முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சர் தலைமையில் மாவட்ட தொழில் மைய ஆய்வு கூட்டம்

புதன்கிழமை, 20 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை 20 - அன்று சென்னை, இராஜா அண்ணாமலைபுரம், தாய்கோ வங்கியில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று காலை 10.00 மணியளவில் மாண்புமிகு ஊரகத் தொழில் துறை அமைச்சர் சி. சண்முகவேலு தலைமையில் தொழில் வணிகத் துறையின் அனைத்து மாவட்ட தொழில் மையங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஊரகத் தொழில் துறை அமைச்சர் அனைத்து மாவட்ட தொழில்மையங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார்.  மாவட்ட பொது மேலாளர்களின் கருத்துகளை கேட்டறிந்தார்.  மேலும் தமிழகத்தில் வரும் காலங்களில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை மேம்படுத்தும் வகையில் சிறப்பாக செயல்பட வேண்டும் என மாவட்ட பொது மேலாளர்களுக்கு ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கினார். இக்கூட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் முதன்மைச் செயலர், தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிகத் துறை இயக்குநர், அனைத்து மாவட்ட தொழில் மையங்களின் பொது மேலாளர்கள் மற்றும் துறையின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும், மாலை 3.00 மணியளவில் தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கியின் (தாய்கோ வங்கி) செயல்பாடுகள் குறித்து மாண்புமிகு ஊரகத் தொழில் துறை அமைச்சர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.  தாய்கோ வங்கி சிறப்பாக செயல்படவும், வங்கியின் வளர்ச்சி மேம்பாடு அடையவும் நடவடிக்கைகள்  மேற்கொள்ள வேண்டும் என அனைத்து வங்கிக் கிளை அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்கினார்.  இந்த ஆய்வுக் கூட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் முதன்மைச் செயலர், தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர், தாய்கோ வங்கியின் தனி அலுவலர் மற்றும் அவ்வங்கியின் மேலாளர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்