எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாமக்கல்,ஜூன்.17 - நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து அரசுத் துறைகளின் பணி ஆய்வு கூட்டம் தமிழக வருவாய்த் துறை அமைச்சர் பி. தங்கமணி தலைமையில் நடைபெற்றது. தமிழக சட்டப் பேரவை துணைத் தலைவர் தனபால், மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் 25 க்கும் மேற்பட்ட துறைகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது அமைச்சர் தங்கமணி பேசியதாவது,
தமிழக முதல்வர் ஜெயலலிதா, அரசின் அனைத்து திட்டங்களும் ஏழை, எளிய மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதில் உறுதியுடன் உள்ளார். அதனடிப்படையில்தான் அனைத்து அரசுத் துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகள், நலத்திட்ட உதவிகள் ஆகியவை குறித்து ஆய்வுகள் நடத்தப்படுகிறது. குறிப்பாக வருவாய் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் முதியோர் உதவித் தொகை, வீட்டு மனைப்பட்டா, விபத்து நிவாரணம், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நிவாரண உதவிகள், இயற்கை மரணம், விதவை உதவித் தொகை போன்ற அனைத்து மக்கள் நலத்திட்டங்களும் பொதுமக்களுக்கு உடனுக்குடன் கிடைத்திட அலுவலர்கள் நடவடிக்கை எடுத்திட வேண்டும். சராசரியாக ஒவ்வொரு வாரமும் நடைபெறுகிற மனுநீதி நாள் முகாமில் 300 க்கும் மேற்பட்ட மனுக்கள் வருகின்றன. பெறப்பட்ட மனுக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதிவு செய்து ஒரு மாத காலத்திற்குள் புதிய தீர்வினை மனுதாரருக்கு வழங்க வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் தற்போது 65 ஆயிரத்து 311 பேர் முதியோர் உதவித் தொகை பெற்று வருகிறார்கள்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கும் திட்டத்தின் கீழ் எவ்வித குறைபாடுமின்றி தரமான அரிசியை நியாய விலைக் கடைகள் வழங்க வேண்டும். பொதுமக்களுக்கு அரிசி வழங்குவதில் ஏதேனும் முறைகேடுகள் ஏற்பட்டாலோ, அல்லது அரிசி கடத்தல் நடந்தாலோ கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள ரேசன் கடைகளை பிரித்து பகுதிநேர கடைகள் உருவாக்கவும் அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் சுலபமான முறையில் மக்கள் பெறுகின்ற வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
அதே போல சொந்தக் கட்டிடத்தில் இயங்காத நியாய விலைக் கடைகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து நியாய விலைக் கடைகளை கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்படும். முதல்வர் அறிவித்தபடி குடிசை வீடுகள் தீப்பற்றி எரிந்து சேதமடைந்தால் ரூ. 5 ஆயிரம் நிவாரண தொகையாக வழங்கப்படும். பட்டா மாறுதல் கேட்டு கிராம அதிகாரியிடம் விண்ணப்பம் அளித்தாலே போதுமானது. சட்டம் ஒழுங்கை காப்பதில் காவல் துறை உரிய முயற்சியை எடுக்க வேண்டும். ஊரக வளர்ச்சி துறையின் மூலமாக வளர்ச்சி திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். குறிப்பாக சாலை பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
முதல்வர் அறிவித்தபடி மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணிணி வழங்கப்படுவதுடன் அதன் பயன்பாடு குறித்து அவர்களுக்கு ஆசிரியர்கள் எடுத்து சொல்ல வேண்டும். பொது மருத்துவத் துறை மற்றும் சுகாதார துறையின் மூலம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேவையான கட்டிட வசதிகள், நவீன சிகிச்சைக்கான கருவிகள் ஆகியவற்றை வழங்கவும், காலியாக உள்ள மருத்துவ பணியிடங்களை நிரப்பவும் நடவடிக்கை எடுக்கப்படும். இருப்பினும் தற்போதுள்ள மருத்துவர்கள் நோயாளிகளுக்கு தகுந்த முறையில் சிகிச்சையளிக்க வேண்டும்.
கிராமங்கள் மற்றும் நகராட்சி பகுதிகளில் குடிநீர் வழங்குவதில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், மின்சார வாரியம் ஆகிய துறை அலுவலர்கள் கலந்து பேசி குடிநீர் வழங்கும் பணியை முறைப்படுத்திட வேண்டும். பிற்பட்டோர் நலத்துறை, ஆதி திராவிடர் நலத்துறை மூலம் மாணவ, மாணவிகள் தங்கி படிப்பதற்கு விடுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும். வேளாண்மை விரிவாக்க மையங்களில் விவசாயிகளுக்கு தேவையான தரமான விதைகள், உரங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தடுப்பணைகள், கசிவுநீர் குட்டைகள் ஆகியவற்றை அமைத்திட வேண்டும். இது போன்ற அனைத்து நலத்திட்ட உதவிகளும் தகுதியுள்ள நபர்களுக்கு கிடைத்திட அலுவலர்கள் முனைப்புடன் செயலாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு வருவாய்த் துறை அமைச்சர் தங்கமணி பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 12 hours ago |
ஸ்வீட் பால்.4 days 18 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 17 hours ago |
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
-
10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் கருணாநிதி பாடம் அறிமுகம்
01 May 2024சென்னை : 10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த பாடம் அறிமுகமப்படுத்தப்பட்டுள்ளது.