எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை,ஆக.- 17 - நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை என்பது போல, நல்லவர் ஒருவர் ஆட்சிக்கு வந்துள்ளார். தனால் விவசாயிகள் அனைவரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் திகழ்ந்துள்ளனர் என்று சட்டபேரவையில் சரத்குமார் புகழாரம் சூட்டினார். விவசாயமானிய கோரிக்கை மீதான விவாதம் நேற்று சட்டபேரவையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் வேளாண்மைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் எனக்கு பேச வாய்ப்பளித்த தங்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாட்டை பொறுத்தவரையில் பண்டைக்காலம் முதல் வேளாண்மை முக்கியத் தொழிலாக போற்றப்பட்டு வருகிறது. நெல்லுக்கு இறைத்தநீர் வாய்கால் வழியோடு புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்- தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லாருக்கம் பெய்யும் மழை- என்று மூதுரையில் தமிழ் மூதாட்டி ஒளவையார் கூறியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா ஆட்சி செய்யும் இந்நாளில் கர்நாடக மாநிலம். தலைக்காவிரியில் பெருமளவு மழை பெய்துள்ளது. காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஏற்கனவே நிரம்பிய மேட்டூர் அணையை மீண்டும் நிரப்பி தமிழக விவசாயிகளை பெருமகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழ்நாட்டில் மகிழ்ச்சிகரமாக விவசாயம் செய்ய பெரிதும் மழையை நம்பியுள்ளார்கள். இந்தியாவில் மழை குறைந்து பெய்யும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாகும். ஆறு,குளங்கள்,ஏரிகள் ஆகியவற்றின் பாசனம் 95 சதவீதம். நிலத்தடி நீர் 85 சதவீதம் பயன்படுத்தப்பட்ட பின்னரும், தமிழ்நாட்டில் நிகர பாசனப்பரப்பு 58 சதவீதம் தான் உள்ளது என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை சொட்டுநீர், தெளிப்புநீர்ப் பாசனமுறைகள் மூலமே இந்த 58 சதவீதத்தை உயர்த்த முடியும் என்பதை இந்த அரசு உணர்ந்துள்ளது.
நுண்ணீர் பாசன உத்திகளில் இஸ்ரேல் நாடு சிறந்து விளங்குகிறது. அதேபோல் ஐப்பான் நாடும் சிறந்த வேளாண் உத்திகளை கையாண்டு அதிக அளவு உற்பத்தி செய்கிறது. சுனாமி, எரிமலை வெடித்தல் போன்ற இயற்கை சீற்றங்கள் இருந்தபோதும் உற்சாகத்துக்கு பெயர்பெற்ற ஐப்பானிய மக்கள், உணவில் தன்னிறைவு பெற்றுள்ளனர். அதேபோல் பாலைவன நாடான துபாயும், சிறந்த வேளாண் உத்திகளை கையாண்டு, அங்கு மிகவும் அரிதாக கிடைக்கும் தண்ணீரைப் பயன்படுத்தி உணவு உற்பத்தி செய்து வருகின்றனர்.
1991 ம் ஆண்டிலேயே நுண்ணீர் பாசன உத்திகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டாலும், செலவு காரணமாக விவசாயிகளிடையே பெருமளவில் வரவேற்பை பெறவில்லை. முதல்வர் ஜெயலலிதாவின் அரசு இதனை நன்கு ஆய்வு செய்து நிதிநிலை அறிக்கையில், சொட்டுநீர், தெளிப்புநீர் பாசனத்திற்கு,சிறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும், மற்றவர்களுக்கு 75 சதவீதமும் மானியம் அளித்திருப்பது மகிகழ்ச்சிக்குரிய செய்தியாகும், இ ந்த மானிய சலுகை 100 சதவீதமும் விவசாயிகளுக்கு சென்றடையும் வகையில்,அரசு செயல்படுத்தும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
மேலும் 2011-2012 ஆண்டில் நுண்ணீர் பாசன இயக்கத்தின் கீழ் 1,25,000 ஏக்கர் நிலப்பரப்பு நுண்ணீர் பாசன முறையின் கீழ் 152 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் கொண்டுவரப்படுவது, கிடைக்கும் நீர் ஆதாரத்தை சிறப்பாகப் பயன்படுத்த வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை.
விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் தரும் கால்நடை வளர்ப்பிற்கு இந்த அரசு முக்கியத்துவம் அளித்து, பால் உற்பத்தியில் இரண்டாம் வெண்மை புரட்சியை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அடுத்த ஐந்தாண்டுளில் வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு 60,000 கறவை மாடுகளில் முதல்தவணையாக 2011-2012 ம் ஆண்டில் 56 கோடி ரூபாய் செலவில் 12,000 ஜெர்சி போன்ற கலப்பின மாடுகளை இலவசமாக வழங்க இருப்பது, விவசாயிகளின் வயிற்றில் பால்வார்க்கும் செய்தியாகும்.
மேலும் இந்த அரசு 2011-2012 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் விவசாயக் கூலித் தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா 12,000 ரூபாய் மதிப்புள்ள ஆடுகளை 135 கோடி ரூபாய் செலவில் வழங்கவிருப்பதை வரவேற்கின்றேன். தமிழ்நாட்டில் தீவன பற்றாக்குறை உள்ளது என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதால், கறவை மாடுகள், ஆடுகள் வழங்கப்படும் குடும்பங்களுககு பசுமை மற்றும் உலர் தீவனங்களையும், மானிய விலையில் வழங்க இயலுமா என்பதையும் முதல்வர் கனிவுடன் பரிசீலிக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் ஆங்காங்கே அரசு புறம்போக்கு நிலங்கள் இருப்பின் அவற்றை கால்நடை மேய்ச்சல் நிலங்களாக மேம்படுத்த இயலுமா என்பதையும் அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வே ண்டுகிறேன். அதிகத் தீவனம், அதிகப்பால் என்ற நிலைதான் கலப்பின மாடுகளை பொறுத்து உள்ளது. குறைந்த தீவனம் அதிகபால் என்ற முறையில் இந்தியாவில் ராஜஸ்தான் தார்பாக்கர், ஆந்திரா நெல்லூர்,ஓங்கோல் மாடுகள் குறைந்த தீவனத்தில் 20 மதல் 25 லிட்டர் அதிக பால்தரக்கூடியவை. இவற்றின் சாணமும், கோமியமும், கலப்பின மாடுகளை விட சக்திமிகுந்த மக்கிய உரத்தை அளிக்க கூடியவை. மேலும் உழவு செய்ய இவை பெரிதும் பயன்படும். இரண்டாம் வெண்மை புரட்சி மூலம் சாதிக்க இருக்கும் இந்த அரசு சிறந்த நாட்டு மாடுகளையும் இந்த திட்டத்தில் வழங்க வாய்ப்பள்ளதா என்பதையும் பரிசீலிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். இவ்வாறு சரத்குமார் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 12 hours ago |
ஸ்வீட் பால்.4 days 18 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 17 hours ago |
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்
-
இ.வி.எம். வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றி இடி மின்னல் காரணமாக சி.சி.டி.வி-கள் செயலிழப்பு : தென்காசி மாவட்ட கலெக்டர் விளக்கம்
01 May 2024தென்காசி : வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகம் மற்றும் பாதுகாப்பு அறைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழையினால் சிசிடிவி கேமிராக்கள் செயல