எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை,ஏப்.23 - தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கடந்த 6 வாரங்களுக்கும் மேலாக நடந்து வந்த அனல் பறக்கும் பிரசாரம் நேற்றுமாலை 6 மணியுடன் முடிவுக்கு வந்தது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நாளை (24-ம் தேதி) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.
பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 9 கட்டமாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டு அதன்படி தேர்தல் நடந்து வருகிறது. இதுவரை 5 கட்ட தேர்தல்கள் முடிந்துள்ளன. 6-வது கட்டமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் ஆலந்தூர் சட்டசபை தொகுயிலும் நாளை வாக்குப்பதிவு நடக்கிறது.
தமிழகத்தில் இந்த முறை வரலாறு காணாதா வகையில் 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. இத்தேர்தலில் 40 தொகுதிகளிலுமே தனித்து போட்டியிடுகிறது. தனது அரசின் சாதனைகளை நம்பியும் மக்கள் ஆதரவையும் நம்பியும் முதல்வர் ஜெயலலிதா இந்த முடிவு எடுத்து தனித்தே போட்டியிட முடிவு செய்துள்ளார். தி.மு.க. 35 தொகுதிகளிலும் அதன் கூட்டணி கட்சிகள் மீதியுள்ள தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் சிதம்பரத்தில் போட்டியிடுகிறார். ஆனால் தி.மு.க. வேட்பாளர்களுக்கு இந்த முறை கடும் எதிர்ப்பு நிலவுகிறது. குறிப்பாக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மு.க. அழகிரியே தி.மு.க. வேட்பாளர்களை தோற்கடிக்க தீவிரம் காட்டி வருகிறார். இந்த தேர்தலில் 6 கட்சிகளை இணைத்து பாரதிய ஜனதா ஒரு கூட்டணியை அமைத்துள்ளது. அதில் தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க. போன்ற கட்சிகள் அடங்கும். கம்யூனிஸ்ட் கட்சிகளும் இந்த தேர்தலில் தனித்து போட்டியிடுகின்றன. மொத்தம் 18 தொகுதிகளில் இந்த கட்சிகள் போட்டியிடுகின்றன. இந்த முறை காங்கிரசுடன் யாரும் கூட்டணி அமைக்க முன்வரவில்லை. 10 ஆண்டுகள் கூட்டணியாக இருந்த தி.மு.க.வே காங்கிரசை கழற்றிவிட்ட நிலையில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் நிலைக்கு தள்ளப்பட்டது. இதனால் தோல்வி பயத்தால் பல தலைவர்கள் போட்டியிடவே இல்லை. இப்படியாக 5 முனை போட்டி தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா கடந்த மார்ச் 3-ம் தேதி தனது பிரசாரத்தை காஞ்சிபுரத்தில் தொடங்கி 40 தொகுதிகளிலும் பிரசாரம் செய்துவிட்டார். தனது பிரசாரத்தின் இறுதிக்கட்டமாக அவர் மத்திய சென்னை, வட சென்னை, தென்சென்னை தொகுதிகளில் பிரசாரம செய்தார். தனது பிரசார கூட்டத்தில் எல்லாம் அவர் தி.மு.க.வின் ஸ்பெக்டரம் ஊழலையும் தி.மு.க. செய்த துரோகங்களையும் மற்றும் காங்கிரஸ் கட்சி தமிழகத்திற்கு செய்த துரோகங்களையும் பட்டியலிட்டு பேசினார். இந்த இரண்டு கட்சிகளையும் டெபாசிட் இழக்கச் செய்யுமாறு மக்களை கேட்டுக்கொண்ட அவர் செய்வீர்களா?செய்வீர்களா என்று மக்களை பார்த்து எல்லாம் கூட்டங்களிலும் கேள்வி எழுப்பினார். அவரது இந்த புதிய பாணி மக்களை மிகவும் கவர்ந்தது. தென் சென்னை கூட்டத்திலும் இரண்டு கட்சிகளையும் முதல்வர் ஜெயலலிதா ஒரு பிடி பிடித்தார். மேலும் 41 வேட்பாளர்களையும் அவர் அறிமுகம் செய்து வைத்தார். அத்துடன் அவரது பிரசாரம் முடிவுக்கு வந்தது.
இதேபோல் தி.மு.க. தலைவர் கருணாநிதி, அவரது மகன் மு.க.ஸ்டாலின் பொதுச்செயலாளர் அன்பழகன் ஆகியோரும் தங்கள் வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்தார்கள். காங்கிரசை பொருத்தமட்டில் மத்திய மந்திர ப.சிதம்பரம், ஜி.கே. வாசன் போன்றவர்கள் தங்களால் முடிந்த வரை பிரசாரம் செய்தனர். மேலும் சோனியாவும் ராகுலும் தமிழகம் வந்து பிரசாரம் செய்தனர். பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியும் தமிழகத்தில் பல இடங்களில் பிரசாரம் செய்துவிட்டு திரும்பியுள்ளார். கம்யூனிஸ்ட் கட்சிகளுக்காக ராமகிருஷ்ணனும் த.பாண்டியனும் சில கூட்டங்களில் பேசினார்கள். அ.தி.மு.க. வுக்கு ஏராளமான நடிகர், நடிகைகள் இம்முறை களத்தில் இறங்கி பிரசாரம் செய்தனர். ஆனால் தி.மு.க.வுக்கு குஷ்பு மட்டும் பிரசாரம் செய்தார். இப்படியாக கடந்த 6 வாரங்களுக்கும் மேலாக நடந்த அனல் பறக்கும் பிரசாரம் நேற்றுமாலை 6 மணியுடன் முடிவுக்கு வந்தது. இந்த தேர்தலில் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 845 பேர் போட்டியிடுகிறார்கள். நாளை வியாழக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிகிறது. தமிழகத்தில் தேர்தலை அமைதியாக நடத்த தேர்தல் ஆணையம் உரிய ஏற்பாடுகளை செய்துள்ளது. பாதுகாப்புக்காக தமிழக போலீசார் மட்டுமின்றி துணைராணுவ படையினரும் ஆயிரக்கணக்கில் குவிக்கப்படுகிறார்கள். ஒரு சில இடங்களில் போலீஸ் அணிவகுப்பும் நடைபெற்றது. தேர்தலை முன்னிட்டு மதுக்கடைகளை நேற்று செவ்வாய்கிழமை முதல் வாக்குப்பதிவு தினமா நாளை மாலை வரை மூட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 12 hours ago |
ஸ்வீட் பால்.4 days 18 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 17 hours ago |
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்
-
இ.வி.எம். வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றி இடி மின்னல் காரணமாக சி.சி.டி.வி-கள் செயலிழப்பு : தென்காசி மாவட்ட கலெக்டர் விளக்கம்
01 May 2024தென்காசி : வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகம் மற்றும் பாதுகாப்பு அறைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழையினால் சிசிடிவி கேமிராக்கள் செயல