எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோவை, அக்.- 15 - தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமியின் மகன் பைந்தமிழ்பாரிக்கு கோவை மாநகராட்சி மேயர் வெங்கடாசலம் கைப்பாவையாக செயல்பட்டார் என தமிழக முதல்வர் ஜெயலலிதா கோவையில் நடந்த அ.தி.மு.க. பிரச்சார கூட்டத்தில் பேசினார். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் 17 மற்றும் 19 தேதிகளில் இருகட்டமாக நடக்கிறது. இதனையொட்டி தமிழக முதல்வர் ஜெயலலிதா அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். நேற்று முன் தினம் தூத்துகுடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரத்தை துவக்கினார். நேற்று சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். ஈரோட்டில் இருந்து பிரச்சாரத்தை முடித்து விட்டு ஹெலிகாப்டர் மூலம் திருப்பூர் வந்தார். அங்கு இருந்து மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் கோவை வந்தார். கோவை ஸ்டேன்ஸ் பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேடில் நேற்று மதியம் வந்து இறங்கினார். பின்பு, கார் மூலம் நஞ்சப்பாரோடு 100 அடி ரோடு வழியாக பொது கூட்டம் நடக்கும் சிவானந்த காலனிக்கு சென்றார். அங்கு வேனில் இருந்தபடி, கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளர் செ.ம.வேலுச்சாமி மற்றும் 100 வார்டுகளில் போட்டியிடும் கவுன்சிலர் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது தமிழக முதல்வர் ஜெயலலிதா பேசிதாவது:- கடந்த ஐந்து ஆண்டு காலத்தல், பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகளில் தி.மு.க-வினரே இருந்தனர். அனைத்துத் திட்டங்களிலும் ஊழல் தலைவிரித்து ஆடியது. இவர்கள், உங்களை முன்னேற்றம் அடையச் செய்வதற்குப் பதிலாக தங்களை முன்னேற்றிக் கொண்டனர். கோயம்புத்தூர் மாநகராட்சி நிர்வாகம், கடந்த ஐந்து ஆண்டுகளாக காங்கிரஸ் வசம் தான் இருந்து வந்தது. இருப்பினும், திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமியின் மகனுடைய கட்டுப்பாட்டில் தான் இருந்தது. இவர் வைத்தது தான் சட்டம். இவருடைய கைப்பாவையாகத் தான் மேயர் செயல்பட்டார். தங்களுடைய தேவைகளை கவுன்சிலர்கள் நிறைவேற்றிக் கொண்டார்களே தவிர உங்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளையும், செய்து தரவில்லை. கவுன்சிலர்கள் என்றாலே, உங்கள் மத்தியில் ஓர் அச்ச உணர்வு தான் இருந்தது. அந்த அளவிற்கு திமுக-வினர் வெறுக்கத்தக்க வகையில் நடந்து கொண்டனர். உங்களை மொத்தத்தில். நீங்களும் வளர்ச்சி அடையவில்லை, இந்த கோயம்புத்தூர் மாநகராட்சியும் வளர்ச்சி அடையவில்லை. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் உங்களுடனேயே இருந்து உங்களின் குறைகளை தீர்ப்பவர்களாக, உங்களின் தேவைகளை நிறைவேற்றுபவர்களாக விளங்குவார்கள், உங்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டார்கள் என்ற உறுதியை உங்களுக்கு நான் அளிக்கிறேன்.
உங்களின் முக்கிய கோரிக்கைகளான,
குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், இரண்டாவது பில்லூர் குடிநீர் திட்டம் மற்றும் கவுண்டம்பாளையம்-வடவள்ளி கூட்டுக் குடிநீர்த் திட்டம்.
பாதாள சாக்கடைத் திட்டத்தினால் பழுதடைந்த சாலைகளை செப்பனிடுதல்.
குப்பை கூளங்களை அகற்றி சுகாதார வசதிகளை மேம்படுத்தும் வகையில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தினை விரைந்து செயல்படுத்துதல்.
போக்குவரத்து நெரிசாலை சீர்செய்யும் வகையில், பாலங்கள் சுரங்கப் பாதைகள் அமைத்தல்.
கோவை மத்திய பேருந்து நிலையத்தை விரிவாக்கும் திட்டம்.
உள் விளையாட்டு அரங்கம் அமைக்கும் திட்டம்.
வன விலங்குகள் பூங்காவினை விரிவுபடுத்தும் திட்டம் ஆகியவை நிறைவேற்றித் தரப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், இப்பகுதி மக்களின் அடிப்படைத் தேவைகள் குறித்து ஆராய்த்து அவற்றை நிறைவேற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும். மொத்தத்தில், ஒரு நேர்மையான, திறமையான, தூய்மையான, ஒளிவு மறைவற்ற, மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாக் கொண்ட ஒரு நிர்வாகம் செயல்படும் என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் நலனுக்கு எதிராக நடந்து கொண்ட தி.மு.க. உள்ளாட்சி பிரதிநிதிகளை தூக்கி எறிவதற்கான நல்ல சந்தர்ப்பம் உங்களுக்கு தற்போது கிடைத்துள்ளது. இந்தப் பொன்னான வாய்ப்பினை நீங்கள் தவறாமல் பயன்படுத்திக் கொண்டு, கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிடும் கழக வேட்பாளர் அன்புச் சகோதரர் செ.ம.வேலுசாமி அவர்களுக்கும், மாநகராட்சி மாமன்ற உறுப்பனர் பதவிகளுக்கு போட்டியிடும் கழக வேட்பாளர்களுக்கும், பிற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களில் போட்டியிடும் கழக வேட்பாளர்களுக்கும், நம் இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் கண்ட வெற்றிச் சின்னமாம் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அனைவரையும் மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று வாக்காளப் பெருமக்களாகிய உங்களை எல்லாம் அன்போடு வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.
சட்டமன்றத் தேர்தலில், கொங்கு மண்டல மக்களாகிய நீங்கள் கழகத்திற்கு 100 சதவீத வெற்றியை அளித்து வரலாற்றுச் சாதனையை படைத்தீர்கள்.
அதே போன்று, உள்ளாட்சித் தேர்தலிலும் மீண்டும் ஒரு திருப்பு முனையை நீங்கள் உருவாக்கிக் காட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, அதை நிச்சயம் செய்வீர்கள் என்ற நம்பிக்கையினை தெரிவித்து கொள்கிறேன்.
உங்கள் நலனுக்கு எதிராக நடந்து கொண்ட தி.மு.க. உள்ளாட்சி பிரதிநிதிகளை தூக்கி எரிவதற்கான நல்ல சந்தர்ப்பம் இப்பொழுது உங்களுக்கு கிடைத்திருக்கிறது. இந்த பொன்னான வாய்ப்பினை நீங்கள் தவறாமல் பயன்படுத்தி கொண்டு கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிடும் கழக வேட்பாளர் அன்பு சகோதரர் செ.ம.வேலுசாமி அவர்களுக்கும், கழக மாமன்ற வேட்பாளர்களுக்கும் உங்கள் பொன்னான வாக்குகளை அளித்து அமோக வெற்றி பெறச் செய்யுங்கள்
இவ்வாறு பேசினார்.
முதல்வர் ஜெயலலிதா பிரச்சாத்தின் போது தமிழக வேளாண்மைதுறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சட்டமன்ற உறுப்பினர்கள் தா.மலரவன், சின்னச்சாமி, ஓ.கே.சின்னராஜ், செ.தாமோதிரன், முத்துகருப்பண்ணசாமி முன்னாள் அமைச்சர் ப.வெ.தாமோதிரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 12 hours ago |
ஸ்வீட் பால்.4 days 18 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 17 hours ago |
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
-
10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் கருணாநிதி பாடம் அறிமுகம்
01 May 2024சென்னை : 10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த பாடம் அறிமுகமப்படுத்தப்பட்டுள்ளது.