எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச்.10 - தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறையை சமாளிப்பதற்கு வெளி மாநிலங்களிலிருந்து ஒப்பந்த அடிப்படையில் தமிழகம் வாங்கியுள்ள மின்சாரத்தை கிடைக்கச் செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்கை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.தற்போது தமிழகத்தில் மிகக் கடுமையான மின் பற்றாக்குறை நிலவி வருகிறது. எனவே, தாங்கள் இந்த பிரச்சினையில் கவனம் செலுத்தி மத்திய அரசின் மின் தொகுப்பில் இருந்து ஏற்கனவே தாம் நேரில் கேட்டுக் கொண்டபடி ஓராண்டு காலத்திற்கு ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை கூடுதலாக தமிழகத்திற்கு வழங்கவும் வேண்டும் என்றும் பிரதமரிடம் மீண்டும் முதலமைச்சர் வலியுறுத்தி உள்ளார்.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது. தமிழகம் கடுமையான மின் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டு இருப்பதை nullநீங்கள் அறிவீர்கள். பொதுத்துறை நிறுவனங்களான பாரத கனரக மின் நிறுவனம், நெய்வேலி நிலக்கரி நிறுவனம் மற்றும் தேசிய அணுமின் கழகங்கள் மேற்கொண்டு வரும் புதிய மின்சார திட்டங்களில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்த பற்றாக்குறையை சமாளிப்பதற்கு தமிழ்நாடு வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரத்தை வாங்குவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கணிசமான அளவுக்கு மின்சாரத்தை வாங்கும் முயற்சிகளில் தமிழகம் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் அவர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி மின்சாரத்தை தமிழகத்துக்கு கொண்டு வர இயலவில்லை. இதற்கு காரணம் போதிய மின் பாதை வசதி இல்லாததுதான். உதாரணத்திற்கு, குஜராத் மாநிலத்தில் 500 மெகாவாட் மின்சாரத்தை வாங்குவதற்கு தமிழகம் ஒப்பந்தம் செய்துள்ளது. ஆனால் 203 மெகா வாட் மின்சாரம் மட்டுமே தமிழகத்திற்கு கிடைக்கிறது. தேசிய அனல்மின் கழகத்திற்கு சொந்தமாக உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள தாத்ரி மின் நிலையத்திலிருந்து 727 மெகாவாட் மின்சாரத்தை இரவு நேரத்தில் பெறுவதற்கு ஒப்பந்தம் செய்த போதிலும் அதை கொண்டு வருவதில் தடை ஏற்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழகத்திற்கு வெளியே இருந்து 1750 மெகாவாட் மின்சாரத்தை பெறுவதற்கு தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. ஆனால் 350 மெகாவாட் மின்சாரம் அளவுக்குத்தான் கொண்டு வரும் நிலை உள்ளது. போதிய மின் பாதை வசதி இல்லாததே இதற்கு காரணம். இதனால் தமிழகத்தில் மின் பற்றாக்குறை சொல்ல இயலாத கவலையை ஏற்படுத்தி உள்ளது. மின்சாரத்தை கொண்டு வருவதில் உள்ள இடர்பாடுகள் காரணமாக தமிழகத்தில் மின் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. மத்திய அரசு அதிகாரிகளுக்கு இது குறித்து பலமுறை எடுத்துரைத்த போதிலும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட வில்லை.
பிற மாநிலங்களில் இருந்து மின்சாரம் பெற வேண்டும் என்றாலும், அது மத்திய மின் தொகுப்பு மூலம்தான் பெற முடியும். மத்திய அரசு மத்திய மின் தொகுப்பில் இருந்து மின்சாரத்தைத் தர தடையாக இருப்பதால், மற்ற மாநிலங்களில் இருந்தும் தமிழகம் மின்சாரம் பெற முடியவில்லை.
இதுபோல்தான், மாநிலத்தின் மிக முக்கியத் தேவைகள் எதிலும் மத்திய அரசு உதவாமல் பாரா முகமாக இருக்கிறது. எனவே தமிழகத்துக்கு 1000 மெகா வாட் மின்சாரம் மத்திய தொகுப்பு வழியாகக் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்... எனவே தாங்கள் தலையிட்டு ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்கு கொண்டு செல்லும் வகையில் மின் பாதை வசதியை செய்து தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி நான் தங்களை நேரில் சந்தித்த போது மனு ஒன்றை அளித்தேன். மத்திய அரசு மேற்கொண்டு வரும் மின் திட்டங்கள் முடிவடையும் வரை ஒரு ஆண்டு காலத்திற்கு ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை தமிழகத்துக்கு கூடுதலாக வழங்க வேண்டும் என்று தங்களிடம் வலியுறுத்தி இருந்தேன்.
ஆனால் இதுவரை 100 மெகாவாட் மின்சாரம் தான் கூடுதலாக ஒதுக்கப் பட்டுள்ளது. ஆனால் இப்பிரச்சினையில் பலமுறை தமிழக அரசு வேண்டுகோள் விடுத்தும், கடுமையான மின்பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காதது, மத்திய அரசின் அலட்சிய தன்மையையே காட்டுகிறது.
இதுபோல்தான், மாநிலத்தின் மிக முக்கியத் தேவைகள் எதிலும் மத்திய அரசு உதவாமல் பாரா முகமாக இருக்கிறது. எனவே தமிழகத்துக்கு 1000 மெகா வாட் மின்சாரம் மத்திய தொகுப்பு வழியாகக் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்... ஏற்கனவே கேட்டுக்கொண்டபடி மத்திய தொகுப்பிலிருந்து கூடுதலாக ஆயிரம் மெகாவாட் மின்சாரமும் தமிழகத்துக்கு கிடைக்க செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். மத்திய அரசுக்கு என்னுடைய நல்லெண்ணமும், ஒத்துழைப்பும் தொடரும் என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு முதலமைச்சர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மாநில அரசுகளின் உரிமைகளை பறிப்பதில் காட்டும் ஆர்வத்தை மாநிலங்களின் தேவைகளை நிறைவேற்றுவதிலும் காட்டலாம். எனவே, பிரதமர் இப்பிரச்சனையில் தலையிட்டு தமிழக மின் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்கு வெளி மாநிலங்களில் செய்யப்பட்டுள்ள ஒப்பந்தப்படி மின்சாரம் பெறுவதற்கு மின் பாதை வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்று மீண்டும் உங்களை கேட்டுக் கொள்கிறேன்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 12 hours ago |
ஸ்வீட் பால்.4 days 18 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 17 hours ago |
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் கருணாநிதி பாடம் அறிமுகம்
01 May 2024சென்னை : 10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த பாடம் அறிமுகமப்படுத்தப்பட்டுள்ளது.
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.