முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூடங்குளம் உண்மையை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்-தா.பாண்டியன்

செவ்வாய்க்கிழமை, 11 அக்டோபர் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, அக்.- 11 - கூடங்குளம் போராட்டத்தை கொச்சைப்படுத்தியதாக கூறுவதை மறுத்துள்ள தா.பாண்டியன், கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரத்தில் அரசுசாராத நிபுணர் தலைமையில் குழு அமைத்து, உண்மையை கண்டறிந்து மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் பத்திரிக்கைகளுக்கு விடுத்துள்ள அறிக்கை வருமாறு:கூடங்குளம் போராட்டத்தை நான் கொச்சைப் படுத்திவிட்டதாக பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது. இது உண்மக்கு மாறானது. மக்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதை கம்யூனிஸ்டுகள் எந்தக் காலத்திலும் செய்ய மாட்டார்கள். நான் அளித்தப் பேட்டியின் ஒருபகுதியை, நான் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாக காட்ட, சிலர் முயற்சி செய்கிறார்கள். இது உண்மைக்கு மாறானது என்பதை ஊடகங்களின் மூலம் தமிழக மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். கூடங்குளத்தில் மக்களின் அச்சத்தைப் போக்காத வரை அணுஉலைகளை இயக்கக் கூடாது என்தும், புதியக்கட்டுமானங்கள் எதையும் தொடங்கக்கூடாது என்பதும் தான் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் நிலைபாடாகும். இதனை இந்தியப் பிரதமரிடம் விண்ணப்பமாக தேசிய செயலாளர் தோழர் டி ராஜா கொடுத்துள்ளார். இந்நிலையில் ஊடகங்கள் உருவாக்கும் குழப்பங்களை நம்ப வேண்டாம் என்று இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இன்றைய இந்தியாவிற்கு அணுவிசையைப் பயன்படுத்துவதைப் பற்றிய தெளிவானக் கொள்கையில்லை. உலக கார்பரேட்டுகளின் வியாபாரத்திற்கு வசதி செய்துக் கொடுப்பதைத் தவிர நாட்டுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தைப்போக்கும் எந்த நடவடிக்கையும் இவர்களிடம் இல்லை. அணுவிசையைப் பயன்படுத்தும் தெளிவான கொள்கை ஒன்றை உருவாக்க வேண்டும் இதனைப் போன்றே அரசு சார்ந்த நிபுணர்குழுவின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அரசுசாராத நிபுணர் தலைமையில் குழு அமைத்து, உண்மையை கண்டறிதும் மக்களுக்கு தெரிவிக்க  வேண்டும் என்று கட்சியின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் தா.பாண்டியன் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்