எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேனி - தேனி மாவட்டம் தேனி ஒன்றிய கழகம் சார்பில் கழகத்தின் 47வது தொடக்க விழா பொதுக்கூட்டம் கொடுவிலார்பட்டியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஒன்றிய கழக செயலாளர் ஆர்.டி.கணேசன் தலைமை தாங்கினார். தயாளன், வீரமணிகர்ணன், முத்துபாலாஜி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கொடுவிலார்பட்டி ஊராட்சி செயலாளர் ராமர் வரவேற்றார். மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான், தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.பார்த்திபன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ப.ரவீந்திரநாத்குமார், தலைமை கழக பேச்சாளர்கள் திண்டுக்கல் குணசேகரன், குமரி பிரபாகரன் அகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ப.ரவீந்திரநாத்குமார் பேசும்போது கழகத்தின் 47வது தொடக்க விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஆலமரமாக, விருட்சமாக வளர்ந்துள்ள நமது கழகத்தில் வந்து இணைந்திருக்கின்ற, தாய்கழகத்திற்கு திரும்பி வந்த அனைவருக்கும் உரிய மரியாதையை என்றென்றும் நமது கழகம் வழங்கி வருகின்றது. திராவிட முன்னேற்ற கழகத்தை ஆட்சி கட்டிலில் ஏற்றி கருணாநிதியை முதல்வராக்குவதற்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் உழைப்பும், புரட்சித்தலைவருக்காக தமிழக மக்கள் கொடுத்த ஆதரவும் தான். இந்நிலையில் திமுகவை தோற்றுவித்த பேரறிஞர் அண்ணாவின் கோட்பாடான கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற கொள்கையிலிருந்து வழிதவறி நடந்த கருணாநிதியிடம் தவறை சுட்டிக்காட்டிய புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரை பொய்பழி சுமத்தி கட்சியிலிலிருந்து கருணாநிதி நீக்கினார். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரை ராமாவரம் தோட்டத்தில் அவருடைய ரத்தத்தின் ரத்தமான தொண்டர்கள் சந்தித்து தொண்டர்களுக்காக ஒரு இயக்கத்தை துவக்குங்கள் என்று கூறினர். அதனை தொடர்ந்து 1972ல் தொண்டர்கள் இயக்கமாக கழகத்தை தோற்றுவித்து; மானசீக குருவான அண்ணாவின் பெயரையும் உருவத்தையும் சேர்த்து அதிமுகவை துவக்கினார். 1973ல் திண்டுக்கல் இடைத்தேர்தலில் கழகம் அமோக வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து 1977ல் தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றி தொடர்ந்து தனது இறுதிகாலம் வரை தமிழகத்தில் புரட்சித்தலைவர் ஆட்சி செய்தார். புரட்சித்தலைவர் அவர்கள் புரட்சித்தலைவி அம்மா அவர்களை கழக கொள்கை பரப்பு செயலாளராக நியமித்தவுடன் கழகத்திற்காக புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கடுமையாக உழைத்தார். புரட்சித்தலைவர் உடல்நலம் குன்றி மருத்துவமனையில் இருந்தபோது நடைபெற்ற தேர்தலில் கடுமையாக உழைத்து கழகத்தை அமோக வெற்றி பெறச் செய்தார். புரட்சித்தலைவர் அவர்கள் புரட்சித்தலைவி அம்மா அவர்களிடம் நமது கழகம் தொண்டர்கள் இயக்கமாக இருக்க வேண்டும் என்று சத்தியம் வாங்கினார்.
அவருடைய கொள்கைப்படி கடுமையாக உழைத்த புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 17 லட்சம் தொண்டர்களாக இருந்த கழகத்தை ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட இயக்கமாக மாற்றினார். புரட்சித்தலைவர் 3 முறை, புரட்சித்தலைவி 4 முறை என 7 முறை தமிழகத்தை ஆண்ட கட்சி என்ற பெருமையை நமது கழகம் பெற்றிருக்கிறது. மேலும் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தற்போது பாராளுமன்றத்தில் 3வது பெரிய கட்சியாக உருவாக்கி இருக்கிறார். மேலும் நமது பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.பார்த்திபனை இந்தியாவில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற 3வது வேட்பாளர் என்ற பெருமையை பெற செய்தார். அம்மாவுடன் இருந்த சசிகலா குடும்பத்தினர் 16 பேர் துரோகம் செய்தனர் என்று கட்சியிலிருந்தும், வீட்டிலிருந்தும் விரட்டினார். துரோகம் செய்தது தெரியாது என்றும், என்னை மட்டும் தங்களுக்கு சேவை செய்ய சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கெஞ்சிய சசிகலாவை மட்டும் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சேர்த்துக் கொண்டார். தினகரனின் தில்லாலங்கடி வேலையால் ஆர்.கே. நகரில் குக்கர் சின்னம் வெற்றி பெற்றது. ஆனால் வரும் இடைத்தேர்தலில் ஆண்டிபட்டி, பெரியகுளம் உள்ளிட்ட 20 தொகுதிகளிலும் டெபாசிட் கூட வாங்க முடியாது என தங்கதமிழ்செல்வன், கதிர்காமு ஆகியோருக்கும் தெரியும். கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கழகத்தையும் ஆட்சியையும் சிறப்பாக வழிநடத்திக் கொண்டிருக்கின்றனர். கழகத்தின் 50வது பொன்விழா, கழகத்தின் நூற்றாண்டு விழாவின் போதும் நமது கழக ஆட்சியே தமிழகத்தில் இருக்கும். வரும் இடைத்தேர்தலிலும், பொதுதேர்தலிலும் கழகம் அமோக வெற்றி பெறும். அதற்கு நாம் அனைவரும் ஒருமித்து செயல்படுவோம் என்று சிறப்புரையாற்றினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் மயிலைபரமசிவம், மாவட்ட பொருளாளர் செல்லமுத்து, மாவட்ட கழக துணை செயலாளர் முருக்கோடை ராமர், பொதுக்குழு உறுப்பினர் டி.டி.சிவக்குமார், ஒன்றிய கழக செயலாளர்கள் பெரியகுளம் அன்னபிரகாஷ், ஆண்டிபட்டி லோகிராஜன், கடமலைமயிலை கொத்தாளமுத்து, சின்னமனூர் விமலேஸ்வரன், நகர் கழக செயலாளர்கள் பெரியகுளம் என்.வி.ராதா, தேனி கிருஷ்ணகுமார், கம்பம் ஆர்.ஆர்.ஜெகதீஸ், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் முருகேசன், மாவட்ட மருத்துவரணி செயலாளர் டாக்டர் ஆனந்தகுமார், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் பாண்டியராஜ், மாவட்ட பாசறை செயலாளர் நாராயணன், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநரணி செயலாளர் நாகலாபுரம் முருகேசன், மாவட்ட கழக துணை செயலாளர் வசந்தாநாகராஜ், தேனி வேளாண் கூட்டுறவு சங்க தலைவர் ஜெயலட்சுமிகணேசன், தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் பாலசந்தர், பேரூர் கழக செயலாளர்கள் பழனிசெட்டிபட்டி தீபன்சக்கரவர்த்தி, வீரபாண்டி ரத்தினசபாபதி, முன்னாள் உத்தமபாளையம் ஒன்றிய கழக செயலாளர் அப்துல்காதர்ஜெய்லானி, தமிழன் பட்டாசுகடை தமிழன், மற்றும் நிர்வாகிகள், தொணடர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஒன்றிய கழக நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 12 hours ago |
ஸ்வீட் பால்.4 days 18 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 17 hours ago |
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்
-
இ.வி.எம். வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றி இடி மின்னல் காரணமாக சி.சி.டி.வி-கள் செயலிழப்பு : தென்காசி மாவட்ட கலெக்டர் விளக்கம்
01 May 2024தென்காசி : வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகம் மற்றும் பாதுகாப்பு அறைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழையினால் சிசிடிவி கேமிராக்கள் செயல