எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியா-மலேசியா பெண்கள் ஹாக்கி அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட போட்டி தொடரில் முதலாவது ஆட்டம் கோலாலம்பூரில் நேற்று முன்தினம் நடந்தது.
விறுவிறுப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் இந்திய அணி 3-0 என்ற என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி வெற்றியுடன் தொடரை தொடங்கி உள்ளது. இந்திய அணியில் வந்தனா கட்டாரியா 2 கோலும் (17-வது, 60-வது நிமிடம்), லால்ரெம்சியாமி ஒரு கோலும் அடித்தனர்.
____________
மலேசியா ஓபன்: ஸ்ரீகாந்த் தோல்வி
மலேசியா ஓபன் பேட்மிண்டனில் இந்தியாவின் முன்னணி வீரரான ஸ்ரீகாந்த் கிதாம்பி காலிறுதியில் ஒலிம்பியன் சாம்பியனான சீனாவின் சென் லாங்கை எதிர்கொண்டார். இதில் ஸ்ரீகாந்த் 18-21, 19-21 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தார். ஸ்ரீகாந்த் முதல் சுற்றில் 16-11 என முன்னணியில் இருந்தார். அதன்பின் சீன வீரர் சென் லாங் 2 புள்ளிகள் மட்டுமே விட்டுக்கொடுத்து 10 புள்ளிகள் பெற்று 21-18 எனக் கைப்பற்றினார்.
2-வது செட்டில் ஸ்ரீகாந்த் 7-11 என பின்தங்கியிருந்தார். அதன்பின் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 19-19 என சமநிலைப் பெற்றார். ஆனால் வெற்றிக்கான இரண்டு புள்ளிகளை சென் லாங் பெற்று 21-19 எனக் கைப்பற்றி வெற்றி பெற்றார்.
_____________
ஆப்கான் டி20 அணிக்கு ரஷித் கேப்டன்
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் டெஸ்ட், ஒரு நாள் போட்டி, டி20 அணிகளுக்கு கேப்டனாக அஸ்கார் ஆப்கான் நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரை நீக்கிவிட்டு மூன்று அணிக்கும் மூன்று கேப்டன்களை ஆப்கான் கிரிக்கெட் வாரியம் நேற்று நியமித்துள்ளது.
அதன்படி குல்பாடின் நைப், ஒரு நாள் போட்டிக்கான கேப்டனாகவும் துணை கேப்டனாக ரஷித் கானும் டெஸ்ட் அணி கேப்டனாக ரமத் ஷாவும் துணை கேப்டனாக ஹஸ்மத் ஷாகிதியும் சுழல்பந்துவீச்சாளர் ரஷித் கான் டி20 கேப்டனாகவும் துணைக்கேப்டனாக ஷபிக்குல்லா ஷபக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
____________
ஆண்டர்சனுக்கு அஸ்வின் பதிலடி
ஐ.பி.எல் தொடரின் 12-வது சீசன் மார்ச் மாதம் 23-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மார்ச் 25-ம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெற்ற போடியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லரை மான்கட் முறையில் பஞ்சாப் அணியின் அஸ்வின் அவுட்டாக்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் அஸ்வின் ஃபோட்டோவை கிழித்து தனது எதிர்ப்பை தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதற்கு அஸ்வின், ‘ நான் செய்தது தவறு என்று ஜேம்ஸ் ஆண்டர்சன் இன்று நினைக்கலாம். ஆனால் நாளை அவரே கூட மான்கட் முறையில் விக்கெட்டை எடுக்க நேரிடும். கிரிக்கெட்டில் மான்கட் முறை இருக்கிறது. அதனால் அது பற்றி பேச வேண்டிய அவசியமில்லை’ என்று பதிலளித்துள்ளார். மேலும் என்னைப் பற்றி தெரிந்தவர்களுக்கு நான் சட்டவிரோதமாக எதையும் செய்யமாட்டேன் என்று தெரியும். இந்த சர்ச்சைக்குப் பிறகும் என்னுடைய அணியினர் எனக்கு துணை நிற்கின்றனர். பல வீரர்கள என்னிடம் வந்து நான் செய்ததில் எந்தத் தவறும் இல்லை என்று சொல்கின்றனர். மான்கட் முறையில் நான் விக்கெட்டை எடுத்தது குறித்த சர்ச்சை பேச்சுகள் என்னை பாதிக்கவில்லை என்று அஸ்வின் கூறியுள்ளார்.
____________
அணி தேர்வு குறித்து ரோஹித் விளக்கம்
கிரிக்கெட்.காம் என்ற இணையதள அறிமுக நிகழ்ச்சியில் நடந்த குழு விவாதத்தில் கெவின் பீட்டர்சன், பிரையன் லாரா, ரோஹித் சர்மா, மகேலா ஜெயவர்தனே, மகளிர் கிரிக்கெட்டின் ஸ்மிருதி மந்தனா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் ரோஹித் சர்மா பேசும்போது, “உலகக்கோப்பை அணித்தேர்வுக்கு ஐபிஎல் போட்டிகள் அளவு கோலாக இருக்கக் கூடாது. கடந்த 4 ஆண்டுகளில் நிறைய சர்வதேச போட்டிகள் ஆடியுள்ளோம் அதுதான் நாங்கள் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதற்கான ஆதாரம். 50 ஒவர் கிரிக்கெட்டுக்கான அணியை 20 ஓவர் கிரிக்கெட் தொடரை வைத்துத் தேர்வு செய்ய முடியாது. உலகக்கோப்பைக்கு நம் அணி ஏறக்குறைய செட்டில் ஆகிவிட்டது. ஒரு சில இடங்கள் மட்டுமே நிரப்பப்பட வேண்டும். கேப்டன், கோச், தேர்வாளர்கள் இதனை முடிவு செய்வார்கள்” என்றார் ரோஹித் சர்மா.
____________
நியூசி., முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு மிரட்டல்
இதுவரை விளையாடிய நான்கு ஆட்டங்களிலும் ஆா்.சி.பி. தோல்வியடைந்துள்ளது ஆர்சிபி அணி. இதனால் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்நிலையில் ஆர்சிபி ரசிகர் ஒருவர் தனக்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக சைமன் டோல் ட்விட்டரில் கூறியுள்ளார். இதற்கு ஆதாரமாக அவர் ஸ்கீரின்ஷாட் ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதில், ஆர்சிபி அணியை மேலும் விமரிசித்தால் நீங்கள் கொல்லப்படுவது உறுதி என்று ஒரு ரசிகர் சைமன் டோலுக்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
நான் என்ன சொன்னேன் என்பது நினைவில்லை. ஆனால் அதற்காகக் கொலை மிரட்டலா? இது ஒரு கிரிக்கெட் ஆட்டம் மட்டும்தான், இயல்பாக இருங்கள் என்று ரசிகருக்கு ட்விட்டரில் பதில் அளித்துள்ளார் டோல். சைமன் டோல் நியூஸிலாந்து அணிக்காக 32 டெஸ்டுகளிலும் 42 ஒருநாள் ஆட்டங்களிலும் விளையாடியுள்ளார்.
____________
மிதாலிக்கு பந்துவீசிய கிளார்க்
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி முன்னணி அணிகளில் ஒன்றாக இருந்து வருகிறது. ஒரு நாள் அணியின் கேப்டனாக ‘லேடி சச்சின்’ என கிரிக்கெட் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் மிதாலி ராஜ் இருக்கிறார். மிதாலி ராஜ், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். தற்போது, மகளிர் கிரிக்கெட் அணி 50 ஓவர்கள் உலகக்கோப்பையை எதிர்நோக்கி உள்ளது. இங்கிலாந்தில் வரும் 30-ம் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது.
இதற்காக இந்திய அணி வீராங்கனைகள் தீவிர பயிற்சி செய்து வருகின்றனர். அதேபோல், மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜூம் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, உள்ளரங்க மைதானத்தில் பயிற்சி செய்த மிதாலிக்கு, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் பந்துவீசியுள்ளார். இந்த வீடியோ ட்விட்டரில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவுக்கு பதிலளித்த கிளார்க், “மகளிர் கிரிக்கெட்டின் சூப்பர்ஸ்டார், என்ன ஒரு வீராங்கனை, என்ன ஒரு மனிதர்” என மிதாலியை புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.
_____________
துப்பாக்கி முனையில் கால்பந்து வீரர் கடத்தல்
இத்தாலியில் கால்பந்து வீரர் ஒருவரின் கடைசி போட்டி மறக்க முடியாத தருணமாக அமைந்துவிட்டது. உள்ளூர் கால்பந்து போட்டிகளில் மிகவும் பிரபலமான வீரர் இக்னேஸியோ பார்பகால்லோ (55). இவர் தனது கடைசி போட்டியை சொந்த மைதானத்தில் விளையாடத் தொடங்கினார்.சிறிது நேரத்தில் ஹெலிகாப்டர் ஒன்று புழுதியைக் கிளம்பிக்கொண்டு நடு மைதானத்தில் தரையிறங்கியது. அதில் இருந்து வெளியே வந்த மர்ம நபர்கள், துப்பாக்கி முனையில் இக்னேஸியோவை கடத்திச் சென்றனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
பின்னர்தான் தெரிந்தது இது சும்மா ஜாலிக்காக எடுக்கப்பட்ட பிராங் வீடியோ. இதனை அறிந்த போட்டி நிர்வாகம், அவரது அணியை இடைநீக்கம் செய்ததோடு, அபராதமும் விதித்தது. உண்மையிலேயே அந்த போட்டி மறக்க முடியாத தருணமாக மாறிவிட்டது.
____________
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.1 day 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 23 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 23 hours ago |
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
27 Apr 2024சென்னை, தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை நேற்றும் உயர்ந்து விற்பனையானது.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
அரசியல் எதிரிகளை பழிவாங்க அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் பதில் மனு
27 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் பதில்மனு தாக்கல் செய்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறைய
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருள் எப்படி கிடைக்கிறது? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
27 Apr 2024மதுரை:உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
-
நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Apr 2024சென்னை, தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்:பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகளை வழங்க உத்தரவு
27 Apr 2024சென்னை:அதிகரிக்கும் வெப்பத்தால் பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இரண்டு குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒருவர் பலி
27 Apr 2024இம்பால், மணிப்பூரில் 2 குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் இளைஞர் பலியான சம்பவத்தில், வன்முறை பரவி விடாமல் தடுப்பதற்காக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளன
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
தமிழகத்தில் இயல்பைவிட 83 சதவீதம் மழை குறைவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் கோடைக்கால பருவமழை இயல்பைவிட 83 சதவீதம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத
-
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள், மாலுமிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு
27 Apr 2024டெக்ரான், ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் மற்றும் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.&n
-
வட தமிழ்நாட்டில் மே 2 தேதிக்கு பிறகு லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் 1-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மே 2-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய வட