எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை, தன் குடும்பத்தை பற்றி மட்டுமே சிந்திக்க கூடிய கட்சிதான் தி.மு.க. என்றும், எந்தக் காலத்திலும் ஸ்டாலினால் முதல்வர் பதவிக்கு வர முடியாது என்றும் மதுரை மாவட்டம் கள்ளிக்குடியில் நடந்த கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
மதுரை மாவட்டம் கள்ளிக்குடியை தனி வட்டமாக அறிவித்ததற்கு நடைபெற்ற நன்றி அறிவிப்பு கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
பெரிய வட்டங்களை தனியாகப் பிரித்து சிறிய வட்டங்களாகப் பிரிக்கும் போதுதான் கடைக்கோடிப் பகுதியில் உள்ள மக்கள் எளிதாக வட்டாட்சியர் அலுவலகத்திற்குச் சென்று தங்களுக்குத் தேவையான மற்றும் உதவிகளைப் பெற முடியும். அந்த வகையில்தான் கள்ளிப்பட்டி வட்டம் தனி வட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாவின் அரசுதான் அதிக எண்ணிக்கையில் புதிய வட்டங்களை அமைத்துக் கொடுத்திருக்கிறது. இன்றைக்கு எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு இந்த அரசை குறை கூறிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் காலத்தில் எதையும் செய்ததாக தெரியவில்லை. எந்தச் சாதனையும் பெரிதாக செய்ததாக தெரியவில்லை. மத்தியில் ஆட்சியில் இருந்தார்கள். மாநிலத்திலும் ஆட்சி செய்தார்கள். ஆனால் அவர்கள் குடும்பம் மட்டும் வளம் பெற்றது. தி.மு.க. கட்சி என்றால் அந்த கட்சிதான் குடும்ப கட்சி. ஆனால் அ.தி.மு.க. ஒட்டுமொத்த மக்களுக்கும் சொந்த கட்சி. இந்தக் கட்சியில் ஜனநாயகம் இருக்கிறது. இந்தக் கட்சியில் சாதாரண நிலையில் இருப்பவர்களும் உயர்ந்த நிலைக்கு வர முடியும். சட்டமன்ற உறுப்பினராக, பாராளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக, ஏன் முதல்வராக கூட அ.தி.மு.க.வில்தான் வர முடியும். வேறு எந்தக் கட்சியிலும் வர முடியாது. தி.மு.க.வில் கருணாநிதி முதல்வராக இருந்தார். அதற்குப் பிறகு ஸ்டாலின் முதல்வராக வருவதற்கு துடிக்கிறார். எந்தக் காலத்திலும் அவர் முதல்வராக வர முடியாது. அது வேறு விஷயம். அதற்குப் பிறகு வாரிசு. அவரின் மகன் உதயநிதியை கட்சிக்கு கொண்டு வருவதற்கு திட்டம் தீட்டி முயன்று பார்க்கிறார். இதுதான் வாரிசு அரசியல். மக்களைப் பற்றி சிந்திக்க மாட்டார்கள். தன் மக்களைப் பற்றி சிந்திக்கக் கூடிய கட்சிதான் தி.மு.க.
சிந்திக்கக் கூடிய கட்சி. என்னைப் பொறுத்தவரை கிராமத்தில் பிறந்து வாழ்ந்து வருபவன். மேடையில் இருப்பவர்கள் பெரும்பாலும் கிராமத்தில் பிறந்து வாழ்ந்து வருகிறவர்கள். கிராமத்தில் இருக்கின்ற விவசாயிகளுக்கு என்ன பிரச்சனை என்று தெரியும். அதில் வேலை செய்கின்றவர்களுக்கு என்ன பிரச்சனை என்பதும் தெரியும். மக்களோடு மக்களாக நின்று பழகி படிப்படியாக உயர்ந்து இன்றைக்கு உங்களின் பேராதவரோடு தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று இருக்கிறேன். ஆகவே விவசாயத்துக்கு முன்னுரிமை அளிக்கின்ற அரசு இந்த அரசு என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். அதே போல விவசாய தொழிலாளி வளர வேண்டும். வாழ வேண்டும். சிரித்து வாழ வேண்டும். மகிழ்ச்சியோடு வாழ வேண்டும். அதற்குத் தேவையான திட்டங்களை அம்மாவின் அரசு வழங்கும். அம்மா வசதி படைத்த குடும்பத்தில் பிறந்தவர். சாதாரண குடிசையில் வாழும் ஏழைகள் கூட கிரைண்டர், மிக்ஸியை பயன்படுத்த வேண்டும் என்பதற்காக மிக்ஸி, கிரைண்டர் வழங்கியவர் அம்மா. அவர் எடுத்த நடவடிக்கையால் இன்றைக்கு மக்கள் செழிப்போடு இருக்கின்ற காட்சியை பார்க்கின்றோம். எதிர்க்கட்சியினர் வேண்டுமென்றே திட்டமிட்டு இன்றைக்குப் பொய்யான செய்தியைப் பரப்பி வருகிறார்கள். பொங்கலை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி உள்ளீர்கள். பொங்கல் பரிசுப் பொருட்களுடன் ஆயிரம் ரூபாயை வழங்கினோம். இதைக் கூட எதிர்க்கட்சிகள் குறை கூறினார்கள். தி.மு.க. இதனைத் தடுத்து நிறுத்த வழக்கு போட்டது. ஏழைகளுக்கு கொடுப்பதைக்கூட தடுத்து நிறுத்துகிற கட்சிதான் தி.மு.க. எம்.ஜி.ஆர். அம்மா ஆகிய இருவரும் மக்களுக்காக வாழ்ந்த தலைவர்கள். மக்கள்தான் அவர்களுக்குக் குடும்பம். மக்களின் பிரச்சனையை தன் பிரச்சனையாக கருதிச் செயல்பட்டவர்கள். அந்த வழியில் வந்த அம்மாவின் அரசையும் மக்கள்தான் வழிநடத்திச் சென்று கொண்டிருக்கிறார்கள். இந்த அரசுக்குத் துணை நிற்பவர்கள் மக்கள். அது போல இந்த இயக்கத்திற்குத் தலைவர் என்பவர் இல்லை. தொண்டர்களால் இயக்கப்படுகின்ற ஒரே இயக்கம் அ.தி.மு.க. மட்டும்தான். நாடாளுமன்ற தேர்தல் விரைவாக வரவுள்ளது. என்னவெல்லாமோ பொய்களை சொல்வார்கள். இன்றைக்கு கிராமம் கிராமாக சென்று பார்க்கிறார்கள். இத்தனை நாட்களாக கிராமத்தில் உள்ள மக்களை ஸ்டாலின் கண்களுக்கு தெரியவில்லை. கிராம மக்களுக்கு கொடுப்பதையே தடுத்து நிறுத்துபவர்கள், இவர்கள் எப்படி நல்லது செய்யப் போகிறார்கள். இதனை எல்லாம் நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.
நாடாளுமன்ற தேர்தலில் நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக நம்முடைய திட்டங்களை நிறைவேற்றுவதற்காக புதிய திட்டங்களை தமிழகத்தில் கொண்டு வர வேண்டியதற்காக இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து மாபெரும் வெற்றியைத் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இன்றைக்குத் தமிழகம் அனைத்து வகையிலும் முதன்மை மாநிலமாக விளங்குவதற்கு அரசு தொடர்ந்து பாடுபடும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பேசினார்.
இந்த கூட்டத்தை முடித்துக் கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சாத்தூர் வழியாக நெல்லை சென்றார். சாத்தூரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் நிர்வாகிகள் முக்கிய பிரமுகர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.1 day 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 23 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 23 hours ago |
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
27 Apr 2024சென்னை, தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை நேற்றும் உயர்ந்து விற்பனையானது.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
அரசியல் எதிரிகளை பழிவாங்க அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் பதில் மனு
27 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் பதில்மனு தாக்கல் செய்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறைய
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருள் எப்படி கிடைக்கிறது? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
27 Apr 2024மதுரை:உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
-
நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Apr 2024சென்னை, தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்:பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகளை வழங்க உத்தரவு
27 Apr 2024சென்னை:அதிகரிக்கும் வெப்பத்தால் பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இரண்டு குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒருவர் பலி
27 Apr 2024இம்பால், மணிப்பூரில் 2 குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் இளைஞர் பலியான சம்பவத்தில், வன்முறை பரவி விடாமல் தடுப்பதற்காக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளன
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
தமிழகத்தில் இயல்பைவிட 83 சதவீதம் மழை குறைவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் கோடைக்கால பருவமழை இயல்பைவிட 83 சதவீதம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத
-
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள், மாலுமிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு
27 Apr 2024டெக்ரான், ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் மற்றும் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.&n
-
வட தமிழ்நாட்டில் மே 2 தேதிக்கு பிறகு லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் 1-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மே 2-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய வட