எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,மார்ச்.- 13 - கடுமையான விலைவாசி உயர்வு, தி.மு.க.வின் ரூ. 1.76 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல் மற்றும் தி.மு.க. ஆட்சியின் அலங்கோலங்கள், கருணாநிதி குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம் இவற்றின் காரணமாக மக்களுக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டிருப்பதால் அ.தி.மு.க. கூட்டணிவரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் 200 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி வாகை சூடும் என்று தனது கருத்துக் கணிப்பின் மூலம் வெளியிட்டிருக்கிறது இந்திய வாக்காளர் பேரவை. இந்த பேரவை கோவையை மையமாக வைத்து இயங்கி வரும் ஒரு அமைப்பு ஆகும்.
கடந்த 5 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் மக்கள் சந்தித்த இன்னல்கள் ஒன்றல்ல, இரண்டல்ல. அவை ஓராயிரம் என்று சொல்லலாம். தொடர்ந்து 5 ஆண்டுகளாக இடைவிடாத மின்வெட்டை அமுல்படுத்தி மக்களை வாட்டி வதைத்தது. உப்பு முதல் உளுந்து வரை அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறியது, செங்கல், சிமிண்ட், மணல், ஜல்லி போன்ற கட்டுமானப் பொருட்களின் தாறுமாறான விலை உயர்வை கட்டுப்படுத்த தவறியது, பெட்ரோல் விலை உயர்வை கண்டிக்கத் தவறியது இவையெல்லாம் தமிழக மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ரேசன் அரிசி கடத்தல், மணல் கடத்தல், மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை போன்றவற்றாலும் தமிழக மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இவை தவிர, அன்றாடம் நடக்கும் கொலைகள், கொள்ளைகள் இவற்றாலும் மக்கள் வெறுத்துப் போயிருக்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில்தான் அடுத்த மாதம் 13 ம் தேதி தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. தே.மு.தி.க. போன்ற முக்கிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்த கூட்டணி 200 க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி வாகை சூடும் என்று இந்திய வாக்காளர் பேரவை தெரிவித்துள்ளது. கோவையை மையமாக வைத்து இயங்கி வரும் இந்த அமைப்பில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர் கூட்டமைப்பினர் மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
கடந்த 2004 ல் நடந்த தேர்தலில் இந்திய அளவில் ஒரு மெகா சர்வே நடத்தி சோனியா காந்தி தலைமையில் இடதுசாரிகள் ஆதரவுடன் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமையும் என்ற கருத்துக் கணிப்பை இந்த அமைப்புதான் வெளியிட்டது. அதற்கடுத்து 2006 சட்டமன்ற தேர்தலின் போது இழுபறியான சீட்டுக்களை பெற்று தமிழகத்தில் மைனாரிட்டி ஆட்சிதான் ஏற்படும் என்ற சர்வேயையும் இந்த அமைப்புதான் வெளியிட்டது.
தற்போதும் இந்த அமைப்பு ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியது. கடந்த 5 ஆண்டுகளில் கருணாநிதி அரசு பற்றி வெளிவந்த விமர்சனங்கள் பலவற்றை கேள்விகளாக தொகுத்து அவற்றுக்கு மக்களிடம் பதில்களை இந்த அமைப்பு பெற்றுள்ளது. முதல் கேள்வியாக, தமிழ்நாட்டில் நடக்கும் தி.மு.க. ஆட்சி நல்லாட்சி என்று நினைக்கிறீர்களா? என்று கேட்கப்பட்டிருந்தது. அதற்கு வெறும் 5 சதவீதம் பேர் ஆம் என்றும் 95 சதவீதம் பேர் இல்லை என்றும் பதிலளித்திருக்கிறார்கள். ஒரே குடும்பத்தினரின் கையில் ஆட்சி இருப்பதை விரும்புகிறீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு இல்லை என்று 90 சதவீதம் பேரும், ஆமாம் என்று 10 சதவீதம் பேரும் பதிலளித்துள்ளனர்.
ரூபாய்க்கு ஒரு கிலோ அரசி வழங்குவது, கடத்தல் வியாபாரிகளுக்குத்தான் அதிக பயனுள்ளதாக மக்கள் கருதுகிறார்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு ஆம் என்று 80 சதவீதம் பேரும், இல்லை என்று 20 சதவீதம் பேரும் குறிப்பிட்டுள்ளனர். தி.மு.க. ஆட்சியே வர வேண்டும் என்று விரும்புகிறீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு 98 சதவீதம் பேர் இல்லை என்றே கருத்து கூறியிருக்கிறார்கள். மொத்தமுள்ள 25 கேள்விகளில் 22 கேள்விகளுக்கு தி.மு.க. ஆட்சிக்கு எதிரான கருத்துக்களையே 93.40 சதவீதம் பேர் கூறியிருக்கிறார்கள்.
நிலமற்ற ஏழைகளுக்கு 2 ஏக்கர் இலவச நிலம் என்ற வாக்குறுதியை அரசு நிறைவேற்றவில்லை என்று மக்கள் நினைக்கிறார்களா? தி.மு.க. ஆட்சி கூடாது என்று விரும்புவோர் ஓரணியில் திரள வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்களா? என்பது போன்ற கேள்விகளுக்கும் ஆம் என்றே 100 க்கு நூறு சதவீதம் பேர் தங்கள் பதிலை டிக் அடித்திருக்கிறார்கள். இவர்களது சர்வேயின்படி கடுமையான விலைவாசி உயர்வு, ஆ. ராசா மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டு, கருணாநிதி குடும்பத்தின் அதிகார ஆதிக்கம் ஆகியவை தமிழக மக்களிடம் கடுமையான வெறுப்பை ஏற்படுத்தியிருப்பது தெளிவாக தெரிகிறது.
இலவச கலர் டி.வி பற்றி கேட்ட போது, கேபிள் இணைப்பை இலவசமாக கொடுக்கவில்லையே என்று மக்கள் கிண்டலாக பதிலளித்தார்களாம். இந்த முறையும் ஓட்டுக்கு பணம் கொடுப்பார்களே... என்று கேட்ட போது கொடுக்கட்டும், யார் வீட்டு பணம். எங்கள் பணம்தானே. பணத்தை வாங்கிக் கொண்டு மாற்றிப் போடுவோம் என்று மக்கள் பதிலளித்தார்களாம். மக்களின் இந்த பதில் மூலம் ஆய்வு செய்த போது 234 தொகுதிகளில் 200 க்கும் மேற்பட்ட தொகுதிகளை அ.தி.மு.க. கூட்டணி நிச்சயம் கைப்பற்றும் என்று தெரிகிறது என இந்திய வாக்காளர் பேரவை தெரிவித்துள்ளது. இந்த சர்வே கடந்த பிப்ரவரி மாதம் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 12 hours ago |
ஸ்வீட் பால்.4 days 18 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 17 hours ago |
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்:ஆஸி., ஆப்கான் அணிகள் அறிவிப்பு
01 May 2024சிட்னி:டி-20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய, ஆப்கானிஸ்தான் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில்...
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
இ.வி.எம். வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றி இடி மின்னல் காரணமாக சி.சி.டி.வி-கள் செயலிழப்பு : தென்காசி மாவட்ட கலெக்டர் விளக்கம்
01 May 2024தென்காசி : வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகம் மற்றும் பாதுகாப்பு அறைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழையினால் சிசிடிவி கேமிராக்கள் செயல
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்
-
10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் கருணாநிதி பாடம் அறிமுகம்
01 May 2024சென்னை : 10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த பாடம் அறிமுகமப்படுத்தப்பட்டுள்ளது.