எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூன் - 12 - தமிழக மக்கள் சுதந்திரம் அடைந்துவிட்டதாக அனைவரும் உணர்கிறார்கள் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா கூறினார். நேற்று சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி கூறும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்திற்கு முதல்வர் அளித்த பதில் வருமாறு:- தற்போது சுதந்திரம் அடைந்து விட்டதாக தமிழக மக்கள் அனைவரும் உணர்கிறார்கள். கடந்த 5 ஆண்டு காலமாக மக்களுடைய அனைத்து உரிமைகளும் சுதந்திரங்களும் பறிக்கப்பட்டு இருந்தன. கடந்த 5 ஆண்டு காலமாக பத்திரிகைகளும் ஊடகங்களும்கூட இந்த அடக்கு முறையை அனுபவித்தன. உண்மையான விவரங்களைக் கூட வெளியிடுவதற்கு அனுமதி வழங்காத ஒரு நிலைமை இருந்தது. உண்மையை வெளியிட பத்திரிகைகளுக்கும் ஊடகங்களுக்கும் அனுமதி தேவையில்லை. அதுதான் ஜனநாயகம். ஆனால், அப்படிப்பட்ட ஒரு அடக்குமுறை சூழ்நிலை நிலவியது. உதாரணத்துக்கு ஒருசிலவற்றை இங்கே நினைவு கூர விரும்புகிறேன்.
இதே சட்டப் பேரவையில் கடந்த 5 ஆண்டு காலத்தில் ஒரு முறை நான் இங்கே பேசியபோது, எம்.ஜி.ஆரின் பாடல் வரிகளை குறிப்பிட்டேன். என்னதான் நடக்கும் நடக்கட்டுமே, இருட்டினில் நீதி மறையட்டுமே, தன்னாலே வெளிவரும் தயங்காதே, ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே, என்று நான் சொல்லிவிட்டு அதன் பிறகு நான் வெளியேறி விட்டேன். நான் சென்ற பிறகு அன்றைய முதல்வர் கருணாநிதி இந்த பாடலை குறிப்பிட்டு ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே என்று புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். பாடியது தன்னைத் தான் - அதாவது கருணாநிதியைத்தான் என்று குறிப்பிட்டு - அவர் என்னைச் சொல்லவில்லை - ஏனென்றால் ஒரு தலைவி இருக்கிறாள் என்று சொல்லவில்லை, ஒரு தலைவன் இருக்கிறான் என்று தான் சொல்லி இருக்கிறார், ஆகவே ஜெயலலிதாவை அவர் குறிப்பிடவில்லை என்று அவர் சொன்னார். நான் வெளியே சென்ற பிறகு தான் இதைக் கேள்விப் பட்டேன். அதற்கு நான் பதிலளித்து ஒரு அறிக்கை வெளியிட்டேன். புரட்சித் தலைவர் என்னைப் பார்த்து, திருவளர் செல்வியோ, நான் தேடிய தலைவியோ என்று பாடியிருக்கிறார். ஆகவே, அதில் என்னைத் தான் குறிப்பிடுகிறார். அவருடைய அரசியல் வாரிசு நான் தான் என்பதை அனைவருக்கும் அடையாளம் காட்டி இருக்கிறார் என்று நான் பதிலடி கொடுத்தேன்.
ஆனால், இது கருணாநிதிக்கு பிடிக்கவில்லை. இப்படி புத்திசாலித்தனமாக சொன்னதற்கு உடனடியாக ஜெயலலிதா பதிலடி கொடுத்து விட்டாரே என்று அனைத்து பத்திரிகைகளையும் மிரட்டி இந்த செய்தியை வெளியிடக் கூடாது என்று கட்டாயப் படுத்தியிருக்கிறார். ஆக இந்த அளவுக்கு அற்பத்தனமான காரியங்களில், அற்பத்தனமான சிந்தனையில் அந்தக் கால கட்டத்தில் முதலமைச்சரே செயல் பட்டிருக்கிறார் என்பதை சுட்டிக் காட்டத்தான் இதை நான் குறிப்பிடுகிறேன்.
கடந்த ஆண்டு நான் எதிர்க் கட்சி தலைவராக இருந்தபோது வரிசையாக பல பிரம்மாண்டமான பொதுக் கூட்டங்களை நடத்தினேன். கோவையில் நடந்த பொதுக் கூட்டத்தில் பிரம்மாண்டமான அளவில் மக்கள் திரண்டனர். அனைத்து பத்திரிகைகளும் அந்த கூட்டத்தைப் பற்றி பிரமாதமாக செய்திகளை வெளியிட்டன. உண்மையை சொன்னார்கள். 8 லட்சம் பேருக்கு மேல், 9 லட்சம் பேருக்கு மேல் அங்கே கூடிவிட்டார்கள் என்ற உண்மையைச் சொன்னதால் கருணாநிதிக்கு தாங்க முடியாத கோபம் வந்துவிட்டது.
அடுத்து ஒன்றரை மாத காலத்துக்குள் திருச்சியிலே ஒரு பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடத்தினேன். கோவையில் திரண்ட கூட்டத்தை விட மூன்று மடங்கு அதிக கூட்டம் அங்கே திரண்டது. கோவையிலே ஒரு 7 லட்சம் பேர் திரண்டார்கள் என்றால் திருச்சியிலே 21 லட்சத்துக்கு மேல் கூட்டம் கூடிவிட்டது என்று எல்லோரும் சொன்னார்கள். ஆனால் அன்றைய கால கட்டத்தில் கருணாநிதி அனைத்து பத்திரிகைகளையும் மிரட்டி, கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று மிரட்டியதால் ஒரு பத்திரிக்கை கூட திருச்சியில் நடந்த கூட்டத்தைப் பற்றி செய்தியை வெளியிடவில்லை. ஒருசில பத்திரிகைகளில் ஜெயலலிதா திருச்சிக்கு சென்றார். பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார், சென்னை திரும்பினார் என்று மட்டும் போட்டார்களே தவிர, சில பத்திரிகைகளில் செய்தியே போடவில்லை. எந்த பத்திரிகையிலும் உண்மையை வெளியிடவில்லை. இங்கே பிரம்மாண்டமான மக்கள் கூட்டம், மகத்தான மக்கள் கூட்டம் கூடியது என்ற செய்தியை வெளியிடவில்லை. அதையே இருட்டடிப்பு செய்துவிட்டார்கள். ஆகவே அந்த அளவுக்கு ஒரு பயம், ஒரு அச்ச உணர்வு, ஒரு அடக்குமுறை இருந்தது. பத்திரிகைகள் ஏன் பயப்பட வேண்டும்? பத்திரிகை முதலாளிகள் முதலமைச்சரைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும் என்று கேட்டால் அது அவர்களுக்கு தான் தெரியும். என்ன காரணம் என்று அவர்களுக்குத் தான் தெரியும். அப்படிப்பட்ட ஒரு அடக்குமுறை அப்போது நிலவியது.
அது மட்டுமல்ல, நான் எதிர்க்கட்சி தலைவராக இருந்தவரை எனக்கு சாதகமான கழகத்துக்கு சாதகமான எந்த செய்தியும் வெளியிடக்கூடாது என்று பத்திரிகைகளுக்கு ஒரு ஸ்டேண்டிங் ஆர்டர் போடப்பட்டு இருந்தது. அது மட்டுமல்ல, சட்டமன்றத்துக்கு நான் எப்போது வந்தாலும் என்னை பேச விடாமல் முதலமைச்சரும் சரி, அத்தனை தி.மு.க. அமைச்சர்களும் சரி, அடிக்கடி எழுந்து குறுக்கிடுவது மட்டுமல்ல, அவமானப் படுத்தி, கொச்சைப் படுத்தி, அசிங்கப் படுத்தி பேசினார்கள். அது மட்டுமல்ல, அன்றைய சபாநாயகர் ஆவுடையப்பன், நான் ஆரம்பத்தில் சட்டமன்றத்துக்கு வந்தபோது அவருக்கு வணக்கம் தெரிவித்தபோது மரபுபடி பதில் வணக்கம் தெரிவித்தார். அதுகூட அன்றைய முதல்வருக்கு பொறுக்கவில்லை. தனியாக அழைத்து ஆவுடையப்பனை வாங்கு வாங்கு என்று வாங்கிவிட்டார் போலும். அதன் பிறகு நான் சட்டமன்றத்துக்கு வந்து வணக்கம் தெரிவித்தால் கூட, பதில் வணக்கம் கூட தெரிவிக்காமல் சபாநாயகர் முகத்தைத் திருப்பிக் கொள்வார். இப்படி ஒரு சூழ்நிலையை ஒரு ஜனநாயக நாட்டில் தமிழகத்தைத் தவிர வேறு எந்த சட்டமன்றத்திலாவது கேள்விப் பட்டிருக்கிறோமா?
இன்றைய தினம் நீங்கள் எல்லோரிடத்திலும் அன்பாக பழகுகிறீர்கள், கண்ணியத்துடன் பழகுகிறீர்கள். ஆனால் அன்றைய நிலைமை என்ன? அதை நீங்களே கண்கூடாக பார்த்திருக்கிறீர்கள். இதையெல்லாம் இன்றைக்கு எதற்காக சொல்கிறேன் என்றால், அனைவரும் வெறுப்படையக் கூடிய ஒரு சூழ்நிலை தான் கடந்த 5 ஆண்டு காலமாக இங்கு தமிழகத்தில் நிலவியது. சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறேன். அனைவரையும் சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறேன். நான் ஒரு முன்னாள் முதலமைச்சர், எதிர்க் கட்சி தலைவர், எனக்கே இந்த நிலைமை என்றால் சாமான்ய மக்களின் நிலை என்ன? அதனால் தான் மக்கள் இந்த கொடுங்கோல் குடும்ப ஆட்சி எப்போது ஒழியும்? இதற்கு எப்போது நாம் வழி செய்யலாம்? என்று காத்திருந்தார்கள்.
கடந்த 5 ஆண்டுகாலத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. யாருக்கும் எந்தவிதமான சுதந்திரமும் இல்லை. மக்கள் வேறு எதை விரும்புகிறார்களோ இல்லையோ, எந்த நாட்டிலும் சரி, பொதுமக்கள் சுதந்திரத்தை விரும்புவார்கள். இந்தியா என்று மட்டுமல்ல, எந்த நாட்டிலும் அதே தான். அதனால் தான் முசோலினி, ஹிட்லர், இடிஅமீன் போன்ற சர்வாதிகாரிகள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட கால கட்டத்துக்கு மேல் அவர்களுடைய நாட்டு மக்களாலேயே தூக்கி எறியப்பட்டார்கள். அதைப் போலவே, கொடுங்கோல் ஆட்சி நடத்திய சர்வாதிகாரி கருணாநிதியின் குடும்ப ஆட்சியை தமிழக மக்கள் சந்தர்ப்பத்துக்காக காத்திருந்து தூக்கி எறிந்துவிட்டார்கள்.
இனி தமிழ்நாட்டில் அத்தகைய ஒரு நிலைமை எந்த காலத்திலும் ஏற்படாது என்ற உத்தரவாதத்தை அ.தி.மு.க. சார்பில் தமிழக மக்களுக்கு நான் அளிக்க விரும்புகிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.1 day 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 23 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 23 hours ago |
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
27 Apr 2024சென்னை, தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை நேற்றும் உயர்ந்து விற்பனையானது.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
அரசியல் எதிரிகளை பழிவாங்க அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் பதில் மனு
27 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் பதில்மனு தாக்கல் செய்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறைய
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருள் எப்படி கிடைக்கிறது? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
27 Apr 2024மதுரை:உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
-
நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Apr 2024சென்னை, தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்:பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகளை வழங்க உத்தரவு
27 Apr 2024சென்னை:அதிகரிக்கும் வெப்பத்தால் பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இரண்டு குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒருவர் பலி
27 Apr 2024இம்பால், மணிப்பூரில் 2 குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் இளைஞர் பலியான சம்பவத்தில், வன்முறை பரவி விடாமல் தடுப்பதற்காக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளன
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
தமிழகத்தில் இயல்பைவிட 83 சதவீதம் மழை குறைவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் கோடைக்கால பருவமழை இயல்பைவிட 83 சதவீதம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத
-
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள், மாலுமிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு
27 Apr 2024டெக்ரான், ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் மற்றும் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.&n
-
வட தமிழ்நாட்டில் மே 2 தேதிக்கு பிறகு லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் 1-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மே 2-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய வட