எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பரங்குன்றம்,ஜூன்.- 7 - தமிழ்க் கடவுள் முருகப் பெருமான் குடி கொண்டுள்ள ஆறுபடை வீடுகளுல் முதல் படை வீடு எனும் சிறப்பு பெற்ற திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் அஷ்டபந்தன, சொர்ணபந்தன மகா கும்பாபிஷேகம் நேற்று(ஜூன் 6 ம் தேதி) மிக சிறப்பாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷமிட்டு கோபுர தரிசனம் செய்தனர். திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மூலஸ்தானத்தில் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள் ஆகியோரது திருவுருவங்கள் மலையின் அடிவாரப் பாறையில் குடைந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. சுப்பிரமணிய சுவாமி திருக்கரத்தில் உள்ள வேலுக்கே அனைத்து அபிஷேகங்களும் நடக்கிறது.
அங்கு கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோயில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்பது ஆகம விதி. அதன்படி இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தவும், ரூ. 5 கோடியில் உபயதாரர்கள் மூலம் திருப்பணிகள் மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது. கும்பாபிஷேக பணிகள் துவக்கமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29 ம் தேதி பாலாலயம் நடத்தப்பட்டது. 150 அடி உயரம் கொண்ட 7 நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம், வல்லப கணபதி, கோவர்த்தானம்பிகை விமானங்கள் புதுப்பிக்கப்பட்டு வர்ணம் தீட்டப்பட்டது. கோயிலுக்குள் உள்ள அனைத்து தூண்களிலும் உள்ள சுவாமிகளின் கற்சிலைகள், கற்சுவர்கள் அனைத்தும் வாட்டர் பிளாஸ்டர் முறையில் சுத்தம் செய்யப்பட்டு வார்னீஸ் அடிக்கப்பட்டது.
கோயிலுக்குள் உள்ள அனைத்து மண்டபங்களின் மேல் பகுதி கமலம் வரையப்பட்டன. கம்பத்தடி மண்டபத்தில் சுழலும் லிங்கம், ஆஸ்தான மண்டபத்தில் சுழலும் நந்தி, லிங்கம், கலைநயத்துடன் புதுமையான முறையில் வரையப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து மூலஸ்தானத்தில் திருப்பணிகள் துவங்கும் வகையில் ஏப்ரல் 10 ம் தேதி பாலாலயம் நடந்தது. மூலவர்களின் திருவுருவங்கள் மரத்தினால் செய்யப்பட்டு சண்முகர் சன்னதியில் பக்தர்கள் தரிசனத்திற்காக வைக்கப்பட்டிருந்தது.
மூலஸ்தானம் மூடப்பட்டு சுவாமிகள் புதுப்பிக்கும் பணி நடந்தது. பணிகள் முடிந்து நேற்று முன்தினம் மாலை மூலவர்கள் மற்றும் ராஜகோபுரத்திற்கு சக்தி கலையேற்றம் செய்யப்பட்டது. கும்பாபிஷேக தினமான நேற்று அதிகாலை 4 மணிக்கு 8 ம் கால யாகசாலை பூஜைகள் தொடங்கின. ஜூன் 2 ம் தேதி முதல் நடந்து வந்த யாகசாலை பூஜைகள் நேற்று காலை 5 மணிக்கு பூர்த்தி செய்யப்பட்டன. யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய தங்கம் மற்றும் வெள்ளி, பித்தளைக் குடங்களை சிவாச்சார்யார்கள் தலையில் சுமந்து மேளதாளங்கள் முழங்க காலை 5.30 மணிக்கு ராஜகோபுரத்திற்கு எடுத்து சென்றனர்.
அதனைத் தொடர்ந்து 5.45 மணிக்கு வல்லப கணபதி, கோவர்த்தானம்பிகை விமானங்களுக்கு புனித நீர் அடங்கிய குடங்கள் கொண்டு செல்லப்பட்டன.
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சண்முக நாதன் பச்சைக் கொடி அசைத்து பூஜைகளை துவக்கி வைத்தார். அதன் பின்னர் ராஜகோபுரம் மற்றும் விமான கலசங்களுக்கு சம காலத்தில் பூஜைகள் செய்யப்பட்டது. அனைத்து பூஜைகளும் முடிந்து ராஜகோபுரத்தில் உள்ள 7 கலசங்களுக்கும் 7 சிவாச்சார்யார்கள், 2 விமானங்களுக்கு 2 சிவாச்சார்யார்கள் ஆகியோர் குடங்களில் இருந்த புனித நீரை காலை 6.45 மணிக்கு கலசங்களில் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதனைத் தொடர்ந்து மகா தீப தூபாரதனைகளும் நடந்தன. காலை 7 மணிக்கு மூலவர்கள் மற்றும் கோவர்த்தானம்பிகைக்கு புனித நீர் மூலம் மகா அபிஷேகம் நடந்தது. நேற்று மாலை பஞ்சமூர்த்திகள் புறப்பாடாகி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
கும்பாபிஷேகத்தை காண அதிகாலை 3 மணியில் இருந்தே பக்தர்கள் திருப்பரங்குன்றத்தில் குவியத் தொடங்கினர். பாஸ் வழங்கப்பட்ட வி.ஐ.பிக்கள், பக்தர்களும் கோயில் மேல்தளத்தில் இருந்து கும்பாபிஷேம் காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாஸ் கிடைக்கப் பெறாதவர்கள் கோயில் முன்பு உள்ள ரோடுகளில் அமர்ந்து தரிசனம் செய்தனர். எங்கு திரும்பினும் பக்தர்கள் வெள்ளமாக காட்சியளித்தது.
கும்பாபிஷேக நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் முத்துராமலிங்கம், போஸ், சாமி, தமிழரசன், சுந்தரராஜன், ராஜா, மாநகராட்சி அ.தி.மு..க. தலைவர் சாலைமுத்து, முன்னாள் எம்.பிக்கள் ராஜன் செல்லப்பா, ராம்பாபு, மாவட்ட கலெக்டர் சகாயம், அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார், தொகுதி பொறுப்பாளர் தர்மராஜ், நகர இணைச் செயலாளர் வசந்தி, 68 வது வட்ட முன்னாள் பிரதிநிதி அரிராமன், அ.தி.மு.க. ஒன்றிய பொருளாளர் கே. கருத்தக்கண்ணன், ஒன்றிய செயலாளர் இரா. சுப்பிரமணி, இந்து அறநிலையத் துறை கமிஷனர் கலைவாணன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பட விளக்கம்
1. திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நேற்று நடைபெற்ற கும்பாபிஷேகத்தை இந்து அறநிலையத் துறை அமைச்சர் சண்முகநாதன் பச்சைக் கொடியசைத்து துவக்கி வைத்தார். அருகில் எம்.எல்.ஏக்கள் முத்துராமலிங்கம், சாமி, தமிழரசன், சுந்தரராஜன், ராஜா, பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார், மாநகராட்சி அ.தி.மு.க. தலைவர் சாலைமுத்து உட்பட பலர் உள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 12 hours ago |
ஸ்வீட் பால்.4 days 18 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 17 hours ago |
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
-
10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் கருணாநிதி பாடம் அறிமுகம்
01 May 2024சென்னை : 10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த பாடம் அறிமுகமப்படுத்தப்பட்டுள்ளது.