முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விடுதலை புலிகள் விவகாரம்: ஐகோர்ட்டில் அரசு கோரிக்கை

செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, பிப்.21 - விடுதலைப் புலிகளுக்கான தடையை நீக்க கோரி ம.தி.மு.க. பொது செயலாளர் வை.கோ. மற்றும் வழக்கறிஞர் புகழேந்தி தாக்கல் செய்த வழக்கு நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எலிப்பி.தர்மராவ், நீதிபதி வேணுகோபால் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் வை.கோ. நேரில் ஆஜராகி, விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடையை மத்திய அரசு நீக்க மறுத்தது தவறானது என்று வாதிட்டார். தமிழக அரசு சார்பாக அரசு தலைமை வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் ஆஜராகி, விடுதலை புலிகளுக்கு தடைவிதித்து சரியானது என மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த நிலையையே தமிழக அரசும் எடுத்துள்ளது. ஆகவே வை.கோ. மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டார். இதை தொடர்ந்து வழக்கு விசாரணையை ஏப்ரல் 9-ந் தேதிககு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்