முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவில் 1,5000 துப்பாக்கிகள் பறிமுதல்

செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2014      உலகம்
Image Unavailable

 

பெய்ஜிங், ஏப் 16 - சீனாவில் 15,000 கள்ள துப்பாக்கிள் மற்றும் 1.20 லட்சம் கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இது குறித்து அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

சீனாவில் இந்த அளவுக்கு பெரும் எண்ணிக்கையில் கள்ளத் துப்பாக்கிள் மற்றும் கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது இதுதான் முதல் முறையாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கடந்த சில மாதங்களில் அதிகளவில் கத்திக்குத்து சம்பவங்கள் நடந்து உள்ளன. கடந்த மாதம் ஜின்ஜியாங் மண்டலத்தில் குன்மிங் ரயில் நிலையத்தில் நிகழ்ந்த கத்திக்குத்து சம்பவத்தில் 33 பேர் கொல்லப்பட்டனர். 140 பேர் காயமடைந்தனர். துப்பாக்கி தயாரிப்பதற்கும், விற்பதற்கும் தனிப்பட்ட நபர்கள் துப்பாக்கி வைத்திருப்பதற்கும் சீன அரசு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்