எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜன.10 - மதுபானம், பெட்ரோலியப் பொருட்கள் போன்றவற்றிற்கு சரக்கு மற்றும் சேவை வரிச்சட்டத்தின்கீழ் வரிவிதிப்பதற்கு தமிழக அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் மத்திய விற்பனை வரிச் சட்டத்தின் கீழ் இழப்பீட்டுத் தொகை விஷயத்தில், தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ரூ.3800 கோடி நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது என்றும் அதை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் தமிழக வணிகவரித்துறை அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கோரியுள்ளார்.
மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் மாநில நிதியமைச்சர்கள் கொண்ட அதிகாரமளிக்கப்பட்ட குழுவின் தலைவர் தலைமையில், பல்வேறு மாநிலங்களின் நிதி வரிவிதிப்பு அமைச்சர்களின் மாநாடு நடந்தது. மாநாட்டிற்கான ஏற்பாடுகளை மத்திய பிரதேச நிதியமைச்சர் செய்திருந்தார். இம்மாநாட்டில் தமிழக அரசின் சார்பாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு பேசியதாவது:-
சேவைவரியில் எதிர்மறை பட்டியில் தயாரிப்பது குறித்தான மத்திய அரசின் கருத்துருவைப் பொறுத்தமட்டில், இந்நேர்வில் பல மாநில அரசுகளை சேர்ந்த செயலாளர்கள், ஆணையர்கள் அடங்கிய குழுவின் பரிந்துரைகளை நாங்கள் பொதுவாக ஏற்றுக் கொள்கிறோம். சேவைவரியில் எதிர்மறை பட்டியலை அறிமுகப்படுத்துவதன் மூலம், அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வரிவிதிப்பு இனங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது. இந்திய அரசியல் சட்டத்தின் மத்திய பட்டியலில் வரிசை எண்.97-ல் உள்ள எஞ்சிய அதிகாரங்களைக் கொண்டு மாநில அரசுகளின் வரிவிதிப்பு வரம்பிற்குள் மத்திய அரசு பலமுறை தலையிட்டுள்ளது. இந்நேர்வில், விரிவான கலந்தாலோசிப்பிற்கு பின்னும், மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸ்-ன் வல்லுநர்களின் ஆலோசனைகளின் படியும் எங்களுடைய குறிப்பு விரைந்து அனுப்பி வைக்கப்படும்.
சென்ற கூட்டத்தில் பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் மதுபான பொருட்கள் ஆகியவற்றை சரக்கு மற்றும் சேவைவரிச் சட்டத்தின் கீழ் விரிவிதிப்பதற்கான கோரிக்கையின் மீது மாநில அரசுகளின் குறிப்புகள் கோரப்பட்டுள்ளது. சிறிய விநியோக சங்கிலி தொடர் கொண்ட பொருட்களில் வரி ஏய்ப்பு மிக அதிக அளவில் நடைபெறுகிறது என்பது கடந்த கால அனுபவங்களின் மூலம் நாங்கள் அறிந்துள்ளோம். மேலும், பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் மதுபானங்கள், சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் வரி விதிப்பிற்கு உட்படுத்தப்பட்டால் தற்போது உள்ள வரி விகிதத்தின் அடிப்படையில் ஈட்டப்படும் வருவாயினை காத்திட மாநில அரசுகள் சரக்கு மற்றும் சேவை வரிக்கு கூடுதலாக விதிக்கப்படும் வரியானது, சரக்கு மற்றும் சேவை வரிக்கு உட்படுத்தப்படும் வரியைவிட அதிகமாக இருக்கக்கூடிய நிலை ஏற்படும். இதுபோன்ற பல காரணங்களுக்காக, பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் மதுபான பொருட்கள் ஆகியவற்றை சரக்கு மற்றும் சேவைவரிச் சட்டத்தின் கீழ் வரிவிதிப்பதற்கு தமிழக அரசிற்கு ஏற்புடையதல்ல. இது தொடர்பாக எங்களுடைய கருத்துக்களை அதிகாரமளிக்கப்பட்ட குழுவிற்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய விற்பனை வரிச் சட்டத்தின் கீழான இழப்பீட்டுத் தொகையை பொறுத்தமட்டில், நிலுவையில் உள்ள தொகையினை விரைந்து வழங்கிட மத்திய அரசின் நிதியமைச்சகத்திடம் அதிகாரமளிக்கப்பட்ட குழு வலியுறுத்த வேண்டும் என மீண்டும் ஒருமுறை கேட்டுக் கொள்கிறோம். பலமுறை கேட்டு கொண்டதற்கு பின்பும் தமிழ்நாட்டிற்கு வரப்பெற வேண்டிய தொகையான ரூ.3,800 கோடி நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. குறைந்தப்பட்ச மதிப்புக் கூட்டுவரியானது 4 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடாக அதிகரிக்கப்படவில்லை என்ற அற்ப காரணத்தைக் காட்டி 2010-2011-ம் ஆண்டிற்கு மட்டும் ரூ.2,000 கோடி நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது.
பங்குச் சந்தை தொடர்பான பரிமாற்றங்களுக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான முத்திரைத் தீர்வை விதிக்க விளையும் மத்திய அரசின் கருத்துரு குறித்து மாநில அரசுகளின் கருத்தினை அதிகாரமளிக்கப்பட்ட குழு கோரியுள்ளது. இதுதொடர்பாக, ஏற்கனவே பங்குச் சந்தை தொடர்பான பரிமாற்றங்களுக்கு முத்திரைத் தீர்வை விகிதத்தை முடிவு செய்யும் முன் தமிழக அரசைக் கலந்தாலோசிக்க வேண்டும் என்பதற்கு உட்பட்டு இக்கருத்துருவிற்கு தமிழக அரசின் இசைவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாநாட்டை ஏற்று நடத்தும் நான் மீண்டும் ஒருமுறை மத்திய பிரதேச அரசின் நிதியமைச்சர் மற்றும் அவருடைய அணியினை சிறப்பான விருந்தோம்பலுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 3 min ago |
ஸ்வீட் பால்.4 days 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 5 hours ago |
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
பீகாரில் கியாஸ் சிலிண்டர் வெடித்து 3 குழந்தைகளுடன் தாய் உயிரிழப்பு
01 May 2024பாட்னா : பீகாரில் கியாஸ் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 3 குழந்தைகளுடன் தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சியாகும் : நடிகர் விஜய் மே தின வாழ்த்து
01 May 2024சென்னை : உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி என்று மே தினத்தையொட்டி தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்த
-
கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பா? - மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும் : சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்
01 May 2024புதுடெல்லி : கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்க
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்
-
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.19 குறைவு
01 May 2024சென்னை : 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ.19 குறைந்து ரூ.1,911 விற்பனை செய்யப்படுகிறது.
-
சத்தியமங்கலம் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி
01 May 2024ஈரோடு : சத்தியமங்கலம் அருகே இரு கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.