எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேலம் ஜூலை.- 31 - சேலத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான நிலம் அபகரிப்பு தொடர்பாக வந்த புகாரை அடுத்து முன்னாள் தி.மு.க.அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை போலீசார் நேற்று காலை கைது செய்தனர். இதையறிந்த தி.மு.க.வினர் வன்முறையில் ஈடுப்பட்டு 10 க்கும் மேற்பட்ட பஸ்களின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர். கடந்த தி.மு.க.ஆட்சியில் சேலம் மாவட்டத்தில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் அவரது உறவினர்கள் நில அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் ஈடுப்பட்டதை பத்திரிக்கைகள் வெளியிட்டன. ஆனால் ஆட்சி அதிகாரம் அவர்களிடம் இருந்தத்தால் போலீசாரால் அவர்களை கைது செய்ய முடியவில்லை.பாதிக்கப்பட்ட பொதுமக்களும் புகார் கொடுக்கமுடியாமல் ஊமையாகவே இருந்தனர்.இந்த நிலையில் கடந்த தேர்தலில் தி.மு.க.ஆட்சி அகற்றபட்டு அ.தி.மு.க.வின் ஆட்சி அமைந்தது.தேர்தல் பிரச்சாரத்தின்போதே தமிழக முதல்வர் ஜெயலலிதா தி.மு.க.வின் ஆட்சியில் நிலம் அபகரிப்பு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டவர்களின் நிலம் மீட்டு பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் நில மோசடி குறித்தான வழக்குகளை விசாரிக்க மாவட்டந்தோறும் நில அபகரிப்பு மீட்பு பிரிவு என்ற தனிப்பிரிவு போலீசை தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடங்கினார்.
இந்த நில அபகரிப்பு மீட்பு தனிப்பிரிவிற்கு இதுவரை தமிழகம் முழுவதும் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான நில அபகரிப்பு புகார் ஆட்சி அதிகாரித்தில் இருந்த தி.மு.க.வினர் மீது பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தனர். அதன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி பலரை கைது செய்து வருகின்றனர். சேலம் உள்ளிட்ட சில இடங்களில் நிலத்தை மீட்டு உரியவர்களிடமும் ஒப்படைத்துள்ளனர். போலீசாரின் இந்த உண்மையான நடவடிக்கையை கண்டு இந்த தனிப்பிரிவிற்கு தற்போது புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
சேலம் மாவட்டத்தில் தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், அவரது தம்பி மகனும் 6 பேர் கொலை வழக்கில் தொடர்புடைய மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் சுரேஷ்குமார், உறவினர் கவுசிகnullபதி உள்ளிட்ட பலர் மீது ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. ஏற்கனவேமுன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அங்கம்மாள் காலனி நில அபகரிப்பு மற்றும் பிரிமியல் ரோலர் மில் விற்பனை ஆகிய பிரச்சனைகளில் புகாரின் அடிப்படையில் முதல் குற்றவாளியாக போலீசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் அவர் சென்னை ஐ கோர்ட்டில் முன் ஜாமீன் பெற்றார். பின்னர் ஐ கோர்ட் உத்தரவு படி கடந்த 25 ந் தேதி சேலம் மாநகர நில அபகரிப்பு மீட்பு தனிப்பிரிவு போலீசாரிடம் சரணடைந்தார்.பின்னர் போலீசார் அவரை 3 நாள் காவலில் வைத்து விசாரணை நடத்தி கடந்த புதன் கிழமை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர் ஜாமீனில் விடுதலை ஆனார். ஆனால் தினமும் கோர்ட் உத்தரவு படி காலை 8 மணிக்கு மாநகர டவுன் காவல் நிலையத்தின் உள்ளே உள்ள நில அபகரிப்பு மீட்பு தனிப்பிரிவு போலீசார் ஆஜராகி கையெழுத்திட்டு வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சேலம் தாசநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பாலமோகன்ராஜ்(54) என்பவர் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சொக்கலிங்கத்திடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் தனக்கு சொந்தமான 20,460 சதுர அடி நிலம் சேலம் நிலவாரப்பட்டியில் சுகம் மெட்ரிக் பள்ளி அருகில் இருப்பதாகவும் கடந்த 2007 ஆம் ஆண்டில் தி.மு.க. அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் தூண்டுதல் பேரில் அவரது உறவினர் கவுசிக nullபதி பெயருக்கு ரூ.40 லட்சத்திற்கு மிரட்டி பவர் எழுதி வாங்கி நிலத்தை அபகரித்து விட்டதாகவும் கூறி வீரபாண்டி ஆறுமுகம், அவரது உறவினர் கவுசிக nullபதி, தம்பி மகனும், மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவருமான பாரப்பட்டி சுரேஷ்குமார்,பத்திர எழுத்தார் சுந்தரம், தி.மு.க.பிரமுகர் நாராயணன் மற்றும் சிலர் என 8 பேர் மீது புகார் கொடுத்திருந்தார். அந்த புகாரின் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும்படி மாநகர நில அபகரிப்பு மீட்பு தனிப்பிரிவு போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் சொக்கலிங்கம் உத்தரவிட்டிருந்தார். அதன் பேரில் உதவி கமிஷனர் பிச்சை, இன்ஸ்பெக்டர் மணிவாசம் மற்றும் போலீசார் 147(நான்கு பேருக்குமேல் சட்ட விரோதமாக கூடுதல்), 447(அச்சுறுத்துதல்) 506/1(கொலை மிரட்டல் விடுத்தல்)386,மற்றும் 387 உள்பட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
நேற்று காலை 8 மணியளவில் தனது வழக்கறிஞர் மூர்த்தி, உதவியாளர் சேகர் ஆகியோருடன் காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்த வீரபாண்டி ஆறுமுகம் கையெழுத்து போட்டுவிட்டு வெளியே செல்ல கிளம்பும் போது போலீசார் அவரை கைது செய்வதாக அறிவித்தனர். உடனே அவரது வக்கீல் மூர்த்தியும், உதவியாளர் சேகரும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.இதையடுத்து இந்த தகவல் தி.மு.க.வினரிடையே பரவியது உடனே அவர்கள் டவுன் காவல் நிலையம் முன்பு திரண்டு போலீசாருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அப்போது டவுன் காவல் நிலையம் முன்பு பாதுகாப்பிற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அப்போது மாநகர துணை போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா அங்கு வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டார். பின்னர் போலீசார் தி.மு.க.முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் நில அபகரிப்பு வழக்கில் கைது செய்வதாக அறிவித்தனர்.பின்னர் அவரை வேனில் ஏற்றி மாஜிஸ்திரேட் வீட்டிற்கு அழைத்து செல்ல போலீசார் முயன்றனர்.இதை பார்த்த தி.மு.க.தொண்டர்கள் உடனே போலீஸ் வேன் முன்பு படுத்து திடீர் மறியலில் ஈடுப்பட்டனர். போலீசார் அவர்களை அப்புறப்படுத்த உடனே தடியடி நடத்தி அவர்களை அப்புறப்படுத்தினர். பின்னர் வீரபாண்டி ஆறுமுகத்தை போலீசார் சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். அவர் நன்றாக இருப்பதாக உறுதியளித்ததை அடுத்து சேலம் அய்யந்திருமாளிகையில் உள்ள சேலம் கோர்ட் எண் 4 மாஜிஸ்திரேட் ஸ்ரீவித்யா வீட்டில் ஆஜர்படுத்தினர் .வழக்கை விசாரித்த ஜட்ஜ் ஸ்ரீவித்யா அவரை வரும் 12 ந் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார்.
அப்போது மாஜிஸ்திரேட் வீடு முன்பு குவிந்த தி.மு.க.வினர் போலீசார் பொய் வழக்கு போடுவதாக கூறி போலீசாருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். உடனே போலீசார் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு சிறிது பதட்டம் ஏற்பட்டது. பின்னர் வீரபாண்டி ஆறுமுகத்தை வேனில் ஏற்றி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக ஏற்கனவே 2 வழக்குகளில் தொடர்பு உடைய தலைமறைவாக உள்ள கவுசிக nullபதி, பாரப்பட்டி சுரேஷ்குமார், பத்திர எழுத்தர் சுந்தரம், தி.மு.க.பிரமுகர் நாரயணன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
வீரபாண்டி ஆறுமுகம் கைது செய்யப்பட்ட சம்பவம் அறிந்ததும் மாநகரில் சேலம் பழைய பஸ்நிலையம், புதிய பஸ்நிலையம், கலெக்டர் அலுவலக ரவுண்டானா, 5 ரோடு, சூரமங்கலம், திருவாக்கவுண்டனூர் பை-பாஸ் உள்ளிட்ட இடங்களிலும், மாவட்ட அளவில் சில இடங்களிலும் தி.மு.க.வினர் கூட்டமாக கூடி அப்பகுதியில் கடைகளை அடைக்க சொல்லி ரகளையில் ஈடுப்பட்டனர். சேலம் பெரியார் மேம்பாலத்தில் சென்ற 2 டவுன் அரசு பஸ்களையும், திருவாக்கவுண்டனூர் பை-பாஸ் பகுதியில் வந்து கொண்டிருந்த 2 அரசு புநகர் பேருந்துகளையும், அழகாபுரம் பகுதியில் 2 பஸ்கள், அஸ்தம்பட்டி பகுதியில் 1 பஸ்கள் என மொத்தம் 10 க்கும் மேற்பட்ட பஸ்களின் கண்ணாடிகளை உடைத்தனர். சில இடங்களில் சாலை மறியலிலும் ஈடுப்பட்டனர். இதில் 2 பெண் பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று ரகளையில் ஈடுப்பட்டவர்களை கைது செய்தனர். மாநகரின் முக்கிய பகுதிகளான பழைய பஸ்நிலையம், புதிய பஸ்நிலையம், ஜங்சன், கலெக்டர் அலுவலகம், 5 தியேட்டர் பகுதி, 5 ரோடு உள்ளிட்ட பகுதி ஙிபலத்த போலீஸ் பாதுகாப்பு போட்டனர். மாவட்ட அளவிலும் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடபட்டிருந்தது. வீரபாண்டி ஆறுமுகம் கைதால் மாநகரம் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டாலும் அந்த பரபரப்பை உடனடியாக போலீசார் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்து மாநகரை இயல்பு வாழ்க்கைக்கு மாற்றினர். சேலம் மாநகர் மற்றும் மாவட்டங்களில் நேற்று மாலை வரை ரகளை மற்றும் வன்முறையில ஈடுப்பட்ட தி.மு.க.மாவட்ட துணை செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், மாநகர பொருளாளர் அன்வர் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 6 hours ago |
ஸ்வீட் பால்.4 days 12 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 11 hours ago |
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பா? - மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும் : சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்
01 May 2024புதுடெல்லி : கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்க
-
மொபைல் செயலிகள் மூலம் மோசடி: நாடு முழுவதும் சி.பி.ஐ. சோதனை
01 May 2024புதுடில்லி : மொபைல் செயலிகள் மூலம் முதலீடு திட்டங்கள் என்ற பெயரில் நடைபெற்று வரும் மோசடி குறித்து நாடு முழுவதும் தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் சி.பி.ஐ.
-
ஒரு கோடி முறை 'கோவிந்த கோடி' எழுதிய மாணவி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் பங்கேற்க தேவஸ்தானம் அனுமதி
01 May 2024திருமலை : ஒரு கோடி முறை 'கோவிந்த கோடி' எழுதிய பெங்களூரு மாணவி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் பங்கேற்க தேவஸ்தான அனுமதி வழங்கியுள்ளது.
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்
-
இ.வி.எம். வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றி இடி மின்னல் காரணமாக சி.சி.டி.வி-கள் செயலிழப்பு : தென்காசி மாவட்ட கலெக்டர் விளக்கம்
01 May 2024தென்காசி : வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகம் மற்றும் பாதுகாப்பு அறைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழையினால் சிசிடிவி கேமிராக்கள் செயல