எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மியாமி, மார்ச் 29 - மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில் ஜப்பானின் நிஷிகோரியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார் 17 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றவரான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர்.
அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற காலிறுதியில் நிஷிகோரி 3-6, 7-5, 6-4 என்ற செட் கணக்கில் ஃபெடரரைத் தோற்கடித்தார். ஃபெடரருக்கு எதிராக நிஷிகோரி பெற்ற 2-வது வெற்றி இது.
சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் செட்டை வென்ற ஃபெடரர், 2-வது செட்டின் தொடக்கத்தில் நிஷிகோரியின் இரு சர்வீஸ்களை முறியடித்ததால் எளிதாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென அபாரமாக ஆடிய நிஷிகோரி ஃபெடரரின் சர்வீஸ்களை அடுத்தடுத்து முறியடித்து 7-5 என்ற கணக்கில் 2-வது செட்டை கைப்பற்றினார்.
தொடர்ந்து நடைபெற்ற 3-வது செட்டிலும் அபாரமாக ஆடிய நிஷிகோரி, ஆட்டத்தின் போக்கை மாற்றி அந்த செட்டை 6-4 என்ற கணக்கில் கைப்பற்றி ஃபெடரரை வீழ்த்தினார்.
கடந்த இரண்டு தினங்களில் சர்வதேச தரவரிசையில் முதல் 5 இடங்களுக்குள் இருக்கும் இரு வீரர்களை தோற்கடித்துள்ளார் சர்வதேச தரவரிசையில் 21-வது இடத்தில் இருக்கும் நிஷிகோரி. காலிறுதிக்கு முந்தைய சுற்றில் உலகின் 4-ம் நிலை வீரரான ஸ்பெயினின் டேவிட் ஃபெரருக்கு அதிர்ச்சி தோல்வியளித்த நிஷிகோரி, இப்போது 5-ம் நிலை வீரரான ரோஜர் ஃபெடரரை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
வெற்றி குறித்துப் பேசிய நிஷிகோரி, “ஃபெடரரை 2-வதுமுறையாக தோற்கடித்திருக்கிறேன். இந்த ஆட்டத்தில் நன்றாக விளையாடியதாக நினைக்கிறேன். குறிப்பாக 2-வது செட்டில் சிறப்பாக ஆடினேன். சில தருணங்கள் கொஞ்சம் கடினமாக இருந்தன. எனினும் நான் கடுமையாகப் போராடி வெற்றி கண்டிருக்கிறேன்” என்றார்.
இன்டியன்வெல்ஸ் போட்டியில் இறுதிச்சுற்று வரை முன்னேறிய ரோஜர் ஃபெடரர், மியாமி மாஸ்டர்ஸ் போட்டியில் முழு பார்முடன் களமிறங்கினார். இந்தப் போட்டியில் காலிறுதிக்கு முன்பு வரை ஒரு செட்டைக்கூட இழக்காத ஃபெடரர், தனது 4-வது சுற்றில் முன்னணி வீரரான பிரான்ஸின் ரிச்சர்ட் காஸ்கட்டை 49 நிமிடங்களில் வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தோல்வி குறித்துப் பேசிய ஃபெடரர், “எனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் போனது. இந்த வாரம் முழுவதும் நான் சிறப்பாக ஆடிய நிலையில், இந்தப் போட்டியில் தோல்வி கண்டது ஆச்சரியமாக இருக்கிறது. நான் முதல் செட்டை வென்ற நிலையில், அடுத்தடுத்து இரு செட்களை இழந்தது மனஉளைச்சலை ஏற்படுத்தியது. 2 மற்றும் 3-வது செட்களில் நிஷிகோரி அபாரமாக ஆடினார். எனவே அனைத்து பாராட்டுகளும் அவருக்குத்தான்” என்றார்.
வீழ்ந்தார் முர்ரே
மற்றொரு காலிறுதியில் உலகின் 2-ம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 7-5, 6-3 என்ற நேர் செட்களில் நடப்பு சாம்பியனான பிரிட்டனின் ஆன்டி முர்ரேவைத் தோற்கடித்தார். இதன்மூலம் கடந்த விம்பிள்டன் இறுதிச்சுற்றில் முர்ரேவிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ளார் ஜோகோவிச்.
வெற்றி குறித்துப் பேசிய ஜோகோவிச், “முர்ரே விளையாடியவிதம் எனக்கு வியப்பை ஏற்படுத்தவில்லை. ஏனெனில் அவர் சிறப்பாகவும், கொஞ்சம் ஆக்ரோஷமாகவும் ஆடுவார் என எதிர்பார்த்தேன். சரியான பகுதியில் பந்தை அடிக்கவிடாமல் முர்ரேவை தடுக்க முயற்சித்தேன். ஏனெனில் அவர் சரியான இடத்தில் பந்தை அடிக்க தொடங்கிவிட்டால் எவ்வித சிக்கலுமின்றி சிறப்பாக ஆடுவார். அப்போது அவருடைய ஆட்டம் உலகின் தலைசிறந்த ஆட்டமாகக்கூட இருக்கலாம்” என்றார்.
மகளிர் ஒற்றையர் காலிறுதியில் ஸ்லோவேகியாவின் டொமினிகா சிபுல்கோவா 3-6, 7-6 (5), 6-3 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் இருந்த போலந்தின் அக்னீஸ்கா ரத்வன்ஸ்காவைத் தோற்கடித்தார்.
போட்டித் தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள சிபுல்கோவா, இந்தப் போட்டிக்குப் பிறகு புதிய தரவரிசை வெளியிடப்படும்போது சர்வதேச தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் முன்னேறுவார்.வெற்றி குறித்துப் பேசிய சிபுல் கோவா, “நான் சர்வதேச தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் முன்னேறுவதற்கு இந்தப் போட்டியில் வெற்றி பெறுவது அவசியம் என்பது ஏற்கெனவே தெரியும். அதனால் அதிக அளவில் நெருக்கடி இருந்தது. எனினும் அதை சிறப்பாகக் கையாண்டவிதம் மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.
மியாமி மாஸ்டர்ஸ் போட்டியில் முதல்முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ள சிபுல்கோவா அடுத்ததாக சீனாவின் லீ நாவை சந்திக்கிறார். லீ நா தனது காலிறுதியில் 7-5, 7-5 என்ற நேர் செட்களில் டென்மார்க்கின் கரோலின்வோஸ்னியாக்கியை தோற்கடித்தார்.ஆஸ்திரேலிய ஓபன் இறுதிச்சுற்றிலும், இன்டியன்வெல்ஸ் போட்டியின் காலிறுதியிலும் லீ நாவிடம் தோல்வி கண்ட சிபுல்கோவா, இந்த முறை அதற்கு பதிலடி கொடுப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 6 hours ago |
ஸ்வீட் பால்.4 days 12 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 11 hours ago |
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
-
இ.வி.எம். வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றி இடி மின்னல் காரணமாக சி.சி.டி.வி-கள் செயலிழப்பு : தென்காசி மாவட்ட கலெக்டர் விளக்கம்
01 May 2024தென்காசி : வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகம் மற்றும் பாதுகாப்பு அறைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழையினால் சிசிடிவி கேமிராக்கள் செயல
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்
-
மொபைல் செயலிகள் மூலம் மோசடி: நாடு முழுவதும் சி.பி.ஐ. சோதனை
01 May 2024புதுடில்லி : மொபைல் செயலிகள் மூலம் முதலீடு திட்டங்கள் என்ற பெயரில் நடைபெற்று வரும் மோசடி குறித்து நாடு முழுவதும் தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் சி.பி.ஐ.
-
ஒரு கோடி முறை 'கோவிந்த கோடி' எழுதிய மாணவி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் பங்கேற்க தேவஸ்தானம் அனுமதி
01 May 2024திருமலை : ஒரு கோடி முறை 'கோவிந்த கோடி' எழுதிய பெங்களூரு மாணவி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் பங்கேற்க தேவஸ்தான அனுமதி வழங்கியுள்ளது.
-
கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பா? - மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும் : சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்
01 May 2024புதுடெல்லி : கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்க