆகியோர் இருவருக்கும் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் தொடர்பு இல்லை என்று தங்களது அறிக்கையில் தெரிவித்தனர். 

இதைத்தொடர்ந்து பீகார் கிரிக்கெட் சங்கம் சார்பில் சுப்ரீம் கோர்டில் வழக்கு தொடரப்பட்டது. ஐ.பி.எல். ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம் குறித்து விசாரணை நடத்த பஞ்சாப் மற்றும் அரியானா ஜகோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி முகுலை சுப்ரிம் கோர்டு நியமித்தது.கடந்த 4 மாதங்களாக நீதிபதி முகுல் கமிட்டி பல்வேறு இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தியது. வீரர்கள், பத்திரிக்கையாளர்கள், ஜ.பி.எல். அணி உரிமையாளர்கள், போலீஸார் ஆகியோரிடம் விவரங்களை கேட்டு இருந்தனர்.

ஐ.பி.எல். ஸ்பாட் பிக்சிங் சூதாட்ட அறிக்கை சுப்ரீம் கோர்டில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. முகுல் முத்கள் கமிட்டியின் இந்த விசாரணை அறிக்கை 170 பக்கங்களில் இருந்தது. ஜ.பி.எல். ஏலம் நாளை நடைபெற உள்ள நிலையில் சூதாட்ட விசாரணை அறிக்கை தாக்கல் செய்து இருப்பது முக்கியத்துவம் பெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்