எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, டிச.- 4 - தானே புயல் பாதிப்பை சீர் செய்ய மொத்தம் ரூ.800 கோடி நிதி உதவிக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். நிவாவண உதவிகளை நேரில் வழங்க இன்று முதல்வர் ஜெயலலிதா கடலூர் செல்கிறார். இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 30.12.2011 அன்று காலை 6.30 மணிக்கு, தானே புயல் புதுச்சேரிக்கும் கடலூருக்கும் இடையே கரையை கடந்து, கடலூர் மாவட்டத்திற்கு மிகப் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தியது. தானே புயல் தமிழகத்தை தாக்கும் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்த உடனேயே, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளுமாறு கடலோர மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும், சம்பந்தப்பட்ட துறைகளுக்கும் நான் உத்தரவிட்டேன். இதனைத் தொடர்ந்து, மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டது. இது மட்டுமல்லாமல், 6,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதன் விளைவாக உயிர்ச் சேதங்கள் பெருமளவிற்கு தவிர்க்கப்பட்டன. புயலால் ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நிவாரண ஏற்பாடுகள் குறித்து புயல் தாக்கிய அன்றைய தினமே (30.12.2011) எனது தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தினையடுத்து, உடனடி நிவாரணப் பணிகள் மற்றும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை சீரமைத்திட 150 கோடி ரூபாயினை விடுவித்து நான் ஆணையிட்டதோடு, நிவாரணப் பணிகளை மேற்பார்வையிடும் வகையில், பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அமைச்சர்களையும், உயர் அதிகாரிகளையும் அனுப்பி வைத்தேன். நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. 6 மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள், 11 துணை ஆட்சியர்கள் மற்றும் 4 வளர்ச்சி திட்ட அதிகாரிகள் முகாமிட்டு நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர். இந்தக் கடுமையான தானே புயலின் தாக்குதல் காரணமாக கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் 35 பாதுகாப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, அதில் 6,000 பேர் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீnullர் வழங்கப்பட்டன. நான் ஏற்கெனவே அறிவித்தபடி, இந்த பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்ட குடும்பங்கள் ஒவ்வொன்றிற்கும் 1,000 ரூபாய் வீதம் நிவாரண உதவி வழங்கப்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல், ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 கிலோ அரிசி, ஒரு வேட்டி, ஒரு சேலை, மற்றும் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் ஆகியவையும் வழங்கப்பட்டு வருகின்றன. இது தவிர, மின்சார பாதிப்புக்குள்ளாகிய பகுதிகளில் மெழுகுவர்த்திகள் வழங்கப்பட்டன.
கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஏறத்தாழ 3.5 லட்சம் குடிசை மற்றும் ஓடு வேய்ந்த வீடுகள் பகுதியாகவும், முழுமையாகவும் சேதமடைந்துள்ளன. பகுதியாக பாதிக்கப்பட்டுள்ள குடிசைகளுக்கு நிவாரண உதவியாக தலா 2,500 ரூபாயும், முழுமையாக பாதிக்கப்பட்டுள்ள குடிசை மற்றும் ஓடுகளை இழந்த வீடுகளுக்கு தலா 5,000 ரூபாயும் எனது ஆணையின்படி வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கென 114 கோடி ரூபாய் அரசுக்கு செலவு ஏற்படும். மத்திய அரசின் பேரிட நிவாரண வரையறையின்படி, சேதம் அடைந்த குடிசைகளுக்கு 2,000 ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்று இருந்தாலும், மேலே குறிப்பிட்டபடி கூடுதல் நிவாரணத் தொகைகள் எனது அரசால் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிவாரண உதவிகளை உடனடியாக வழங்குவதற்காக, பிற மாவட்டங்களிலிருந்து 100 வட்டாட்சியர் மற்றும் துணை வட்டாட்சியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.இந்த நிவாரண உதவிகளை 5.1.2012-க்குள் வழங்கும்படி நான் உத்தரவிட்டுள்ளேன். தானே புயல் காரணமாக, கடலூர் மாவட்டத்திலுள்ள 5 நகராட்சிகளில் உள்ள 174 வார்டுகளிலும் குடிநீnullர் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. அதில், 122 வார்டுகளில் குடிநீnullர் விநியோகம் தற்போது சீரமைக்கப்பட்டு, குழாய் மூலம் குடிநீnullர் வழங்கப்பட்டு வருகிறது. இதுவன்றி, 57 லாரிகள் மூலம் மீதமுள்ள 52 வார்டுகளுக்கு குடிநீnullர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. நகராட்சிகளில் 74 விழுக்காடு அளவுக்கு தற்போது குடிநீnullர் வழங்கப்பட்டு வருகிறது. இன்னும் இரண்டொரு நாட்களில் குடிநீnullர் விநியோகம் முற்றிலும் சீரமைக்கப்படும். கடலூர் மாவட்டத்திலுள்ள 16 பேரூராட்சிகளிலும் ஜெனரேட்டர் மூலம் குடிநீnullர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பெரும்பாலான பேரூராட்சிகளில் முழு அளவு குடிநீnullர் வழங்கப்பட்டு வருகிறது. ஒருசில பேரூராட்சிகளில் மட்டும் சுமார் 40 முதல் 50 விழுக்காடு அளவுக்கு குடிநீnullர் வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பேரூராட்சிகளிலும் ஓரிரு நாட்களில் முழு அளவு குடிnullநீர் வழங்கப்பட்டுவிடும். கிராமப் பகுதிகளைப் பொறுத்தவரையில், கடலூர் மாவட்டத்தில் 11 கூட்டுக் குடிநீnullர்த் திட்டங்கள் உள்ளன. இதில் 5 கூட்டுக் குடிநீnullர்த் திட்டங்களுக்கு மின் வசதி சீரமைக்கப்பட்டு குடிநீnullர் வழங்கப்பட்டு வருகிறது. எஞ்சிய 6 கூட்டுக் குடிநீnullர்த் திட்டங்களில் ஜெனரேட்டர் மூலம் குடிநீnullர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. மேலும், 309 ஜெனரேட்டர்கள் வாடகைக்கு பெறப்பட்டு அதன் மூலமும், 127 தண்ணீர் லாரிகள் மூலமும் ஊரகப் பகுதிகளுக்கு குடிநீnullர் வழங்கப்பட்டு வருகிறது. ஊரகப் பகுதிகளில் குடிநீnullர் வழங்குவதைக் கண்காணிக்க, ஊரக வளர்ச்சித் துறை ஆணையர் தலைமையில் 8 அதிகாரிகள் அனுப்பப்பட்டு பணிகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர். குடிநீnullர் விநியோகத்திற்கென 50 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும்.
தானே புயல் தாக்குதல் காரணமாக, கடலூர் மாவட்டத்தில் 27 உயர் அழுத்த மின் கோபுரங்கள், 4,500 விநியோக மின்மாற்றிகள், 36,000 மின் கம்பங்கள், 350 கிலோ மீட்டர் nullநீளத்திற்கான மின் கம்பிகள் சேதமடைந்துள்ளன. இவற்றை போர்க்கால அடிப்படையில் சீர்செய்ய நான் உத்தரவிட்டதன் அடிப்படையில், கடலூர், பண்ருட்டி, நெல்லிக்குப்பம் ஆகிய இடங்களில் 50 விழுக்காடு அளவிற்கும், விருத்தாசலம், சிதம்பரம் நகரங்களில் 90 விழுக்காடு அளவிற்கும் மின் விநியோகம் சீர் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம் 1,000 பணியாளர்களை மற்ற மாவட்டங்களிலிருந்து அனுப்பி, கடலூர் மாவட்டத்தில் மின் விநியோகத்தை சீர் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. 5.1.2012-க்குள் அனைத்து நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் மின் விநியோகம் சீர்செய்யப்பட்டுவிடும். இந்த மின் சீரமைப்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளும் வகையில், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு 300 கோடி ரூபாய் நிதி உதவியை உடனடியாக வழங்க நான் ஆணையிட்டுள்ளேன்.
தானே புயல் தாக்குதல் காரணமாக, கடலூர் மாவட்டத்தில் 58,000 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்களும், 23,500 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த முந்திரி பயிர்களும், 5,752 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு பயிர்களும், 8,947 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த வாழை, பயறு, பருத்தி, எண்ணெய் வகைகள் மற்றும் பலா மரங்கள் போன்றவையும் சேதம் அடைந்துள்ளன. விழுப்புரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களையும் சேர்த்து சுமார் 2 லட்சம் ஹெக்டேர் பரப்பளவுக்கு பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. நெல் மற்றும் நீnullர்ப்பாசனம் பெறும் பயிர்களுக்கு ஹெக்டேருக்கு 4,000 ரூபாயும், பலா, முந்திரி போன்ற நிரந்தரப் பயிர்களுக்கு ஹெக்டேருக்கு 6,000 ரூபாயும் நிவாரணமாக வழங்கப்பட மத்திய அரசின் பேரிட நிவாரண வரையறையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும், நெற் பயிருக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 10,000 ரூபாயும், மற்ற நீnullர்ப்பாசன பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 7,500 ரூபாயும் நிவாரணம் வழங்க நான் ஆணையிட்டுள்ளேன். மேலும், பலா, முந்திரி போன்ற தோட்டப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 9,000 ரூபாய் என்றும் உயர்த்தி வழங்க நான் ஆணையிட்டுள்ளேன். பயிர் சேதங்களுக்காக மொத்தம் 166 கோடி ரூபாய் அளவுக்கு நிவாரணம் வழங்கப்படும்.
கடலூர் மாவட்டத்தில், சாதாரணமாக நாள் ஒன்றுக்கு 20,500 லிட்டர் பால் விநியோகிக்கப்படுகிறது. எஞ்சிய பால் தேவை தனியார் பால் நிறுவனங்களால் நிறைவு செய்யப்பட்டு வந்தது. தானே புயல் காரணமாக, தனியார் நிறுவனங்கள் விநியோகம் செய்யும் பால் அளவை குறைத்துள்ளதால், கடலூர் மாவட்டத்தில் பால் பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு, ஆவின் நிறுவனம் நாள் ஒன்றுக்கு 35,000 லிட்டர் பால் விநியோகம் செய்து வருகிறது. 2,500 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு குளிரூட்டும் வசதி செய்யப்பட்ட வாகனங்கள் சென்னையிலிருந்து கடலூருக்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும், சில்லறை அளவில் பால் விநியோகம் செய்வதற்காக, 9,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட நடமாடும் பால் டேங்கர் கடலூருக்கு அனுப்பப்பட்டு உள்ளது. தானே புயல் காரணமாக, கடலூர் மாவட்டத்தில், கட்டுமரங்கள், வல்லம், படகுகள், விசைப் படகுகள் போன்ற சுமார் 4,600 மீன்பிடி படகுகள் சேதமடைந்துள்ளன. முழுவதும் சேதமடைந்த பாரம்பரிய மீன்பிடி படகுகளுக்கு 7,500 ரூபாயும், பகுதி சேதமடைந்தவைகளுக்கு 2,500 ரூபாயும் வழங்குவதற்குத்தான் மத்திய அரசு வரையறை செய்துள்ளது. எனினும், மீனவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இதனை தற்போது உயர்த்தி வழங்க நான் ஆணையிட்டுள்ளேன். இதன்படி, முழுவதும் சேதமடைந்த வலைகளுடன் கூடிய கட்டுமரங்களுக்கு 32,000 ரூபாயும், பகுதி சேதமடைந்த வலைகளுடன் கூடிய கட்டுமரங்களுக்கு 10,000 ரூபாயும், முழுவதும் சேதமடைந்த கு.சு.ஞ. படகுகள் மற்றும் வலைகளுக்கு 75,000 ரூபாயும், பகுதி சேதமடைந்த படகுகள் மற்றும் வலைகளுக்கு 20,000 ரூபாயும், முழுவதும் சேதமடைந்த விசைப் படகுகளுக்கு 5 லட்சம் ரூபாயும், பகுதி சேதமடைந்த விசைப் படகுகளுக்கு 3 லட்சம் ரூபாயும், வலைகள் மட்டுமே சேதம் அடைந்த இனங்களுக்கு 10,000 ரூபாயும் வழங்கப்படும். இதற்கென, 20 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும்.
தானே புயல் காரணமாக, 519 கால்நடைகள் மற்றும் 5,100 கோழிகள் இறந்துவிட்டன. நான் ஏற்கெனவே உயர்த்தி வழங்க அறிவித்தபடி, மாடு ஒன்றுக்கு 20,000 ரூபாயும், ஆடு ஒன்றுக்கு 2,000 ரூபாயும், கோழி ஒன்றுக்கு 100 ரூபாயும் நிவாரண உதவி வழங்கப்படும். தானே புயல் காரணமாக, கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலான சாலைகளில் மரங்கள் விழுந்ததன் காரணமாக, 1,458 இடங்களில் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 90 இயந்திரங்கள், 3 கிரேன்கள், 9 லாரிகள் ஆகியவற்றை பயன்படுத்தி சுமார் 1,000 பணியாளர்கள் மரங்களை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதன் காரணமாக 31.12.2011 அன்றே அனைத்து சாலைகளும் சீர் செய்யப்பட்டன. சாலைகளில் ஏற்பட்ட சேதங்களை தற்காலிகமாக சீர்செய்ய 150 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இதனை உடனடியாக வழங்க நான் ஆணையிட்டுள்ளேன்.
குடிசைகள் மற்றும் ஓட்டு வீடுகள் சேதத்திற்கு நிவாரண உதவியாக 114 கோடி ரூபாயும்; குடிnullர் விநியோகத்திற்காக 50 கோடி ரூபாயும்; மின் பணிகளை சீரமைக்கும் வகையில் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்காக 300 கோடி ரூபாயும்; பயிர் சேதங்களுக்காக 166 கோடி ரூபாயும்; மீன்பிடி படகுகள் சேதத்திற்கான நிவாரணத் தொகையாக 20 கோடி ரூபாயும்; சாலைகளின் தற்காலிக சீரமைப்பிற்காக 150 கோடி ரூபாயும்; உயிரிழப்பு, கால்நடை இழப்பு, பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டது உட்பட பிற இனங்களுக்காக 50 கோடி ரூபாயும்; ஆக மொத்தம் 850 கோடி ரூபாய் நிதி வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இதில், தானே புயல் தாக்கிய அன்றே விடுவிக்கப்பட்ட 150 கோடி ரூபாய் போக, எஞ்சிய 700 கோடி ரூபாயை உடனடியாக வழங்க நான் ஆணையிட்டுள்ளேன்.
தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்திற்கு 4.1.2012 அன்று நான் நேரில் சென்று நிவாரண உதவிகளை வழங்க உள்ளேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதனைத் தொடர்ந்து, அமைச்சர் பெருமக்கள் கடலூர் மாவட்டத்திலேயே தங்கியிருந்து நிவாரண உதவிகளை வழங்குவார்கள்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 3 min ago |
ஸ்வீட் பால்.4 days 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 5 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
பீகாரில் கியாஸ் சிலிண்டர் வெடித்து 3 குழந்தைகளுடன் தாய் உயிரிழப்பு
01 May 2024பாட்னா : பீகாரில் கியாஸ் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 3 குழந்தைகளுடன் தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சியாகும் : நடிகர் விஜய் மே தின வாழ்த்து
01 May 2024சென்னை : உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி என்று மே தினத்தையொட்டி தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்த
-
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.19 குறைவு
01 May 2024சென்னை : 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ.19 குறைந்து ரூ.1,911 விற்பனை செய்யப்படுகிறது.
-
கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பா? - மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும் : சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்
01 May 2024புதுடெல்லி : கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்க
-
ஜாபர் சாதிக்கிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி
01 May 2024புதுடெல்லி : போதைப்பொருள் வழக்கு தொடர்பாக ஜாபர் சாதிக்கிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
-
சத்தியமங்கலம் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி
01 May 2024ஈரோடு : சத்தியமங்கலம் அருகே இரு கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.