எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2வது ஒருநாள் போட்டி இன்று மவுண்ட் மவுங்கனுஹில் உள்ள பே-ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்திய நேரப்படி காலை 7.30 மணிக்கு நடைபெறவுள்ள இந்தப் போட்டியில், வெற்றி பெற்றாக வேண்டும் என்ற முனைப்பில் நியூஸிலாந்து வீரர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.
பயிற்சிக்கிடையே பேட்டியளித்துள்ள நியூஸிலாந்து கேப்டன் வில்லியம்சன், “இந்திய வீரர்கள் திறமையானவர்கள் என்பது எங்களுக்கு தெரியும். அவர்களுடன் நாங்கள் பல போட்டிகளில் மோதியுள்ளோம். அவர்கள் நல்லவர்கள் என்பதால், நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதேசமயம் எங்கள் வீரர்களிடம் அதைவிட அதிகம் எதிர்பார்க்கிறோம். அதற்காக நாங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துகிறோம்” என்றார்.
_____________
ரஞ்சி ஃபைனலில் விதர்பா அணி!
உள்ளூர் போட்டியான ரஞ்சி டிராபி தொடர் இப்போது நடந்து வருகிறது. இந்த தொடரில் முதன்முறையாக அரையிறுதிக்கு நுழைந்த கேரள அணி, நடப்பு சாம்பியன் விதர்பாவை எதிர்கொண்டது. இந்த அணிகளுக்கு இடையிலான போட்டி, கேரள மாநிலம் வயநாட்டில் நடந்து வந்தது. கேரள அணி, முதல் இன்னிங்ஸில் 106 ரன் எடுத்தது. விதர்பா வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் அபாரமாக பந்துவீசி, 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய விதர்பா, 208 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. கேரள அணி தரப்பில் சந்தீப் வாரியர் 5 விக்கெட்டுகளும் பசில் தம்பி 3 விக்கெட்டுகளும் நிதீஷ் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.
பின்னர் கேரள அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. உமேஷ் யாதவ் மற்றும் யாஷ் தாகூரின் சிறப்பான பந்துவீச்சில், அந்த அணி வீரர்கள் தங்கள் விக்கெட்டுகளை மளமளவென இழந்தனர். இதையடுத்து அந்த அணி, 24.5 ஓவரில் 91 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியை தழுவியது. இன்னிங்ஸ் மற்றும் 11 ரன்கள் வித்தியாசத்தில் விதர்பா அணி வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. உமேஷ் 5 விக்கெட்டும் தாகூர் 4 விக்கெட்டும் கைப்பற்றினர். மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் கர்நாடகாவும் சவுராஷ்ட்ரா அணியும் மோதி வருகின்றன. இதில் வெற்றி பெறும் அணி, விதர்பா அணியுடன் இறுதி போட்டியில் மோதும்.
___________
பாக். கேப்டன் சர்பிராஸ் அகமதுவை மன்னித்துவிட்டோம் - டு பிளிசிஸ்
பாக். - தென்ஆப்பிரிக்காவுக்கு இடையேயான 2வது ஒரு நாள் போட்டி டர்பன் நகரில் நடைபெற் றது. இதில் தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு மூன்றாவது வீரராக களமிறங்கிய, வான்டர் டஸ்செனும் பெலுகுவாயோவும்தான் காரணம். இவர்கள் ஆடிக்கொண்டிருந்தபோது, விக்கெட் கீப்பிங் செய்து கொண்டிருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் சர்பிராஸ் அகமது ஆத்திரத்தில், ’’கருப்பு பயலே, இன்று உன் அம்மா எங்கு அமர்ந்து இருக்கிறார்? உனக்கு இன்று என்ன கூறுவதற்காக அவரை இங்கு அழைத்து வந்திருக்கிறாய்?’’ என இந்தியில் பேசியுள்ளார். இது ஸ்டம்பில் இருந்த மைக்கில் பதிவானது.
இந்நிலையில் தனது செயலுக்கு மன்னிப்புக் கேட்டார் சர்பிராஸ் அகமது. ’’யாரையும் குறிப்பிட்டு நான் அவ்வாறு பேசவில் லை. யாருக்கும் கேட்க வேண்டும் என்று கூட பேசவில்லை. துருதிஷ்டவசமாக என் பேச்சு ஸ்டெம்ப் மைக்கில் பதிவாகியுள் ளது. இனி இதுப்போன்ற தவறுகள் நடக்காது” என தெரிவித்துள்ளார். இதற்கிடையே ஐசிசி ஆட்ட நடுவர் ரஞ்சன் மதுகலே, சர்பிராஸ் அகமதுவை சந்தித்து இது குறித்துப் பேசினார்.
இந்நிலையில் சர்பிராஸ் மன்னிப்புக் கேட்டதால், அவரை மன்னித்துவிட்டதாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் கேப்டன் டுபிளிசி ஸ் தெரிவித்துள்ளார். ‘’தென்னாப்பிரிக்காவுக்கு விளையாட வரும் போது வீரர்கள் எச்சரிக்கையாக பேச வேண்டும். அவர் தன து செயலுக்கு பொறுப்பேற்று மன்னிப்புக் கேட்டுவிட்டார். நாங்கள் அவரை மன்னித்துவிட்டோம். அதற்காக இந்த விவகாரத் தை சாதாரணமாக எடுத்துக்கொண்டோம் என்று அர்த்தம் இல்லை. பெலுக்வாவ்யோ இதுபற்றி எதுவும் சொல்லவில்லை. அவர் இதை கவனிக்கவும் இல்லை. மொழி தெரியாததால் புரிந்துகொள்ளவும் முடியவில்லை’’ என்று தெரிவித்தார்.
_____________
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய 'தடுப்புசுவர்' புஜராவுக்கு பிறந்த நாள்!
ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைக்க முக்கியக் காரணமாக இருந்தவர் பேட்ஸ்மேன் புஜாரா. 7 இன்னிங்சில் களமிறங்கி 521 ரன்கள் விளாசியது, இந்தியாவின் 71 ஆண்டுகளாக தாகம் தீர்க்க உதவியது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மட்டும் 3 சதங்கள் மற்றும் ஒரு அரை சதம் என பேட்டிங் சராசரி 74.42 ஆக வைத்திருந்த புஜாரா, தொடர் நாயன் விருதை தட்டிச் சென்றார். இதனால், பாகுபலி, இந்திய அணியின் நவீனகால சுவர் உள்ளிட்ட பல பெயர்களை புஜாராவுக்கு சூட்டியுள்ளனர் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்.
இந்நிலையில், புஜாரா நேற்று தனது 31-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். அவருக்கு முன்னாள், இன்னாள் வீரர்கள் உள்ளிட்ட பலரும் ட்விட்டரில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் சேவாக், “நீங்கள் ஆடுகளத்தில் இருக்கும்போது, ‘பொறுமையின் சிலை’ ஆக இருக்கிறீர்கள், மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகள்” என கூறியுள்ளார். ஐசிசி தனது ட்விட்டரில், “டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட், இந்தியாவின் ராக்கிங் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் புஜாரா, டெஸ்டில் ஒரே இன்னிங்சில் 500 பந்துகளை எதிர்கொண்ட ஒரே இந்திய வீரர் என்ற சாதனைப் படைத்துள்ளார். அண்மையில், ஆஸ்திரேலியாவில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர். அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்” என கூறியுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக புஜாரா இரட்டை சதம் அடித்த வீடியோவை பதிவிட்டு, பிசிசிஐ வாழ்த்து தெரிவித்துள்ளது.
___________
WWE போட்டியில் களமிறங்கும் ‘தல’ டோனி?
ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் டோனி 3 ஒரு நாள் போட்டிகளிலும் அரை சதம் அடித்து தொடர் நாயகன் விருதை வென்றார். டோனியைப் பாராட்டி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ட்விட்டரில், “சாப்பிடு, தூங்கு, போட்டியை வெல், அதையே திரும்பச் செய்” என குறிப்பிட்டிருந்தது. ஐசிசி-யின் ட்விட்டர் பதிவை குறிப்பிட்டு, டபிள்யூ.டபிள்யூ.இ போட்டியில் விளையாடும் யுனிவெர்சல் சாம்பியன் ப்ரோக் லெஸ்னரின் வழக்கறிஞர் ஹேமன் ராயல்டி கேட்டடிருந்தார். அவரது ட்விட்டரில், “WWE சாம்பியன் ப்ரோக் லெஸ்னரின் #EatSleepConquerRepeat என்ற ஸ்லோகனை டோனியைப் புகழ ஐசிசி பயன்படுத்தியுள்ளது.
அதனால், எங்களுடைய ராயல்டியை ரொக்கப் பணம், காசோலை மற்றும் பங்குகளாக செலுத்தலாம்” என்று கூறியிருந்தார். இதற்குப் பதிலளித்த ஐசிசி, “உங்களுக்கும், ப்ரோக் லெஸ்னருக்கு உலகக் கோப்பை தொடரைப் பார்ப்பதற்கான டிக்கெட் வழங்கிறோம்” எனக் கூறியிருந்தது. இந்நிலையில், வரும் திங்கள் கிழமை (ஜன.28) நடைபெறும் WWE ராயல் ரம்பிள் போட்டியில் முன்னாள் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் டோனியைக் காண ஆர்வமாக இருக்கிறீர்களான என WWE தனது ட்விட்டர் பக்கத்தில் கேட்டுள்ளது. இதற்கு ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள், பதிலளித்து வருகின்றனர்.
___________
மே.இ.தீவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து 77 ரன்னில் சுருண்டது
பிரிட்ஜ்டவுனில் நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 77 ரன்னில் சுருண்டது. வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து மோதும் முதல் டெஸ்ட் போட்டி பிரிட்ஜ்டவுனில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்ட முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட்டுக்கு 264 ரன் எடுத்திருந்தது. 2-ம் நாளில் வெஸ்ட் இண்டீஸ் 289 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஹெட்மையர் 81 ரன் எடுத்தார். பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீசின் அபார பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 30.2 ஓவரில் 77 ரன்னுக்குள் சுருண்டது. அதிகபட்சமாக ஜென்னிங்ஸ் 17 ரன் எடுத்தார். வேகப்பந்து வீச்சாளர் ரோச் 11 ஓவர் வீசி 17 ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். ஹோல்டர், ஜோசப் தலா 2 விக்கெட்டும், கேப்ரியல் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
212 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுக்கு 127 ரன் எடுத்து இருந்தது. அந்த அணி இதுவரை 339 ரன் முன்னிலை பெற்று உள்ளது. கைவசம் 4 விக்கெட் உள்ளது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் வலுவான நிலையில் உள்ளது.
____________
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.1 day 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 23 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 23 hours ago |
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
27 Apr 2024சென்னை, தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை நேற்றும் உயர்ந்து விற்பனையானது.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
அரசியல் எதிரிகளை பழிவாங்க அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் பதில் மனு
27 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் பதில்மனு தாக்கல் செய்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறைய
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருள் எப்படி கிடைக்கிறது? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
27 Apr 2024மதுரை:உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
-
நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Apr 2024சென்னை, தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்:பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகளை வழங்க உத்தரவு
27 Apr 2024சென்னை:அதிகரிக்கும் வெப்பத்தால் பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இரண்டு குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒருவர் பலி
27 Apr 2024இம்பால், மணிப்பூரில் 2 குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் இளைஞர் பலியான சம்பவத்தில், வன்முறை பரவி விடாமல் தடுப்பதற்காக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளன
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
தமிழகத்தில் இயல்பைவிட 83 சதவீதம் மழை குறைவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் கோடைக்கால பருவமழை இயல்பைவிட 83 சதவீதம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத
-
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள், மாலுமிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு
27 Apr 2024டெக்ரான், ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் மற்றும் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.&n
-
வட தமிழ்நாட்டில் மே 2 தேதிக்கு பிறகு லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் 1-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மே 2-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய வட