எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சங்கரன்கோவில்.அக்.24. உடல் நலக்குறைவால் மரணமடைந்த தமிழக அமைச்சர் கருப்பசாமியின் உடல் அடக்கம் நேற்று அவரது சொந்த ஊரான புளியம்பட்டியில் நடைபெற்றது. சென்னையில் தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக அமைச்சர் கருப்பசாமி நேற்று முன்தினம் மதியம் காலமானார். இரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த அமைச்சர் கருப்பசாமி தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் தராமல் மரணமடைந்த அவரின் உடலுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று முன்தினம் மருத்துவமனையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரின் மனைவி மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல்; கூறியவர் உங்களுக்கு எது வேண்டுமானலும் என்னிடம் தயங்காமல் கேளுங்கள். உங்கள் குடும்பத்திற்கான எல்லா உதவிகளையும் நான் செய்வேன் என் கடமை அது என்று கண் கலங்கியபடி கூறினார். முதலமைச்சர் உடன் சபாநாயகர் ஜெயக்குமார், அமைச்சர்கள் செங்கோட்டையன், செந்தமிழன், கோகுல இந்திரா, செல்லுார் ராஜு, சின்னய்யா, சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அனைத்து அமைச்சர்களும் இறுதி சடங்கில் பங்கேற்க முதலமைச்சர் உத்தரவிட்டார். பின்னர் அரசு மரியாதையுடன் சொந்த ஊரான சங்கரன்கோவிலுக்கு நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு உடல் எடுத்து வரப்பட்டது. நேற்று காலை 6 மணிக்கு சொந்த ஊரான புளியம்பட்டி கிராமத்தை அடைந்த கருப்பசாமியின் உடல் பொதுமக்களின் பார்வைக்காக அங்குள்ள அரங்கத்தில் வைக்கப்பட்டது. காலை முதலே சங்கரன்கோவில் மட்டுமல்லாது நெல்லை மாவட்டத்தின் அனைத்து ஊர்களிலும் இருந்து மக்கள் சாரை சாரையாக அஞ்சலி செலுத்த வந்த வண்ணம் இருந்தனர். சங்கரன்கோவில் நகரின் அனைத்து கடைகளும் அஞ்சல் செலுத்தும் வண்ணமாக அடைக்கப்பட்டிருந்தன. புளியம்பட்டி ஊரில் உள்ள அனைத்து மக்களும் நேற்று முன்தினம் இரவு முதலே சாப்பிடாமல் தங்கள் துக்கத்தை வெளிப்படுத்தினர். ஊரின் மக்களின் கண்ணீர் போல காலை 6.30 மணி முதல் வானமும் கண்ணீர் விட்டு அழுதது. மழை கொட்ட தொடங்கியது. மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் மழை பெய்யாவிட்டாலும் சங்;கரன்கோவில் பகுதியில் மட்டும் கொட்டிய மழை மதியம் 2.30 மணி வரை அவரை அடக்கம் செய்யும் நேரத்திற்கு மட்டும் இடைவெளி விட்டதை போல நின்றது. ஏற்கனவே அடக்கத்திற்கான ஏற்பாடுகளை சங்கரன்கோவில் நகர செயலாளர் கண்ணன், மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர் விஜேயேந்திர பிதரி, துணை கண்காணிப்பாளர் மதிவாணன் ஆகியோர் செய்து வந்தனர். சங்கரன்கோவில் ராஜபாயையம் மெயின்ரோட்டில் அமைந்துள்ள அமைச்சரின் குடும்பத்தினருக்கு சொந்தமான தோட்டத்தில் உடல் அடக்கத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. முதல்வர் உத்தரவை ஏற்று நேற்று காலை முதலே சங்கரன்கோவிலில் அமைச்சர்கள் குவியத்தொடங்கினர். முன்னதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் அக்கட்சியினர் அமைச்சருக்கு அஞ்சலி செலுத்தினர். ராஜ்யசபா உறுப்பினர் தங்கவேலு தலைமையில் திமுகவினர் அஞ்சலி செலுத்தினர். மாலை 3.15 தொடங்கிய உடல் அடக்க ஏற்பாடுகள் 4.30 மணிக்கு முடிவடைந்தது. முன்னதாக அமைச்சர்கள் பன்னீர்செல்வம், செங்கோட்டையன், உதயகுமார்,கோகுல இந்திரா, செந்துார் பாண்டியன், செல்லப்பாண்டியன், சண்முகநாதன், விஸ்வநாதன், சண்முகவேலு, முனுசாமி, அக்ரி கிருடி;ணமூர்த்தி, வைத்தியலிங்கம், பழனியப்பன், சண்முகம், செல்லுார் ராஜு, பச்சமால், பழனிச்சாமி, ராமலிங்கம், வேலுமணி, சின்னையா, சம்பத், தங்கமணி, செந்தமிழன், செல்விராமஜெயம், ராமண்ணா, சுப்பிரமணியன், செந்தில் பாலாஜி, ஜெயபால், புத்திசந்திரன், விஜய், சிவபதி, முகம்;மது ஜான் உள்ளிட்ட 32 அமைச்சர்கள் , முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன், டாக்டர் துரையப்பா, கோபால், பாலாஜி, வைகை செல்வன், முத்துராமலிங்கம், பரஞ்சோதி உள்ளிட்டவர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன், தேவேந்திர குல வேளாளர் சங்க தலைவர் பசுபதி பாண்டியன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அரசின் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் செல்வராஜ், காவல் துறை துணைத்தலைவர் வரதராஜு, காவல்துறை கண்காணிப்பாளர் விஜேயேந்திர பிதரி ஆகியோர் மரியாதை செலுத்தினர். காவல் துறையின் இசைக்குழுவினர் பிரிவு இசையை இசைத்தனர். பின்னர் 96 குண்டுகள் வானத்தை நோக்கி சுடப்பட்டது. அரசு மரியாதை முடிந்தவுடன் அமைச்சரின் உடல் அவரின் குடும்பத்தினர் வசம் ஒப்படைக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த துக்க நிகழ்சிகளில் மாவட்ட அதிமுக துணை செயலாளர் வி.பி.மூர்த்தி, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் ஜெய்சங்கர், மாவட்ட பொறுப்பாளர்கள் கந்தவேல், கணபதி, லட்சுமணன், நயினார், ரமேடி;, சங்கரன்கோவில் நகராட்சி தலைவி முத்துச்செல்வி, முன்னாள் எம்.எல்.ஏ சங்கரலிங்கம்,வெங்கடேசன், நகர அம்மா பேரவை செயலாளர் அப்துல் கனி, முருகன், தொகுதி இணை செயலாளர் வேல்ச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் பரமசிவம், முருகையா, செளந்தர், தங்கப்பாண்டி, ஆறுமுகம், சின்னராஜ், குமாரவேல், காளிராஜ், சுப்பையா, உமாமகேஸ்வரன்,மாரியம்மாள், மாரியப்பன், ஜெயலட்சுமி, ஆறுமுகப்பாண்டியன், சோடாகுழந்தைவேல், ஆப்பரேட்டர் மணி, வைரவன், மேசையா, அந்தோணி உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.18 hours 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 17 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 17 hours ago |
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
27 Apr 2024சென்னை, தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை நேற்றும் உயர்ந்து விற்பனையானது.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
அரசியல் எதிரிகளை பழிவாங்க அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் பதில் மனு
27 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் பதில்மனு தாக்கல் செய்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறைய
-
உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருள் எப்படி கிடைக்கிறது? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
27 Apr 2024மதுரை:உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Apr 2024சென்னை, தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்:பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகளை வழங்க உத்தரவு
27 Apr 2024சென்னை:அதிகரிக்கும் வெப்பத்தால் பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இரண்டு குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒருவர் பலி
27 Apr 2024இம்பால், மணிப்பூரில் 2 குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் இளைஞர் பலியான சம்பவத்தில், வன்முறை பரவி விடாமல் தடுப்பதற்காக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளன
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் இயல்பைவிட 83 சதவீதம் மழை குறைவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் கோடைக்கால பருவமழை இயல்பைவிட 83 சதவீதம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத
-
அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பதே எங்கள் நோக்கம்: மல்லிகார்ஜூன கார்கே பேட்டி
27 Apr 2024திஸ்பூர், நாட்டின் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதே எங்கள் நோக்கம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.