எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : மறைந்து 32 ஆண்டுகள் ஆகிய பின்னரும் அனைவரது நெஞ்சங்களிலும் எம்.ஜி.ஆர். வாழ்ந்துகொண்டு இருக்கிறார் என்று சென்னையில் நடந்த ‘அடிமைப்பெண்’ படத்தின் பொன் விழாவில் சைதை துரைசாமி பேசினார்.
எம்.ஜி.ஆர். நடித்து, இயக்கிய ‘அடிமைப்பெண்’ படத்தின் பொன்விழா, எம்.ஜி.ஆரின் 102-வது மனிதநேய விழா மற்றும் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி மன்றத்தின் 5-ம் ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா சென்னை தியாகராயநகரில் உள்ள சர்பிட்டி தியாகராயர் அரங்கத்தில்நடந்தது.விழாவுக்கு, பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயரும், மனிதநேய இலவச கல்வி அறக்கட்டளையின் தலைவருமான சைதை துரைசாமி தலைமை தாங்கி, ‘அடிமைப்பெண்’ படத்தின் பொன்விழா சிறப்பு மலரை வெளியிட்டார். அதன் பிரதிகளை நடிகை லதா உள்பட நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர். விழாவில் சைதை துரைசாமி பேசியதாவது:-எம்.ஜி.ஆருக்கு இணையாக உலகத்தில் யாருமே இல்லை. இதனால் தான் அவரை அவதாரபுருஷன் என்று சொல்கிறோம். அவதார புருஷர்களுக்கு உரிய பண்புகளோடு அவர் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். எம்.ஜி.ஆர். உடன் நடித்த நடிகர்கள் தங்களுடைய வாரிசுகளுக்காக தோட்டங்களை வாங்கி போட்டார்கள். ஆனால் என் தலைவரோ அனாதை, ஆதரவற்ற குழந்தைகளுக்காக 33 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுத்தார். இதனால் தான் அவர் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.கதாநாயகனாக தோன்றி கதாநாயகனாகவும், முதல்-அமைச்சராக தோன்றி முதல்-அமைச்சராகவும் மறைந்தவர். அ.தி.மு.க.வின் முதல் மேயராக நான் வருவேன் என்று 1980-ம் ஆண்டு என்னிடம் கூறினார். அவர் உயிரோடு இருந்த 1987-ம் ஆண்டு வரையிலும் மாநகராட்சி தேர்தல் நடைபெறவில்லை. 2011-ம் ஆண்டு யார் என்னை உள்ளே நுழையவிடக்கூடாது என்று நினைத்தார்களோ, அவர்களின் சூழ்ச்சியை முறியடித்து ஜெயலலிதா என்னை மேயர் ஆக்கினார்.50 வயதுக்கு மேல் உள்ள 80 சதவீதம் பேர் எம்.ஜி.ஆர். ரசிகர்கள். 30 முதல் 50 வயது வரை உள்ளவர்கள் எம்.ஜி.ஆரை நினைத்துக்கொண்டும், படிக்கும் இளைஞர்களுக்கு பாடமாகவும் எம்.ஜி.ஆர். இருக்கிறார். மானுட நலனுக்காக தன்னுடைய வாழ்வையே அர்ப்பணித்துக்கொண்டவர். மனிதனாக பிறந்த அவதாரம் என்பதால் மறைந்து 32 ஆண்டுகள் ஆகியும் அனைவரது நெஞ்சங்களிலும் எம்.ஜி.ஆர். வாழ்ந்து கொண்டிருக்கிறார்.தாய்-தந்தைக்கு செய்யும் செலவாக கருதி எம்.ஜி.ஆருக்காக அவருடைய பக்தர்கள் மாதந்தோறும் சராசரியாக ஆயிரம் ரூபாய் செலவு செய்கிறார்கள். எம்.ஜி.ஆர். புகழ் என்றென்றும் நீடிக்கும். எம்.ஜி.ஆர். பாடல்களை குழந்தைகள் கேட்டால் மிகச்சிறப்பாக வளருவார்கள். எனவே அந்த பணியை எம்.ஜி.ஆர். பக்தர்கள் செய்ய வேண்டும். மேலும் இளைஞர்கள், மாணவர்களுக்கு எம்.ஜி.ஆர். பாடல்களை போட்டும், அனுப்பியும் கேட்க வைக்கவேண்டும். இவ்வாறு செய்தால் எம்.ஜி.ஆர். மையமாக இந்த மண் மாறும். இவ்வாறு அவர் பேசினார்.உரிமைக்குரல் பி.எஸ்.ராஜூ வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சிகளை மூத்த பத்திரிகையாளர் துரை கருணா தொகுத்து வழங்கினார்.விழாவில் நடிகை ராஜஸ்ரீ, கவிஞர் முத்துலிங்கம், எம்.ஜி.ஆரின் ஆடை அலங்கார நிபுணர் எம்.ஏ.முத்து, எழுத்தாளர் சுதாங்கன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக உலக எம்.ஜி.ஆர். பேரவை மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காகவும், சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர் வைக்க துடிப்பான நடவடிக்கைகளை எடுத்ததற்காகவும் சைதை துரைசாமிக்கு, பெங்களூருவை சேர்ந்த எம்.ஜி.ஆர். ரசிகர்கள் மாலை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 12 hours ago |
ஸ்வீட் பால்.4 days 18 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 17 hours ago |
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்:ஆஸி., ஆப்கான் அணிகள் அறிவிப்பு
01 May 2024சிட்னி:டி-20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய, ஆப்கானிஸ்தான் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில்...
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
இ.வி.எம். வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றி இடி மின்னல் காரணமாக சி.சி.டி.வி-கள் செயலிழப்பு : தென்காசி மாவட்ட கலெக்டர் விளக்கம்
01 May 2024தென்காசி : வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகம் மற்றும் பாதுகாப்பு அறைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழையினால் சிசிடிவி கேமிராக்கள் செயல
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் கருணாநிதி பாடம் அறிமுகம்
01 May 2024சென்னை : 10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த பாடம் அறிமுகமப்படுத்தப்பட்டுள்ளது.